11 ஜூன், 2009

ராமசாமி அத்தியாயம் - 18

இதில் மிகப்பெரிய வேதனை என்னவென்றால், நண்பன் ராஜா இந்த சமயத்தில் நடந்துகொண்ட விதம்தான், என் திருமணத்திற்காக நண்பர்கள் அனுப்பிய பணம், வீராவின் மருத்துவ செலவிற்கே போதாமல் எல்லோரிடமும் கடன் வாங்கிக்கொண்டிருந்தேன். அப்போது சென்னையில் இருந்த சம்பத்திடம் கம்பெனி அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என கேட்டேன். அவன் பதினெட்டாயிரம் மட்டுமே இருக்கிறது என்றான். அதனை உடனே எடுக்கசொன்னேன், அவன் பதினெட்டாயிரத்தில் டெலிபோன் பில் மூவாயிரம் கட்டிவிட்டு மீதம் எடுத்துவந்தான், அப்போது தஞ்சாவூரில் ராஜாவும், என் அத்தான் துரையும் இருந்தனர், தஞ்சை வந்த அவனிடம் பணத்தை ராஜாவிடம் கொடுத்து அத்தானிடம் கொடுக்க சொன்னேன்.

கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் ம்ருத்துவ செலவுக்கே ஆனது. மேற்கொண்டு மற்ற செலவுகள் என பார்க்கிற அனைவரிடத்தும் கடன் வாங்கினேன். ஆனால் கடைசிவரை ராஜா பணத்துக்கு என்ன பண்றே, இவ்வளவு பணம் செலவு ஆகுதேன்னு ஒரு வார்த்தை கேட்கல.

பிப்ரவரி எட்டாம் தேதி வீரா இறந்து போனான். மருத்துவமனையில் போஸ்ட்மார்டம் செய்து எடுத்து போங்கள், அப்போதுதான் அவனுக்கு காப்பீடு கிடைக்கும் என்றனர். அதற்க்கு வக்கீலாக கலைவாணனை ராஜாவே ஏற்பாடு செய்தான். அவர் நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன் என போய்விட்டார். ஆனால் அதன்பிறகு நடந்தவை மிகவும் கசப்பானவை, என் நண்பர்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் மிக கட்ச்சிதமாக முடிக்கும் எனக்கு, என் பிரச்சினைகளை முடிக்க ஆளில்லை. எல்லோரும் எங்களுக்கு உதவுவதாக சொல்லிக்கொண்டு போஸ்ட் மார்ட்டத்தை செய்வதற்கு ஏற்பாடு செய்யாமல் காலம் கடந்தது, வெள்ளிகிழமை இறந்த அவனுக்கு ஞாயிற்றுகிழமைதான் போஸ்ட் மார்டம் நடந்தது.

எல்லாம் முடிந்துபோனது அத்தான் மொத்த செலவுக்கான கணக்கு கொடுத்தார், அதை வாங்கி பார்த்தபோது என்னைப்பற்றி சரியாக அறியாதவர்கள் கூட பணம் கொடுத்ததை அறிந்து மனதிற்குள் அழுதேன். அப்போது அத்தானிடம் ராஜாவிடம் கொடுத்து பதினைந்தாயிரம் கொடுக்கசொன்னேனே அதை எழுதவில்லையா என்றேன். அவரோ இல்லையே அவர் என்னிடம் எந்த பணமும் கொடுக்கவில்லை மேலும் அவருக்கே செலவுக்கே என்னிடம்தான் பணம் வாங்கிக்கொண்டார் என்றார். அதைக்கேட்டதும் என் கண்களில் கண்ணீர் கொட்டியது, என்ன ஒரு நட்பு, நான் துன்பத்தில் கிடந்தது உழல அவன் அதைப்பற்றி எதுவுமே கவலைப்படாமல் இருந்திருக்கிறான், இனியும் இப்படிப்பட்ட நட்பு தேவையில்லை என முடிவு செய்தேன். அப்போது வீட்டிற்கு வந்த தங்கை சுதாவிடம் அவனுக்கும் எனக்கும் எல்லாம் முடிந்துவிட்டது என சொல்லசொன்னேன்.

தங்கை சுதா என்னிடம் என்ன காரணம் என துருவித்துருவி கேட்டபோதும், காரணத்தை பின்னால் சொல்கிறேன்.இப்போது அவனிடம் சென்று இதை மட்டும் சொல் என அனுப்பிவைத்தேன். சுதா அவனிடம் சொன்னதற்கு அழுதிருக்கிறான், என்னை தப்பா புரிஞ்சுகிட்டான் என சொல்லியிருக்கிறான். சுதா நீ போய் அண்ணனிடம் பேசு, அண்ணன் கோபத்தில்கூட சொல்லியிருக்கலாம் நீ வந்து பேசினால் சரியாகும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் அவனோ இண்ணைக்குவரை என்னிடம் வந்து பேசவில்லை.

நானும் இன்றுவரை என் வீட்டில் அவனைப்பற்றி எதுவுமே சொன்னதில்லை. அவன் தந்தை என் வீட்டிற்கு அடிக்கடி வருவார், அப்பாவை அவர்தான் வெளியில் கூட்டிசெல்வார், வீராவின் காப்பீடு மீதான வாழ்க்கை அவர்தான் விசாரித்துவருகிறார், ஆனால் அவன் இறந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது இன்றுவரை வழக்கு முடியவில்லை, அப்படி ஒரு வக்கீலிடம்தான் வழக்கு இருக்கிறது.

வீரா இறந்து ஆறு மாதம் ஆனது. நான் வீட்டிலேயே இருந்தேன் எங்கும் போவதில்லை. இடைப்பட்ட காலங்களில் அவன் என் வீட்டிற்கு வருவான் எல்லோரிடமும் பேசுவான், நாங்கள் இருவர் மட்டும் பேசிகொள்வதில்லை. அப்போது அவனுக்கு திருமணம் நிச்சயம் ஆனது ஜூலை மாதம் பதினைந்தாம் தேதி அவன் திருமணம் முடிவு செய்யப்பட்டு பத்திரிகையில் என் பெயரும் மணமகன் வீட்டாராக போட்டிருந்தது, இதற்கிடையில் அவன் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னதாக ஒரு நாள் சின்ன அத்தான் திடிரென வீட்டிற்கு வந்து என் திருமணத்தை உடனே நடத்த வேண்டும், அதுவும் ஒரு கோவிலில் வைத்தாவது நடத்தவேண்டும் என்றார். நான் ஒரு வருடம் போகட்டும் என்றேன். ஆனால் எல்லோரும் சொல்லிவைத்தமாதிரி பிடிவாதமாக இருந்தனர். நானும் அன்றைய சூழலில் மறுக்கவில்லை. அந்த திருமணம் முடிவு செய்யப்பட்டு எப்படி நடந்தது என்பதை ஏற்கனவே எழுதி விட்டேன்.

அவன் திருமணத்திற்கு மூன்று நாள் முன்னதாக வெறும் ஆயிரத்து இருநூறு ரூபாய் செலவில் என் திருமணம் நடந்தது. ஆனால் அவன் திருமணம் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் செலவில் வெகு விமரிசையாக நடந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். நான் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அதன் பிறகு இன்றுவரை அவன் வீட்டு வாசலை மிதிக்கவில்லை. மேற்க்கொண்டு நாங்கள் இருவரும் சேர்ந்து இருந்தபோது வாங்கிய கடனை அவனுக்கு தெரியாது என சொன்னதால் அதையும் நான்தான் அடைத்தேன்.

இதில் எனக்கு உண்மையான இழப்பு என்னவென்றால் ராஜாவின் தத்தா, பாட்டி இருவரின் இழப்புதான், அவர்கள் என்னை மிகவும் நேசித்தனர். மேலும் ராஜாவின் அம்மா என்னையும் தன் சொந்த பிள்ளையாகத்தான் பார்த்தார், ராஜாவின் சகோதரிகள் இருவரும் என்னை தன் சொந்த சகோதரனாகத்தான் பார்த்தனர். அதிலும் மூத்த அக்கா மின்னல்கொடியும், அதன் கணவரும் என்மேல் எல்லை கடந்த அன்பை வைத்திருந்தனர், பெரிய அக்காவின் கணவர் சுந்தர் என்னைத்தான் சொந்த மச்சினன்போல் நடத்தினார்.

ராஜாவை பிரியவேண்டும் என முடிவு செய்தபோது இவர்களைத்தான் நான் நினைத்து அழுதேன். என் மேல் மிகுந்த பாசம் வைத்தவர்கள், அவர்கள் கையால் சாப்பிட்டு இருக்கிறேன், அதிலும் பெரிய அக்கா உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கும், நான் வீட்டிற்கு போனால், அப்போதுகூட தன் கையால் சமைத்து கொடுக்கும், நான் எவ்வளவு மறுத்தாலும் ரெண்டே ரெண்டு தோசை மட்டும் சாப்பிட்டு போடா என கெஞ்சும். என்ன செய்வது அவர்களிடம் நான் தொடர்ந்து பாசம் வைத்தால் அது ராஜாவைத்தான் பாதிக்கும், ஏற்கனவே அவர்கள் அனைவரும் ராஜாவின் மீது வருத்தமாக இருந்தனர், எங்கள் பிரச்சினையால் உண்மை தெரிந்து அவனை அவர்கள் மேலும் வெறுத்துவிடகூடாது என்பதற்காகவே நான் என் மனதை திடபடுத்திக்கொண்டு அவர்களிடமும் பேசாமல் தவிர்த்தேன். ஆனாலும் இன்றுவரை என் மனதில் அவர்களுக்கென்று தனியே இடம் உண்டு.

அப்புறம் என் வீட்டில் எனக்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நான் சிங்கப்பூர் சென்றுவிட்டேன். இடையில் காந்தி அண்ணனுக்கு கொடுக்கவேண்டிய பணத்திற்க்காக ஒருமுறை சிங்கபூரில் பஞ்சாயத்து வைத்தார். அப்போது அவரிடம் நானே தந்து விடுகிறேன் என சொன்னேன். ஆனால் அவரோ அது நீ கொடுக்க வேண்டிய பணமல்ல, ராஜா வீட்டிற்காக ராஜா கொடுக்க சொன்னது, அப்போது நீயும் கூட இருந்தாய், அதனால்தான் உன்னையும் கூப்பிடுகிறேன். இல்லையென்றால் நானே அவனிடம் வாங்கிக்கொள்வேன், ஒருமுறை நீ வந்து உட்கார் நடந்ததை பேசுவோம் அவன் மறுத்தால் நீ சொல்லலாம் என்றார். அப்போது அவன் வந்திருந்தான் சம்பிராயமாக விசாரித்துக்கொண்டோம். அப்புறம் அவன் பணத்திற்கு ஒத்துகொண்டான். ஆனால் கடைசியில் காந்தி அண்ணனுக்கு அவன் பணத்தை கொடுக்கவில்லை. காந்தி அண்ணன் எனிடம் அவருக்கு ஒரு டிக்கெட் கடனாக போடசொன்னார். ஆனால் இன்றுவரை அந்த டிக்கெட் பணத்தை அவர் கொடுக்கவில்லை, தன் நண்பர் ஒருவரிடம் செந்திலால்தான் ராஜா எனக்கு அறிமுகம் அதனால்தான் ராஜா கொடுக்கவேண்டிய பணத்துக்காக டிக்கெட் பணத்தை கொடுக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகு ராஜாவை நான் சந்திக்கவில்லை. இடையில் அவன் தம்பி இளையராஜாவுக்கு, என் நெருங்கிய நண்பரும், அண்ணனுமான கணேஷின் பெண்ணை கேட்பதாகவும், கொடுக்கலாமா என என்னிடம் அபிப்ராயம் கேட்டார். நான் பூரண சம்மதம் சொல்லுங்கள், அவன் மிகவும் நல்ல பையன் என்றேன். திருமணத்துக்கு பத்திரிக்கை வந்தது, எல்லோரையும் மீண்டும் பார்க்க வேண்டும் என்பதற்காக நான் போகவில்லை.

ஒரு மாதத்திற்கு முன் என் மனைவி மிகவும் சோகமாக அமர்ந்திருந்தாள். என்னவென்று விசாரித்தேன், ராஜாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்து இறந்து விட்டதாக சொன்னாள், கேட்ட எனக்கும் வருத்தமாக இருந்தது, என் மனைவியோ உடனே போன் செய்து விசாரியுங்கள் என்றாள். நான் மறுத்துவிட்டேன் ஏனென்றால் ஒருமுறை பிரச்சினை வந்தபிறகு இனி பேசுவது நன்றாக இருக்காது. அப்படி மீண்டும் ஒருவரிடம் பேசியதால்தான் நான் இப்போது இவ்வளவு சிரமப்படுகிறேன் என்றேன். அவளும் அதற்குமேல் உங்க இஷ்ட்டம் என சொல்லிவிட்டாள்.

எங்கள் நட்பு அபூர்வமான ஒன்று அதை தன் தந்தை, மற்றும் மனைவி பேச்சை கேட்டு ராஜா இழந்து விட்டான். நாகரீகம் கருதி நான் நிறைய விசயங்களை சொல்லாமல் விட்டுவிட்டேன். ஏனென்றால் அவனை இன்றும் என் கூடபிறந்த சகோதரனாகத்தான் நினைக்கிறேன்.

அதன்பிறகு சிங்கபூர் சென்று என் பிரச்சினைகளை முடித்துக்கொண்டு தோழி கண்மணியுடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாம் என் ஊருக்கு வந்தேன். அப்போது வந்து சேர்ந்தவன்தான் ரமேஷ். இவன் ஒரு சைக்கோ என தெரியாமலே இவனைக்கூட சேர்த்துக்கொண்டு அதனால் இன்றுவரை நான் படும்பாடுகளை அடுத்த அத்தியாயங்களில் பாப்போம்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

4 ஜூன், 2009

"ராமசாமி அத்தியாயம் 17"

கடந்தவாரம் முழுவதும் தலைவர் பிரபாகரன் பற்றிய சர்ச்சையால் மனம் ஒரு நிலையில் இல்லை அதனால், என்னால் அடுத்த அத்தியாயத்தை எழுத முடியவில்லை, மறுபடியும் உங்களிடமும், தமிழ்குறிஞ்சி ஆசிரியரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் நான் இரண்டு தலைவர்களைத்தான் என் ரோல் மாடலாக வைத்திருக்கிறேன்,. ஒருவர் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, இன்னொருவர் தலைவர் பிரபாகரன். அதனால் தமிழர்களின் ஒப்பற்ற தனிப்பெரும் தலைவன் பற்றி வந்த செய்திகளால் நான் மனம் உடைந்து போனேன். பின்பு நம்பிக்கையான நண்பர்களால் தலைவர் உயிருடன்தான் இருக்கிறார் என்ற செய்தி கிடைத்தபின்தான் மனம் அமைதியானது. ஆனாலும் தமிழர்கள் நாம் ஒற்றுமையாக இல்லாமல் போனதால்தான் இப்படி ஒரு பின்னடைவு. ஆனாலும் நம்பிக்கை வைப்போம் இதுவும் ஒருநாள் மாறும்.

அன்று போலீஸ் நான் அப்படி கோபமாக பேசியபோது சற்று பயந்தார்கள், அந்த சமயத்தில் ஐ.ஜி ஆபீஸில் இருந்து ஒரு போன் வந்தது, உடனே இன்ஸ்பெக்டர், எதிர்முனையில் உள்ளவரிடம் சாரி சார், யாருன்னு தெரியாம பேசிட்டேன், தம்பிங்களும் தங்கள யாருன்னு சொல்லல, நான் பாத்துக்கிறேன் என்று போனை வைத்தார், அதன்பின் என்னிடம் என்னதம்பி நீங்க வந்தவுடன் உங்களை பத்தி சொல்லியிருக்க வேண்டாமா? நீங்க யாருன்னு தெரிஞ்சா உங்ககிட்டே அப்படி பேசியிருப்பேனா? பரவாயில்லை டீ சாப்பிடுங்க என்றார். நானும் சாரி சார் உங்க பதவிக்கு மரியாதை கொடுக்காம பேசிட்டேன், நீங்க தகாத வார்த்தைகளை பேசினதும் கோபபட்டுடேன் என்றேன்.

அதன்பின் கடகடவென வேலை நடந்தது, எங்கள் இருவரையும் இன்ஸ்பெக்டரே ஜீப்பில் அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு, இனி நான் பாத்துகிறேன் என்றார், நான் வேண்டாம் சார், உங்க உதவி தேவையின்னா, நான் கட்டாயம் கேட்பேன் என்று அனுப்பிவைத்தேன், அதற்குள் ருசி கம்பனியில் இருந்து அதன் எம்.டி போன் செய்து நாளைக்கு நானே நேரில் வந்து பேசுகிறேன், அதுவரை எனக்கு உங்கள் தரப்பில் இருந்து பிரஷர் கொடுக்கிறார்கள், அவர்களிடம் நீங்கள் எல்லாம் சுமுகமாக முடிந்துவிட்டது என்று சொல்லிவிடுங்கள் என்றார். நானும் சரி சார் நாளைக்கு காலை பத்துமணிக்குள் வந்துவிடுங்கள், நாம் பேசி முடிச்சுக்குவோம் என்றேன்.
அப்போது ஐ.ஜி ஆபீஸில் என் நண்பன் வேலை பார்த்தான், அவன் மூலமாகதான் நான் எல்லா உதவிகளையும் பெற்றேன், மேலும் அப்போது ஜெயலலிதா ஆட்சி,சசிகலா சம்பத்தப்பட்ட சிலருடன் எனக்கு பழக்கம் இருந்தது அதனால் அவர்கள் மூலமாகவும் நான் பேச சொன்னேன்.

இந்த பரபரப்பு முடிந்தவுடன் ராஜா என்னோடு தனியாக பேசினான், அப்போது நம் இருவரின் திருமணம் ஒன்றாகத்தான் நடக்கவேண்டும், காயத்ரி என்ன சொன்னாலும் நான் கேட்கபோறது இல்லை. நாளை இந்த பிரச்சினை முடிந்தவுடன் அவளிடம் சொல்லிவிடுகிறேன் என்றான், நான் திடிரென ஏன் இந்த மனமாற்றம் என்றேன். இல்லடா ஏதோ என் மனசுக்கு தோனுச்சு அதனால்தான் அப்படி முடிவு பண்ணேன் என்றான். நான் வருத்தமாக உன்னை பார்த்தா நிஜமாவே எனக்கு பாவமா இருக்கு, நீ இத ஒரு நாள் முன்னமே சொல்லிருந்தாகூட சந்தோஷபட்டிருப்பேன், ஆனா இனி என்னால உன்ன மாதிரி மாற முடியாது, என்னை பொறுத்தவரை உன்மேல் உனக்கு நம்பிக்கை போய்விட்டது, ஒரு உண்மையான நட்பை நீ இழந்துவிட்டாய் என்றேன், அதற்கு அவன் அழுதான், என்னை என்ன செய்ய சொல்லுறே, என் அப்பாவுக்கு பாக்குறதா, காயத்ரிக்கு பாக்குறதா, இல்ல உனக்கு பாக்குறதா என குழம்பிட்டேன். இப்ப நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்றான். நான் ஒரு இரண்டு நாள் டைம் கொடு, அதுவரைக்கும் காயத்ரிகிட்டே எதுவும் பேசாதே என முடித்துக்கொண்டேன்.

மறுநாள் ருசி கம்பனி எம்.டி நேரில்வந்து பேசினார், எங்கள் தரப்பின் நியாயத்தை புரிந்துகொண்டு எங்களையே தொடர்ந்து நடத்த சொன்னார். ஆனால் நானோ வேண்டாம் சார், ஒருமுறை சங்கடம் வந்துவிட்டது இனி அடிக்கடி பிரச்சினை வரும், மீதம் உள்ள சரக்கை எடுத்துக்கொண்டு பணத்தை செட்டில் செய்யுங்கள் என்றேன். அவரும் அவரின் ஆட்களிடம் சொல்லி சரக்கை கணக்கு பார்த்து எடுத்துக்கொள்கிறேன், பணத்தை செக்காக அனுப்பிவைக்கிறேன் என சென்றுவிட்டார், சொன்னபடி மூன்று நாளில் செட்டில் செய்துவிட்டார்,.

ராஜா என்னடா மூன்று நாளாச்சு எதுவும் பேசமாட்டேன்றே என்றான், நான் நாளை நாம் இருவரும் ஊருக்கு போகலாம்,போகும்போது பேசுகிறேன் என்றேன். ஊருக்கு கிளம்பியபோது இடையில் ஒரு பாரில் வைத்து, நாம் கொஞ்ச காலத்துக்கு பிரிஞ்சு இருப்போம், திருமணமும் தனித்தனியாக நடக்கட்டும், இருவரின் திருமணத்திற்கு பிறகு அடுத்த பிசினஸ் சேர்ந்து செய்வதைபற்றி முடிவு செய்யலாம் என்றேன். அவன் என் இப்படி முடிவு பண்றே என்றான், நான் சாரிடா, நமக்குள்ள ஒரு இடைவெளி விழுந்துட்டு, அதை சரிபண்ண கொஞ்ச நாளாகட்டும் என்றேன். இதுதான் உன்னோட இறுதி முடிவா இருந்தா இது நமக்குள்ளேயே இருக்கட்டும் என்றான். நானும் அதைத்தான் சொல்லனும்ன்னு நினைச்சேன் என்றேன். அதன்பிறகு ஊர் வந்து வழக்கம்போல் அவன் வீட்டில் தங்கி, அவனை மட்டும் பரவாக்கோட்டைக்கு அனுப்பி அப்பாவிடம் என் திருமணத்தை முடிவு செய்துவிடுங்கள் என சொன்னேன்.
அவனும் ஊருக்கு சென்று அப்பாவிடம் பேசி பிப்ரவரி ௨௪ ௨௦௦௨ அன்று என் திருமண தேதியை வைத்துவிட்டு சென்னை வந்தவுடன் ரூபாய் ஒரு இலட்சம் திருமண செலவுக்காக கொடுத்து அனுப்புகிறேன் என சொல்லிவிட்டு வந்தான். மறுநாளே அவன் மட்டும் சென்னை கிளம்பிவிட்டான்.

அந்த சமயத்தில் எல்லா வரவு செலவும் அவனிடம்தான் இருந்தது. அப்போதுதான் சிங்கபூரில் இருந்து வந்திருந்தேன், அதனால் அவனிடம் நான் கணக்கும் கேட்க்கவில்லை. ஏற்கனவே எங்கள் இருவரின் திருமண செலவிற்காக ரூபாய் இரண்டு இலட்சம் தனியாக வைத்திருக்க சொன்னேன். அதிலிருந்து பணம் கொடுப்பான் என நினைத்து நானும் பேசாமல் இருந்துவிட்டேன், ஆனால் பிப்ரவரி மூன்றாம் தேதிவரை அவன் ஒரு ரூபாய் கூட அனுப்பவில்லை. அதற்குள் அப்பா என்னை பணத்திற்காக நச்சரிக்க ஆரம்பித்தார்.

அவனிடம் போன் செய்து பணம் என்னடா ஆச்சு என்றேன். அவனோ நீ சென்னை கிளம்பி வா, இங்கு பத்திரிக்கை அடித்துக்கொண்டு இருவரும் சேர்ந்து ஊருக்கு போகலாம் என்றான். டேய் பத்திரிக்கை இங்கேயே அடித்துக்கொள்ளலாம், பணம் என்னடா ஆச்சு என்றேன் கோபமாக. அவனோ என்கிட்டே ஏது காசு யாருகிட்டயாவது வாங்கித்தான் கொடுக்கணும், சிலபேருகிட்டே கேட்டிருக்கேன், கொடுத்தா தாரேன் என்றான் அலட்சியமாக, எனக்குள் ஏதோ ஒன்று இடிந்தது. இவனை எவ்வளவு நம்பினோம், கடைசியில் இப்படி அலட்சியமாக பேசுகிறானே. பரவாயில்லை, அவனுக்கு தெரிந்தது அவ்வளவுதான், இனி நாமே ஆகவேண்டியதை பாப்போம் என அப்பாவிடம் போய் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்றேன். அவர் ஒரு எண்பதினாயிரம் இருந்தா போதும் என்றார்.

உடனே சிங்கபூரில் இருக்கும் நண்பர்களுக்கும், துபாயில் இருக்கும் மணிகண்டனுக்கும் பேசினேன். அவர்கள் இரண்டு நாட்களுக்குள் பணத்தை அனுப்பிவைக்கிறேன் என்றனர். பிப்ரவரி மூன்றாம் தேதி அன்று காலை எனக்கு ஒரு நண்பர் அனுப்பிய இருபத்தி ஐந்தாயிரம் வந்தது. அன்று மாலை என் சகோதரி மகன் வீரா விபத்தில் சிக்கினான். மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் அவனை தஞ்சாவூர் வினோதகன் மருத்தவமனையில் சேர்த்தோம், ஆனால் அவன் பிப்ரவரி எட்டாம் தேதி எங்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டு இறந்துபோனான். என் வாழ்வில் நான் மிகவும் நேசித்த இரண்டாம் நபர் அவன். ஏற்கனவே அஞ்சலியின் மரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நான், இவனை பிரிந்ததும் ஆருதலற்று தவித்தேன். சகோதரனின் மரணத்திற்கு வந்த காமாட்சி என் நிலயை பார்த்து வீட்டிலேயே தங்கிவிட்டாள். பிப்ரவரி இருபத்தி நாலாம் தேதி நடக்க இருந்த எங்கள் திருமணம் நின்று போனது.

இதற்கும் ராஜாவுடன் என் நட்பு முறிந்து போனதற்கும் என்ன சம்பந்தம்? அதனை அடுத்தவாரம் எழுதுகிறேன்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..