15 டிச., 2010

இரண்டு கவிதையும், ஒரு என்கவுண்டரும்...

நான்,
இதற்க்கு முன்பாக ஒரு கவிதை எழுதியிருந்தேன் 
அது வேறொரு பெயரில் நீங்கள் படித்திருக்கலாம் 
காற்று மரங்களை அசைக்க முயல்கிற மாதிரி 
ஒரு சம்பவத்தை அசைபோடுகிறது அக்கவிதை 
ரகசியங்களால் பின்னப்பட்ட அச்சம்பவம் 
உதிரும் இலைகளாய் நகரமெங்கும் பரவுகிறது.
ஒவ்வொருவரும்,
ஒவ்வொரு மாதிரி புரிந்து கொண்ட 
அந்த சம்பவத்தை,
அல்லது 
என் கவிதையை,
சிலர் கிழித்து எறிகிறார்கள் 
இன்னும் சிலர் என் வீடு தேடி வந்து கூச்சல் போடுகிறார்கள் 
துணிச்சல்காரன் நீ என, தான் யாரென சொல்லாமலே 
தொலைபேசியில் பாராட்டும் சிலர் 
இன்னும் நிறைய ரகசியங்களை அல்லது சம்பவங்களை 
அல்லது சில கவிதைகளை வெளியிடச்சொல்லி 
ஊக்குவிக்கிறார்கள்.
நகரம் தாண்டி 
பின் மாநிலம் முழுதும் பரவி 
மொழிபெயர்க்கப்பட்டு நாடெங்கும் பரபரப்பாகி 
அயல்நாட்டு ஊடகங்களாலும் வெளியிடப்பட்ட 
அக்கவிதையை,
மதவாதிகள் தங்கள் மதங்களுக்கு விரோதமானது என்றும் 
நாத்திகர்கள் நான் சப்பைக்கட்டு கட்டுகிறேன் என்றும் 
முதன்முறையாக இடது வலதாக விலகியிருந்த தோழர்கள் ஒருமித்து 
நான் முதலாளித்துவத்தின் ஏகோபித்த அடிவருடி என்றும் 
முதலாளிகளோ ஒரு போதும் தங்களால் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் 
நக்சலைட்டுகள், அல்லது போராளிகள் நான் அழிக்கப்பட வேண்டியவன் எனவும் 
பெண்ணியவாதிகள் நான் தூக்கில் இடப்பட வேண்டிய ஆணாதிக்கவாதி என முழக்கமிட்டும் 
பாதி ஆண்கள் எனக்கு பார்சலில் சேலை அனுப்புவேன் என்றும் 
தீவிர இலக்கியவாதிகள் அது இலக்கியமே இல்லை என்று மறுத்தும் 
வெகுஜன ஊடகங்கள் இது யாருக்குமே புரியாது என கேலி பேசியும்
நாட்டின் தலையாய பிரச்சினைகள் கைவிடப்பட்டு ஓட்டு மொத்த 
உலகும், 
என்னை அல்லது அந்தக்கவிதையை மட்டுமே பேச ஆரம்பிக்க 
ஊழல் புகாரில் சிக்கிக்கொண்டவர்களும், ஒரு சாமியாரும் 
தாங்கள் இப்போது நிம்மதியாக இருப்பதாகவும் 
அதற்கு காரணமான அக்கவிதையைப்போல்
இன்னொரு கவிதை எழுதினால் கணிசமான தொகை தருவதாக 
தூதனுப்பியும் சொன்ன அதே நேரத்தில் 
ஒரே நேரத்தில் நான் பிரபலமானதால் 
மக்கள் தலைவனாகும் வாய்ப்புகள் எனக்கு கனிந்து விட்டதாக 
பெரும் ஜோசியக்காரர்கள் தங்கள் கணிப்பை வெளியிட்டு 
என்னோடு தங்களையும் சேர்த்து விளம்பரப்படுத்த 
ஆளும் கட்சி, எதிர்கட்சி, கூட்டணிக் கட்சிகள் மற்றும் சில சில்லறைக்கட்சிகள் 
லெட்டர் பேடு மட்டுமே வைத்திருக்கும் கட்சிகள் உட்பட 
ஒன்று கூடி, 
என்னால் அல்லது என் கவிதையால் ஒரு கலவரம் உண்டாகபோவதாக 
உளவுத்துறை மூலம் அறிக்கை வந்திருக்கிறதென 
ஒரு மனதாக எல்லோரும் ஆதரித்த ஒரு கொள்கையின்படி 
ஏற்ப்பாடு செய்யப்பட்ட ஒரு பெரும் கலவரத்தால் 
மிகுதியாக அரசாங்க சொத்துகளும் 
காலாவதியாகும் நிலையில் இருந்த தனியார் வாகனங்களும் 
நொறுக்கப்பட்டன.
அந்த இரண்டு நாட்களில் எந்த காரணத்திற்க்காக யார் இறந்திருந்தாலும் 
அவர்கள் கலவரத்தால் இறந்தவர்கள் என அறிவிக்கப்பட்டு 
தலைக்கு ஒரு லட்சம் என அரசாங்கம் அறிவிக்க 
கலவரத்திற்கு காரணமாக என்னை கைது செய்த 
அரசாங்கம் 
நான் மக்கள் தலைவனாக விடக்கூடாது என்கிற ஒருமித்த ஏற்பாட்டினை மறைத்து 
நான் அறியாமல் செய்துவிட்ட தவறு என்றும் 
இனி, 
நான் எழுதவே மாட்டேன் என்றும் எழுதி வாங்கிக்கொண்டு 
என்னை விடுவிக்கிறது.
இனி கவிதையே எழுதக்கூடாதா?
அல்லது ரகசியங்கள் நிறைந்த சம்பவத்தை 
கவிதையாக்க கூடாதா? என்கிற விளக்கம் கேட்காமல் 
எழுதிக்கொடுத்துவிட்டதால் 
இனி வேறு பெயர்களில் வரும் என் கவிதையை 
அல்லது ரகசியங்கள் நிறைந்த சம்பவங்களை 
படித்துவிட்டு அல்லது கேள்விப்பட்டு 
கூச்சலிடவோ,
பாராட்டவோ யாரிடம் போவார்கள் 
அல்லது என்னை இன்னொரு முறை கைது செய்யும் 
நிலை வந்தால் எதன் அடிப்படையில் கைது செய்வார்கள் 
அல்லது எழுதி வாங்கிக்கொள்வார்கள்
என்கிற குழப்பத்தில் நீள்கிறது காலம் 
ஒரு வேலை இனி அப்படி ஒரு நிலை மீண்டும் வந்தால் 
என்கவுண்டரிலோ, அல்லது சாலை விபத்திலோ 
என் மரணம் நிகழக்கூடும் 
அப்போது மீண்டும் என்ன்னைபற்றி 
அல்லது 
அந்த இரண்டு கவிதைகள் பற்றி சிலகாலம் பேசும் அனைவரும் 
வேறொரு சம்பவம் தற்காலிகமாகவோ அல்லது 
திட்டமிடப்பட்டோ நிகழ்த்தப்பட்டு 
மறக்கடிக்கப்படுவோம்  
நானும்,
என் இரண்டு கவிதைகளும்...

26 கருத்துகள்:

sakthi சொன்னது…

சிலர் கிழித்து எறிகிறார்கள் இன்னும் சிலர் என் வீடு தேடி வந்து கூச்சல் போடுகிறார்கள் துணிச்சல்காரன் நீ என

இயல்பான நடை கவிதை முழுவதும்:)
தொடருங்கள்

sakthi சொன்னது…

வேறொரு சம்பவம் தற்காலிகமாகவோ அல்லது
திட்டமிடப்பட்டோ நிகழ்த்தப்பட்டு
மறக்கடிக்கப்படுவோம்
நானும்,
என் இரண்டு கவிதைகளும்...



யதார்த்தம் .....

கவிதை முழுவதும் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை சேர்த்து எழுதி உள்ளீர்கள் ....

தமிழ் உதயம் சொன்னது…

கட்டுரையா என கவிதை சந்தேகப்பட வைத்தாலும், கவிதை சாரம்சம் நன்றாக இருந்தது.

RK நண்பன்.. சொன்னது…

அருமை அண்ணா, எளிமையான நடையில், கவிதாயை கூட கதை போல சொல்லி இருக்குறீர்கள்...(என் புத்திக்கு தெரிந்தது)

எனக்கு என்னமோ இப்போ தமிழகத்தில் நடக்கும் நிகள்வாயே நெத்தியடியாக சொன்னது போல இருக்கு..

அண்ணே உங்க பேர்ல ஒரு கட்சி வேணும்னா ஆரம்பிச்சிருவோமா??

இளைய தளபதி கட்சி ஆரம்பிக்க போராரம் அதுக்கு முன்னாடி நாம ஆரம்பிச்சிடலாம் அண்ணே..

பெயரில்லா சொன்னது…

சொற்களில் யதார்த்தம் ... நடையில் மெய் என அள்ளி தெறிக்கிர்கள் நண்பா
தொடருங்கள்!!!

kavitha சொன்னது…

நன்றாக இருக்கிறது

ரகசியங்களால் பின்னப்பட்ட அச்சம்பவம்
உதிரும் இலைகளாய் நகரமெங்கும் பரவுகிறது
வரிகள் அழகு.

Unknown சொன்னது…

நாதஸ்,

ஒரு கவிதை இங்கிருக்கு. அந்த இன்னொரு கவிதை எங்கே? :))

மாணவன் சொன்னது…

அருமை அண்ணே

தொடருங்கள்........

நன்றி

வினோ சொன்னது…

அனைத்தையும் ஒரு கவிதையில் முடித்துவிட்டீர்கள். யதார்த்தம் நிரம்ப இருக்கு.

க ரா சொன்னது…

அண்ண்ணே !

அருண் பிரசாத் சொன்னது…

அப்படியே புட்டு புட்டு வெச்சிட்டீங்க.... நாட்டின் நிதர்சன நிலை

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நன்றாக இருக்கிறது

ஹேமா சொன்னது…

சவால்கள் நிறைந்தால்தான் சுவாரஸ்யம் எழுத்துலகில்.இந்தச் சவால் ஒன்றும் பெரிதல்ல உங்களுக்குச் செந்தில் !

VELU.G சொன்னது…

அடிச்சு நொறுக்கிட்டீங்க

யப்பா மூச்சு வாங்குதுங்க

அருமையான நடை

ஈரோடு கதிர் சொன்னது…

ரியல் என்கவுண்டர்!!

Jerry Eshananda சொன்னது…

Awesome.

Unknown சொன்னது…

நல்லாயிருக்குங்க..

Bibiliobibuli சொன்னது…

இரண்டு கவிதை, ஒரு என்கவுண்டர்...... குற்றுயிராய் ஜனநாயகம்.

vasu balaji சொன்னது…

அபாரம்:))

Chitra சொன்னது…

நாட்டு நடப்பை வெளிப்படுத்தும் கவிதைங்க.

ஜோதிஜி சொன்னது…

செந்தில் நேரிடையாக சந்திக்கும் இதற்கான பரிசை தருகின்றேன். இனிய காலைப் பொழுதின் துவக்கம் இந்த வரிகளை படித்து முடித்த பிறகு,

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

நன்றாக உள்ளது ..........

'பரிவை' சே.குமார் சொன்னது…

சொற்களில் யதார்த்தம்...
இயல்பான நடைக் கவிதை...

Unknown சொன்னது…

சூப்பருங்கோ

நன்னாருக்கு....

இப்படிக்கி கடைப்பக்கம் வராதவர்களை கண்டபடி திட்டும் சங்கம்.

http://www.vikkiulagam.blogspot.com/

அம்பிகா சொன்னது…

யதார்த்த கவிதை, எளிய நடையில்.
நல்லாயிருக்கு செந்தில்.

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

மரபை உடைத்த புதுக்கவிதைக்கு இது ஒரு மணிமகுடம். இந்த கவிதையின் மையமாக புனையப்பட்ட இருகவிதைகளையும் அறிய வரிகளின் சந்துகளில் பயணப்பட்ட போது ஜனநாயக வீதிகள் எங்கும் பிணங்களின் குவியல். துரத்திபோன நிழல் புரியவைத்து விட்டு போனது....நெருப்பின் முகவரி. வென்று தணியட்டும் போலி ஜனநாயகத்தின் விரசங்கள்.