23 அக்., 2010

காத்திருப்பு...

பரவியிருக்கும் வெயிலின் உச்சம் 
வியர்வையாய் பெருக்கெடுக்க,
வளைந்து தொங்கும் கேபிளில் 
இதுவரை ஆறு பறவைகள் உட்கார 
முயற்சிக்க,
யாரோ தவறவிட்ட பணத்தை 
சுற்றும் முற்றும் பார்த்து நான் 
கவனிப்பதை பார்த்துவிட்டு ஒருவன்  
யோசித்தபடி எடுக்க, 
மணிக்கட்டு பார்த்து பூத்து போன கண்களில் 
உக்கிரமான காற்று புழுதியை வீசிச் சென்ற 
தருணத்தில்
தூரத்தில் வருகிறாய் நீ...

உன் தாமதத்துக்கான  
காரணத்தை யோசித்தவாறே...

30 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

நானா முதல்?

ராஜ நடராஜன் சொன்னது…

துண்டு போட்டதில் மகிழ்ச்சி:)

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

Good ONE..

மதுரை சரவணன் சொன்னது…

//மணிக்கட்டு பார்த்து பூத்து போன கண்களில்
உக்கிரமான காற்று புழுதியை வீசிச் சென்ற
தருணத்தில்
தூரத்தில் வருகிறாய் நீ...//

super vaalththukkal.

அன்பரசன் சொன்னது…

//தூரத்தில் வருகிறாய் நீ...

உன் தாமதத்துக்கான
காரணத்தை யோசித்தவாறே...//

நச்

RVS சொன்னது…

நல்லா இருக்கு செந்தில்.. ;-)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்ல கவிதை.

வினோ சொன்னது…

அண்ணே நல்லா இருக்கு

தமிழ் உதயம் சொன்னது…

காத்திருந்த தருணத்தில் மலர்ந்த கவிதையா. நன்றாக உள்ளது.

மோகன்ஜி சொன்னது…

செந்தில்! அப்படியே படம் பிடித்து விட்டீர்கள் தருணத்தை!

NaSo சொன்னது…

காத்திருப்பதும் சுகம் தானே அண்ணே.

சிவராம்குமார் சொன்னது…

வார்த்தைகள் எங்கள் கண்முன் படமாக விரிகிறது...அழகு!!!

காமராஜ் சொன்னது…

கொஞ்சம் கோபம்,ரொம்பக் கிலேசம்.என்னென்ன பேசவேண்டுமென்கிற வசன ஒத்திகை.கூடவே உரசிப்போகும் சூழல். இப்படியான காத்திருப்பு ஒரு சுவாரஸ்ய தருணம் தான்.கவிதை செந்தில் டச். படம் எங்கப்பா புடிக்றீங்க .

லெமூரியன்... சொன்னது…

வணக்கம் செந்தில்....
ஒரே உணர்ச்சி பூர்வமா இருக்கே கவிதை....
:)
:)
ரொம்ப பீலிங்க்ஸ் ஹா???
:) :)

vasu balaji சொன்னது…

/உன் தாமதத்துக்கான காரணத்தை யோசித்தவாறே.../

ஓஹோ:). சூப்பர்.

RK நண்பன்.. சொன்னது…

super anna....

Unknown சொன்னது…

supper sir

எஸ்.கே சொன்னது…

உன் தாமதத்துக்கான
காரணத்தை யோசித்தவாறே...
/// ரொம்ப அருமை!

a சொன்னது…

ம்ம்ம்.............இன்னைக்கி ஃபீலீங்க்ஸ் கொஞ்சம் அதிகம்...........

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

கலக்கல்!

தேவன் மாயம் சொன்னது…

அ ச த் த ல் !

பெயரில்லா சொன்னது…

அண்ணே செம.. :)

sakthi சொன்னது…

காற்று புழுதியை வீசிச் சென்ற தருணத்தில்தூரத்தில் வருகிறாய் நீ...
உன் தாமதத்துக்கான காரணத்தை யோசித்தவாறே...


கிளாஸ்

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான கவிதை.

நேசமித்ரன் சொன்னது…

காத்திருப்பின் ருசி மிளிர்கிறது மெல்ல தலை திருப்பும் சூரிய காந்தியின் தலை திருப்புதல்களுடன்

மங்குனி அமைச்சர் சொன்னது…

எதார்த்தமாய் நடக்கும் விஷயம் , இதில் விசேசமா எனக்கு ஒன்னும் புரியல சார்

Unknown சொன்னது…

நல்லாயிருக்கு கவிதை..

ஜெயந்தி சொன்னது…

படமும் சூப்பர்.

தேவா சொன்னது…

காற்று புழுதியை வீசிச் சென்ற தருணத்தில்தூரத்தில் வருகிறாய் நீ...


இதை படிக்கும்பொழுது கற்பனையில் என் கற்பனை காதலிக்காக காத்திருப்பது போல ஒரு உணர்வு. பின்னிடீங்க பாஸ்

செல்வா சொன்னது…

காத்திருக்கறத இப்படி கூட சொல்லலாமா ...?
கலக்கலா இருக்குது அண்ணா ..!!