2 பிப்., 2012

களவு - 2 - சென்னை ...


நீ மீனாக இரு
சிறிய மீன்களை
பெரிய மீன்களே வேட்டையாடும்
எனவே 
பெரிய மீன்போல் நடிக்கவாவது செய்..

நாள் 12.06.2010 சனிக்கிழமை மதியம் 2.00 மணி சென்னையின் OMR  சாலை..

“பைக்கை ஒரங்கட்டுப்பா” - ட்ராபிக் கான்ஸ்டபிள்
“சார், அவசரமா ஒரு இண்டர்வ்யூ போறேன்” - நரேன்
“ டாக்குமெண்ட் காட்டிட்டுப் போப்பா, ஹெல்மெட் வேற போடல!”
நரேன் பைக்கை ஓரங்கட்டி டாக்குமெண்டை தேடினான், எதுவும் சிக்கவில்லை.
“சார்! இது ஃப்ரெண்டோட பைக்கு, அதனால டாக்குமெண்ட் எங்க வச்சிருக்கான்னு தெரியல!!”
“ ஃப்ரெண்டுக்கு போனை போட்டு எங்கிருக்குன்னு கேட்டு, தேடிப்பாரு!”
“சார்! என் மொபைல்ல அவுட்கோயிங் போகாது, உங்க மொபைல் கொஞ்சம் கொடுங்க,”
“டேய்! ஏண்டா, இம்சை பன்றே, சரி ஒரு 100 ரூவா கொடுத்துட்டுப் போ!!”
“சார், என்கிட்ட பத்து பைசா கிடையாது. ப்ளீஸ் சார், என்னை விட்ருங்க”
”கயில பத்து பைசா கூட இல்ல, மொபைல் வேலை செய்யாது, ஓ.சி பைக்கு, சார் எங்க இருக்காரு?”
“திருவல்லிக்கேணில ஒரு மேன்ஷன்ல சார்”
“ எந்த ஊர் ஒனக்கு”
“இந்த ஊர்தான் சார்”
“இந்த ஊர்ல இருந்துட்டு ஏன்யா, மேன்ஷன்ல இருக்கே, வீட்டுல எதுனா தகறாரா?”
“அதெல்லாம் இல்ல சார், என்க்குன்னு யாரும் கிடையாது, அதான் ஃப்ரெண்டுகூட ரூம்ல இருக்கேன்”
உடனே ஏட்டு தன் சக தோழரை அழைத்து..
“யோவ் பெரிசு இங்க வாயேன். ஒரு இண்ட்ரெஸ்டிங் கேசு சிக்கிருக்கு!” 
அவர் வந்ததும் அதே கேள்விகளை வேறு மாதிரி கேட்கவும், கடுப்பான நரேன்
“சார் உங்களுக்கு இப்ப என்ன வேனும்”
“டேய் 100 ரூவா கொடுத்துட்டு எடத்த காலி பண்ணு, இல்லன்னா திருட்டு வண்டின்னு சொல்லி உள்ள தள்ள வேண்டிவரும்”
“சார் இது என்னோட ஃப்ரெண்ட் வண்டின்னுதான் சொல்றேன்ல, வேனுன்னா வண்டிய வச்சுக்குகங்க, ஒரிஜினல் எடுத்துவந்து காட்டிட்டு வாங்கிக்குறேன்”

நரேன் அப்படி வீரமாக சொன்னாலும் உள்ளுக்குள் உதைத்தது, அவன் நண்பன் தூங்கும் நேரமாக அவன் வண்டியை ஆட்டையை போட்டுட்டு வந்திருக்கிறான். சரியாக 5 மணிக்கு அவன் நைட் ஷிப்ட் போவான். அதற்குள் போய்விடலாம் என்று பார்த்தால் இந்த போலிஸ்காரன் சாவடிக்கிறானே என மனதிற்க்குள் திட்டிக்கொண்டான்.

“யோவ் என்ன யோசிக்கிறே, பணம் தர்றியா? கேஸ் எழுதவா?”
“சார் என்னை உங்க பையன் மாதிரி நெனச்சுகங்க, என்கிட்ட காசு சுத்தமா இல்லை சார்”
”பொறம்போக்கு நீ, உன்னைய என் பையன் மாதிரி நெனைக்கனுமா?” 
“சார் மரியாதையா பேசுங்க”
“தாயோளி உனக்கு என்னடா மரியாதை”
“டேய் லஞ்சம் வாங்குற நாயி நீ.., என்னைக் கேவலமா பேசுறியா”
அதற்குள் இன்ன்னொரு போலிஸ்காரர் பளாரென அறைந்து ”
”நாயே ஒரம் ஒக்காரு”
“சார் அவர்தான் கேவலமா பேசுறாரு”
“டேய் ஓங்கி மிதிச்சேன் செத்தே போய்டுவே, ஒரு அதிகாரிய பாத்து நாயின்னு சொல்றே, இரு ஒன்னை ஸ்டெசன்ல வச்சு லாடம் கட்டுறோம்”

சற்று நேரத்தில் அங்கு வந்த பேட்ரோலிங் வண்டியில் நரேன் ஏற்றப்பட்டான். வண்டி திருடுபவன் என சந்தேகத்தில் பிடித்ததாக பேட்ரோலிங் போலிஸிடம் சொன்னார்கள்.

மயிலாப்பூர் போலிஸ் ஸ்டேஷனில் சில ஆட்களுடன் அமரவைக்கப்பட்டிருந்தான் நரேன். 

மாலை சரியாக 5.00 மணிக்கு அவன் நண்பன் மொபைலில் அழைத்தான்,
“டேய் எங்கடா இருக்கே, வண்டிய எடுத்துட்டுப்போனியா?”\
“வண்டி நாந்தான் வச்சிருக்கேன், மயிலாப்பூர் போலிஸ் ஸ்டேஷன் வாடா!”
“டேய் என்னடா சொல்றே! எதாச்சும் ஆக்ஸிடெண்டா? வண்டிக்கு ஏதும் ஆகலியே”
“இல்லடா, டாக்குமெண்ட் இல்லைன்னு புடிச்சு வச்சுருக்காங்க, வரும்போது ஒரிஜினல் டாக்குமண்டோட வாடா”
“அட நாதாரி டாக்குமெண்ட் சீட்டுக்கு அடிலதானே இருக்கு!, ஒரு போன் பன்னிருக்கலாம்ல”
“அவுட் கோயிங் போகாதுடா, மொபைல்ல காசு இல்ல”
“சரி ஆபிஸ்ல பர்மிஷன் சொல்லிட்டு வாறேன், ஒன்னும் கவலைப்படாதே என் மாமா கிட்ட சொல்லி மயிலாப்பூர் இன்ஸ்பெக்டருக்கு பேசச்சொல்றேன்.”

அவன் மாமா செக்ரெட்டேரியட்டில் வேலை பார்க்கிறார் என்பதால், அவன் வந்து அழைத்துப்போய்விடுவான் என்பது நரேனுக்கு நிம்மதியாக இருந்தது.

அவன் பக்கத்தில் இருந்த மூவரில் ஒருவர் அவனிடம்
“என்ன கேசு தம்பி”
“ஒன்னும் இல்ல சார், டாக்குமெண்ட் இல்லைன்னு புடிச்சிட்டு வந்துட்டாங்க,” 
“பணம் கொடுத்துப் பார்த்திருக்காலாமே தம்பி”
“பணம் கேட்டாங்க சார், கயில பத்து காசு இல்லேன்னு சொன்னேன், கேவலமா பேசி அடிச்சிட்டாங்க சார்”
அதைச்சொல்லும்ப்போது நரேனுக்கு கண்கள் கலங்கின,
”தம்பி கவலைப்படாதீங்க, இப்ப உங்களுக்கு பணம் ஏதாச்சும் வேனுமா”
“என் ஃப்ரெண்டோட மாமா செக்ரெட்டேரியட்டுல இருக்காரு, அவரு போன் பன்னா விட்ருவாங்க”
”சரிப்பா, எதச்சும் உதவின்னா, கூச்சப்படாமே கேளு என்றார்”
”ரொம்ப நன்றி சார்”
அதற்குள் இன்னொரு நபர் நரேனிடம் பேசிக்கொண்டிருதவரிடம் காதில் ஏதோ சொன்னார்,
“தம்பி ஒரு உதவி பண்ணமுடியுமா?’
“இந்த நிலமையில நான் எப்படி சார் உங்களுக்கு உதவமுடியும்?”
“ஒன்னும் இல்ல தம்பி, எங்கள உனக்கு கொஞ்சம் முன்னாடிதான் அழைச்சுட்டு வந்தாங்க, இப்ப எங்க கிட்ட இருக்கிற பேக்குல முக்கியமான ஆவனம் இருக்கு, நீங்க எப்படியும் வெளில போய்டுவீங்க, அதனால இதை உங்களுது மாதிரி வெளியே எடுத்துட்டுப்போய்டுங்க, நான் கொடுக்கிற போன் நம்பருக்கு பேசுனா, ஒருத்தர் வந்து வாங்கிட்டுப் போவாரு”
“சார் ஒன்னும் பிரச்சினை வராதே?”
“ஒன்னும் வராது தம்பி, அவர் உங்ககிட்ட வாங்கும்போது உங்களுக்கு 10000 பணம் கொடுக்க சொல்றேன்”

பத்தாயிரம் என்றதும் நரேன் சம்மதித்தான், இது அவன் வாழ்க்கையை புரட்டிப்போடப் போவது அறியாமல்.

பேக்கை மெதுவாக அவனிடம் நகர்த்தினர். அதனை தூக்கிப்பார்த்ததில் நல்ல கணமாக இருந்தது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் இன்ஸ்பெக்டர் வந்து..

”யாருப்பா நரேன்’
”சார்”
”ஏன்பா, போலிஸ்கிட்ட சண்டை போடுவியா என்ன?, ஏதோ தெரிஞ்சவங்க சொல்லப்போக ஒன்னை விடுறோம், இல்லைன்னா கதையே வேற”
“சாரி சார் மண்ணிச்சுருங்க”
“சரி ஏட்டையாகிட்ட நான் சொல்லிக்கிறேன், வெளில ஒன் ஃப்ரெண்டுகிட்ட வண்டி சாவி கொடுத்துட்டேன், நீ போகலாம்”
வெளியில் வரும்போது கவனமாக பேக்கை எடுத்துக்கொண்டான், அவர்கள் இவனுக்கு கட்டைவிரலை உயர்த்திக்காட்டினர்.
வெளியில் இருந்த நண்பன் 
“பரதேசி ஒன்னால எவ்வளவு பிரச்சினை பாரு”
“சாரிடா மச்சி”
“சரி எனக்கு வேலைக்கு நேரமாச்சி, ஒன்னை பீச் ரோடுல விடறேன், பஸ் பிடிச்சு ரூமுக்குப்போ”
பீச் ரோட்டில் நண்பன் டிராப் செய்து கிளம்பியதும்
நரேன் பீச் ரோடில் ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டான். கையில் பேக் கொடுத்தவன் இரண்டு 500 ரூபாய்களை கொடுத்திருந்தான். அதனால் நரேனுக்கு சந்தோஷம் எகிறியது.
நேராக ரூமுக்கு வந்து பேக்கை வைத்துவிட்டு முதலில் டாஸ்மாக் சென்று ஜில்லுன்னு ஒரு KF Strong குடித்தான், பிரியாணி சாப்பிட்டான், செல்போனை ரீஷார்ஜ் செய்தான். பேக் தந்தவர்கள் கொடுத்த நம்பருக்கு போன் செய்து விபரம் சொன்னான், அவர்கள் மீண்டும் அழைப்பதாக சொன்னதும் ரூமுக்கு வந்து தூங்கிப்போனான். 

திடீரென செல்போன் அடித்தது. முழித்துகொண்டு...
”ஹ...லொவ்”
“சார் நரேனா?”
“ஆஹ்ஹ்மாம், யாரு?”
“சார் அந்த பேக்கு!”
“இருக்கு எப்ப வாங்கிக்கிறீங்க?”
”சார் உங்க அட்ரஸ் சொல்லுங்க”
சொன்னான்...
“சரி சார் இன்னும் ஒரு ம்ணி நேரத்துல வந்துடறேன், உங்க மேன்ஷனுக்கு பக்கத்தில் வந்ததும் கூப்பிடறேன்.”
செல்போனில் மணியைப் பார்த்தான் அதிகாலை 3.00 மணி..
சரியாக 4.00 மணிக்கு அதே ஆள் அழைத்தான்
“ஹலோ”
“சார் கதவைத்தொறங்க”
கதவைத் திறந்ததில் யாரும் இல்லை, சரி மேலே வருவார்கள் எனக் காத்திருந்தான்.
இரண்டு நிமிடம் போயிருக்கும் பாத்ரூமுக்குள் யூரினை வெளியேற்றினான்.
அவர்கள் இரண்டு பேர் உள்ளே நுழைந்தனர், 
அவசரமாக டாய்லெட்டில் இருந்து வெளியே வந்தான்.
“யாருங்க?”
“நாங்கதான் சார், அந்த பேக் எங்கருக்கு?”

கட்டிலுக்கு அடியில் இருந்து இழுத்துக் கொடுத்தான்,
ஒருவன் பேக்கை பிரித்துப்பார்த்தான் இன்னொருவனிடம் திருப்தியாக தலையாட்டினான்,
நரேன் பேக்கை எட்டிப்பார்க்க முயலும்போது மூடிவிட்டான்.
அந்த இன்னொருவன் 10000 ரூபாய் எண்ணிக்கொடுத்தான்.

“ரொம்ப நன்றி தம்பி”
“பரவாயில்லை சார்”

அவர்கள் வெளியேரியதும். தாம் செய்வது சரியா? என ஒரு கனம் யோசித்தான். எதுவாக இருந்தால் என்ன பிச்சையெடுக்காத குறையாக வாழும் நம்க்கு இந்தப்பணம் ஒரு வரம், கடவுள் இருக்கிறான் என நினைத்துக்கொண்டான். விசிலடித்தான், பணத்தை எடுத்து ஒளித்து வைத்துவிட்டு ஷூவை (நண்பனுடையது) பீச் நோக்கி நடந்தான்.
நீண்ட நாட்களுக்குப்பின் அதிகாலை வாக்கிங்..

பீச் உற்சாகமாக இருந்தது, இந்தப்பணத்தில் என்னென்ன செய்யலாம் என மனதில் கணக்குப் போட்டவாரே.. மெதுவாக ஓடத்தொடங்கினான்...

தொடரும்..

3 கருத்துகள்:

rajan சொன்னது…

உங்கள் எழுத்துகள் என் மனகணில் காட்சிகளாக ஓடுகின்றன !

ஹேமா சொன்னது…

நடந்த அனுபவத்தை அப்படியே எழுதுவதுதான் பிடிச்சிருக்கு.அடுத்து என்னன்னு இருக்கு !

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

திரைப்படம் பார்த்தது போல் காட்சிகள் மனதில் ஓடுகின்றன ! தொடருங்கள் ! நன்றி !