tag:blogger.com,1999:blog-47866812555838787602024-03-05T13:23:50.914+05:30கே.ஆர்.பி.செந்தில்நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...Unknownnoreply@blogger.comBlogger625125tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-27850255972823787572014-10-01T13:08:00.000+05:302014-10-01T13:08:10.898+05:30இன்னும் சற்று நேரம் இருந்துவிட்டு போ!...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiD2KQjSr39svZ6A8QMe6-uy4TV0Fq7CwwIJRJDLyW9rHOHokWKW-BE92OMBA6VN_2d53K_FVXhUgtsnm2weiVBDa7P_3NEu_0ipUyuOsMR3Hr3lNUyTFoCIkPOI18KKVxVrcldOnRRqL3J/s1600/IMG_1411.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiD2KQjSr39svZ6A8QMe6-uy4TV0Fq7CwwIJRJDLyW9rHOHokWKW-BE92OMBA6VN_2d53K_FVXhUgtsnm2weiVBDa7P_3NEu_0ipUyuOsMR3Hr3lNUyTFoCIkPOI18KKVxVrcldOnRRqL3J/s1600/IMG_1411.JPG" height="426" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
ஒரு கடைசி சந்திப்பை எப்படி எதிர்கொள்வது எனத்தெரியாமல் நாம்
தயங்கிக்கொண்டிருந்தோம். நாம் எதிர்பார்க்காத ஒன்றை எதிர்க்க வேண்டிய ஒன்றை
மவுனமாக ஏற்றுக்கொள்ள எது நம்மை பக்குவப்படுத்தியது அல்லது
சிறுமைப்படுத்தியது என்பதான மன உளைச்சல் இந்த அதிகாலை குளிரிலும் வியர்வை
சொட்டுகளாய் எட்டிப்பார்த்தது. காதல் உன்னதமானது என்றவனை புனிதனில் இருந்து
பயித்தியக்காரனாய் உருமாற்றும் வித்தையும் காதலுக்குத்தான் இருக்கிறது.<br />
<br />
கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் போற்றி பாதுகாத்து வைத்திருந்த உன்னதமான
தருணங்கள் இனி வாழ்வில் எப்போதும் வராது என்பதே வாழ்வின் நீட்சியை நினைத்து
பெருங்கவலை கொள்ள வைக்கிறது. சம்பிராதாயங்களை எதிர்கொள்ள முடியாத கோழைகள்
செத்துவிடலாம். காதல் போயின் சாதலே பெரிது. நாம் சந்தித்தோம், பேசினோம்,
காதலித்தோம், கலந்தோம் என்பதே வாழ்வின் உச்சமாக முடிந்துவிட்டது. அது
அவசரமாக ஒரு பகல் நேர கனவைப்போல் எல்லாம் கலைந்துவிட்டது.<br />
<br />
நம் காதலுக்கு உறவு, பணம், ஜாதி என பெரும்பாலானவர்களுக்கு வரக்கூடிய
பிரச்சினைகள் இல்லாதது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா? என
கூதுகலித்தாய். உன்னை எனக்குள் முழுமையாய் கலந்த நாள் அது.
சந்தர்ப்பங்கள்தான் எவ்வளவு அற்புதமானதும், அபத்தமானதுமாக மாறிவிடுகிறது.
அன்று நீ மகிழ்ந்து சொன்ன அதே காரனம் இருந்தால் கூட சந்தோசமாக
இருந்திருக்குமே!.<br />
<br />
உறவுகள் சிக்கலானது என்பதை இத்தனை சிக்கலான தருணத்தில் நாம் உணரவேண்டிய
அவசியத்தை காலம் கோரமாக செய்துமுடித்து விட்டது. எனக்கு அத்தை மகள்
உறவென்பதால் நாம் உறவாடியதை ஊர் சுற்றியதை யாரும் கண்டிக்காமல் போனதும்,
எப்போதும் நான் உன் வீட்டில் பழியாய் கிடந்தபோது, உன் அம்மா என்னை மருமகனே
என வாய் நிறைய அழைத்து மகிழ்ந்ததும், நாம் தனியறையில் தூங்கியபோதும்
“படிக்கிற புள்ளைங்க, அதான் தொந்தரவு செய்யல” என வெகுளியாய் சொன்னபோதும்.
அது, நம்மை உடல்மொழியும் கற்றுக்கொள்ள வைத்துவிட்டது என்பதும். ஒரு காதலை
இயற்கை எப்படியெல்லாம் கொண்டாடுகிறது பார்த்தயா? என கவிதையாய் சிரிப்பாயே
ஒரு பூ மலர்வது மாதிரியான உன் சிரிப்பு பிரத்யோகமானது, எனக்கே எனக்கானது என
இருமாந்து கிடந்தேனே. இனி எப்போதும் அது கிடையாது என்பதை எப்படி
எதிர்கொள்வேன்.<br />
<br />
நாம் அதிர்ந்துதான் போனோம். அன்றைய பொழுது எப்போதும் மறக்கமுடியாத நாளாக
மாறித்தான் போனது. என் சித்தப்பாவும், உன் அக்காவும் காதலிக்கிறார்கள்
என்று நம் வீட்டின் ஒரு விஷேச நாளில் எல்லோர் முன்னும் சித்தப்பா சொன்னபோது
மொத்த குடும்பமுமே சந்தோசத்தில் ஆர்ப்பரிக்க, நீயும் நானும் உடைந்து
நொறுங்கினோம். அவருக்கு தன் அக்காள் மகள் மேல் காதல் வருவது எதார்த்தம்
கடந்த உரிமை என அறிவு சொன்னாலும் என் தந்தையைவிட நான் மதிக்கக்கூடிய,
குடும்பத்தை இத்தனை வருடங்களாக தூக்கிச்சுமந்த, அதற்காக வெளிநாட்டில் எட்டு
வருடங்களாக உழைத்து, இப்போதும் தனக்கு பணம் தேவைப்பட்டால் அப்பாவிடம்
கேட்க தயங்கி, அம்மாவிடம் விண்ணப்பம் வைக்கும் மரியாதையில், பாசத்தில்
உயர்ந்த குணமுள்ள அவருக்கு, அடுப்படியும், குமுதமும், விகடனும் தவிர்த்து
இப்படி ஒரு பெண் உன் வீட்டில் இருக்கிறாள் என்பதே ஊரில் பல பேருக்கு
தெரியுமா? என சொற்ப வார்த்தைகளால் தன் தினசரிகளை நகர்த்தும் உனது மூத்த
சகோதரி மிக, மிக பொருத்தமானவர்தான்.<br />
<br />
ஒரே வகுப்பில் தொடர்ந்து கல்லூரிவரைக்கும் பயிலும் நம்மை அவர்கள்
காதலர்களாக எப்போதுமே பார்த்ததில்லை என்கிற உண்மை அப்போதுதான் நாமே
உணர்ந்தோம். எப்போதும் சண்டைக்கோழிகளாய் திரிந்த நம் காதலை நண்பர்களே
அறியவில்லை என்பதும், நமக்குள் எந்த தருணத்தில் அது பூத்தது என்பதே
நினைவில்லை என்பதும் கூட இப்போதுதானே நினைவுக்கு வருகிறது!. கல்லூரி
வாழ்க்கை முடிந்து வேலையும் கிடைத்துவிட்டது என உன் வீட்டில் வைத்து
சந்தோசத்தில் ஆர்பரித்தபோது, ”இவளையும் கூட்டிட்டு போயிடேன், படிச்ச
படிப்புக்கு கொஞ்ச நாள் வேலைக்கு போவட்டும்” என அத்தை கிண்டலடித்தபோது
“ஏன், நானும் அவனோட போகத்தான் போறேன்” என்று கலகலவென சிரித்தாயே!. நான்
போகிறேன்,சென்னையில் கிடைத்த வேலையை உதறிவிட்டு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க
கேம்புக்கு வேலைக்கு போகிறேன். இனி வரவே கூடாது என்கிற தீர்மானத்துடன்
போகிறேன். நீ நிற்கிறாய், எப்போதும் பேசியே கொல்பவள், பேசாமல் நிற்கிறாய்!,
இனி நீ என்ன ஆகப்போகிறாய்?, உறவுகளில் எப்படி வாழப்போகிறாய்?. நான் கோழை,
உன்னை மட்டும் உறவுகளிடம் விட்டுப்போகிற கோழை.<br />
<br />
எல்லாம் கண நேரத்தில் மாறிவிட்டது. நம் தற்கொலை குடும்பத்தின் நிம்மதியை
நிரந்தரமாய் குலைத்துவிடக்கூடும் என்கிற உண்மையை உனக்கு புரிய வைப்பதே
பெரும்பாடகிவிட்ட எனக்கு, எப்போது நாம் சந்திக்க நேர்ந்தாலும் உன் கண்கள்
அணிச்சையாய் கலங்குவதை இனி என் வாழ்நாளில் நான் பார்க்கவே கூடாது. உன்னுடன்
நான் வாழ்ந்த நிமிடங்கள் என் மீதி நாட்களுக்கு போதும். காலம் நம்மை
மாற்றலாம், அல்லது மாற்றமில்லாத வாழ்வை விரும்பி வாழலாம். எது நடந்ததோ, அது
நன்றாகவே நடந்தது. இனி எது நடக்கப்போகிறதோ!, அது ஒருபோதும் நன்றாக
நடக்காது!. தத்துவங்கள் எப்போதும் பொதுவானவையாக இருப்பதில்லை.அழாதே என்று
சொல்ல முடியவே இல்லை. இனி அது மட்டும்தான் உன்னை எப்போதும் ஆறுதல்படுத்தும்
என்பதால். அழு... நான் விடைபெறுகிறேன்.</div>
</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-69404089031614591542014-08-13T20:26:00.000+05:302014-08-13T20:41:04.457+05:30இரவுகளின் இசை...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-2e914tLBEjw/U-t8OcmR4aI/AAAAAAAAGJk/aOht3lzmvKI/s1600/IMG_0401.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-2e914tLBEjw/U-t8OcmR4aI/AAAAAAAAGJk/aOht3lzmvKI/s1600/IMG_0401.JPG" height="426" width="640" /></a></div>
உலகில் பெரும்பாலோருக்கு
இரவு என்பது ஓய்வுக்கான நேரம். ஆனால் என் போன்ற தனிமை விரும்பிகளுக்கு அது
வேலை செய்வதற்காகவே படைக்கப்பட்ட ஒன்றாகும். இயற்கைக்கு எதிராகவே நீ
எப்போதும் இருக்கிறாய் என்பான் நண்பன். அவனுக்கு எல்லாம் நேரப்படி நடக்க
வேண்டும். அது அவனை ஒரு நிறுவனத்தின் மேலாளராக உயர்த்த மட்டுமே உதவியது.
தனிமை மிகப்பெரிய வரம், இரவும் அப்படித்தான். இரண்டும் ஒரு சேரக் கிடைத்தால்
நாம் இறைவனாய் மாறலாம்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br />
<br />
ஊரில் இருந்தபோது காதலித்தவள்
அகாலமரணம் அடைந்த இக்கட்டான தருணத்தில், நள்ளிரவில் ஊரின் எல்லைப்பகுதியில்
இருக்கும் சுடுகாட்டிற்கு செல்வதுண்டு என்னைப்போலவே தனித்திருக்கும்
பேய்கள் இருந்தால் அதனுடன் கொஞ்சம் அளவளாவி வரலாமே என்று தோனும். ஆனால்
அப்போது பேய்களும் என்னை புறக்கணித்தன. மெல்லிய மதுவின் போதையில் என்
தனித்த அழுகை வானுலகு சென்ற என் காதலியை ஒருபோதும் எட்டியதில்லை. ”தற்கொலை
செய்து பார்க்கலாமா?” எனும் ஆர்வம் மேலோங்கிய காலம் அது. அப்போதே
போயிருக்கலாம் இத்தனை அவலங்களை கடந்து வாழும் இப்பேய் வாழ்வுக்கு அது
உத்தமம் என இப்போது புரிகிறது. ஆனால் ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதையைப்போல்
வாழ்வென்னும் அடர்ந்த இருள்படர்ந்த இக்காட்டை கடந்து வெகுதூரம் செல்ல
வேண்டியிருக்கிறது. கொடுத்த வாக்குகள் பல உண்டு காப்பதற்கு. சமீபத்தில்
ஊருக்கு போனபோது அந்த சுடுகாட்டை சுற்றி நிறைய வீடுகள் இருந்தன.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br />
<br />
சிங்கப்பூரில்
இருந்தபோதும் தொடர்ந்து இரவு நேர வேலைகளை மட்டுமே விரும்பி செய்ததுண்டு.
ஒரு பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனத்தில் பேய் இருப்பதாக சொல்லி இரவு நேர
வேலைக்கு யாரும் வருவதில்லை என்றபோது நான் அங்கு ஒரு வருடத்திற்கும் மேலாக
தனியாளாக இரவு வேலை பார்ப்பேன். ஆனால் அங்கும் நானும், அப்பேயும்
எங்கள் தனிமைக்குள் சந்தோசமாகவே இருந்தோம்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br />
<br />
எங்கு ஊர்
சுற்றுவதாக இருந்தாலும் நண்பர்கள் இல்லாத தனித்த பயணங்களையே விரும்புவேன்.
எப்போதும் சகபயணியிடம் பேச விரும்பாத ஆள் நான். ஆனால் எல்லா பயணங்களும்
அப்படி அமைந்து விடாது. சில நபர்கள் நம்மை வறுத்தெடுப்பார்கள். அப்படியான
சில பயணங்களில் நான் வழியில் இறங்கி வேறு வண்டி மாறுவேன். சில சமயங்களில்
மொத்த இரவையும் ஏதாவது ஒரு பேருந்து நிலையத்தில் கழித்ததுண்டு. இரவு நேர
பேரூந்து நிலையங்கள் ஒரு சுவாரஸ்யமான அனுபவக்களம். பலதரப்பட்ட பெரும்பாலும்
ஏழ்மை பாரம் சுமக்கும் உன்னதமான மனிதர்களை சந்திக்கலாம். இங்கிருக்கும்
இரவு நேர டீக்கடைகளில் விடிய விடிய இளையராஜா இசைக்க ஐந்தாறு டீயும்
மனதிற்கு நெருக்கமான விலாசங்கள் தேவைப்படாத சில மனிதர்களும் வாழ்வில்
எல்லோருக்கும் கிட்டாத ஒன்று.
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சில வருடங்கள் முன்பு வரைக்கும்
இரவு நேர மோட்டார் சைக்கிள் பயணத்தை செய்திருக்கிறேன். இரவை தன் சிறிய
வெளிச்சங்களால் விரட்டிப்பாயும் வாகனங்கள். சில்லிடும் காற்று. வழியில்
நிறுத்தும் காவலர்கள். சம்யங்களில் முகம் தெரியாத நபர்கள் சிலரை
ஏற்றிக்கொண்டு வழிநெடுக ஏதும் பேசாமல் கடைசியில் மனம் நிறைய நன்றிகளுடன்
அவர்கள் விடைபெறும் தருணம். இவற்றை வயது காரணமாக இப்போது அனுபவிக்க
முடிவதில்லை.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br />
சில
நெருங்கிய உறவுகளின் இறுதி நேரத்தில் நான் உடன் இருந்திருக்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br />
<br />
இருபதாவது வயதில் மாமா ஒருவர் தலையில் அடிபட்டு சென்னை அரசு
மருத்துவமனையில் 21 நாட்கள் கோமாவில் இருந்தார். அவரின் இறுதி நாளில் நான்
மட்டுமே உடன் இருந்தேன். இறப்பதற்கு சில நிமிடங்கள் முன் அவர் நினைவு
திரும்பினார். அவரின் விழிகள் என்னிடம் எதுவோ சொல்ல ஆசைப்பட்டன. ஆனால்
கண்ணீர் வழியும் அவரின் விழிகளில் என்னால் எதுவுமே படிக்க முடியவில்லை.
இரவு 8 மணிக்கு அவர் இறந்து போனார். மறுநாள் காலை அவர் மனைவிக்கு ஆண்
குழந்தை பிறந்தது.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br />
<br />
என் சகோதரி மகன் வீரா விபத்தில் சிக்கி மருத்துவமனையில் ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தான். பணி முடிந்து வீட்டிற்கு செல்லவேண்டிய ஒரு செவிலிய சகோதரி என்னுடன் அவன் அருகிலேயே இருந்தார். ”ஏன் வீட்டிற்கு செல்லவில்லை?” எனக்கேட்டேன். ”இல்லண்ணே மனசுக்கு கஷ்டமா இருக்கு” என்றார். மேலும் தான் ஒரு நாத்திக குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் அறிவின் நீட்சியைத் தாண்டி இப்போது ப்ரார்த்தனை செய்யனும்போல இருக்கு என்றார். என்னதான் சாவுகளை விதம் விதமாக பார்த்திருந்தாலும் இப்படி சின்னப் பிள்ளைங்க சாகும்போது வாழ்க்கையே வெறுத்துப் போயிடுது என்றார். இவ்வளவு சிறிய வயதில் அவருக்கிருந்த நிறைந்த ஞானம் என் சோகத்தை நிதானப்படுத்தியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்ற வருடம் அப்பா தன் இறுதி நேரத்தை
நெருங்கிக்கொண்டிருந்தார். அவ்விரவின் விடியற்காலையில் அவரின் மூச்சு முற்றிலும் அடங்கியபோது ஒரு
தனித்த அழுகுரல் மெல்ல மெல்ல எங்கள் வீட்டை பலரின் அழுகுரல்களுடன் அந்நாள்
முழுதும் நிரப்பின. தன் வாழ்வை தான் விரும்பியபடி அவர் வாழ்ந்து
முடித்திருப்பாரா? என்பதுதான் என் அப்போதைய கேள்வியாக இருந்தது.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br />
<br />
இரவுகள் எப்போதும் ஆசானாகவே இருந்து என்னை வழிநடத்தட்டும்.</div>
</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-28959006770268316802014-08-10T15:40:00.000+05:302014-08-10T15:40:01.740+05:30இயக்குனர் ஆவது எப்படி?!... நெடுந்தொடர் அல்ல!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipTdBjjWsgTDBmEFXst459B3NawuUc9bmkBBoG1nT4B23IJvCHQwKDoN-_4Uoj_PwyhzLm0i2kfbcqIitNTUyUm0QeVeE9I_CTnfMjaTlCt-xDyeY4FGajFMNMGPb0az7wvEJp7URrl-nt/s1600/3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipTdBjjWsgTDBmEFXst459B3NawuUc9bmkBBoG1nT4B23IJvCHQwKDoN-_4Uoj_PwyhzLm0i2kfbcqIitNTUyUm0QeVeE9I_CTnfMjaTlCt-xDyeY4FGajFMNMGPb0az7wvEJp7URrl-nt/s1600/3.jpg" height="456" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
திரைக்கதை எழுதுவது எப்படி?, உலக சினிமா, தமிழ் சினிமாவில் இலக்கியம்!,
வாங்க சினிமா எடுக்கலாம்!, இப்படியாக ஏராளமான பேர் எண்ணற்ற தலைப்புகளில்
புத்தகம் எழுதிவிட்டனர். ஒப்பு நோக்கினால் சுஜாதா போன்ற ஒரு சிலரைத்தவிர
மற்றவர்கள் சினிமாவில் என்ன பங்கு வகித்தார்கள் என்பது மாதிரியான
சந்தேகங்கள் ஏதும் இல்லாமல் தமிழன் தனக்கான தலைவனை திரையில் இருந்தே
தேர்ந்தெடுக்கும் அதாகப்பட்டது அட்டைகத்திகள் தேர்ந்தெடுத்த தெர்மக்கோல்
கத்திகள் என வரலாறு ஆணித்திரமாக நெஞ்சில் இறங்கிவிட்டதாலும், சென்னை
நோக்கி படையெடுக்கும் லட்சத்தில் ஒரிருவர் குறைவாக மற்றவரெல்லாம் சினிமாவை
காப்பாற்றும் உன்மத்தம் பிடித்தே வந்து சேர்கிறார்கள்.<br />
<br />
சமீபமாக சமூக தளங்களின் உதவியாலும் தொழில்நுட்பம் தன் பரிணாம வளர்ச்சியை
செல்போன் கேமராவரை கொண்டு வந்துவிட்டதாலும் சினிமா என்பது ரெண்டே
நிமிடத்தில் அல்வா செய்வது எப்படி? என்பது மாதிரியான இன்ஸ்டண்ட் சமாச்சாரம்
ஆகிவிட்டது. அதிலும் என்னை மாதிரி ஒலகத்தை புரட்டும் கடப்பாரை
சுமந்தவர்கள் கூட அரசியல், சமூகம் என்பதை தாண்டி சினிமா விமர்சனம் எழுத
வந்துவிட்டதற்கு ஒரு காரன காரியம் எனக்கு தனியாக இருந்தாலும்,
இருக்கிற அதிலும் எப்போதும் ஃபேஸ்புக், ட்விட்டர் என பழியாய் தவம் கிடந்து
விரல் தேய்க்கும் முன்னூத்தி சொச்சம் (நெஜமாவே அவ்வளவு பேர்தான் தமிழில்
இருக்காங்க) பேர்களையும் தாண்டி ஆதியில் தோன்றிய பதிவுலகில் இன்னும்
விமர்சனத்தில் கேபிளின் இடத்தை இட்டு நிரப்ப சிலர் முப்பது ரூவா திருட்டு
டிவிடியில் (காசு கொடுத்தாலும் திருட்டு டிவிடிதான்) பாத்துட்டு படம்
இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வருவதற்கு முதல் நாளுக்குள்ளாவது
விமர்சனம் எழுதும் ரேங்கோளாறு ஆட்களும் உண்டு. அதிலும் ஸ்பீல்
ஃபெர்க்கிற்கே யோசனை, இந்தப்படத்தை நான் இயக்கினால் என புதிய பரிணாமங்களில்
விமர்சனம் எழுதும் திரை விமர்சன மேதைகளும், படம் பார்க்க போன கதைகளை
தொகுப்பாக போடும் அளவுக்கு எழுதும் விமர்சனங்களும் நம்மை சினிமா எனும்
மாயவலை எப்படியெல்லாம் வீசப்பட்டு அமுக்கப்படுகின்றன எனும் சொற்ப
உதாரணங்கள் ஆகும்.<br />
<br />
எங்களுடைய தலைவன் கேபிள் படம் இயக்கப்போகிறார் என்றதும், அது வரைக்கும்
கூடவே சுற்றிய செவ்வாழையாக இருந்த எனக்கு கண்டிப்பாக அவர் ஏதாவது வாய்ப்பு
கொடுப்பார் என எதிர்பார்த்தது ஒரு குத்தமாங்க!?. அப்பதான் தெரிந்தது
கேபிள் ஒரு பாவப்பட்ட ஆத்மான்னு மனுசனுக்கு அண்டார்டிகாவிலிருந்து கூடவா
ரெகமெண்டேஷன் வரும். நடிக்க, உதவி இயக்குனர் ஆக இன்னும் பலப்பலவாக தினம்
நூறு வின்னப்பங்கள் அதற்கான பரிந்துரைகள் என பதிவுலகம், முகநூல் மற்றும்
தெரிந்த தெரியாத ஆட்கள் அவரின் படத்தில் பணிபுரிய தவம் கிடக்க மனுஷன் ஒரே
கார்க்கியை மட்டும் கூட வச்சுகிட்டு (அதில் பணியாற்றிய கோ டைரக்டர், உதவி
டைரக்டர்கள் எல்லாம் அனுபவம் உள்ளவர்கள்) படத்தை எடுத்து முடிச்சுட்டார்.
பொறவு நான்
எப்புடி வாய்ப்பு கேட்பேன். அதனால அவருக்கு இருக்கும் MAASS பாத்து எனது
சகல மயிர்கால்களும் இயக்குனர் ஆகியே தீர்வது என லட்சியத்தின் உச்சத்தை
நோக்கி நீண்டு விட்டது. என்ன அதற்குள்ளாகவே ஓடுறீங்க இன்னும் ஒரு பாரா
மட்டும்தான் இருக்கு அதையும் படிச்சிருங்க அப்பதான் என்மேல் நான்
வைத்திருக்கும் நம்பிக்கை ஒங்களுக்கு புரியுன்றேன்.<br />
<br />
அதாகப்பட்டது சுமாராக 2000 ஒலகப்படங்கள் பார்த்திருக்கிறேன். இப்பவும்
கேபிள் மற்றும் சிவாவுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், என
சகல மொழிப்படங்களையும் தினசரிக்கு ஒன்று எனும் ஆர்வகோளாறால் பார்க்கிறேன்.
அப்படியிருக்க உதவி இயக்குனராக பணியாற்ற வந்த நண்பர் ஒருவரின் சினிமா
அனுபவம் என்னை ஆச்சர்யத்தின் நடு மண்டையில் கொட்டோ கொட்டோ என கொட்டி
தீர்த்தது. அதாகப்பட்டதுங்க படம் பார்க்கிற வழக்கமெல்லாம் அவருக்கு கெடயவே
கெடயாதுங்க, எப்பயாச்சும் பொழுது போவலன்ன படம் பார்க்கிற குரூப்பாம் அவரு.
அதிலும் ஒலகப்படங்கள் என்றால் ஜாக்கிசான் நடிச்சதுதானாம்!!!. சரி நீங்க
எதுக்காக சினிமாவுக்கு வந்தீங்கன்னு கேட்டா “சொம்மா டைம் பாசுக்குதான்” னு
சொன்னதும் அப்படியே ஷாக்காயிட்டேன். கொஞ்ச நாளுக்கு முன்னாடிதான் நம்ம
பதிவுலக சக ஒருத்தரு சினிமா விமர்சனம் எழுதுனா இயக்குனர் ஆகலாம் என
சொல்லிருந்தாரு. இப்ப டைம் பாசுக்கே இயக்குனர் ஆகலான்னு ஒருத்தர் சொல்றாரு.
அப்ப இவ்ளோ படத்தையும் பார்த்த நான் இயக்குனர் ஆவதில் என்ன தவறு இருக்க
முடியும். ஆகவே நண்பர்களே யாராவது படம் தயாரிக்க ஆசைப்பட்டால் உடனே
அனுகவும்:<br />
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-elJ-nA-caTc/U-dEGkH_AMI/AAAAAAAAGH4/kA3UgGZklLA/s1600/5.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-elJ-nA-caTc/U-dEGkH_AMI/AAAAAAAAGH4/kA3UgGZklLA/s1600/5.png" /></a></div>
<br />
<br />
மன்னார் அண்டு கம்பேனி,<br />
கவுண்டமணி - செந்தில் ஃஃபேன்ஸ் கிளப்,<br />
கோடம்பாக்கம், சென்னை.<br />
கிளைகள்: வட பழநி, தி.நகர், மாம்பலம்<br />
தொடர்புக்கு : கப்பல் யாவாரி (மேனேஜர்) <br />
</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-36569330839625545622014-07-22T22:59:00.000+05:302015-02-13T22:58:21.837+05:30தனிமையின் இசை… <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOwp28xQqAxKQYymUj-2mFwomiAFBCPZhaU2kMhCxpBmvkYX5_NOM_XW0D9EE398YpP1fZ5YRRAhcTGeFaqWWX4ZiF-2U3TMF2PGX6nweMvmtazxtBD8rrb_NyRbEyHuVI_mZA6pgK-wFH/s1600/krp.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOwp28xQqAxKQYymUj-2mFwomiAFBCPZhaU2kMhCxpBmvkYX5_NOM_XW0D9EE398YpP1fZ5YRRAhcTGeFaqWWX4ZiF-2U3TMF2PGX6nweMvmtazxtBD8rrb_NyRbEyHuVI_mZA6pgK-wFH/s1600/krp.jpg" height="400" width="398" /></a></div>
<span style="font-size: small;"><span style="font-family: inherit;"><span style="line-height: 115%;">ரம்ஜான் மாத மழைக்கால இரவொன்றில் நான் தனித்திருக்கிறேன். மின்சாரம்
அடர் மழை காரனமாக நிறுத்தப்பட்டு ஒற்றை மெழுகுவர்த்தி காற்றில் போராடியபடி என்னை ஒரு
பேரிருளில் இருந்து இன்னும் சற்று நேரம் தள்ளி வைக்க முயன்று கொண்டிருந்தது. தனிமை எனக்கு
மிகவும் பழக்கமானதும், பிடித்தமானதும் கூட. எப்போதெல்லாம் தனிமை கிட்டுகிறதோ!, அப்போதெல்லாம்
என் சுயம் காப்பாற்றப்படுவதை உணர்ந்திருப்பதால், கிடைத்த சொற்ப தனிமைகளைக்கூட ஒரு திருவிழாவைப் போல கொண்டாடுபவன்
நான். சொற்ப மதுவுடன் கூடிய தனிமை ஒரு வரம்.</span></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: inherit;">
</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: inherit;"><span style="line-height: 115%;"><br /></span></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: inherit;">
</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: inherit;"><span style="line-height: 115%;">வெளியே பெய்யும் பெருமழைக்கு ஒதுங்கிய அல்லது வழிதவறிய தவளையொன்று
எப்படியோ வீட்டிற்குள் நுழைந்து மொழி புரியாத ஒரு பாடலை அவ்வபோது பாடிக்கொண்டிருந்தது.
இதே போல ஒரு ரம்ஜான் மழைநாளில்தான் நான் உன்னை சந்தித்தேன். அது ஒரு முற்பகல் நேரம்.
அறையில் தனித்திருந்த நான் சமைக்க அலுப்பாகி, கடைத்தெருவுக்கு ஏதாவது உணவு வாங்கிப்போகலாம்
என கனுக்கால் நீரில் செறுப்பில்லாத கால்களால் சளப்.. சளப் என ஒரு தாள கதியுடன் நடந்துசென்றேன்.
மனது சில சோகப்பாடல்களை அத்தாளகதிக்கு தயார் படுத்தி என்னை மழையுடனான உறவில் இருந்து
பிரிக்க முயன்றபோது, சடாரேன வீசிய ஒரு காற்று என் முன்னே ஒரு குடையை வேகமாக இழுத்துச்செல்ல
பின்னால் அவசரமாக ஒரு குரல் “பிடிங்க..பிடிங்க” எனப்பதறவே குடையைப் பிடிக்கும் உத்வேகத்தை
எனக்குள் அக்குரல் என்னை உத்தரவிட்ட வசீகரத்தை ரசித்தபடி ஓடோடி அக்குடையை அடைந்த கணத்தில்தான்
நான் உன்னை பார்த்தேன். ஒரு கணம் பிரபஞ்சம் நின்று சுழன்றது மாதிரி இருந்தது!.</span></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: inherit;">
</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: inherit;"><span style="line-height: 115%;"><br /></span></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: inherit;">
</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: inherit;"><span style="line-height: 115%;">ஒரு அசாதரனமான புன்னகையால் எனக்கு நன்றி சொன்னாய். பரவாயில்லை
எனச் சொல்லியபடி உன் புன்னகையின் ஆகர்சத்தில் நான் மூழ்கியபோது, “நீங்களும் குடைக்குள்
வாங்க” என என் அனுமதிக்கு காத்திராமல் எனக்கும் குடை பிடித்தாய். நாம் இருவருமே ஒரு
பாதி நனைந்தோம். எதற்காக நான் சாலைக்கு வந்தேன் என்பதே மறந்துவிட்டது எனக்கு. </span></span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: inherit;"><span style="line-height: 115%;">அதன்பின்
சந்திப்புகள்… சந்திப்புகள்… சந்திப்புகள். வாழ்வின் வசந்த காலங்கள் அவை. அப்போதும்
சரி, இப்போதும் கூட ஏன் என் காதலை உன்னிடம் சொல்லமுடியவில்லை? என்பதற்கான விடையே கிடையாது!.
உன்னை சந்திக்கிறேன், பேசுகிறேன் என்பதே என் வாழ்நாளுக்கு போதுமானதாக நான் நினைத்திருக்கலாம். காதலை சொல்லமுடியாமல் தவிப்பது கூட விரும்பி அனுபவிக்கும் ஒரு சுகம்தான் என அப்போது தெரியவில்லை. காலத்தை தேவன் சுகமாக வைத்திருக்கிறான், சமயங்களில் அவன் பைத்தியக்காரனாகவும் மாறித்தான் விடுகிறான்.</span></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: inherit;">
</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
</div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br />
<span style="font-size: small;"><span style="font-family: inherit;"><span style="line-height: 115%;">ஒரு உச்சி வெயில் பொழுதில் உனக்கு வேலை மாறுதல் கடிதம் வந்த செய்தியை தோழி மூலம் அறிந்துகொண்டேன். மறு வாரம் ஒரு அவசர அவகாசத்தில்
ரயில் நிலையத்தில் நீ என்னை கடைசியாகப் பார்த்தபோது உன் கண்கள் மிகுதியாக அழுதுக் களைத்திருந்தன.
மிகுந்த சிரமத்துடன் நீ என் கைகளை பிடித்தபடி ஊருக்குப்போனதும் கடிதம் எழுதுகிறேன்
என்று உன் சிறிய புன்னகையால் என்னை சமாதானம் செய்வதுபோல கெஞ்சினாய், நாம் விடை பெற்றோம்.
அந்த இரவுதான் நான் வாழ்வில் சந்தித்த நீண்ட, கொடுமையான இரவு. அதன்பிறகு ஏராளமான இரவுகள்.
தனிமை இரவுகள். ஆறு மாதம் கழித்து உன் திருமண அழைப்பிதழை அனுப்பியிருந்தாய் அத்துடன்
ஒரு சிறிய கடிதம், திருமணத்திற்கு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
கலைந்திருந்த எழுத்துக்கள் உன் கண்ணீரால் கழுவப்பட்டிருக்க வேண்டும். எப்போதும் வேண்டுகோளை
மதிப்பவன் நான்.</span></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: inherit;">
</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: inherit;"><br /></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: inherit;">
</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: inherit;"><span style="line-height: 115%;">இத்தனை வருடங்களாக உன்னை நான் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
அதை நான் விரும்பவும் இல்லை. மெல்ல மெல்ல இத்தனிமை எனக்கு பழகிவிட்டது. இன்று மழையால்
அலுவலகம் செல்லவில்லை. காலை, மதியம் என இருவேளை சாப்பிடாதது பசியின் தாக்கத்தை அதிகப்படுத்தியிருந்ததால்,
</span></span></span><span style="font-size: small;"><span style="font-family: inherit;"><span style="line-height: 115%;"><span style="font-size: small;"><span style="font-family: inherit;"><span style="line-height: 115%;"><span style="font-size: small;"><span style="font-family: inherit;"><span style="line-height: 115%;">மாலையில் </span></span></span></span></span></span>கடைத்தெருவுக்கு </span></span></span><span style="font-size: small;"><span style="font-family: inherit;"><span style="line-height: 115%;"><span style="font-size: small;"><span style="font-family: inherit;"><span style="line-height: 115%;"> </span></span></span>சென்றிருந்தேன். எப்போது மழை பெய்தாலும் குடை தேவைப்படாத
ஆள் நான். மழை என்றால் நனைவதே விருப்பம். வெளியே மழை சாரலாக இறங்கிக்கொண்டிருதது. நாயர்
கடையில் கட்டன் சாயா அடித்துவிட்டு எங்காவது சூடாக இட்லி சாப்பிடலாம் என மனம் கணக்கிட
நாயர் கடையில் சாயாவை ருசித்தபடி மழையை ரசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கணம் பிரபஞ்சம்
நின்று சுழன்றது. ஆம், நீ தெருவில் நடந்து வந்தாய்!. கூடவே உன் கணவனும், பிள்ளையும்
என நினைக்கிறேன், சாரலில் குடைக்கு வெளியே நடந்து வரும் உன்னை கேலி பேசியபடி வருகிறார்கள்.
உன்னுடன் பேச வேண்டும் எனும் பெருவிருப்பத்தை மனதிற்குள்ளாக புதைக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன்.
</span></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: inherit;">
</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: inherit;"><span style="line-height: 115%;"><br /></span></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: inherit;">
</span></span>
<span style="font-size: small;"><span style="font-family: inherit;">
</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: inherit;"><span style="line-height: 115%;">மெழுகுவர்த்தி தன் உயிரை விட்டுவிட்டது, பேரிருள் என் தனிமையை
சொந்தமாக்கி கொண்டது. வெளியே மழை அசுர வேகத்தில் இந்த நகரை மூழ்கடித்துக்கொண்டிருக்கிறது.
வழிதவறிய ஒற்றைத்தவளை இந்த அறையில் என் தனிமையை பாடிக்கொண்டிரு</span><span style="line-height: 13px;">க்கிறது</span><span style="line-height: 13px;">.</span></span></span></div>
</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-24971598398531220632014-06-25T13:26:00.001+05:302014-06-25T14:03:53.236+05:30வித் யூ.. விதவுட் யூ.. விமர்சனம் - (ஈழ வியாபாரம்)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidjk-Q1h__s4hlIdT9cVqAS44M6_kTnroB3icG2RQRCiw84x2RMJ0pFVU8Gw25bLtkIz_lo3MYJfVAq215X7pPHEl7l4fcxfg8-wae9bvJNOIE2nVEruGv6z2Htnh6hh19R8hT8tjbqeqJ/s1600/unnamed+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidjk-Q1h__s4hlIdT9cVqAS44M6_kTnroB3icG2RQRCiw84x2RMJ0pFVU8Gw25bLtkIz_lo3MYJfVAq215X7pPHEl7l4fcxfg8-wae9bvJNOIE2nVEruGv6z2Htnh6hh19R8hT8tjbqeqJ/s1600/unnamed+1.jpg" height="313" width="400" /></a></div>
யாரோ ஒரு
அனானி பிவிஆர் சினிமாவுக்கு போனில் மிரட்டல் விடுத்ததாக சொல்லி படத்தை
திரையிடவில்லை என படத்தின் இயக்குனர் சொல்லியிருந்தார். ஆனால் தமிழ்
அமைப்புகள் தடைகள் எதுவும் கேட்காத போதே, அவர்கள் மேல் கடுமையான
விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழ் ஸ்டுடியோ அருண் 22 மணி நேர
போர்கால முயற்சியில் நேற்று மாலை வடபழனி ஆர்.கே.வியில் தன் சொந்த செலவில்
திரையிட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br />
படத்தின் கதை: சிங்கள கிராமங்கள் சூழ்ந்த ஒரு மலையகத் தமிழ்
கிராமத்தில்(தகவல் - வ.ஐ.ச. ஜெயபாலன்) அடகுக் கடை நடத்தி வருகிறார் சிங்கள
இளைஞர்? ஒருவர். அவர் கடைக்கு தன் நகைகளை அடகு வைக்க வரும் தமிழ்ப்பெண்
மீது அவர் காதல் வயப்படுகிறார். யாழ்பாணத்தை சேர்ந்த அந்தப்பெண் போரினால்
குடும்பத்தை இழந்து உறவினர் வீட்டில் அடைக்கலமானவள், அவளின் உறவினர்கள்
அவளை இரண்டாம் தாரமாக ஒருவருக்கு கட்டிவைக்க முடிவு செய்துள்ள நிலையில்
அடகுக் கடை வைத்திருப்பவர் வீட்டில் சமையல் வேலை செய்யும் தமிழ்ப் பெண்மணி
உதவியால் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். நாயகனின் பெற்றோர்
குறித்து நாயகி விசாரிக்கும்போது அவன் தனக்கென யாரும் இல்லை என்றும் பழசு
எதையும் கிளற வேண்டாம் எனவும், அதைப்போல் தானும் அவளின் கதை பற்றி அறிய
விரும்பவில்லை என்று சொல்கிறான். மிகவும் மகிழ்ச்சியாக அவர்கள் வாழும்போது.
நாயகனின் நண்பன் வீட்டுக்கு வருகிறான். அவன் மூலம் நாயகன் முன்னாள் சிங்கள
ராணுவ வீரன் என நாயகிக்குத் தெரிய வருகிறது. நாயகி இதை ஏன் என்னிடம்
மறைத்தாய் என அவனிடம் கோபப்பட்டு மனநிலை பாதிக்கப்படுகிறாள். இந்நிலையில்
நாயகன் தன் பழைய கதைகளை அவளிடம் சொல்லி மன்னிப்புக் கேட்கிறான். ஆனால்
நாயகியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படாமல் போகவே தன் அடகுக் கடையை
விற்றுவிட்டு அவளுக்கு விருப்பமான இந்திய பயணத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு
வீட்டுக்கு வருகிறான். ஆனால் நாயகி மாடியில் இருந்து கீழே விழுந்து
தற்கொலை செய்துகொள்கிறாள். அதன்பின் நாயகியின் நினைவுகளுடன் அவன் வாழ்வதாக
படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.</div>
<div style="text-align: justify;">
<br />
இதில் மேலோட்டமாக ஒரு சினிமாவாகப் பார்த்தால் அபத்தமான ஒரு
படம் அவ்வளவுதான். ஆனால் இதில் பின்னால் பேசப்படும் அரசியல் வெகு
ஆபத்தானது. <br />
<br />
முதலில் யாழ்பாணத்தில் போரால் பாதிக்கப்பட்டவள் எப்படி
ஒரு சிங்களவனை நம்புவாள். அடுத்து எதோ ஒரு தேவைக்காக அவள் திரும்பத்
திரும்ப அடகுக் கடைக்கு வருகிறாள். அது எதற்காக என விளக்கம் இல்லை. வேலை
தேடும் அவளை ஏன் தோட்ட வேலைக்கு போகக்கூடாது? என அவள் உறவினர்கள்
சொல்கிறார்கள். படித்த மேல் தட்டு பெண்ணை ஏன் அவர்கள் தோட்ட வேலைக்கு செல்ல
நிர்பந்திக்கவேண்டும். படத்தில் அவர்கள் வீட்டில் விஜய் படத்தை
தொலைக்காட்சியில் பார்க்கிறார்கள். நாயகன் நாயகியை திரையரங்கிற்கு
அழைத்துச்செல்லும் படமும் விஜய் படம்தான். படத்தில் சாலைக் காட்சிகளில்
பின்னனி இசையாக தமிழ் படத்தின் பாடல்கள் வீடுகளில் ஆட்டோக்களில் ஒலிப்பதாக
காட்டப்படுகிறது. மேலும் அதிகாலையில் ஊர் முழுக்கவே பக்திப்பாடல்
ஒலிபரப்பப்படுவதாகவும் காட்டப்படுவது அங்குள்ள தமிழர்கள் ஒரு இணக்கமான
அமைதியான சூழ்நிலையில் வாழ்கிறார்கள் என்பதை திணிக்க
பயண்படுத்தியிருக்கிறார்கள். ஒரு காட்சியில் தேவாலயத்தில் இருந்து
திரும்பும் நாயகியிடம் உன் கடவுள் உன்னைக் காப்பாற்றாது. நான்தான் உன்னைக்
காப்பாற்ற முடியும் என்கிறான் நாயகன். ஆனால் அவன் தினமும் புத்தரை
வணங்கிவிட்டுத்தான் தன் அன்றாட வேலைகளை துவங்குகிறான். </div>
<div style="text-align: justify;">
<br />
நாயகன் முன்னாள் ராணுவத்தினன் என்பதாலேயே நாயகி அவனை
வெறுக்கிறாள். ஆனால் சாதாரன சிங்களவர்களிடம் அவளுக்கு வெறுப்பில்லை என்று
காட்டப்படுகிறது. இதற்காக ஒரு படுக்கையறை காட்சி ஒன்று காட்டப்படுகிறது.
ராணுவத்திலும் நல்ல சிங்களர்கள் இருக்கிறார்கள் குற்ற உணர்சி மிகுந்த
நாயகன் பாத்திரம் அதைத்தான் காட்ட பயண்பட்டிருக்கிறது. <br />
<br />
தமிழர் தரப்பு நியாயங்களையும் படத்தில் வைத்திருக்கிறார்கள். நாயகன்
நாயகியிடம் உன் சகோதரர்கள் புலித்தீவிரவாதிகள் என்று நான் சொல்லவில்லையே என
கேட்கிறார். அதற்கு நாயகி அவர்கள் பள்ளி சிறுவர்கள் என்றும் தன்னைக்
காப்பாற்றுவதற்காகவே ராணுவத்தினருடன் சண்டை போடும்போது சுடப்பட்டனர் என்று
சொல்கிறாள்.<br />
<br />
படம் முழுவதும் ஒரு அடகுக்கடை, ஒரு வீதியில்
படமாக்கப்பட்டுள்ளது. மிக நகரும் திரைக்கதை, திரும்பத் திரும்ப
காட்டப்படும் காட்சிகள் என திரையங்கிற்கு வந்தால் சில காட்சிகள் கூட ஓடாத
இப்படத்தை ஏன் வேண்டுமென்றே ஒரு வதந்தியைப் பரப்பி 22 மணிநேரம் போராடி
இயக்குனரை அழைத்து படத்தை இலவசமாகக் காட்டுகிறார்கள். இதனால் அங்குள்ள
தமிழர்களுக்கு நல்லது எதாவது நடந்து விடுமா? ஒரு சிங்கள இயக்குனருக்காக
இப்படி தீவிரமாக வேலை செய்யும் இவரகள் ஏன்? முடங்கிப்போன தமிழ்ப்படகளுக்காக
வேலை செய்யவில்லை. தொடர்ந்து சிங்களர்களுக்கு டாய்லெட் கழுவத்தயாரக
இருக்கும் இவர்கள்தான் தமிழ் அமைப்புகளை தீவிரவாதிகள் என தங்கள் முகநூல்
பக்கங்களில் எழுதுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br />
இன அழிப்பு நடைபெற்று இத்தனை ஆண்டுகள் நடைபெற்ற இத்தனை
ஆண்டுகளில் அதனை ஒருமுறை கூட கண்டிக்கத் துப்பில்லாத சாரு, எஸ்.ரா
போன்றவர்கள் இந்தப் படத்தின் திரையிடலுக்கு வந்திருந்தார்கள். படம்
முடிந்ததும் வ.ஐ.ச. ஜெயபாலன் படத்தின் இயக்குனருக்கு சத்தமாக நன்றி
சொன்னார். அவர் இந்தப்படத்தை எதற்காக ஆதரிக்க வேண்டும்? இலங்கையில்
எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது இயக்குனர் இந்தப்படத்தை எடுத்ததன்
மூலம் அங்கு போருக்குப் பின் எல்லாம் இயல்பாக இருக்கின்றன. ஆனால்,
தமிழர்கள் இன்னும் ராணுவத்தின் மேல் மட்டும் (அதில் சில நல்லவர்கள்
இருந்தாலும்) வெறுப்பாக இருக்கின்றனர். என சொல்கிறார். 13வது திருத்த சட்டத்தையே
அமல்படுத்த மாட்டோம் என பகிரங்கமாக சொல்லும் சிங்கள அரசாங்கத்தை விமர்சனம்
செய்ய துப்பில்லாதவர்கள்தான் இங்கு இலக்கியம் ஊடக சுதந்திரம் பற்றியெல்லாம்
வாய்கிழிய பேசுகிறார்கள். இனத்துக்காக போராடுகிறவர்களை
இவர்கள்தான் ஈழவியாபாரிகள் என்று கொச்சைப்படுத்துகின்றனர். இங்கிருக்கும்
அரசியல் தலைவர்கள் குடும்பத்துக்காக இனத்தை விற்பவர்கள். அவர்களை போற்றும்
அடிமைகளிடம் இருந்து நாம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br />
அரங்கு நிறைந்து வழிந்தது. படம் முடிந்தவுடன் கைதட்டி
வாழ்த்து தெரிவித்தனர் சிலர். நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும்
சினிமா அடிமைகள் என்பதைத்தான் படத்தில் இயக்குனர் பலமுறை காட்டியுள்ளார்.
அது உண்மைதான் என நேற்று தெரிந்தது. தங்கள் எதிர்கால முதல்வரை இன்னும்
வெள்ளித்திரைகளில்தான் தமிழன் (மொத்த இந்தியனும்) தேடிக்கொண்டிருக்கிறான்.
இவன் இப்படி இருக்கும் வரைக்கும் வெறும் ஒன்றரை கோடி பேர் இருக்கும்
இலங்கை. 120 கோடி பேருக்கு மேல் இருக்கும் இந்திய மீனவனை என்ன
வேண்டுமானாலும் செய்வான். ஏனென்றால் உதைபடும் மீனவன் பற்றிய நியாயத்தைவிட
உதைக்கும் சிங்களனுக்கான நியாயத்தை கைக்காசு போட்டு விளக்க முயலும் தமிழ்
ஸ்டூடியோ அருண் போன்றவர்கள் இருக்கிறார்கள். <br />
<br />
சிங்களர்களுக்காக கூட இங்கு குரல் கொடுக்க ஆட்கள் இருக்கின்றனர்.
சினிமாவை வெறும் சினிமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொல்கிறாகள்.
”வாழ்க ஜனநாயகம்” ஆனால், அது தமிழச்சிகளின் பெண் குறிகளின் மேல்
நிலைநாட்டப்படுகிறது. அதுவும் இங்கிருக்கும் அவர்களின் ரத்த உறவுகளினால்
என்பதுதான் வேதனை. </div>
<div>
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-89899003873972068022014-03-03T11:32:00.000+05:302014-03-03T14:06:33.643+05:30சவுக்கு - துணிவே துணை...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEF14yszpZgyH-nMaToHfDz1_RRqcYoDHTMWtA_BrVIkbi-3OCOz7RR1HIdc6HlAIvsffu2-IdCo3JdeNDmjldhOryIlEw-dOnYyWY88MxPlFJ4CCPUeQ6322dGrS7hRu9ETqtnIBUZmDB/s1600/3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEF14yszpZgyH-nMaToHfDz1_RRqcYoDHTMWtA_BrVIkbi-3OCOz7RR1HIdc6HlAIvsffu2-IdCo3JdeNDmjldhOryIlEw-dOnYyWY88MxPlFJ4CCPUeQ6322dGrS7hRu9ETqtnIBUZmDB/s1600/3.jpg" height="272" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
தமிழ் இணைய உலகில் முதன் முதலாக துணிச்சலாக அரசுக்கு எதிரான கட்டுரைகளையும், தகவல்களையும் தருவது சவுக்கு இணைய தளம்தான். வெகு ஜன ஊடகங்கள் அரசியல் கட்சிகளுக்கு பயந்து அல்லது அவதூறு வழக்குகளுக்கு பயந்து தங்களுக்கு தெரிந்த செய்திகளைக் கூட எழுத தயங்கும் சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சி அதிகார வர்க்கத்தின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளை கேள்வி கேட்க ஆரம்பித்தது. பொது வாழ்க்கையில் இயங்கும் யாரையும் விமர்சிக்கும் உரிமை ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் இருக்கிறது. தங்கள் மேல் குற்றம் இல்லை என்றால் விளக்கம் கேட்கலாம், வழக்கு தொடுக்கலாம். ஆனால், அதிகாரத்தை பயண்படுத்தி கைது செய்வதும், தளத்தை தடை செய்ய உத்தரவிடுவதும் எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசாங்கம், ஆள்பவர்களும், அதிகாரிகளும், நீதித்துறையும் மக்களுக்காகத்தான். மக்கள் இதற்கு முன் வாய் மூடி நீங்கள் என்ன செய்தாலும் பொறுமையாக இருந்தார்கள். இப்போது விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி எல்லோர் கைகளிலும் இருக்கிறது. அவர்களுக்கு கேள்வி கேட்கவும், விமர்சிக்கவும் உரிமை இருக்கிறது. இவைகள் வரவே கூடாது என தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. தனி மனிதன் சுதந்திரத்தில், அரசோ, அமைப்புகளோ தலையிட கூடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காவல் துறையும், நீதித்துறையும்தான் சாமானியன் தனது இறுதி நம்பிக்கையாக நினைக்கிறான். ஆனால் காவல் துறை அரசை ஆள்பவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எத்தகைய நேர்மையான அதிகாரிகளும் ஒரு சூழ்நிலையில் ஆள்பவர்களின் தொல்லையால் தங்களை மாற்றிக்கொண்டு விடுகின்றனர். காவல்துறையின் மீதான நம்பிக்கை இப்போது சாமானியர்களுக்கு போய்விட்டது. ஆனால் அவர்கள் தனது கடைசி நம்பிக்கையாக நீதித்துறையை மட்டுமே கருதுகிறார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சவுக்கு தளத்தில் நீதிதுறையில் இருக்கும் குளறுபடிகளையும், ஊழலையும் எழுதி வருகிறார்கள். மேலும் அதிகாரத்தின் உச்சத்தில் இருபவர்களின் ஊழல்களையும், தவறுகளையும் வெளிக்கொண்டு வருகிறார்கள். உங்களுக்கு அந்த கட்டுரைகள், செய்திகள் மேல் மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் மக்கள் மன்றத்தில் வையுங்கள். அல்லது, வழக்கு தொடருங்கள் அதை விடுத்து தடை செய்ய உத்தரவிடுவது எந்த விதத்தில் நியாயம் என நினைக்கிறீர்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சவுக்கு தளத்தினை தடை செய்து விட்டால் அவர் வெளியிட்ட செய்திகள் உண்மை இல்லை என்று மாறிவிடுமா?. ஒரு தனி மனிதனாக நின்று அதிகார வர்க்கத்தினை கேள்வி கேட்கும் அவருக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு. பொது மக்களின் கூட்டு மனசாட்சியே சவுக்கு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கூடன்குளம், மீத்தேன் திட்டம் , கெயில் திட்டம், என நிறுவனங்களுக்கு துணை போகும் மத்திய அரசை மக்கள் தூக்கி எறியப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வரும்வரை கும்பிடு போடுகிறார்கள். அதிகாரம் கிடைத்தபின் லஞ்சம் கொடுத்தவர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். கேள்வி கேட்காதவரைக்கும்தான் எல்லாம். இப்போது கேள்வி கேட்கும் காலம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு குழந்தைகளுக்கு அரசியல் அறிவு வரவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். ஆனால், அப்படிப்பட்ட பள்ளிகளில் படித்துவிட்டு தொழில்நுட்ப அறிவில் உயர்ந்து விளங்கியவர்களால்தான் ஊழல்வாதிகளின் முகத்திரை கிழித்து எறியப்படுகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அரவிந் கேஜ்ரிவால், மேதா பட்கர், சுப.உதயகுமார், சிவ.இளங்கோ, ஆச்சிமுத்து சங்கர் எல்லாம் தனி மனிதர்கள் அல்ல.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<br /></div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com15tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-34977025521143973042014-02-07T17:23:00.000+05:302014-02-07T17:23:23.040+05:30Miracle in Cell No. 7 - கொரியன் சினிமா....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-xmrXWaD-T3o/UvTGByoSzdI/AAAAAAAAFME/ZksWpT8XLnA/s1600/3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-xmrXWaD-T3o/UvTGByoSzdI/AAAAAAAAFME/ZksWpT8XLnA/s1600/3.jpg" /></a></div>
<div class="" id="firstHeading" lang="en" style="text-align: justify;">
உலக
சினிமாக்கள் பற்றி அதிகம் எழுதும் ஜாக்கி சேகர் பொதுவாகவே சமீப காலமாக
அதிகம் எழுதுவதில்லை. வேலைப்பளு அதிகமாகிவிட்டதாக அவர் தன் முகநூல்
பக்கத்தில் இதனைப்பற்றி குறிப்பிட்டு இருந்தார். அவரின் சமீபத்திய பதிவான <a href="http://www.jackiesekar.com/2014/02/miracle-in-cell-no-7-2013.html" target="_blank">MIRACLE IN CELL NO .7-2013/உலகசினிமா/கொரியா/அப்பாவி அப்பா. </a> படித்தபோது நேரம் கிடைக்கும்போது பார்க்கவேண்டும் என
குறித்து வைத்துக்கொண்டேன். ஆனால் முகநூலில் விதூஷ் இதனை Must watch என குறிப்பிட்டு இருந்தார். படத்தை
கொஞ்சம் பார்க்கலாம் என அதன் இணைப்பில் சென்று பார்த்தேன். ஆனால் என்னால் வேறு எந்த
வேலையையும் பார்க்க முடியவில்லை. மிக அழகான திரைக்கதை என்னை படத்தோடு
ஒன்றவைத்து விட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
Lee Yong-gu எனும் அப்பா பாத்திரம் ஆறு
வயதுடையவரின் மன வளர்ச்சி கொண்டது. அதே ஆறு வயது மகளுடன் அவர் வசித்து
வருகிறார். புத்திசாலியான மகளுடன் சந்தோசமாக வாழும் அவர், கார் பார்க் அட்டெண்டராக வேலை
பார்த்து வருகிறார். ஒரு நாள் வேலை முடித்து வரும் வழியில் ஒரு சிறுமி
விபத்தில் சிக்கிவிட அவளை காப்பாற்ற முயற்சிக்கிறார். ஆனால் சிறுமி இறந்து
விடுகிறாள். சந்தர்ப்ப சாட்சியங்கள் அவருக்கு எதிராக இருக்கின்றன. மேலும்
இறந்த சிறுமியின் தந்தையான போலீஸ் கமிஷனருடன் முன்பு ஷாப்பிங்
காம்ப்ளெக்சில் வைத்து நடந்த தகராறு காரனமாக தன்னை பழி வாங்கவே அவர் மகளை
கொன்று விட்டதாக எண்ணி போலீஸ் அவருக்கு எதிராக வழக்கை முடித்து விடுகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தண்டனைக்
கைதியாக சிறைக்கு வரும் Lee Yong-gu வை அச்சிறையின் ஏழாம் எண் அறையில்
அடைக்கின்றனர். அங்கு ஏற்கனவே இருக்கும் ரவுடிகள் இவரின் கேஸ் ரிப்போர்ட்டை
படித்துவிட்டு சிறுமியை கற்பழித்தவன் என அடித்து உதைக்கின்றனர். பின்னர்
ரவுடிகளின் தலைவனை ஒரு சந்தர்ப்பத்தில் இவர் காப்பாற்றுகிறார். அவர்கள்
அப்போதுதான் இவரின் மனநிலையை புரிந்துகொள்கிறார்கள். பதிலுக்கு இவருக்கு
எதாவது உதவி செய்ய வேண்டும் என ஆதரவற்றோர் பள்ளியில் படிக்கும் அவரின்
மகளையே சிறைக்குள் கொண்டு வந்து விடுகின்றனர். அங்கு அவரின் மகளுக்கும்
Lee Yong-gu க்கும் இருக்கும் பாசப் போராட்டம் அவர்களின் இதயத்தையும்
உருக்குகிறது. ஆனால் உயர் அதிகாரியால் சிறுமியை இவர்களுடன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சிறுமியை மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்துக்கே அனுப்பி வைக்கப்படுகிறாள். Lee Yong-gu ஐ
தனியறையில் அடைத்து கட்டிப்போடுகின்றனர். அன்று இரவு நடக்கும் தீ விபத்தில் சிக்கிக்கொள்ளும் அந்த உயர்
அதிகாரியை காப்பாற்றுகிறார். அதன்பின் உயர் அதிகாரி ஒரு புறமும் சிறையில்
இருக்கும் நண்பர்கள் ஒருபுறமும் இவரைக் காப்பாற்ற போராடுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர்கள் மீண்டும்
அவ்வழக்கை நீதிமன்றதில் விசாரிக்க கோருகிறார்கள். சிறுமி Ye-sung ஐ
சிறையின் உயர் அதிகாரி தன் சொந்த பொறுப்பில் வளர்க்கிறார். சிறையின் உயர்
அதிகாரி என்பதால் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து விடுமுறைகளில் சிறுமியை
சிறைக்கு அழைத்து வந்து அறை எண் 7- ல் விடுகிறார். சிறையில் இருக்கும்
மொத்த கைதிகளும் Lee Yong-gu ஆதரவாக மாறுகிறார்கள். இறுதியில் என்ன முடிவு
கிடைக்கிறது என்பதுதான் படத்தின் திருப்பம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்பாவாக
நடித்த Ryu Seung-ryong ம் அவரின் சிறுவயது மகளாக நடித்த Park Shin-hye
அசத்தலான நடிப்பை தந்திருக்கிறார்கள். நிஜமான தந்தை மகளுக்கான உறவைப்போல்
வாழ்ந்திருக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிறைக்குள்
படமாக்கப்பட்டிருக்கிறது. தெளிவான திரைக்கதை நம்மை படத்தோடு
கட்டிப்போடுகிறது. படத்தின் இறுதிக் காட்சிகளில் என்னால் கண்ணீரை
கட்டுப்படுத்தவே முடியவில்லை. படத்தில் குறைகள் இருக்கு ஆனால் அதையெல்லாம்
மீறி படத்தில் இருக்கும் உயிரோட்டம் படத்தை ஜெயிக்க வைத்திருக்கிறது என
ஜாக்கி அண்ணன் எழுதியிருந்தார். படம் வெளியாகி ஏகப்பட்ட வசூலையும்,
விருதுகளையும் குவித்து இருக்கிறது. படத்தை Lee Hwan-kyung
இயக்கியிருக்கிறார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
A story about love between a mentally ill father and his lovingly
adorable daughter. Which is his father, accused of murder and rape. This is must watch movie.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படத்தை பார்க்க( with English sub title) :<a href="http://viooz.co/movies/17659-miracle-in-cell-no7-2013.html" target="_blank"> <i>Miracle in Cell No. 7</i></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-38374979476122794402014-02-05T18:34:00.001+05:302014-02-05T20:02:31.003+05:30முடிவு...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div>
<div>
<div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/--8LO_vIlMFs/UvI2ukGm7-I/AAAAAAAAFL0/SEDT-TkAMOc/s1600/unnamed.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/--8LO_vIlMFs/UvI2ukGm7-I/AAAAAAAAFL0/SEDT-TkAMOc/s1600/unnamed.gif" height="502" width="640" /></a></div>
<div>
யாரிடமும் சொல்லாமல் கிளம்புவது
இதுதான் எனக்கு முதல்முறை. இனிமேல் திரும்பவே மாட்டேன் எனும் முடிவான
முடிவுக்கு வந்தபின் விடைபெற என்ன இருக்கிறது. இதுநாள் வரைக்கும் அன்பாய்
இருந்தவர்களின் கேள்விகளுக்கு பொய் சொல்லி சமாளிப்பதில் விருப்பம் இல்லை.
முதலிரண்டு நாட்கள் எங்காவது அருகில் போயிருப்பேன் என நினைப்பார்கள்.
அதன்பின் வீட்டில் உள்ளவர்களிடம் கேள்வி கேட்பார்கள். கேள்விகள்...
பதில்கள்... சந்தேகங்கள் என என்னைத்தேட துவங்குவார்கள். அதற்குள் நான்
வெகுதூரம் பயணப்பட்டிருப்பேன்.<br />
<br /></div>
வாழ்க்கையில் இதுதான் பாதை என அறியாத, வாழ்வின் போக்கில்
பயணிக்கிறவனுக்கு இந்த உலகம் எத்தனை பாடங்களை மிக எளிதாய் பயிற்றுவிக்கும்
என்பதை நீங்கள் அறிவீர்களா?. ஒரு காட்டாறு தன் இயல்பில் பாய்ந்தாலும் அது
தன் முன்னே இருக்கும் அத்தனை தடைகளையும் உடைத்து பிரவாகமாய் கீழிறங்கி
விடுகிறது. மனித வாழ்க்கையில் நம்மால் பிரவாகமாய் ஊற்றெடுக்க முடியாது.
நமக்கு முதல் தடை நாம்தான், சூழ்நிலை நம்மை ஒரு படியில் ஏற்றி பிறகு,
இன்னுமிரண்டு படிகளில் இறக்கிவிடுகிறது.<br />
<br /></div>
ஒரு எளிய மனிதன் இந்த வாழ்க்கையை கடப்பது என்பது எத்தனை
சிரமமானதாகிவிடுகிறது. தினசரி குறைந்தது எட்டு மணி நேரமாவது தன் உடல்
உழைப்பை செலவிட்டால்தான் மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் கிடைக்கும்.
சமயங்களில் அப்படிப்பட்ட வாழ்க்கையை கூட இயற்கை ஏன் நமக்கு கொடுக்கவில்லை?
என வருத்தமாக இருக்கும். காரனம் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளுடன் வாழும்
அவர்களில் பல பாக்கியவான்களை நான் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.ஒரு
நடுத்தர குடும்பத்தில் பிறந்து. கொஞ்சமாக படித்துவிட்டு, சமூகத்தில் அடுத்த
கட்டத்துக்கு தன்னை நகர்த்த போராடுகையில் மேலே போகவும் முடியாமல் கீழே
இறங்கவும் விருப்பம் இல்லாமல் ஒரே பாதையில் சீராகவும் செல்ல முடியாமல்
அந்தரத்தில் காற்றில் மிதக்கும் இலை போல பணம் போன போக்கில் அதனை துரத்தும்
உத்தியில் இளமையை தொலைத்து விடுகிறோம்.<br />
<br /></div>
எல்லோருக்கும் இயல்பாய் வரும் காதல் நம்மை கிடைக்கும்
இடைவேளைகளில் படுத்தி எடுக்கும். நமக்கான ஐஸ்வர்யா ராவை கண்டடைந்தபின்
கிடைக்கும் பேரானந்தம் அதே சொற்ப இடைவெளிகளில் அவள் யார் பைக்கிலாவது
பின்னால் அமர்ந்து செல்லும்போது பார்க்க நேர்கையில் பறிபோய்விடும். ஆனால்
நாட்டில் ஒரே ஒரு ஐஸ்வர்யா ராய் மட்டும்தானா? ஒரு அசின், அமலாபால் இல்லாமலா
போய்விடுவார்கள் என விக்கிரமாதித்யனின் மன உறுதியைப்போல் மீண்டும் காதல்
வேதாளத்தை மனதின் தோள்களில் சுமக்கிறோம். வருத்தப்பட்டு காதல் பாரம்
சுமக்கிறவர்கள் யேசுவிடம் சென்றால் கூட இளைப்பாறுதல் கிடைக்காது.<br />
<br /></div>
வாழ்வின் போராட்டங்கள் நம் வயதைக்கூட்டி நரை முடிகள் தென்பட
ஆரம்பிக்கும். எனக்கும் அப்படியான காலம் வந்துவிட்டிருந்தது. ஒரு
கட்டத்தில் வாழ்வே போராட்டமான நிலையில் பெண்களை சைட் அடிப்பது கூட
நின்றுபோய் திருமண ஆசையே இல்லாமல் போய்விட்டது. ஒரு நிலையான வேலை கிடையாது.
ஒரு தடவை மஞ்சள் காமாலை வந்ததாலும், மறுமுறை அம்மாவின் இறப்பினாலும்
ஆரம்பித்த மூன்றாம் மாதமே முடிந்த வெளிநாட்டு வாழ்க்கை கடன்காரனாக மாற்றி,
நிலத்தை விற்று வட்டிக்கு போக மீந்த பணத்தில் ஒன்று மாற்றி ஒன்றென செய்த
வியாபாரங்கள் தோல்வியில் முடிய, இறுதியாக உனது பங்கு முடிந்துவிட்டது என
அண்ணன்கள் கைவிரித்து விட்டபோதுதான் நான் தனித்து நிற்பதை உணர்ந்தேன்.
சாகத்துணிந்தவனுக்கு வாழ்வில் பயமே கிடையாது என்பார்கள், வாழப் பயந்தவன்
நான். என்னால் தற்கொலை செய்துகொள்வதை நினைத்துப்பார்க்கவும் முடியவில்லை.
ஆனால் அதைத்தான் முடிவாக முடிவு செய்தபின் ஒரு இறுதி முயற்சிக்கு
ஆயத்தமாகிவிட்டேன்.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
நெடுந்தூரப் பயணம் இது. ரயில் பெட்டியின் பொதுவகுப்பு நிற்கவே
முடியாத நெருக்கடியில் நம்மைப்போல ஏராளமான ஜீவராசிகள் இருக்கவே
செய்கின்றனர் என்பதை உணர்த்தியது. தன் வாழ்வை முடித்துக்கொள்ள நினைக்கும்
ஒருவன் எதற்கு இப்படி வெகுதூரம் பயணிக்க வேண்டும், என உஙகள் மனதில் எழும்
கேள்வி என் காதில் விழுகிறது. வாழ்வின் கடைசி பக்கங்களை இனி எதுவுமற்று
கடக்கும் எனது பாதையில் எனது முடிவை நான் ஆவலாக அனுபவித்தே பயணிக்கிறேன்.
இத்தோடு சாப்பிட்டு இரண்டு நாள் ஆகப்போகிறது. என் பெயர்
எழுதப்பட்டிருக்கும் கடைசி அரிசி எதுவென பார்க்கலாம்.......</div>
</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-217192266817680032014-01-25T10:42:00.001+05:302014-01-25T10:44:53.885+05:30காலம்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div>
<div>
<div>
<div>
<div>
<div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-_kb7YY-Us_E/UuNHccjvj7I/AAAAAAAAFBQ/n-0smqkYSYM/s1600/file453.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-_kb7YY-Us_E/UuNHccjvj7I/AAAAAAAAFBQ/n-0smqkYSYM/s1600/file453.jpg" height="480" width="640" /></a></div>
<div>
காற்று
லேசாகத்தான் வீசுகிறது, ஜனவரியிலேயே வெயில் தன் உக்கிரத்தை கூட்டி
வைத்திருக்கிறது. நான் காத்திருக்கிறேன். வெயில் நகர்த்தும் மரத்தின் நிழல்
என்னையும் இடம் மாற்றுகிறது.நான் இப்படி காத்திருக்கும் 18 ஆவது ஆண்டு
இது. இப்படியே இன்னும் எத்தனை மணி நேரம் இருக்கவேண்டும் என்பதும்
தெரியவைல்லை, இன்னும் எத்தனை ஆண்டுகள் இம்மாதிரி நிற்கப் போகிறேன் என்பதும்
தெரியவில்லை. என் அறிவு இதனை முட்டாள்த்தனம் என எள்ளி நகையாடினாலும் மனசு
தன் போக்கில் என்னை இத்தனை வருடங்களாக இழுத்து வந்து நிறுத்தியிருக்கிறது.<br />
<br /></div>
பொதுவாக
எனக்கு பெண்களை பிடிக்காது. அதற்கான காரனம் நிறைய இருக்கு. என் சிந்தனை
மேலோங்கி நான் என்னுள் ஒரு பகுத்தறிவாளனை உருவாக்கி முடித்தபோது முதலில்
பரிதாபப் பட்டது பெண்களின் நிலை கண்டுதான். பெரியாரை, பாரதியை எவ்வளவு
பிடிக்குமோ அவ்வாறே கள்ளுண்டு பாட்டெழெழுதிய அவ்வையையும் பிடிக்கும். இந்த
சமூகத்தின் விலங்காக வீட்டுக்குள் வேலை செய்ய, பிள்ளை பெற்று, வளர்த்து
ஊழியம் செய்யும் ஒரு வேலைக்காரியாக இருப்பதை இவர்கள் ஏன் இன்னும் உணரவில்லை
என அவர்கள் மேல் கருணையும், வருத்தமும் இருந்தது. ஆனால் அது எவ்வளவு பெரிய
தவறான முடிவு என்பதை உணர்ந்த கணம் என் அறிவு என்னை ஏகடியம் செய்தது.
பாரதியும், பெரியாரும் ஏன் அவ்வையும் எனக்கு அன்னியமானார்கள்.<br />
<br /></div>
தாங்களாகவே
விரும்பி ஒரு வாழ்க்கையை வாழ்வதோடு நில்லாது தன் மகளை, மருமகளை சுற்றத்தை
சமூகத்தை அப்படி வைத்திருப்பதில் பெரும்பங்கு பெண்களிடம்தான் இருக்கிறது.
தன் சேவையை காரனம் காட்டியே ஆண்களை அவர்கள் செக்கு மாடாக்குகிறார்கள்.
பெண்ணிற்கு ஆண் எப்போதும் எதிரியல்ல அவன் சுலபமாக பழக்கிவிட முடிகிற
நாய்க்குட்டி. திருமணம் ஆன பிறகு வாழ்நாளெல்லாம் அட்டைக் கத்திகளாக மாறி
வீட்டில் எலியாகவும் வெளியில் புலியாகவும் நடிக்க பழகிவிடுவார்கள் ஆண்கள்.
ஆனால் ஒரு பெண்ணால் இன்னொரு பெண்ணை எப்போதும் சகித்துக்கொள்ளவே முடியாது.<br />
<br /></div>
இப்படி
பெண்களின் மேல் ஒரு ஒட்டு மொத்த அபிப்ராயத்தை கொண்டிருந்தவனை ஒரு பெண் தன்
நாய்க்குட்டியாக மாற்றி விட்டாள். நான் இதனை ஒருமுறை அவளிடமே சொல்லி
சிரித்தபோது, அவள் சொன்னாள் “நாய்க் குட்டியாக மாறியது, நானா? நீயா?”
என்று. உண்மைதான் எந்த குறிக்கோளும் இல்லாமல் வாழ்க்கையை அதன் போக்கில்
வாழ்கிற ஆள் நான். இன்றைக்கு திட்டமிடுதல் எனபதை அடிப்படை விதியாக, அடுத்த
பத்தாண்டுகளுக்கு நான் என்னென்ன செய்ய வேண்டும், பிரச்சனைகள் எங்கெங்கு
எப்படி வரக்கூடும், வந்தால் எப்படி சமாளிக்கலாம் என எனது தினசரிகள்
கட்டமைக்கப்பட்டவையாக மாறிவிட்டிருக்கின்றன. ஆனால் வாழ்வின் நிஜமான
தரிசனத்தை உணர்ந்தது அப்போதுதான். இந்த பரபரப்பான உலகில் எந்தக் கவலையும்
படாமல் ஒரு மனிதனால் வாழ முடியுமா?. நான் வாழ்ந்தேன். எத்தகைய
நிகழ்வுகளையும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் எனக்கு கவனம்
இருக்குமே தவிர நடந்த விசயத்திற்க்காக எப்போது வருத்தமோ, சந்தோசமோ கூட
இருக்காது. எல்லாமே எனக்கு சம்பவங்கள்தான். அவள் என்னை நேசிக்க அவளுக்கு
ஒரே ஒரு காரனம் மட்டுமே போதுமானதாக இருந்தது. என் வெளிப்படையான, யாருக்கும்
பயப்பாடாத பேச்சு. இதே பேச்சுதான் நிறைய பேரை என்னிடம் இருந்து
விலக்கியும் வைத்திருக்கிறது. ஆணின் கம்பீரம் பிரச்சனைகளை சமாளிப்பதும்,
எதிர்கொள்வதும்தான் அது உன்னிடம் இருக்கு என்பாள். நான் கண்ணாடியில் என்னை
பார்க்கும்போதெல்லாம் அவள் சொன்னது மீண்டும் மீண்டும் என காதுகளில்
கேட்கும். பெண்களை பிடிக்காத ஒருவன் இப்போது ஒரு பெண்ணின் பாராட்டில்
விழுந்து கிடப்பதைப் பார்க்கும் என் கண்கள் என்னையே கேலி செய்யும்.<br />
<br /></div>
</div>
நான்
சுயமாக இருந்தேன். காலம் என்னை அப்படி வைத்திருந்தது. ஆனால் எப்போது அவளை
சந்தித்தேனோ அப்போது முதல் நான் என்னை படிப்படியாக இழந்து
விட்டிருக்கிறேன். அவளே பலமுறை இதனை என்னிடம் கேட்கவும் செய்திருக்கிறாள்.
”நீ ஏன்? இப்பொதெல்லாம் நான் என்ன சொன்னாலும் அப்படியே
ஏற்றுக்கொள்கிறாய்!. “ நீ இப்போது எனக்காகவே சிந்திக்கிறாய், பேசுகிறாய்,
இதில் மறுப்பு சொல்வதற்கு என்ன இருக்கு” என்றபோது என் தோளில் தன் முகம்
புதைத்துக்கொண்டாள்.<br />
<br />
</div>
எங்கள் காதலுக்கு ஜாதி, அந்தஸ்து இப்படி
நிறைய இடர்பாடுகள் வரலாம் என எதிர்பார்த்தோம். மெல்ல கணங்களோடு வாழ்ந்த
என் இருப்பு, எதிர்காலம் பற்றி யோகிக்க துவங்கியது அப்போதுதான். ஆனால்
காலம் ஒரு மிகச்சிறந்த ஆசான், கொலையாளி, நம்பிக்கை துரோகி என்பதை நான்
அப்போது உணரவில்லை. ஏனெனில் நம்பிக்கை என்பதே தெளிவின்மை என்று தீர்மானமாக
இருந்தவனை அதே தெளிவற்ற நம்பிக்கையோடு இங்கே கொண்டு வந்து
நிறுத்தியிருப்பதும் காலம்தான். ஒன்று தெரியுமா? நான் எதற்காகவும் அழுததே
இல்லை.<br />
<br />
ஆனால்
நான் அழுதேன். எத்தனை நாள் அழுதேன் எனத் தெரியாமல் அழுதேன். எப்போது தனிமை
கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அழுதேன். அழுவது ஆண் மகனுக்கு அழகில்லை எனும்
கொள்கை படைத்த எனக்கு அழுவதுதான் ஆறுதல் என்பதால் கண்ணில் நீர் வற்றும்
வரைக்கும் அழுதேன்.<br />
<br /></div>
காலம் அழுவதில் இருந்து என்னை விடுவித்து
இன்னொரு வாழ்விற்கு கொண்டு வந்து சேர்த்தாலும். என் மனசில் இன்னும் தீராத
வலி ஒன்று எப்போதும் இருக்கிறது. அவள் கடைசியாக என்ன
நினைத்திருப்பாள்.எங்கள் வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என
ஆயிரம் கற்பனைகள் வைத்திருந்தவள், தன் கடைசி மூச்சு பிரியும்போது நிச்சயம்
அதனை எனக்காக இங்கு விட்டு வைத்திருப்பாள். காலம் என்னை நாத்திகனாகவே
இன்னும் வைத்திருந்தாலும், பதினெட்டு ஆண்டுகளாக விபத்து நடந்த அந்த
இடத்தில் நான் வந்து நாளெல்லாம் காத்திருக்கும்போது என் பகுத்தறிவு
கானாமல்தான் போய்விடுகிறது.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
அவளை விடவும் அதிக காதலை இப்போது
எனக்கு தருகிற, என் குறைகளோடு என்னை ஏற்றுக்கொண்டிருக்கிற ஒரு தேவதையை
காலம் எனக்கு கொடுத்திருந்தாலும். ஒரு விடையில்லாத கேள்வியுடன் காலம் என்னை
துரத்தியபடியும் இருக்கிறது. </div>
</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-39018548607041117642014-01-13T07:23:00.000+05:302014-01-13T08:03:54.055+05:30ஜில் மோர் - எமது புதிய இணைய இதழ்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-bwQmwwQpJvc/UtNEeyhxG9I/AAAAAAAAE-A/8l_aFue5WRM/s1600/Jill-More-Logo-e1387523491757.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-bwQmwwQpJvc/UtNEeyhxG9I/AAAAAAAAE-A/8l_aFue5WRM/s640/Jill-More-Logo-e1387523491757.png" title="http://jillmore.com/" width="640" /></a></div>
<br />
<br />
<br />
அன்பின் நட்புகள் யாவருக்கும் வணக்கம்,<br />
<br />
14.01.2014 - தை முதல் நாளில், தமிழர் திருநாளில் நாங்கள் ஒரு புதிய இணைய இதழை துவங்கயிருக்கிறோம்.<br />
<br />
<h2 style="text-align: left;">
<b><a href="http://www.jillmore.com/">www.jillmore.com</a> <a href="http://tamil.jillmore.com/" target="_blank">www.tamil.jillmore.com </a></b></h2>
<br />
வழக்கமாக எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்தான் நான் எதையும் செய்வேன். தற்கால கடவுள்கள் மீதும் அவர்களின் மீடியேட்டர்கள் மீதும் தன் வாழ்வின் பிரச்சனைகள் தீர சுலபமான வழி தேடும் அவர்தம் பக்த ’கேடி’கள் மீதும் எப்போதும் எனக்கு அபிப்ராயங்கள் இருந்ததில்லை. எனக்கு மனிதர்கள் மீதான நம்பிக்கைகள்தான் வாழ்வின் தரிசனங்களை உணர்த்தின.<br />
<br />
இணையம் ஒரு கட்டற்ற சுதந்திரத்தையும், முகம் தேவைப்படாத நட்பு வட்டத்தையும் எனக்கு பெரிதாக தந்திருக்கிறது.<br />
<br />
இந்த இணைய தளங்களும் எம்முடையவையே,<br />
<br />
<h3 style="text-align: left;">
<b><a href="http://www.velai.net/">www.velai.net</a> <a href="http://jobsforall.in/" target="_blank">www.jobsforall.in</a> <a href="http://www.karpom.com/">www.karpom.com</a> <a href="http://www.specsofall.com/">www.specsofall.com</a></b></h3>
<h2 style="text-align: left;">
<b> </b></h2>
இன்னும் நிறைய தளங்களுக்கான திட்டமிடல்கள் இருக்கின்றன. பொருளாதார சிக்கல்கள் எம்மை கொஞ்சம் நகரவிடாமல் அழுத்தினாலும் தம்பிகள் சிவாவும், பிரபுவும் என்மேலும், தங்கள் மேலும் வைத்திருக்கும் அசைக்க முடியாத தன்னம்பிக்கை எம்மை தொடர்ந்து நகர்த்திக்கொண்டிருக்கிறது.<br />
<br />
என் இனிய நண்பர் கேபிள் சங்கர் அவர்களுக்கு இந்தக் கணத்தில் என் இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை மட்டுமல்லாது தன் நட்பு வட்டத்தில் உள்ள அனைவரும் நன்றாக வரவேண்டும் என எப்போதும் நினைப்பவர். முன் கூட்டியே அனைத்து விசயங்களையும் கணிக்கும் அபூர்வமான திறமையாளர். இந்தத் தளம் கைகூடுவதற்கு அவர்தான் காரனம். அவருக்கு பிரபு, சிவா சார்பாகவும் இன்னொருமுறை எனது நன்றிகள்.<br />
<br />
தம்பிகள் சௌந்தர், ஜெயக்குமார், சுகுமார் சுவாமிநாதன், ரமேஷ், தோழி கவுசல்யா, நண்பர் உதயகுமார் ஸ்ரீ, தொடர்ந்து ஊக்கமளித்து வரும் தோழர் கிங் விஸ்வா ஆகியோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.<br />
<br />
எமது தளத்தில் இருக்கும் நிறை, குறைகளை எம்மோடு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.<br />
<br />
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்... </div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com17tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-26459765595539496272014-01-03T17:35:00.000+05:302014-01-03T17:35:43.538+05:30வார்த்தைகள்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<div>
<div>
<div>
<div>
<div>
<div>
<div>
<div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-e3myA4VBZJo/UsanVmXZ_gI/AAAAAAAAE5w/1ieAIqXcI6c/s1600/file444.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="http://3.bp.blogspot.com/-e3myA4VBZJo/UsanVmXZ_gI/AAAAAAAAE5w/1ieAIqXcI6c/s640/file444.jpg" width="640" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br />நான் உனக்கான <br />சொற்களை <br />சேகரித்துக் கொண்டிருந்தேன்</div>
அந்தியில் </div>
கூடடையும் பறவைகளின் <br />
</div>
உரையாடல்கள் புரியுமா உனக்கு?</div>
அத்தனை <br />கூப்பாடுகளையும் கடந்து</div>
தன் இருப்பை </div>
தனித்த மொழியில் அவைகளால்</div>
புரிந்து கொள்கிற</div>
புரிய வைக்கிற வித்தைகளை</div>
என் வார்த்தைகள் தருமா உனக்கு?<br />
</div>
எனினும் <br />ப்ரத்யோகமான அன்பிற்கு<br /><div>
<div>
<div>
<div>
<div>
<div>
<div>
<div>
<div>
<div>
<div>
<div>
<div>
<div>
<div>
<div>
<div>
மவுனமே ப்ரதானமானது</div>
<div>
நாம் சந்தித்தபோது </div>
<div>
மவுனமே</div>
<div>
நம்மை கடவுளாக்கியது..<br />
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-40805988770183146722013-12-21T13:12:00.001+05:302013-12-21T13:12:28.707+05:30மரணம் - சிறுகதை...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-kLqyFOwgpHY/UrVFvxlty0I/AAAAAAAAE2U/JHo6EF1hMQA/s1600/unnamed.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="502" src="http://3.bp.blogspot.com/-kLqyFOwgpHY/UrVFvxlty0I/AAAAAAAAE2U/JHo6EF1hMQA/s640/unnamed.gif" width="640" /></a></div>
<div>
சடாரென கனவு கலைந்தது.
நான் எங்கிருக்கிறேன் என்பதை நினைவுக்கு மீட்டு வர சில நிமிடங்கள் கடக்க
வேண்டியிருந்தது. எழுந்து தலகாணி அருகில் கிடந்த செல்போனை துழாவி மணி
பார்த்தேன். சரியாக 2:31 என்றது. விளக்கைப் போடாமல் கதவைத் திறந்து மொட்டை
மாடிக்கு வந்தேன். மார்கழி குளிர் முகத்தில் அறைய சற்று நிம்மதியாக
இருந்தது. ஒரு அரைமணி நேரம் மெதுவாக ஓடியது. <br /><br />கீழே வந்து
தொலைக்காட்சியை உயிரூட்டியபோது எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் டூயட்
பாடிக்கொண்டிருந்தனர், பிறகு செய்திக்கு மாற்றினேன். டிஸ்கவரி, மூவிஸ் நவ்,
ஸ்டார் மூவிஸ் மீண்டும் தமிழுக்கு வந்தபோது எம்.ஜி.ஆர் இப்போது லதாவுடன்
பாடிக்கொண்டிருந்தார். ப்ரிட்ஜில் இருந்த லெமன் டீயை குடிக்கலாம் எனும்
நினைப்பில் விஸ்கி ஒரு லார்ஜ் அடித்தால் என்ன? என்ற கேள்வி மனதை திசை
திருப்பியது. இரண்டு ஸ்மால் வித் ஐஸ் க்யூப். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி,
தேவிகா, சரோஜாதேவி, மஞ்சுளா என ஆட்களும், பாடலும் மாறிக்கொண்டேயிருந்தபோது
மணி அதிகாலை 4 என செல்போனில் வைக்கப்பட்ட வாக்கிங் அலாரம் சொல்லியது.
இறங்கி தெருவில் நடந்தேன். விஸ்கியின் உபயோகத்தால் இன்றைக்கு மப்ளர்
தேவைப்படவில்லை. அவ்வளவு குளிரில் தனியாக கைவீசி நடப்பவனை, சாலையில்
காகிதத்தை கொளுத்தி குளிரை விரட்டும் முயற்சியில் இருந்த ஏ.டி.எம்
செக்யூரிட்டி ஆயாசத்துடன் பார்த்தார்.<br /></div>
</div>
<div>
இப்போது மீண்டும் நான்
கண்ட கனவு நினைவுக்கு வந்தது. நான் செத்துப்போயிருந்தேன். சென்னையில் அல்ல
ஊரில். ஊரை விட்டு பத்து வருடங்கள் ஆகிவிட்டிருந்தது. அதனால் பத்து
வருடத்துக்கு முந்தியிருந்த அதே ஊர் கனவிலும் மாறாமல் இருந்தது.
மனிதர்களும் அதாவது பத்து வருடத்துக்கு முன்பு உறவுகள் அப்படியே இருந்தனர்.
ஹாலில் எங்கள் வீட்டில் அப்பா உபயோகப்படுத்திய பெஞ்சில் என்னை
கிடத்தியிருந்தனர். அப்பாவை அவர் இறந்த போது நான் எப்படிப் பார்த்தேனோ அதே
மாதிரி என்னையும் பார்த்தேன். ஒருவேளை இது அப்பாவைப் பற்றிய கனவாக
இருக்குமோ? மனது லேசாக குழப்பியது. <br /><br /> </div>
<div>
காலையில் டிபன் சாப்பிடும்போது
மனைவியிடம் சொன்னபோது கலகலவென சிரித்தாள். ”உங்களுக்கு, கடவுள் மீதே
நம்பிக்கை கிடையாது!, கனவு கான்பதெல்லாம் மனப்பிராந்தி” என்றாள்.
பிராந்தியோ, விஸ்கியோ இத்தனை நாள் கனவில் இது மட்டும் ஏன் எனக்கு மீண்டும்
நினைவுக்கு வந்து குழப்ப வேண்டும்?. ஜாதகம் பார்க்கும் என் நண்பனுக்கு போன்
செய்து விவரத்தை சொன்னேன். அவன் ”நீ மகர ராசி, கடக லக்னம் எனவே உனக்கு
ஆயுள் கெட்டி, ஒன்னும் கவலைப்படாதே!” என்றான். மேலும் ”செத்துப்போன மாதிரி
கனவு கண்டா நம்மை பிடித்த பீடை விலகிடுச்சுன்னு அர்த்தம்!” என்றான். மரண
பயமெல்லாம் எனக்குக் கிடையாது. ஆனால் ஏதோ குழப்பமாக இருக்கிறது.<br /></div>
</div>
<div style="text-align: justify;">
அலுவலகம்
கிளம்பும்போது பைக் வேனாமென்று யோசித்தேன். இருந்தாலும் நாத்திக சிந்தனை
என்னை கிண்டல் செய்ய, பைக்கை எடுத்து நிதானமாக ஓட்டினேன். சென்னை அண்ணா
மேம்பாலம் ஏறியபோது எங்கிருந்தோ, பைக் ரேசில் கலந்து கொண்ட சில இளைஞர்கள்
எல்லா வாகனங்களையும் மிரள வைத்தனர். அதில் ஒருவன் என்னை சடாரென இடித்தான்,
மோதிய வேகத்தில் வண்டியில் இருந்து தூக்கி எறியப்பட்டு பாலத்தில் மோதி கீழே
விழுந்தேன். ஆனால் அடி சுமார்தான் என்பதால் உடனே எழுந்து நின்றேன். ஆனால்
என்னை மோதிய பையன் பின்னால் வந்த மாநகரப் பேரூந்தின் சக்கரத்தின் அடியில்
சிக்கியிருந்தான், ஒரு நபர் யாரிடமோ ”ஆள் போயிட்டான் சார்” என
சொல்லிக்கொண்டிருந்தார்.</div>
</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com11tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-63052474385900606342013-11-22T11:24:00.000+05:302013-11-22T11:32:04.621+05:30சில சுவாரஸ்யங்கள் - 22.11.2013...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-lBgLW8GWNuE/Uo7xQUzMMrI/AAAAAAAAEvo/legGug7idw4/s1600/device_as_religion.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="251" src="http://2.bp.blogspot.com/-lBgLW8GWNuE/Uo7xQUzMMrI/AAAAAAAAEvo/legGug7idw4/s320/device_as_religion.gif" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
அரசாங்க அலுவலகங்களுக்கு ஒரு வேலை விசயமாகப் போனால்
அங்கிருக்கும் அதிகாரிகள் நேர்மை பற்றி உங்களிடம் பேசினால் கனிசமாக
எதிர்பார்க்கிறார் என்பது பொருள்!. தொகை படிந்தவுடன் நேர்மையாக
எல்லாவற்றையும் முடித்துக்கொடுத்து விடுவார்கள். ஒருவேளை நாம் பேரம் பேசத்
துவங்கினால் அந்த வேலையைச் செய்ய எத்தனை பேரை சரிக்கட்ட வேண்டும் என்று
ஆரம்பித்து பட்டியல் போட்டு தமக்கு அதில் கிடைக்கப்போகும் சொற்ப லாபத்தை
குறிப்பிடுவார்கள். ஒவ்வொரு முறையும் அரசாங்க அதிகாரிகளிடம் எதாவது வேலை விசயமாக சென்றால் இப்படி நிறைய
சுவாரஸ்யங்கள் கிடைக்கும். சமீபத்திய சுவரஸ்யம், பட்டா மாற்றம் ஒன்றிற்காக
விண்ணப்பித்தபோது நடந்தது. நான் கிராம் நிர்வாக அதிகாரியின் சிப்பந்தி
ஒருவரால் ஓரங்கட்டப்பட்டேன். முதலில் அவர் என்னைப்பற்றி விசாரித்தார். நான்
சென்னை வாசி என்றதும் ஊருக்கு வந்து போகும் செலவெல்லாம் இருக்கும்ல அதானல்
ரூ.3000 கொடுங்க முடிச்சு கொடுத்துடறேன் என்றார். யோசித்து சொல்கிறேன் என
வந்துவிட்டேன். <br />
<br />
..........................................................................................................<br />
நாளிதழில் ஒரு விளம்பரம் பார்த்தேன்: <br />
<br />
அதாவது டாஸ்மாக்கில் அதிகவிலை
விற்றால் புகார் கொடுக்க ஒரு எண் கொடுக்கப்பட்டு இருந்தது. எல்லா
டாஸ்மாக்கிலும் பியருக்கு ரூ.10-ம், குவாட்டருக்கு ரூ.5-ம் கூடுதலாக
வசூலிக்கிறார்கள். போய் பிடிங்க ஆபிசருங்களா!<br />
.....................................................................................<br />
சமீபமாக முகநூல் பக்கம் பழியாய் கிடக்கிறேன். யார்? எதை எழுதினாலும்?
படிக்கிறேனோ! இல்லையோ!! கண்டிப்பாக Like செய்துவிடுவேன். காரனம் தமிழ்மணம்
ஓட்டு அரசியல் போல் அங்கும் மொய், முறைவாசல் என சரியாக செய்யவில்லை என்றால்
நம்மையும் அவர்கள் சீண்டமாட்டார்கள். <br />
<br />
முகநூல் என்பது Social
Network என்பதை விடவும், மிகப்பெரிய இலவச Business Marketing Space எனவே இதில்
சிறு பொருள் வியாபாரிகள் முதல் மிகப்பெரிய Corporates வரைக்கும் கடை
விரிக்கிறார்கள். அதே அளவு ஏமாற்றுக்காரர்களும் இருக்கிறார்கள். <br />
<br />
..............................................................................................................<br />
<br />
கவிதை எபடியெல்லாம் எழுதலாம் என்கிற விதிமுறைகளை உடைத்தது
புதுக்கவிதை வடிவங்கள்தான். சிங்கப்பூர், மலேசியாவில் வசிக்கும் மூத்த கவிஞர்கள், புதுக்கவிதை என்பதே
கிடையாது எல்லாம் உரைவீச்சுதான் என்பார்கள். முகநூல் பக்கம் போனால் அது
உண்மைதான் என்பது தெரியும்.<br />
<br />
சுமாரான கற்பனைகளை ஒரு பாரா எழுதி குத்து
மதிப்பாக வார்த்தைகளின் முடிவில் ஒரு எண்டர் தட்டினால் கவிதை
கிடைத்துவிடும். <br />
<br />
(உம்) : அன்பே எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத பூக்களாய் நீ இருக்கிறாய்..<br />
<br />
இதனை முதன் முதலாக காதல் செய்கிறவர்கள் அல்லது கவிதை எழுதுகிறவர்கள் எழுதினால்:<br />
<br />
அன்பே <br />
எத்தனைமுறை <br />
பார்த்தாலும் <br />
சலிக்காத <br />
பூக்களாய் <br />
நீ <br />
இருக்கிறாய்..<br />
<br />
கொஞ்சம் கவிதை புத்தகம் படிக்கிற அல்லது 25 வயசுக்கு மேல் காதல் வருகிறவர்கள் எழுதினால்:<br />
<br />
அன்பே <br />
எத்தனைமுறை பார்த்தாலும் <br />
சலிக்காத பூக்களாய் <br />
நீ இருக்கிறாய்..<br />
<br />
ஆனால்
முகநூலில் இப்படி ஒரு கவிதை வந்தால் பூக்களாய் என்று சொல்லிவிட்டு, பின்
ஒருமையில் நீ என்று வருகிறதே என நான் உட்பட யாரும் கேள்வி கேட்காமல் Like
செய்துவிடுவோம்.<br />
.............................................................................................................<br />
<br />
முகநூலில்
காலை வணக்கம், இரவு வணக்கம் சொல்வதையெல்லாம் கடமை உணர்ச்சியுடன்
செயல்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஒருவேளை அவர்கள் வீட்டில்
தினசரி தேதிகள் கிழிக்கும் நாட்காட்டி இல்லை போல. ஏனென்றால் நிறைய பேர்
அங்கிருந்துதான் தத்துவங்களை உருவி தான் பயன்பெற முடியாவிட்டாலும், உலகம்
பயனுற வேண்டி டைப்புகின்றனர்.<br />
.............................................................................................................<br />
<br /></div>
</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-62675614648985610462013-11-19T10:25:00.001+05:302013-11-19T10:25:48.316+05:30எப்படி கொள்ளையடிக்கிறார்கள்?....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-8R14LnyyDBU/UorvGGdBFgI/AAAAAAAAEvU/jPy9LYXB4Y4/s1600/never_lose_the_why.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="502" src="http://4.bp.blogspot.com/-8R14LnyyDBU/UorvGGdBFgI/AAAAAAAAEvU/jPy9LYXB4Y4/s640/never_lose_the_why.gif" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
கருத்து என்பது எல்லோருக்கும் பொதுவனாதாக இருக்கவேண்டும் என்று
அவசியமில்லை. அதில் நியாயம், அநியாயம் பார்ப்பதுமில்லை. இப்படித்தான்
கருத்தியல் பற்றிய நமது ஒட்டுமொத்த பார்வையும் இருக்கிறது. ஆனால்,
ஓட்டுப்போட்டு நமக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறோம், நமக்கான அலுவல்கள்
செய்ய நாமே வரிகள் மூலம் சம்பளம் கொடுத்து வேலை செய்ய ஆட்களை
நியமிக்கிறோம். ஆனால் நிலமை தலை கீழாக மாறிவிடுகிறது. பதவிக்கு வந்தவுடன்
அவர்கள் அரசர்களாக மாறி விடுகிறார்கள். அலுவலர்கள் எப்போதும் ஒரே
மாதிரிதான் மக்கள் என்பவர்கள் எப்போதும் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.
பிணத்தை எடுக்கவும் பணம் இருக்கனும். இப்படி ஒரு நிலமை மாறவே மாறாதா? என
பொதுமக்களில் பெரும்பாலோருக்கு அதாவது நடுத்தர, ஏழை வர்கத்திற்கு எப்போதும்
இருக்கும் ஆதங்கம். ஆனால், அவர்கள் இல்லாத கடவுளிடம் முறையிட்டு வழமைபோல்
அலுவலர்களிடம் கும்பிடு போட்டு நியாயமாக நடக்க வேண்டிய காரியங்களுக்கே கை
கட்டி நிற்பார்கள். இவர்கள் முறையிடும் அதே கடவுள்தான்(ஒரு வேளை உண்மையாகவே
அப்படி ஒரு வஸ்து இருந்தால்) அலுவலர்களையும் காப்பாற்றிக்
கொண்டிருக்கிறான் எனும் அறியாமையில் இருந்து அவர்கள் தம்மை எப்போதும்
மீட்டெடுக்க விரும்பாதவர்கள். இதற்கான அடிப்படை என்பது சுயநலத்தால்
பின்னப்பட்டிருக்கிறது. <br /><br />சிங்கப்பூர் மாதிரி நம் ஊர் மாறாவே
மாறாதா? என எம்போன்ற வெளிநாட்டு பெருமை வாசிகள் பக்கம் பக்கமாக
வாசித்தாலும். இந்த நிர்வாக அமைப்பு எப்படி இயங்குகிறது என்பது எந்த
இடியாப்ப சிக்கல்களும் இல்லாத தெளிவான சிண்டிகேட் கூட்டணி என பணம்
வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் கடைக்கோடி அறிவாளி வரைக்கும் புரியாத ஒன்று.
தமிழக அரசியல் கட்சிகளில் மேல் மட்டத் தலைகள் அவர்தம் குடும்ப
உறுப்பினர்கள், மந்திரிமார்கள், அவர்தம் குடும்ப அங்கத்தினர்கள், மாவட்டம்,
வட்டம், ஒன்றியம், அப்புறம் மத்திய அரசியல் கட்சியின் மேல் மட்டங்கள் என
இவர்களின் மொத்த எண்ணிக்கையே தமிழக அளவில் மொத்தமாக ஒரு 1 லட்சத்தை
தாண்டாது. அதன்பின் அரசு எந்திரங்களை சுற்றும் அலுவலர்கள் எண்ணிக்கை ஒரு 3
லட்சம் என்றாலும் கிட்டத்தட்ட 7.50 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் வெறும் 4
லட்சம் பேர் அதிகாரத்தை செலுத்தி வளம் கொழிக்கின்றனர். இங்கு
சகலத்துக்கும் காசு வைத்தால்தான் வேலை. இது நீதித்துறையில் ஆரம்பித்து ஒரு
கிராம நிர்வாக அதிகாரியின் சிப்பந்தி வரைக்கும் நீள்கிறது. லஞ்ச
ஒழிப்புத்துறை என்பது புகார் தெரிவித்தால் மட்டும் நடவடிக்கை எடுக்கிறது.
இப்படி அவர்கள் மிகவும் துணிச்சலாக பணம் வைத்தால்தான் வேலை செய்வேன்
என்பதற்கும், ஒருவேளை அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் காப்பாற்ற மற்ற
துறை ஆட்கள் உதவுவதும். அதற்கு மேல் அரசியல்வாதிகள் துணையாக இருப்பதும் ஒரே
கொள்கை அடிப்படையில்தான்!. <br /><br />ஆனால் பொதுமக்களாகிய நாம்
பக்கத்து வீடுகளை சகித்துக்கொள்வது இல்லை. அவர்களின் வளர்ச்சியை
பொறாமைக்கண் கொண்டுதான் பார்க்கிறோம். பத்து வருடங்களுக்கு முன்புவரைக்கும்
கூட கிராம அளவில் அம்மக்களிடம் ஒற்றுமை நிலவியது. ஒரு பிரச்சனை என்றால்
ஊர் கூடி முடிவெடுப்பார்கள். அது படிப்படியாக ஜாதி மோதல்களுக்கு
மட்டும்தான் என குறுகி விட்டது. தெருவில் இருக்கும் நல்லவர்கள் யாரையாவது
நாம் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கிறோமா? மாறாக அதே தெருவில் எந்த வேலைக்கும்
செல்லாமல் ரவுடித்தனம் செய்கிற, எதோ ஒரு அரசியல் கட்சியில் அல்லக்கையாக
இருக்கிற ஒருவரைத்தானே தேர்ந்தெடுக்கிறோம். பின் எப்படி அவன் நேர்மையானவனாக
இருப்பான் என்பார் கேபிள் சங்கர். கேட்டால் கிடைக்கும் எனும் ஒரு அமைப்பை
சுரேகாவும், கேபிளும் ஏற்படுத்தி ஒரு சிறிய மாற்றத்தை நமக்கு
காட்டியிருக்கிறார்கள். இப்போது சட்ட பஞ்சாயத்து இயக்கம் துவங்கப்பட்டு
அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கும் வழிமுறைகளை சொல்லித் தருகிறார்கள்.
இதேபோல் தமிழகம் தழுவி நிறைய சிறிய அமைப்புகள் இளைஞர்களால்
ஏற்படுத்தப்பட்டு அவர்கள் பகுதிகளில் மாற்றத்தை கொண்டுவர போராடுகிறார்கள்.
இணைய உலகில் சவுக்கு சங்கர், வினவு தளம் தவிர வேறு யாரும் துணிச்சலாக அரசு
எந்திரத்தை விமர்சிப்பது இல்லை. ஈழ விவகாரத்தில் அம்மக்களின் போரட்டம் ஏன்
ஆரம்பித்தது, பின் புலிகள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள். இறுதி யுத்தத்தில்
எதனால் அவர்கள் தோற்றார்கள் என ஈழத்தின் மொத்த வரலாறையும் அறியாதவர்கள்தான்
இப்போதும் ஈழ மக்களையும், இங்கிருக்கும் உணர்வாளர்களையும்
கொச்சைப்படுத்துகிறார்கள். ஈழ ஆதரவு போராளிகள் பணம் வாங்கிக்கொண்டு
போராடுவதாக கொச்சைப்படுத்துகிறார்கள். இப்படி பணம் வந்ததற்கான ஒரு
ஆதரத்தைக் கூட இவர்களால் முன்வைக்க முடியவில்லை. இவர்கள் அனைவரும் யாரென
பார்த்தால் இங்கிருக்கும் அரசியல் தலைவர்கள் எப்படி இவ்வளவு சொத்து
சேர்த்தார்கள் என அறிந்தே அவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொண்டு கூலி பெறாத
விசுவாசிகளாக முழங்குகிறார்கள். தெருநாய்கள் கூட உணவிட்டவருக்குத்தான்
வாலாட்டும். நேர்மையாக இருப்பவர்களையும், தன்னால் இயன்றவரைக்கும்
சமூகத்தில் யாருக்காவது உதவி செய்பவர்களையும் கேலி பேசும் இந்த
அற்பர்களுக்கும் சேர்த்துதான் நாம் பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும்
இருக்கிறோம். அறிந்தே பிழைகள் செய்யும் இம்மக்களை என்ன பெயர் கொண்டு
அழைக்கலாம்???<br /><br />இங்கு நல்லவர்களே இல்லையா? என்றால். இப்போதிருக்கும்
அரசியல் தலைவர்களில் நேர்மையானவராக நல்லக்கண்ணு ஐயாவும், தமிழருவி மணியனும்
என இரண்டு பேரை மட்டுமே அடையாளம் காட்டுகிறார்கள். அதிகாரிகளில் சகாயம்,
அஸ்ரா கார்க் போல சில நூறு பேர்களாவது இருப்பது ஆறுதல். நாம்
ஒற்றுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் மட்டுமே நமக்கு வேலை செய்ய
வந்தவர்களிடம் நாம் வேலை வாங்கமுடியும் இல்லாவிட்டால் நம் முதலாளிகளுக்கு
நாம் சம்பளம் கொடுப்பது தொடரவே செய்யும். </div>
</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-36801430343085145502013-11-17T14:45:00.000+05:302013-11-17T14:45:41.002+05:30ராவண தேசம் - விமர்சனம்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-yafY-SRE5oo/UoiIVjofUQI/AAAAAAAAEro/kDDA1z1GFKQ/s1600/Ravana-Desam-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="294" src="http://2.bp.blogspot.com/-yafY-SRE5oo/UoiIVjofUQI/AAAAAAAAEro/kDDA1z1GFKQ/s640/Ravana-Desam-1.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
ராஜிவ் கொலைக்குப் பிறகு ஈழம் சம்பந்தமான படங்களுக்கு என்ன
மாதிரியான நிர்பந்தங்கள் இருந்திருக்கின்றன என நமக்குத் தெரியும். ஈழ ஆதரவு
படம் என்றால் மத்திய, மாநில அரசுகளும், ஈழ எதிர்ப்பு, சிங்கள ஆதரவு
படங்கள் என்றால் தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பும் சம்பந்தப்பட்ட
படங்களுக்கான சிக்கலை ஏற்படுத்தின. முதன் முறையாக அப்படி எந்த ஒரு
நிர்பந்தமும் இல்லாமல் வந்திருக்கும் படம். அதற்குக் காரனம் படத்தின்
இயக்குனர் சாதுர்யமாக யார் பக்கமும் சாயாமல் படத்தின் முதல் பாதியை
நகர்த்தியிருப்பதுதான். <br /> </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-JKedRN-HLa4/UoiIegKBw8I/AAAAAAAAErw/AxxoXM4pI2I/s1600/ravana-desam+3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="289" src="http://2.bp.blogspot.com/-JKedRN-HLa4/UoiIegKBw8I/AAAAAAAAErw/AxxoXM4pI2I/s640/ravana-desam+3.jpg" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
நாயகன் அஜெய் நூத்தகி( இவர்தான்
படத்தின் இயக்குனரும்) நாயகி ஜெனிபரின் காதல் காட்சிகளோடு படம்
துவங்குகிறது. முல்லைத்தீவு பகுதியில் கதை நடப்பதாக காட்டியிருக்கிறார்கள்.
ஆந்திரா பக்கம் வயல்வெளிகள், கடல் சூழும் ஒரு இடத்தில்
படமாக்கியிருப்பார்கள் போல, கிடைத்த பட்ஜெட்டில் போடப்பட்ட செட், நாடக பாணி
நடிகர்கள், கற்பனையான காட்சிகள் என சுமாராகவே படம் நகர்கிறது. புலிகளின்
கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு இடத்தில் பதுக்கல் செய்யும் ஒரு வியாபாரி
என்பது மிகையான கற்பனை. அதே போல் ஒரு விடுதலைப்புலி தளபதி உயிர்
தங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை மக்களுக்கு உணர்த்த தனது போராளி ஒருவரை
விட்டு தன்னை சுட்டுத்தள்ளச் சொல்வதும் அபத்தமான கற்பனையே. இதன் மூலம்
இயக்குனர் இப்படத்தில் போராட்டம் சம்பந்தமான விசயங்களின் மேல் எந்தக்
கவனமும் கொள்ளவில்லை என்று தெரிகிறது. சிங்கள ராணுவம் பற்றிய காட்சிகளில்
மட்டும் அவர்கள் பெண்களை பாலியல் வண்முறைக்கு ஆளாக்குகிறார்கள் என்பதையும்,
அப்பாவிகளை கொடுமைப் படுத்துகிறாகள் என்பதையும் காட்டியிருக்கிறார்.
மற்றபடி புலிகளின் காவல் பரண்கள் எல்லாம் பட்ஜெட்டின் வெளிப்பாடு. முதல்
பாதிக்கான ஒரே ஆறுதல் சிறுவனின் பாத்திரப்படைப்பும், சில காட்சிகள்
படமாகப்பட்ட விதமும். மேலும் புலிகளின் கொடி பறக்கும் காட்சிகள்
சென்சாருக்கு தப்பியிருக்கிறது.<br /><br />படத்தின் இரண்டாம் பாகம்தான்
இப்படத்தை தூக்கி நிறுத்துகிறது. முள்ளி வாய்க்கால் மீது ராணுவம் தாக்குதலை
துவங்கும் முதல் நாள் இரவு அன்று நாயகன், நாயகி, வயதான தம்பதிகள், கடை
வைத்திருக்கும் குமரன் தம்பதியினர், குழந்தையுடன் ஒரு தம்பதியினர்,
நாயகனின் நண்பர்கள் இருவர் என ஒரு படகில் இந்தியாவின் ராமேஸ்வரம் நோக்கி
கிளம்புகின்றனர். சுற்றுப்பாதையில் முதல் இரண்டு நாள் எவ்வித பிரச்சினையும்
இன்றி படகு நகர்கிறது. பாட்டுப் பாடுகின்றனர், காதல் காட்சிகள்
இருக்கின்றது. குமரனின் பந்தாவான பேச்சு, அவரின் தம்பட்டம் என நகரும்
படகுப் பயணம் மூன்றாம் நாள் இலங்கை நேவிக்கு சொந்தமான கப்பலைப் பார்த்ததும்
அனைவரும் படகுக்குள் பதுங்குகின்றனர். அசதியில் அனைவரும் தூங்கி விடுவதால்
நேவியிடம் இருந்து தப்பித்தாலும் திசை குழம்பிவிடுகிறது. இதன்பிறகு திசை
மாறும் படகால் அடுத்தடுத்த நாள்கள் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்.
பட்டினி, தண்ணீர் இன்றி கடல் நீரை குடிக்கவேண்டிய அவலம், மழை, மரணம் என
நம்மையும் துன்பக் கடலுக்குள் கொண்டு வந்து விடுகிறார் இயக்குனர்.
இக்காட்சிகள் உலகம் முழுதும் அகதியாய் கடலில் பயணித்து கரைசேர முடியாத
அத்தனை பேருக்குமானது, சமீபத்தில் மியன்மரில் இஸ்லாமியர்கள் இப்படி
நூற்றுக்கணக்கில் இறந்து போனார்கள். ஈழத்தில் இருந்து பனிரெண்டு கடல் மைல்
தொலைவில் இருக்கும் ராமேஸ்வரம் வருவதற்கே எம் இனம் இத்தனை துயரங்களை கடக்க
வேண்டியிருக்கிறது என்றால், உலகம் முழுதும் அவர்கள் சென்று சேர எத்தனை
இடர்களை சந்தித்து இருப்பார்கள் என நினைக்கும்போது மனம் பதறுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-ObPePXk_GG0/UoiIlzsEGhI/AAAAAAAAEr8/4lpyLY6kCIQ/s1600/Ravana-Desam-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="424" src="http://2.bp.blogspot.com/-ObPePXk_GG0/UoiIlzsEGhI/AAAAAAAAEr8/4lpyLY6kCIQ/s640/Ravana-Desam-2.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br />இறுதியில்
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மீனவர்களால் காப்பற்றப்பட்டு எத்தனை பேர்
பிழைக்கிறார்கள் என்பதோடு படம் முடிகிறது. படத்தை நம்முடைய ஈழ ஆதரவு,
வெறுப்பு போன்ற கருத்துக்களையும், காட்சியமைப்புகளில் ஆங்காங்கே காணப்படும்
அமெச்சூர் தனத்தையும் தள்ளிவைத்துவிட்டுத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
மேலும் பத்து நாள் கடல் பயணம், அதீத சோகம் என லேசாக போர் அடித்தாலும்,
நடித்த நடிகர்கள் அனைவரும் கடலில் ஒவ்வொரு நாளும் கடக்கும்போது அதிகமாகும்
உடல் வேதனையை சரியாக புரிந்துகொண்டு நடித்திருக்கிறார்கள். அவர்கள்
அனைவருக்கும் பாராட்டுக்கள். </div>
</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-80942206488199526422013-11-16T09:22:00.000+05:302013-11-16T09:28:17.824+05:30விடியலை நோக்கி- ஈழம்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-QwlABfDZNl0/Uobrr8jawQI/AAAAAAAAErM/Irt32NyHqqE/s1600/commonwealth-2013.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="http://4.bp.blogspot.com/-QwlABfDZNl0/Uobrr8jawQI/AAAAAAAAErM/Irt32NyHqqE/s640/commonwealth-2013.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
நடந்துவரும் காமன்வெல்த் மாநாட்டின்
மூலம் அடுத்த இரண்டு வருட காலங்களுக்கு அதன் தலைவராக மாறப்போவதால் இலங்கை
மீதான சர்வேதேச அழுத்தத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியும் என
நம்பி ராஜபக்சே கண்ட பகல் கனவு இப்போது அவருக்கே எதிராக
மாறிக்கொண்டிருக்கும் காட்சிகள் அரங்கேறியவண்ணம் உள்ளது. இந்தியாவைப்
பொறுத்த மட்டில் தமிழக அளவிலான அழுத்தம், வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை
அனைத்துக் கட்சிகளும் எதிர்நோக்கும் விதமாகவே முன்னெடுக்கப்பட்டது. தமிழக
காங்கிரஸ் இம்முறை தமிழர் நலனுக்கு ஆதரவாக தன்னைக் காட்சிப்படுத்துவதன்
மூலம் தன் மீதான களங்கத்தை மறைக்க முயன்றது. பிரதமருக்குப் பதில் குர்ஷித்
கலந்து கொள்ளும் நிர்ப்பந்தம் தமிழக மக்களின் பாரிய அழுத்தம் கொடுத்த
வெற்றிதான். இதுவரை ஊடகம் தோறும் ஈழப் பிரச்சினையால் எப்போதும் தமக்கு
பின்னடைவு இல்லை என முழங்கிய காங்கிரஸ் கட்சியின் சோனியா விசுவாசிகள்,
இம்முறை அடக்கி வாசித்தனர். தமிழகத்தில் விஜயகாந்த் மட்டுமே தன் கருத்தை
வெளிப்படையாக அறிவிக்கவில்லை. தமிழகத்தில் தன் சார்பாக ஜெயித்த சட்டமன்ற
உறுப்பினர்கள் தொடர்ந்து எதிராக மாறுவதால் தமது ஜாகையை டெல்லிக்கு மாற்றும்
அதீத ஏற்பாடுகளில் அவர் இருக்கிறார். ஆனால் அதே டெல்லியில் ஈழத்
தமிழனுக்காக வாய் கிழியப் பேசிய அவர் தமிழ்நாட்டில் மட்டும் மவுன விரதம்
கடைப்பிடிக்க காங்கிரஸ் மீதான அவரின் தீராத நம்பிக்கை ஒரு காரனமாக
இருக்கலாம்.<br />
<br />
கடந்த ஒன்பது வருடங்களாக மத்திய அரசில் அங்கம்
வகிக்கும் தி.மு.க தமிழர்கள் மத்தியில் பலத்த வெறுப்பை சம்பாதித்து
வைத்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சினைதான், தான்
ஆட்சியமைக்க உதவியது என்பதை உணர்ந்த ஜெயலலிதா ஆரம்பத்தில் தமிழகம் சார்ந்த
ஈழ ஆதரவு போராட்டங்களை கண்டுகொள்ளாமல்தான் இருந்தார். கட்சத் தீவு மீட்பு,
சட்டமன்றத் தீர்மானங்கள் என நம்பிக்கை தரும் விதமாகத்தான் நடந்துகொண்டார்.
ஆனால் இரண்டு வருடம் கடந்துவிட்ட நிலையில் இப்போது தமிழக அளவில் ஈழ ஆதரவு
போராட்டங்களை அவர் அனுமதிக்க மறுக்கிறார். கருணாநிதியை விடவும் ஜெயலலிதா
இவ்வியசயத்தில் லட்சம் மடங்கு மேலானவர். கருணாநிதி ஈழத்தில் மக்கள் கொத்து
கொத்தாக செத்து மடிந்தபோது டெல்லியில் பதவிக்கு பேரம் பேசிய கொடுமையான
மனதைக் கொண்டவர். விடுதலைப் புலிகள் மீதான தனிப்பட்ட வெறுப்பை அவர் சாகும்
வரைக்கும் தமிழர்களுக்கு எதிராகவே உமிழ்கிறார். தி.மு.க, அ.தி.மு.க,
தே.மு.தி.க போன்ற கட்சிகளை ஆதரிக்கும் அடிமட்ட தொண்டர்கள் சமீபமாக
விழிப்புணர்வுடன் பேசிவருவது ஆறுதலை அளித்தாலும். வரும் நாடாளுமன்றத்
தேர்தலில் தங்கள் தலைமைக்கு எதிராக திருப்பினால்தான் அவர்களுக்கும்
மக்களிடம் பயம் வரும்.<br />
<br />
முதல்நாள் தீர்மானம் மறுநாள்
முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றுச்சுவர் இடிப்பு எனும் முடிவுகளை ஜெயலலிதா
என்கிற ஒற்றை ஆளுமையால்தான் எடுக்க முடியும் என மீண்டும் ஒருமுறை
நிரூபித்து உள்ளார். இவ்விசயத்தில் அவர் மத்திய அரசை கடுமையாக
பகைத்துக்கொள்ள விரும்பாத போக்கை காட்டினாலும் தமிழ் ஆர்வலர்கள், தமிழக
மக்கள் மத்தியில் உச்சியில் நிறுத்தப்பட்டிருந்த அவர் மீதான பெருமிதம்
சடாரென ஒரே நாளில் கீழிறங்கிவிட்டது. உடனே ஒரு அறிக்கையுடன் தன் டெசோ
அமைப்பை மீண்டும் தூசி தட்ட ஆரம்பித்துவிட்டார் கருணாநிதி. ஞானதேசிகன்
எனும் ஒரு நபர் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக பேசிவருகிறார்.
முள்ளிவாய்க்கால் முற்றமே தேவையில்லாத ஒரு விசயம் என்று சொல்கிறார். ஜி.கே.
வாசன் தவிர்த்து வேறு எந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களும் எப்போதும் தமிழர்
விரோத போக்கைத்தான் கடைபிடிக்கின்றனர். ஒரு வகையில் தமிழக காங்கிரஸ்
செத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு தமிழக காங்கிரஸில் இருக்கும் தலைவர்களே
குழிவெட்டுவதுதான் ஆச்சர்யம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-cjPvr4KX_m8/UobtTvyPwmI/AAAAAAAAErY/9LMaAolRXsk/s1600/ch-+4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="http://2.bp.blogspot.com/-cjPvr4KX_m8/UobtTvyPwmI/AAAAAAAAErY/9LMaAolRXsk/s640/ch-+4.jpg" width="640" /></a></div>
யாழ்ப்பாணம் சென்ற இங்கிலாந்து
பிரதமர் அங்கிருக்கும் தமிழர்களை சந்தித்ததன் மூலம் மாநாட்டின் முதல் நாள்
ராஜபக்சே முழங்கிய இலங்கை கடந்த நான்காண்டுகளாக அமைதிப்பூங்காவாக
திகழ்கிறது எனும் கோஷம் எவ்வளவு பொய்யானது என்பதை உலகமே பார்க்க உதவியது.
சேனல் 4 ஊடகம் ஈழம் வரைக்கும் சென்று உலகத்திற்கு அங்குள்ள நிலமையை
காட்டினாலும், இங்கிருந்து சென்ற தந்தி மற்றும் புதிய தலைமுறை ஊடகங்கள்
இந்திய அரசின் பிரதிநிதிகள் போலத்தான் செயல்படுகின்றன. இந்த காமன்வெல்த்
மூலம் ஈழத் தமிழர் பிரச்சினையை, ராஜபக்சே தான் எப்போதும் தீர்வு கான
விரும்பாத ஒரு நபர் என உலகிற்கு தெரியவைத்திருக்கிறார். அதேபோல் தமிழக
மக்கள் தங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வரும் நாடாளுமனறத்
தேர்தலில் அவர்கள் முன்னால்தான் நிற்க வேண்டிவரும் என்பதால் இங்கிருக்கும்
அரசியல் கட்சிகள் நடத்தும் நாடகங்களையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான்
இருகின்றனர். <br />
<br />
உலகளாவிய அழுத்தம் இன்னும் தீவிரமாக இலங்கை
அரசின் மேல பாய்வதற்கு உலகளாவிய தமிழர்களுடன், தமிழகத்தில் இருக்கும் தமிழ்
ஆர்வலர்களும் தமது தொடர்ச்சியான முன்னெடுப்புகளால் தமிழர்களுக்கு ஒரு பொது
வாக்கெடுப்புக்கான சாத்தியத்தை நோக்கி நகர்த்துகிறார்கள். இன்னும்
உலகெங்கும் தமது சொந்த மக்களை அகதியாக வாழ்வதை தன் பசப்பு வார்த்தைகளால்
மூடி மறைத்து விட முடியும் என்பதை ராஜபக்சே எத்தனை காலம் சொல்ல முடியும்.
மாற்றம் வந்தே தீரும். அதிலும் வெகு விரைவில் வரும். கொல்லப்பட்ட
லட்சக்கனக்கான உயிர்களுக்கு ஒருநாள் நிச்சயம் நீதி கிடைக்கும்</div>
</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-90173991115871799742013-11-15T07:30:00.000+05:302013-11-15T07:30:05.153+05:30முள்ளிவாய்க்கால் முற்றம் - காட்சி மாறும் அரசியல்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-Ys6fwQnrYhM/UoVZvX5fr9I/AAAAAAAAEq8/1n-Wv-lZOzc/s1600/Mulli+vaaykkaal+Murram+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="480" src="http://1.bp.blogspot.com/-Ys6fwQnrYhM/UoVZvX5fr9I/AAAAAAAAEq8/1n-Wv-lZOzc/s640/Mulli+vaaykkaal+Murram+1.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
2009 மே 18 ல் ஈழத்தில் நடந்த இன அழிப்பை கண்டித்துத் தமிழ் ஆர்வலர்கள்
கடுமையான போரட்டத்தை நடத்தியபோது முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில்
துவங்கி, சீமான், அமீர் கைது படலம், பிரபாகரன் படத்திற்குத் தடை,
மாணவர்களுக்குக் கால வரையற்ற விடுமுறை என எல்லாப் போராட்டங்களையும்
காவல்துறையைக் கொண்டு நசுக்கினார் கலைஞர். மெரினாவில் நான்கே மணிநேரம் அவர்
நடத்திய உண்ணாவிரத நாடகத்தால் ஈழமே கிடைத்துவிட்டதாக அவர் தொண்டர்கள்
சுவரொட்டிகள் ஒட்டினர். காங்கிரஸ் தலைமையின் நோக்கம் அறிந்து விசுவாசம்
காட்டிய கலைஞரை 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 63 தொகுதிகள் கேட்டு
நெருக்கடி கொடுத்ததைக்கூடப் பா.ம.க வின் தயவால் சமாளித்த தி.மு.க, பா.ம.க,
விசிக கூட்டணியை அமைத்து படுதோல்வியைத் தழுவியது. விஜயகாந்த் எதிர்கட்சித்
தலைவராக மாறினார். ஜெயலலிதா தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தார்.
அதுவரை கொட்நாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதா மட்டுமல்ல யாருமே
எதிர்பார்க்காத வெற்றி அது. கலைஞர், சோனியா இருவரின் மீதான வெறுப்புதான்
ஜெயலலிதாவின் வெற்றிக்கு காரனமானது. சீமான், வைகோ, தா.பா என அனல் பறந்த
பிரச்சாரம் வடிவேலு, குஷ்பூ இருவருக்கும் கூடிய கூட்டத்தால் மாறவில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும் படிக்க : <a href="http://jillmore.com/tamil/mullivaaikkaal/" target="_blank">ஜில் மோர்.காம் </a></div>
</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-45094149315983820182013-11-12T09:35:00.000+05:302013-11-12T09:35:58.676+05:30புரட்சி என்பது...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-GQYf6ylcht0/UoGommuErSI/AAAAAAAAEpQ/HhSZi8kXVso/s1600/Che-Guevara.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="http://2.bp.blogspot.com/-GQYf6ylcht0/UoGommuErSI/AAAAAAAAEpQ/HhSZi8kXVso/s400/Che-Guevara.jpg" width="400" /></a></div>
<div style="font-family: Georgia,'Times New Roman',Times,serif; line-height: 21px; text-align: justify;">
<span style="font-size: small;"><span class=""><b>ஒன்றுபடு, </b></span></span></div>
<div style="font-family: Georgia,'Times New Roman',Times,serif; line-height: 21px; text-align: justify;">
<span style="font-size: small;"><span class=""><b>போராடு., </b></span></span></div>
<div style="font-family: Georgia,'Times New Roman',Times,serif; line-height: 21px; text-align: justify;">
<span style="font-size: small;"><span class=""><b>வெற்றிபெறுவோம்..,</b></span></span></div>
<span style="font-size: small;"><span class="" style="color: #0b5394;"><span class=""><span class="" style="color: #274e13;"><div style="text-align: justify;">
<span style="color: black;"><span class=""><b>புரட்சியின் விதி வரையறுக்கப் </b></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="color: black;"><span class=""><b>படாதவை..</b></span></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;"><br />
</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">எல்லா இடங்களிலும் </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">நசுக்கப் படும் மக்களுக்காக புரட்சி </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">பின் </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">நசுக்கப் படும் புரட்சி ..</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;"><br />
</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">மறுக்கப் பட்ட நீதிக்காக புரட்சி </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">புரட்சி செய்து ஆட்சியை பிடிப்பவனுக்கு </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">பிடிக்காத வார்த்தை புரட்சி.. </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;"><br />
</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">எல்லா வயிறும் எரியும்</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">ஏழைக்கு பட்டினியாலும் </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">பணக்காரனுக்கு அஜீரணத்தாலும் ..</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;"><br />
</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">கடவுள், பக்தன் </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">முதலாளி, தொழிலாளி </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">அரசு, மக்கள் </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">எப்போதும் லாபம் </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">தரகர்களுக்கு மட்டும் ..</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;"><br />
</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">உன் குடும்பத்தின் </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">பட்டினி போக்கிப் </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">பின் </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">வீதிக்கு வா..</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">போராடு...</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">சிறை செல் ..</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">மரித்துப் போ ..</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">சுவரொட்டியில் சிரி..</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;"><br />
</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">சே..</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">மாவோ.. </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">லெனின் ...</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">மார்க்ஸ் ....</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">பெரியார் ...</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">கொள்கைகளை வீதியில் முழங்கு </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">குல தெய்வத்துக்கு </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">கெடா வெட்டு ..<br /></span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;"> </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">உன் சகோதரன் போராடினால்</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">குற்றம் சொல்லி <br />’கட்டு’ ரை எழுது</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">நீதான் செவப்பு</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">மற்றெல்லோரும் கருப்பென சொல்</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">ஒரு மதத்தை இழிவு செய்ய</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">இன்னொரு மதவாதிகளிடம்</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">கையேந்து...</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;"><br />
</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">இனி </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">ஆயுதம் துணை வராது </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">அரசாயுதம் அழிக்கும் உன்னை,</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">அறிவுப் புரட்சி செய் </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">அனுதினமும் தொழில் செய் </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">பங்கெடுப்பவனுக்கும்</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">பங்கு கொடு ..</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;"><br />
</span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">புரட்சி என்பது <br />மாற்றத்தைக் கொண்டு வர </span></b></span></div>
<div style="text-align: justify;">
<span class=""><b><span class="" style="color: black;">முதலில் நீ மாறு...</span></b></span></div>
</span></span></span></span></div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-4550235574560680332013-10-21T05:55:00.000+05:302013-10-21T05:57:18.319+05:30கேப்டன் பிலிப்ஸ் (Captain Philips)...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-_Q3Vqr2Fppk/UmRyrE5OCRI/AAAAAAAAEWo/VEH-sAOoxXI/s1600/captain-phillips-.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-_Q3Vqr2Fppk/UmRyrE5OCRI/AAAAAAAAEWo/VEH-sAOoxXI/s1600/captain-phillips-.jpg" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
நாம் அடிக்கடி செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் படிக்கும், பார்க்கும் சோமாலிய கடற்கொள்ளைகள் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் “கேப்டன் பிலிப்ஸ்". Forrest gump, Cast Away , The Terminal, Catch me if you can, Cloud Atlas போன்ற ஏராளமான அற்புதமான படங்களில் நடித்த Tom Hanks இப்படத்தில் கேட்டன் ரிச்சர்ட் பிலிப்ஸ் ஆக வருகிறார். அவருக்குக் கிட்டதட்ட ஈடுகொடுக்கும் விதமாக மூஸ் எனும் கதாபாத்திரத்தில் ஆப்பிரிக்கரான பர்கத் அப்டி. மற்றக் கடற் கொள்ளையயர்களாக நடிக்கும் மூவரும் படத்தைப் பரபரப்பாகக் கொண்டு செல்ல உதவியிருக்கிறார்கள்.<br />
<br />
இப்படமானது ‘Captain’s Duty: ‘Somali Pirates, Navy Seals and Dangerous Days at Sea’ என்ற நாவலைத் தழுவி எடுக்கபட்டுள்ளது. படத்தின் உண்மையான கதாநாயகன் அமெரிக்காதான். தங்கள் நாட்டு பிரஜை ஒருவருக்காக நேவியை இறக்கும் அமெரிக்கா எப்படிப் பணயக்கைதியான டாமை, தனது துல்லியமான திட்டமிடலால் காப்பாற்றுகிறது என்பதைப் பரபரப்பான திரைக்கதையின் மூலம் 'Bourne' பட வரிசைகளை இயக்கிய“பால் கிரீன்கிராஸ்” நமக்குக் காட்டியிருக்கிறார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/--1Rl2uHL1Ow/UmR0rE1VO6I/AAAAAAAAEXE/M5zAl7pp6uM/s1600/captain-phillips_original.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="425" src="http://4.bp.blogspot.com/--1Rl2uHL1Ow/UmR0rE1VO6I/AAAAAAAAEXE/M5zAl7pp6uM/s640/captain-phillips_original.jpg" width="640" /></a></div>
Maersk கப்பலில் சரக்கை ஏற்றிக்கொண்டு சோமாலிய கடற்பகுதியை கடக்கும்போது கடற்கொள்ளையர்கள் தாக்கக்கூடும் எனும் எச்சரிக்கை மெயிலால் கப்பலை அதற்கான எதிர்கொள்ளலுக்குத் தயார் படுத்துகிறார் கேட்டன் டாம். ஒரு பெரிய கப்பலாகக் கொள்ளையடிக்க வேண்டும் எனும் திட்டத்தோடு புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட கொள்ளையர்களுடன் Maersk கப்பலை பின் தொடர்கிறார் கொள்ளையர் தலைவனாக வரும் மூஸ். கப்பலில் கேப்டனை சிறைபிடித்தவுடன் இனி நான்தான் இக்கப்பலில் கேப்டன் என அவர் சொல்லும்போதே கைதட்டலை அள்ளுகிறார். டாம் தன்னிடம் உள்ள 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களைத் தருவதாகச் சொல்கிறார். ஆனால் இன்னும் அதிகமாகப் பணம் வேண்டும் எனும் மூஸ் கப்பல் ஊழியர்களால் சிறைபிடிக்கப்பட்டுக் கப்பலை விட்டு சொற்ப பணத்துடன் லைஃப் படகில் தப்பிக்கும்போது டாமையும் பிணையாகப் பிடித்துச் செல்கிறார்கள். அமெரிக்க நேவி எப்படி டாமை பத்திரமாக மீட்டது என்பதே மீதிக்கதை.<br />
</div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-H8lvi_gvJgo/UmR00VzfSiI/AAAAAAAAEXM/krW_7xaYn9U/s1600/soma.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="http://3.bp.blogspot.com/-H8lvi_gvJgo/UmR00VzfSiI/AAAAAAAAEXM/krW_7xaYn9U/s320/soma.jpg" width="320" /></a></div>
ஒரு சிறிய லைஃப் படகில் டாமுக்கும், மூஸுக்கும் நடக்கும் உரையாடல்களும், சம்பவங்களும் பிரமாதமாகப் படமாக்கப்பட்டுள்ளன. கிளைமாக்ஸ் காட்சியில் டாம் மீட்கப்பட்டவுடன் கப்பலில் அவருக்கு முதலுதவி செய்வார்கள். அப்போது வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் டாம் எனும் நடிப்பு அசுரனுக்காகவே வைக்கப்பட்டிருக்கிறது. அக்காட்சியில் அவர் அசத்தியிருப்பார்.<br />
<br />
டாம் ஹான்க்ஸ் மற்றும் சோமாலிய கடற்பகுதி கொள்ளையர்களாக நடித்திருப்பவர்களுக்கு விருதுகள் நிச்சயம். அனைவரும் குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம்.</div>
</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-27626174351242005882013-10-17T10:38:00.001+05:302013-10-17T10:56:00.454+05:30குழந்தைகளுக்கான PLAY SCHOOL துவங்க முதலீட்டாளர்கள் தேவை...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-_gl_BXRk1Qk/Ul9wKyX5OTI/AAAAAAAAETs/RkG3QNGSlX0/s1600/play+school.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="456" src="http://2.bp.blogspot.com/-_gl_BXRk1Qk/Ul9wKyX5OTI/AAAAAAAAETs/RkG3QNGSlX0/s640/play+school.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னையில் (Greater Chennai) குறிப்பாக சென்னையின் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதியான தாம்பரம், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, OMR சாலையில் இருக்கும் IT நிறுவனங்கள் சார்ந்த பகுதிகளில் குழந்தைகளுக்கான பள்ளிகள் (PLAY SCHOOLS) மிகக் குறைவாகவே உள்ளன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தப் பகுதிகளில் நிறைய குழந்தைகள் பள்ளிகளை துவங்க சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. எதிர்காலத்தில் இதன் தொடர்ச்சியாக LKG, UKG முதல் +2 வரை விரிவுபடுத்தும் நோக்கமாக, நண்பர் திரு.உதயகுமார்ஸ்ரீ அவர்கள் “அகஸ்தியா குழந்தைகள் பள்ளி ஒன்றை துவக்குவதற்கான முதலீட்டார்களை, பங்குதாரர் அடிப்படையில் வேண்டுகிறார். விருப்பமும், ஆர்வமும் இருப்பவர்கள் திட்டம் மற்றும் முதலீட்டு விவரங்களுக்கு அவரை தொடர்பு கொள்ளவும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திரு. உதயகுமார் ஸ்ரீ - +91 – 90427 32377</div>
<div style="text-align: justify;">
மின்னஞ்சல் : udayakumar.sree@gmail.com</div>
</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-90023094408748938752013-10-03T12:28:00.000+05:302013-10-03T12:28:19.220+05:30இந்தோனேசியாவிலிருந்து...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-zF9avDDiEm8/Uk0U6NtsS9I/AAAAAAAAETA/GOC-c0oTFKc/s1600/massive_opportunity.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="313" src="http://3.bp.blogspot.com/-zF9avDDiEm8/Uk0U6NtsS9I/AAAAAAAAETA/GOC-c0oTFKc/s400/massive_opportunity.gif" width="400" /></a></div>
நேற்று காலை மலேசியாவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பினாங்கில் இருந்து ஒரு பழைய நண்பர் அழைத்திருந்தார்!.<br />
“வணக்கம் செந்தில்!, இந்தியாவிற்கு கிரானைட் இம்போர்ட் பன்ன ஆள் இருந்தா!, இந்தோனேசியாவில் ஒரு இடத்தில் ஏராளமாக கிரானைட் இருக்கு, நல்ல அதாவது genuine buyer இருந்தா சொல்லுங்க” என்றார்.<br />
நான் “ வணக்கம் சார், இங்கயே தாராளமா கிடைக்குது, இருந்தாலும் யாருக்காவது தேவை இருக்குமான்னு விசாரிச்சு சொல்றேன்.”<br />
அவர் “செந்தில் அந்த இடத்தில கிரானைட் மட்டும் இல்ல, அதுக்கும் கீழே காப்பர், மற்றும் மினரல்ஸ் குவிஞ்சு கெடக்கு, அதனாலதான் உங்க கிட்ட genuine buyer இருந்தா மட்டும்! சொல்லுங்கன்னு சொல்றேன்” என்றார்.<br />
நான் “ஏன் ஃப்ராடுன்னா ஒத்துக்க மாட்டீங்களா?”<br />
அவர் “ செந்தில் என்ன சொல்றீங்க!?”<br />
நான் “ யோவ் பின்ன என்னய்யா நீங்க ஃப்ராடு பன்றவன்கூட வியாபாரம் செய்ய நான் நல்லவனை அறிமுகப்படுத்தனுமா? இதெல்லாம் நம்பி எனக்கு போன் பன்றீங்க பாருங்க!, அதான் பாவமா இருக்கு!” என்றதும். அப்புறம் பேசுவதாக சொல்லி தொடர்பை துண்டித்தார்.<br />
<br />
கேபிள் சொல்வார் நூறுகோடி வியாபாரம் எல்லாம் நம்மை மாதிரி ஆட்கள் கிட்ட வந்தாலே அதெல்லாம் ஃப்ராடுதான்னு!!<br />
.....................................................................................................................................................................<br />
நானும், கேபிளும் மேற்கு மாம்பலம் எண்: 128, ஏரிக்கரை தெருவில் இருக்கு டாஸ்மாக் கடை எண்: 641 - ல் ரெண்டு பியர் வாங்கினோம். ஒரு பியரின் விலை ரூ.100 தான். ஆனால், விற்பனையாளர் ரூ.110 X2 = 220 எடுத்துக்கொண்டார். கேபிள் ஏன் MRP யை விடவும் அதிகம் விற்கிறீர்கள் என சண்டை போட்டதும் ரூ.10 மட்டும் மீதம் தந்தார். இன்னொரு பத்து ரூபாய் தர முடியாது என்றும் சொன்னார். கேபிள் விடாப்பிடியாக பணம் கேட்டதும். விற்பனையாளர் “அதிகாரிகள் சொல்லித்தான் வாங்குறோம், உன்னால முடிஞ்சத பன்னிக்கோ!” என தெனாவெட்டாக பேசினார். அப்போது நடந்தவற்றை வீடியோ எடுத்து வைத்திருக்கிறோம். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் எங்களுக்கு ஆதரவாக சிலரும், கடை மூடப்போற நேரத்தில பிரச்சனை பன்னாதீங்க தலை என விற்பனையாளருக்கு ஆதரவாக சிலரும் பேசியதுதான். நம்மிடம் பத்து ரூபாய் கூட வாங்குபவனிடம் சண்டைபோடக்கூட திராணியில்லாதவனாக தமிழன் மாறிவிட்டான்!!.<br />
.............................................................................................................................................................<br />
சமீபமாக வரும் திரைப்படங்களில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தவிர்த்து எல்லாப்படங்களிலுமே நாயகனை டாஸ்மாக்கில் குடித்து திரிபவனாகவும், பொறுக்கியாகவும் காட்டுகிறார்கள். ஆனால் நாயகிகள் அவனைத்தான் காதலிக்கிறார்கள்!. உண்மையில் பொண்ணுங்க என்ன இப்படித்தான் லூசா இருக்கிறார்களா என்ன?. சமீபத்திய “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா?” என்றோரு படம், இதில் விஜய் சேதுபதியும், அஸ்வினும் குடிப்பதையே முழுநேர விருப்பமாக காட்டுகிறார்கள். படத்தின் இறுதியில் குடிப்பதற்கு எதிரான தத்துவம் வைத்து குடிக்கு எதிரான படமென காட்டுகிறார்கள். முடியல!!!..<br />
................................................................................................................................................................<br />
அவசர அவசரமாக ஒரு அவசர சட்டத்தை கொண்டுவந்து ராகுல் எதிர்க்கிறார் என ஒரு நாடகம் ஆடி அதனை வாபஸ் பெற்றுவிட்டனர். குற்றவாளிகளுக்கு இந்த அரசு வக்காலத்து வாங்க காரனமே, கடந்த பத்து வருஷமா இவங்க அடிச்சதை ஆட்சி மாறினா, மோடி உள்ள புடிச்சு போட்டு அரசியல் எதிர்காலத்துக்கே ஆப்பு வச்சிடுவாறோ என்கிற பயம்தான்!.<br />
<br />
ஆனால் நிறைய அரசியல்வாதிகளுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறாங்க. இப்படி ஒரு உயிருக்கு ஆபத்தான நிலையில் இவங்க அரசியல் செஞ்சு யாரை காப்பாத்த போறாங்க?. பெரிய பதவிகளில் இருப்பவர்கள் என்றால் கூட அதில் ஒரு நியாயம் இருக்கிறது. சாதாரன ஆட்களுக்கும் இப்படி ஒரு பாதுகாப்பை அரசாங்கம் ஏன் செய்கிறது?. அதுவும் மக்களுடைய வரிப்பணத்தில்!. உச்ச நீதிமன்றம் இதற்கும் ஒரு முடிவு கட்டினால் நன்றாக இருக்கும்!. <br />
....................................................................................................................................................................<br />
<br />
<br />
''
'என் மகன் உயிரோடு இருந்திருந்தால், விடுதலைப்புலி பிரபாகரனை அவனுக்கு
ரோல்மாடலாகக் காட்டியிருப்பேன்’னு சொல்லியிருக்கீங்க. பிரபாகரன் மீதான
விமர்சனங்களை தாண்டியும் அவரை அவ்வளவு பிடிக்குமா?''<br />
<div class="vFgtwf">
<br />''பிரபாகரன்
மேல் எனக்கு எந்த விமர்சனமும் இல்லைனு சொல்லமாட்டேன். அதே நேரம், விமர்சனம்
இல்லாமல் யாருமே இருக்க முடியாது. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்த
காந்திமீதுகூட விமர்சனங்களை அடுக்கின ஆளுங்கதான் நாம். ஆனா,
விமர்சனங்களையும் தாண்டி கருத்து வேறுபாடுகளையும் கடந்து, யார் மக்களுக்கு
உண்மையா இருந்திருக்காங்களோ, அவங்கதான் தலைவர்கள்.<br /><br />தன்
போராட்டத்துக்கும் தன்னை நம்பிய மக்களுக்கும், உண்மையாவும் நேர்மையாவும்
பிரபாகரன் நடந்துக்கிட்டார்னு நான் நம்புறேன். போரில் தன் மகனைப் பலி
கொடுத்ததில் தொடங்கி நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும். பிரபாகரனின் ஆளுமை,
கம்பீரம், மக்கள் மீது அக்கறை, லட்சியத்துக்கு உயிரையும் தரும்
அர்ப்பணிப்பு... இது எல்லாமே எனக்குப் பிடிச்ச விஷயங்கள். ஒரு தலைவனா
பிரபாகரனை 'ரோல்மாடலா’ சுட்டிக்காட்டுறதுல எனக்கு எந்தத் தயக்கமும்
இல்லை!''<br /><br />விகடன் மேடை - பிரகாஷ்ராஜ் பதில்கள்<br />பிரபாகரன்...தலைவராக சிறந்த ரோல்மாடல் !</div>
<br />-</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com9tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-83128920572807525462013-09-26T09:50:00.000+05:302013-09-26T09:50:32.815+05:30ஐயா திலீபன் எங்கையா போகின்றாய்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">தியாகி திலீபனின் நினைவு தினம்</span><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;"><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">(26.09.2013) </span> அவருக்கு என் வீரவணக்கம்....</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-Zbgszl0wTlI/UkO14uRbjQI/AAAAAAAAER4/F5F5SeJ9g6I/s1600/thileeban.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="390" src="http://2.bp.blogspot.com/-Zbgszl0wTlI/UkO14uRbjQI/AAAAAAAAER4/F5F5SeJ9g6I/s400/thileeban.jpg" width="400" /></a></div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
வீரமறவன் நீ... </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
தியாக தீபமாய் தன்னையே </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
எரித்துக் கொண்டவன் நீ...</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
அகிம்சை தேசத்துக்கு உன்னையே </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
கோரிக்கையாய் வைத்தவன் நீ...</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<br />
</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
நீ புலி ...</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
பசி துறந்து பலியான புலி ...</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<br />
</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
திலீபா நீ விதைக்கப்பட்டாய் </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
எம் மனங்களில்,</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
இந்திய தேசத்தின் மீது மாறாத </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
நம்பிக்கை கொண்டவன் நீ,</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<div>
அன்றைக்கும், இன்றைக்கும், </div>
<div>
என்றைக்கும் உதவாது இந்தியா,</div>
</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<br />
</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
அன்று உன்னை மட்டும் இழந்தோம்,</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
இப்போது லச்சங்களில் இழந்தோம் </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
இன்னும் </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
இன்னும் </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
இழப்பதற்கு </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
தயாராய் இருக்கிறோம்,</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
ஒன்றை இழந்தே ஒன்றை பெரும் விதி </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
ஒருநாள் உண்மையாகும்.</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<br />
</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
இத்தாலி அன்னையை </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
ஏற்றுக்கொள்ளும் அடிவருடிகள்..</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
ஈனப் பிறவிகள் இப்போது மகிழலாம்,</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
முள்ளிவாய்க்கால் </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
முடிவல்ல ஆரம்பம்..</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<br />
</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
ஈழம் நிச்சயம் வந்தே தீரும்..</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
திலீபா உனக்கு என் வீரவணக்கம்.</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="//www.youtube.com/embed/aj43_9BDz_8" width="420"></iframe></div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="//www.youtube.com/embed/0K1RPOp28DU" width="420"></iframe></div>
</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-6382327644214726322013-09-25T18:10:00.000+05:302013-09-25T18:10:47.474+05:30பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-TCM-eTnSE9E/UkLZbyArnEI/AAAAAAAAERo/ow1E94zkZj8/s1600/chennai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="299" src="http://1.bp.blogspot.com/-TCM-eTnSE9E/UkLZbyArnEI/AAAAAAAAERo/ow1E94zkZj8/s400/chennai.jpg" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-dthMvoiBhs8/UkLYZiQJvLI/AAAAAAAAERg/sqGa-Bm5Nmw/s1600/visitors-not-allowed.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br /></a></div>
<div style="text-align: justify;">
அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு
இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த
ஆட்டத்துக்கு இடைவெளி விடும்போது தேர்ந்த கவனத்துடன் தவறான வித்தைகளை
ஐஸ்க்ரீமிற்கு அழும் குழந்தைகளின் முகத்தில் உற்சாகத்தை தெளிப்பவர்கள் கோமாளிகளே.
பெருநகரின் சாலைகளில் நம் தினசரி வாழ்க்கை ஒரு தேர்ந்த சர்க்கஸ் கோமாளியின்
பிழைப்பாக மாறிவிட்டது. எல்லா சாலைகளுமே பார்க்கிங் மற்றும் நடைபாதை
தொழிலதிபர்களால் பங்கிடப்பட்டு கிடைக்கும் இடைவெளிகளில் பயணத்தை தொடரும்படி
நமக்கு நிபந்தனை விதிக்கிறது. எல்லோர் விதியையும் யாரோ ஒருவர்தான்
தீர்மாணிக்கிறார் எனும் கருத்தை சமீபத்தில் ஒரு அரசுப்பேரூந்தை, இரு சக்கர
வாகனமோட்டி மயிரிழையில் (உண்மையில் விரற்கடை அளவு இடைவெளியில்) முந்தியதை
பார்க்கும்போது கிட்டதட்ட உறுதி செய்கிறது. <br /><br />ஒரு இரவில்
இப்படித்தான் நள்ளிரவு தாண்டி வீடு நோக்கிப் பயணித்தபோது பிளாட்பார வாசிகள்
இருவரை தங்களது நீண்ட லத்தியால் சுளீரென அடித்தனர் ஒரு காவலர்கள். வேதனை தாங்காத வயதான
பெரியவர்களான அவ்விருவரும் கதறியதை பொருட்படுத்தாத அந்த இளம் காவலர்கள்
மீண்டும் அவர்களை அடிக்க கை ஓங்கியபோது எனக்கு தாங்க முடியவில்லை. அந்த
காவலர்களை அழைத்து ”என்ன காரனத்திற்காக அடித்தீர்கள்?” என்றேன். அவர்களில்
ஒருவர் “யார் நீ?, எதற்காக கேட்கிறாய்?” என அதட்டினார். “ டேய்
சின்னப்பையந்தானே நீ!, அவர்கள் உன் பெற்றோரை ஒத்தவர்கள் இல்லையா?” என்னை
விசாரிப்பது இருக்கட்டும் முதலில் உங்கள் இருவரின் பெயரும் எனக்கு
தெரியவேண்டும், மேலும் நீங்கள் எந்த காவல் நிலையத்தில் பணிபுரிகிறீர்கள்?”
எனக்கேட்டதும். ”சார் நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றார் இன்னொரு
காவலர். ”முதலில் அடிச்சதுக்கு காரனம் சொல்லுங்கள் பிறகு என்னைப்பற்றி
சொல்கிறேன்” என்றதும். ”இல்ல சார், இப்ப நிறைய திருட்டு நடக்குது,
வெளியூர்களில் இருந்து வருகிறவர்கள் இப்படி பிளாட்பாரங்களில் துங்குவது
போல் நடித்து நள்ளிரவில் தனியாக வருபவர்களிடம் வழிப்பறி செய்வதாகவும்
அதனால் இரவு நேரங்களில் அவசியம் இவர்களை கண்காணிக்க வேண்டியிருப்பதாகவும்”
சொன்னார். இதற்குள்ளாக சம்பந்தப்பட்ட பெரியவர்கள் இருவருமே என்னை
சமதானப்படுத்தினர். நானும் அந்த இளம் காவலர்களிடம் என் விவரங்களை
சொல்லிவிட்டு இனி பெரியவர்களிடம் இவ்வாறு முரட்டுத்தனம் காட்டாதீர்கள் என
அறிவுரை கூறிவிட்டு கிளம்பினேன்.<br /><br />சென்னை முழுதுமே இப்படி
தங்கள் வாழ்நாள் முழுதும் பிளாட்பாரங்களையே வீடாக வாழ்பவர்கள் அனேகம்.
இவர்கள் மழை, வெயிலால் அவதிப்படுவது ஒருபுறம் என்றால், சமூக விரோதிகளால்
எரிச்சலாகும் காவல்துறையும் இவர்களை துரத்துகிறது. ஆனால் கோடி கோடியாக பணம்
கொட்டி வீடு கட்டும் முக்கால் வாசிப்பேர் தங்கள் வாகனங்களை சாலை
ஓரங்களில்தான் நிறுத்துகிறார்கள். அவர்களை இந்த அரசாங்கமும், காவல்துறையும்
ஒரு கேள்வியும் கேட்பது இல்லை. சென்ற வாரம் நண்பனுக்கு வீடு பார்க்க
சென்றபோது அந்த வீட்டின் உரிமையாளர் வீடு மட்டும்தான் வாடகைக்கு பைக்
பார்க் செய்யனுன்னா ரோட்லதான் நிறுத்திக்கனும் என்றார். நண்பனும் அதற்கு
ஒத்துக்கொண்டு வாடகைக்கி குடியேறிவிட்டான். ஆனால் சாலைகளில்
நிறுத்திக்கொள்ள யார் அனுமதியும் தேவையில்லை போல!!<br /> </div>
<div style="text-align: justify;">
எழுதிக்கொண்டிருக்கும்
ஒரு கவிதையின் அடுத்த வரிக்காக மோட்டு வளையை (இது சரியான பதமா?) உற்று
நோக்கும் சமகாலக் கவிஞன் போல சென்னையின் குறுகிய சந்துகளில் வழி தேடி
பயணிக்கும்போது அபூர்வமான சித்திரம் போல் மாலை வேளைகளில் வீட்டு வாசல்களில்
கோலமிடும் நடுத்தர பெண்டீர் தம் எரிச்சலின் உச்சத்தை தண்ணீர் தெளிக்கும்
சாக்கில் போகிறவர் மேலெல்லாம் ஊற்றிவிட்டு அதற்கான சாரி எனும் ஆங்கில
பதத்தை உபயோகிக்க தெரியாத வருத்தத்தை வெளிக்காட்டும் விதமாக அவசரகதியில்
போடப்படும் கோலமென சென்னை நகர் முழுதுமே அத்தனை தெருக்களிலும் 90% வீடுகள்,
வாகனங்கள் நிறுத்தும் இடம் இல்லாமல் கட்டப்பட்டவைதான். பக்கத்து பக்கத்து
வீடுகளுக்கு இடைவெளில் இல்லாமல் ஒருவர் வீட்டின் சுவரில் இன்னொருவர்
போஸ்டர் சைசில் சுவர் பூசி இடம் மிச்சப்படுத்தும் அதிசயமான மேஸ்திரி
எஞ்சினியர்கள் திறமைக்கு எல்லையே இல்லை.<br /></div>
<div style="text-align: justify;">
இப்போதெல்லாம்
அடுக்ககங்களில் நாம் உறவினர்களையோ, நண்பர்களையோ, அல்லது வேலை விசயமாகவோ
பார்க்கப்போனால் அங்கிருக்கும் பாதுகாவலர் நம் வாகனங்களை உள்ளே
அனுமதிப்பதில்லை. ஏன் என்று கேட்டால்? பதில் சொல்லாமல் எழுதி
வைக்கப்படிருக்கும் ஒரு அறிவிப்பை கைகாட்டுகிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அங்கே “பார்வையாளர்களின் வாகனங்களுக்கு அனுமதியில்லை” என்று எழுதப்பட்டிருக்கிறது!. </div>
</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-49060363904686127262013-09-18T17:19:00.001+05:302013-09-18T17:19:09.205+05:30பேரறிவும், பெருந்துயரும்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-u7doGhHyljg/UjmTAoU672I/AAAAAAAAERA/B5kZyko9w5I/s1600/DSC_0564.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="428" src="http://2.bp.blogspot.com/-u7doGhHyljg/UjmTAoU672I/AAAAAAAAERA/B5kZyko9w5I/s640/DSC_0564.JPG" width="640" /></a></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அந்தக் குற்றப்பத்திரிக்கை</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அவர்கள் விருப்பம்போல் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">புனையப்பட்டிருந்தன </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">நீ </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">மறுக்க மறுக்க </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">உன் விரல் ரேகை பதியப்பட்டு </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">தயாரிக்கப்படிருந்த அந்த ஆவணம் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">நாளை விசாரணைக்கு </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது..</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br />
</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">நீ </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிடினும் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">நிரூபிக்கப்பட்டதாக முடிவு செய்யப்பட்டு</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஒருவேளை </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">உன்னை தூக்கிலிட</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஆணை பிறப்பிக்கப்படலாம்</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">உன் மரணத்திற்கான தேதிகள்</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">பலர் கை மாறலாம் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">நிராகரிக்கவோ </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஆதரிக்கவோ </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அவர்களுக்கு </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">பல காரணங்கள் தேவையாக இருக்கிறது..</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"> </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஒரு பழி வாங்கலாக </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஒரு அரசியல் ஆதாயமாக </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">சந்தர்ப்பங்கள் உனக்கு சாதகமாக </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அல்லது </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">எதிராக முடிவெடுக்க வைக்கலாம்</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அவர்களுக்கு தேவை </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அவர்களின் நலனே </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">மேலும் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அவர்களின் வாரிசுகள் நலனும் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அதில் அடங்குகிறது..</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"> </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஒரு உண்ணாவிரதமோ </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">மனிதச்சங்கிலியோ </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">பெருந்திரள் ஆர்ப்பாட்டமோ </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">உன் வாழ்நாளை </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">நீட்டிக்க உதவலாம் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">நீ </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">உன் சாவை </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">எதிர்பார்த்துக் காத்திருப்பாய்</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">மரண நீட்டித்தல் என்பது </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">மரணத்தை விடவும் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">கொடுமையான தண்டனை என்பதை</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">உன்னைத் தவிர யாருக்கும் புரியாது</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அவர்கள் உன் மரணத்திற்கான </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">தற்காலிக </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">இடைவெளிக் கடவுள்களாக </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">தங்களை கருதுபவர்கள்..</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br />
</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">உன் தண்டனையை </span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">நிறைவேற்றுபவர்களுக்கு</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">உன் வாழ்வில் </span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">எந்த அக்கறையும் கிடையாது </span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">தன்னைக் கடிக்காத போதிலும் </span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஒரு எறும்பை </span><span style="line-height: 1.8;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">நசுக்கிவிடுகிற </span></span></div>
<div style="text-align: left;">
<span style="line-height: 1.8;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">மனப்பான்மை கொண்டவர்கள் அவர்கள்..</span></span></div>
<div style="text-align: left;">
<span style="line-height: 1.8;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;"> </span></span></div>
<div style="text-align: left;">
<span style="line-height: 1.8;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">எனவே </span></span></div>
<div style="text-align: left;">
<span style="line-height: 1.8;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">உன்னை தூக்கிலிட </span></span></div>
<div style="text-align: left;">
<span style="line-height: 1.8;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">கட்டளையிடுமாறு </span></span></div>
<div style="text-align: left;">
<span style="line-height: 1.8;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">கூச்சல் போடுவார்கள்</span></span></div>
<div style="text-align: left;">
<span style="line-height: 1.8;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அவர்கள் தலைவனை விடவும் </span></span></div>
<div style="text-align: left;">
<span style="line-height: 1.8;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">வாழும் தலைவியின் </span></span></div>
<div style="text-align: left;">
<span style="line-height: 1.8;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">மனம் குளிர்ந்தால் போதும் </span></span></div>
<div style="text-align: left;">
<span style="line-height: 1.8;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">மனித இனத்தின் </span></span></div>
<div style="text-align: left;">
<span style="line-height: 1.8;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">நீங்கா களங்கம் அவர்கள் </span></span></div>
<div style="text-align: left;">
<span style="line-height: 1.8;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">பக்கத்தில் </span></span></div>
<div style="text-align: left;">
<span style="line-height: 1.8;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">கூப்பிடும் தூரத்தில் அரங்கேறிய </span></span></div>
<div style="text-align: left;">
<span style="line-height: 1.8;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">கற்பழிப்புகளை, கொலைகளை </span></span></div>
<div style="text-align: left;">
<span style="line-height: 1.8;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">நியாயப்படுத்தியவர்கள் அவர்கள்..</span></span></div>
<div style="text-align: left;">
<span style="line-height: 1.8;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br />
</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">இங்கு நியாயம் என்பதே </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">வரையறைக்கு உட்பட்டதுதான் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">யார் வரையறை செய்யும் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அதிகாரத்தில் இருக்கிறார்கள் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">என்பதே முக்கியம் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">எனவே </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">நீதி கேட்டு </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">நெடும்பயணம் செய்து </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">கலைத்துப்போவாள் உன் தாய் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">உன் தந்தை, சகோதரி, உறவினர் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">முகம் அறிந்த, அறியாத </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">உன் நியாயம் உணர்ந்தோர் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">வெகு சொற்பமே </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அவர்களின் அழுகுரல் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">தொலைக்காட்சி நாடகங்களால் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">மறைக்கப்படும் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">இங்கு ஊடகங்கள் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">வியாபாரத்துக்கு மட்டுமே </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அவைகள்</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">இன்று உன்னையும்</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">நாளை வேறொன்றையும் வைத்து </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">பிழைப்பு நடத்தும் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">முத்தமிழ் அறிஞரே </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">மானாட, மயிலாட நடத்திப்பிழைக்கும்போது</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஊடகங்கள் உனக்கு துணைவராது..</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br />
</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="line-height: 1.8;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">சுமரியாதை என்பது எழுதுவதற்கு மட்டுமே </span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">குருடாகவும், செவிடாகவும் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">நடிப்பவர்கள் ஆளும் தேசத்தில் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">நாமெல்லாம் அடிமைகளே..</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br />
</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<div>
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">எனவே சகோதரனே </span></div>
<div>
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">இனி நீதிக்காக போராடாதே </span></div>
<div>
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">எல்லோரும் அம்மணமாக ஓடும்போது </span></div>
<div>
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">உனக்கேன் கோவணம் </span></div>
</div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">நிர்வாணம் பழகிக்கொள் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">இருக்கவே இருக்கிறது </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அருமருந்தாய் டாஸ்மாக் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அரசாங்கமே நடத்துகிறது </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">குடித்து, களித்து வாழ்வை நகர்த்து</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">கொஞ்சமாக கோஷமிடவும் கற்றுக்கொள் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">தி.மு.க வோ, அ.தி.மு.க வோ </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">காங்கிரசோ, பி.ஜே.பி யோ</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அல்லது </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஏதாவது ஒரு லெட்டர்பேடு கட்சியிலாவது </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">உறுப்பினராக மாறு </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஒருபோதும் கம்யூனிஸ்டாக மாறிவிடாதே</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அது மனதிற்கும் உடம்புக்கும் ஆகவே ஆகாது..</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br />
</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">தமிழ் கோசம் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">இனி ஒன்றுக்கும் உதவாது</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">சமயங்களில் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">உயிரும் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">மயிருக்கு சமமாகப் போகும்..</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br />
</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">காயடிக்கப்பட்டு வாழ்வதைவிட </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">சாவே மேலென நினைத்தால் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">எழு, புறப்படு, கைதாகு </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அதன்பின் </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">இந்தக் கவிதையின் முதல்வரியில் இருந்து </span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">துவங்கும் உன் வரலாறு.. </span></div>
</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com9tag:blogger.com,1999:blog-4786681255583878760.post-22050148948809263332013-09-13T09:42:00.000+05:302013-09-13T09:42:17.075+05:30கையெழுத்து...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-oyG4iymUA4Y/UjKQYUgYZYI/AAAAAAAAEQk/DQoavUmbYLM/s1600/kathakali.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="http://4.bp.blogspot.com/-oyG4iymUA4Y/UjKQYUgYZYI/AAAAAAAAEQk/DQoavUmbYLM/s640/kathakali.JPG" width="640" /></a></div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
கையெழுத்துக்களால் </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
தலை எழுத்தை</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
மாற்ற முடியுமென,</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
தொலைக்காட்சியில் வியாபாரம் செய்பவன் </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
தெரிந்து வைத்திருக்கிறான் </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
கையெழுத்தினால் வரும் தொல்லைகளை..</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<br />
</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
இதயத்தை துடிக்கவைக்கும்</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
ஜாமீனுக்கு இடும்போது </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
மீளாக் கடனுக்கு தாம் வட்டிகட்ட </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
நேரிடலாம் என..</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<br />
</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
சொத்து விற்கும்போது </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
நடுங்கும் கை </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
வாங்கும்போது நளினமாக </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
விளையாடும் பத்திரத்தில்..</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<br />
</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
பிராக்ரஸ் கார்டில் </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
அப்பாவின் கையெழுத்தை தானே போட்டவன் ..</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
மகன் கேட்கும்போது</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
முதுகில் அறைகிறான்..</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<br />
</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
சகல இடங்களில் </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
தேவையாகும் ஒரு கையெழுத்து </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
தனித்தனி எழுத்தாகவோ </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
கோணலாகவோ </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
ஒற்றை எழுத்தில் சுழித்தோ </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
படங்களைப்போல் அழகாகவோ..</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<br />
</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
எத்தனை முறை போட்டிருப்போம் </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
ஓவ்வொரு முறையும் </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
ஒவ்வொரு கதை இருக்கும்..</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<br />
</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
பிரபலங்களிடம் வாங்கியவை </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
சில பரணிலும்,</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
சில வரவேற்ப்பறையிலும்,</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
சில குப்பையிலும்..</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<br />
</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
காதலை சொல்கிற கடிதம் </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
காதலியைவிடவும் அழகானது..</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<br />
</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
பதிவு அலுவலகத்தில் </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
எழுதப்பட்ட திருமண ஒப்பந்தங்களின் </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
கையெழுத்துகளில் சில</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
குடும்ப நல மன்றங்களில் </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
முடிவடையும்..</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<br />
</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
சமயங்களில் நம் தலையெழுத்து</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
ஒரு கையெழுத்தால் </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
தீர்மானிக்கப்படலாம்.. </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
<br />
</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
அப்படித்தான்,</div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
ஒரு கையெழுத்தை போட்டுவிட்டு </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
ஒளிந்து வாழ்கிறேன் </div>
<div style="font-family: arial; font-size: 14px; line-height: 25px;">
நான்..</div>
</div>
<div class="blogger-post-footer">"Enable Post Pages" to "Yes" (in Archiving settings) and set "Allow Blog Feeds" to "Full" (above).</div>Unknownnoreply@blogger.com9