15 நவ., 2013

முள்ளிவாய்க்கால் முற்றம் - காட்சி மாறும் அரசியல்...

2009 மே 18 ல் ஈழத்தில் நடந்த இன அழிப்பை கண்டித்துத் தமிழ் ஆர்வலர்கள் கடுமையான போரட்டத்தை நடத்தியபோது முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் துவங்கி, சீமான், அமீர் கைது படலம், பிரபாகரன் படத்திற்குத் தடை, மாணவர்களுக்குக் கால வரையற்ற விடுமுறை என எல்லாப் போராட்டங்களையும் காவல்துறையைக் கொண்டு நசுக்கினார் கலைஞர். மெரினாவில் நான்கே மணிநேரம் அவர் நடத்திய உண்ணாவிரத நாடகத்தால் ஈழமே கிடைத்துவிட்டதாக அவர் தொண்டர்கள் சுவரொட்டிகள் ஒட்டினர். காங்கிரஸ் தலைமையின் நோக்கம் அறிந்து விசுவாசம் காட்டிய கலைஞரை 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 63 தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுத்ததைக்கூடப் பா.ம.க வின் தயவால் சமாளித்த தி.மு.க, பா.ம.க, விசிக கூட்டணியை அமைத்து படுதோல்வியைத் தழுவியது. விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவராக மாறினார். ஜெயலலிதா தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தார். அதுவரை கொட்நாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதா மட்டுமல்ல யாருமே எதிர்பார்க்காத வெற்றி அது. கலைஞர், சோனியா இருவரின் மீதான வெறுப்புதான் ஜெயலலிதாவின் வெற்றிக்கு காரனமானது. சீமான், வைகோ, தா.பா என அனல் பறந்த பிரச்சாரம் வடிவேலு, குஷ்பூ இருவருக்கும் கூடிய கூட்டத்தால் மாறவில்லை. 

மேலும் படிக்க : ஜில் மோர்.காம்

3 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையான பகிர்வு! நன்றி!

Unknown சொன்னது…

entha thittamidalum illaamalamma seyalpatturukkamaattaargal.

Unknown சொன்னது…

entha thittamidalum illaamalamma seyalpatturukkamaattaargal.