22 டிச., 2009

நியூட்டனின் மூன்றாம் விதி...

பிரிவின் வேதனை சுடுகிறது
என்பவனுக்கு
பிரிவின் பின்னர்தான்
திளைக்க திளைக்க
நினைவில் நனைகிறேன்
என்பதை எப்படி புரியவைப்பேன்..

நிராகரித்தலின்
வேதனையை அனுபவித்ததுண்டா
என்பவனிடம்
எப்படி பகிர ..
ஒரு
நிராகரித்தலின் பின்தான்
திகட்ட திகட்ட
அன்பை சுவைப்பதை...

எனக்கு மட்டும்
ஏன்
இப்படியெல்லாம் நிகழுது
என்றவனுக்கு
எல்லாவற்றிலும் மீண்டஅனுபவத்தை
எப்படி விளக்குவேன் ..?

ஐய்யகோ!..
புலிகளை அழித்துவிட்டனரே..!
கதறி துடித்த தோழனுக்கு
தெரியவில்லை
பதுங்கி பாய்வதுதான்
புலிகளின் குணமென்று....!!!

கொத்து குண்டுகள்
மொத்தமாய் போட்டவனுக்கு
யாரும் சொல்லவில்லையா
நியூட்டனின் மூன்றாம் விதியை..?

21 டிச., 2009

பூனை படித்த கதை

அந்த நெடுங்கதையின்
அறுபதாவது பக்கத்தில்
ஒரு
திருப்பத்தை வைத்திருந்தேன்,
தேனீருக்காக இறங்கிப்போன
என்
கதாநாயகனை காணவில்லை ...

கதையின் வில்லனை
நாயகனாக்கி
கதையை தொடங்கினேன்.,
வில்லனை பிடிக்காமல்
நாயகி ஓடிப்போனாள்..

தொடர முடியா கதையை
தூரத்தில் வைத்து
விட்டத்தை பார்த்தபோது
தன்
கடைசி பூனைக்குட்டியை
கவ்விசென்ற பூனை
கதையின் மேல் சிறுநீர் கழித்தது...

19 டிச., 2009

குற்ற உணர்ச்சி


ஒரு பிற்பகல் வேளையில்
அவர்கள் என்னை அழைத்து சென்றனர்..
தொடர்ந்து விசாரித்தனர்...

நான் குற்றமற்றவன்
என தெரிந்தாலும்
தேடிவந்தவன் கிடைக்காத காரணத்தால்
என் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது..

எல்லாம் முடிந்து
வெளியில் வந்துவிட்டேன்.,
எல்லோருக்கும்
ஒரு காரணம் இருக்கிறது.,
இந்த விசயத்தில்
ஏன் உதவ முடியவில்லை என..,

இதற்க்கு முன்
அலுக்க அலுக்க
மற்றவர்களுக்காக
பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறேன்.,

முன்பை போலவே
இம்முறையும்
எதுவும் கேட்கவில்லை
என் மனைவி .....

10 ஆக., 2009

ராமசாமி அத்தியாயம் - 26


தேவதை கதைகள் "செல்வி" பாகம் இரண்டு ....

செல்வி அண்ணி, கணேசன் அண்ணனின் ஒன்றுவிட்ட அக்கா மகள். செல்வி மதுரையில் படிக்கும்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்திருக்கிறது. செல்வி குடும்பத்தில் அவர்தான் மூத்தவர் அதனால் மிகவும் பாசமாக வளர்க்கப்பட்டவர். அதனால் இவர்கள் காதல் வீட்டிற்கு தெரிய வந்தவுடன் செல்வி வீட்டில் கடுமையான எதிர்ப்பு வந்தது. தன் பெண் சிரமப்பட்டு விடுவாளோ என்ற பயத்தில் செல்வியின் அப்பா கண்டித்தார், ஆனால் செல்வியின் பிடிவாதமே ஜெயித்தது. கணேசன் அண்ணனுக்காக ஒரு கட்டத்தில் விஷம் அருந்திவிட்டார். அதன் பிறகே அவர்களின் திருமணம் எல்லோரின் சம்மதத்துடனே விமரிசையாக நடந்தது.

ஆனால் திருமணத்திற்கு பின் செல்வியின் அப்பா சொன்னது மாதிரியே மிகுந்த சிரமத்துக்கு இடையில்தான் வாழ்கை நடத்த வேண்டியிருந்தது. கணேசன் அண்ணனுக்கு ஒரு நிரந்தர வேலை இல்லை, இருந்தாலும் டியுசன் எடுப்பதால் அவர் சம்பாதிக்கும் சொற்ப பணத்தில்தான் குடும்பம் நடத்த வேண்டும். தான் விரும்பி ஏற்றுகொண்ட வாழ்க்கை என்பதால் தன் வீட்டினருக்கு தன் சிரமத்தை சொல்லாமலே, சந்தோசமாகவே வாழ்க்கை நடத்தினார். கணேசன் அண்ணன் இந்த காலகட்டத்தை தன் வாழ்வின் சந்தோசமான தருணம் என என்னிடம் சொல்லியிருக்கிறார். தான் செல்வாக்கான குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் அதை காட்டிகொள்ளாமல் எளிமையாக தன்னோடு வாழ்ந்துதான் பெருமை என அடிக்கடி சொல்லியிருக்கிறார். இந்த காதலுக்கு அடையாளமாக சுஜன் பிறந்தவுடந்தான் செல்வி என்னை என் உண்மையான நிலையை எடுத்து சொல்லி சிங்கபூருக்கு கிளம்ப சொன்னார். ஆனால் இரண்டுமுறை விசா கிடைக்கவில்லை என்றவுடன் மிகவும் சோர்ந்துபோனேன், அப்போதெல்லாம் ஆறுதலாக இருக்கவில்லை என்றால் தன்னால் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது என்பார்.

அது உண்மைதான் அண்ணியின் கடுமையான உழைப்பு நான் கண்கூடாக கண்ட உண்மை. எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தியும் அழகும் இருக்கும். சட்டென யாரையும் நம்பிவிடக்கூடிய அப்பாவி அவர். மிகுந்த பாசக்காரர், இரக்ககுணம் மிக்கவர். அதே வேலை தன் மிகவும் அன்பு செலுத்திய ஒருவர் பேசாமல் போனால் மிகுந்த மனவருத்தம் அடைவார். எனக்கு தெரிந்தவரை கடவுளின் மேல் மிகுந்த ஆத்மார்த்தமான பக்தி கொண்டுள்ள சிலரில் அவரும் ஒருவர். மிகவும் புத்திசாலியான பெண், நல்ல நிர்வாகத்திறமை உள்ள அண்ணி வேலைக்கு சென்றிருந்தால் இந்நேரம் தலைமை பொறுப்புக்கு வந்திருப்பார். அவரிடம் பிடிக்காத சிலவிசயங்கள் எனக்கு உண்டு, தன் உடல்நிலையை பற்றி கவலைப்பட மாட்டார், மற்றவர்களின் உடல்நிலை சரியில்லை என்றவுடன் தீவிர அக்கறை காட்டும் இவர் தனக்கு பார்ப்பதில்லை, அடுத்து யாராயிருந்தாலும் வலிய சென்று அவர்களுக்கு உதவுவது, அதன்பின் வருத்தம் ஏற்பட்டு புலம்புவது. அண்ணி இவையிரண்டையும் அவசியம் மாற்றிக்கொள்ளவேண்டும்.

அடுத்து அண்ணியின் சமையில், ஆரம்பத்தில் எங்களை சோதனை சாலை எலிகளாய் பயன்படுத்தி சமையல் கற்றுகொண்டவர், இன்று மிகபிரமாதமாக சமைப்பார். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சமைக்கும் அண்ணியின் சமையலை அண்ணன் குறை கூறும் நாளில் எனக்கு சிரிப்பாக இருக்கும். எனக்கு அந்த குடும்பத்தில் தனியான இடம் உண்டு, அண்ணனின் சொந்த தம்பியாக என்னை மதிக்கும் அதே வேளையில் ஒரு நல்ல நண்பனாகவும் என்னை மதிப்பார். அண்ணி தன் பிள்ளைகளுள் ஒருவராகவே என்னை பார்க்கும், நான் மிகுந்த சிரமத்துக்கு ஆளான போதெல்லாம் ஆறுதல் சொல்லி நம்பிக்கை ஏற்படுத்தி என்னை ஜெயிக்க வைக்க பாடுபடுபவர். என்னை பொறுத்தவரை அவர் என் அன்னை.

அண்ணி மேல் அண்ணனும், அண்ணன் மேல் அண்ணியும் கொண்ட காதல் அற்புதமானது, எத்தனையோ பிரச்சினைகள் வந்திருக்கின்றன, எத்தனையோ சண்டைகள் வந்திருக்கின்றன அதற்கெல்லாம் நானும் சுஜனும்தான் சாட்சி, ஆனால் மறுநாளே ஒன்றும் நடக்காதது போல் பேசிகொள்வார்கள், நமக்கே வெறுப்பாக இருக்கும் அட சண்டைபோட்டால் சில நாளாவது நீடிக்க வேண்டாமா?....

அண்ணன் மிகவும் கொடுத்துவைத்தவர், ஏனென்றால் சம்பளம் எடுத்தவுடன் அது அண்ணி கைக்கு போய்விடும் அதன்பிறகு அண்ணன் செலவுக்கு வாங்கிகொள்வதொடு சரி, எல்லா நிர்வாகமும் அண்ணிதான் பார்த்துகொள்ளும், வீட்டிலும் சும்மா இருக்காது, டியுசன் எடுக்கும், டிரஸ் தைத்து கொடுக்கும், இவரின் டிசைனுக்காகவே பிரத்யோகமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இப்போது ஒரு கடை வைத்திருக்கிறார்கள், இரவு வெகு நேரம் தூக்கம் முழிப்பார், இதன் காரணமாகவே இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடும்.


இவர்களுக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது. இப்போது ஸ்ருதி பள்ளிக்கு செல்கிறது, அதன் மழலை கலந்த பேச்சு அற்புதம், இரண்டு குழந்தைகளும் என்னை அவர்களின் நண்பனாக கருதி என்னை பாடாய் படுத்துவார்கள், வாழ்க்கையில் சந்தோசமான தருணங்கள் சில உண்டென்றால் அது அந்த தருணம்தான். அந்த நேரங்களில்தான் என் சிரமங்களை மறந்து இருக்க முடிந்திருக்கிறது.


நல்ல காதல் எப்போதும், அதற்க்கு மிகசிறந்த உதாரணம் அண்ணன், அண்ணியின் வாழ்க்கை. எனக்கான ரோல் மாடல் இவர்கள்தான். ஒரு அற்புதமான தாய்மையை அண்ணியிடம் கண்டிருக்கிறேன், பாரபட்சமற்ற அன்பு அது. கோபமோ, அன்போ உடனடியாக உணர்ச்சிகளை கொட்டிவிடும்.
அண்ணனும், அண்ணியும், சுஜனும், ஸ்ருதியும் நீண்ட ஆயுளோடு எழ வளங்களையும் பெறவேண்டும் என எல்லாம் வல்ல எம் குருவிடம் எப்போதும் பிரார்த்திக்கிறேன்.
இந்த கதை தமிழ்குறிஞ்சி இணைய இதழில் தொடராக வருகிறது.....

ராமசாமி அத்தியாயம் - 25



தேவதை கதைகள் "செல்வி"

ஒரு மனிதனுக்கு எப்போதாவது திடீரென ஞானம் பிறக்கும், புத்தனுக்கு போதிமரம் கிடைத்தமாதிரி அண்ணன் கணேசனுக்கு ஒரு நாள் தன் குழந்தை தொட்டிலில் தூங்கிகொண்டிருந்தபோது வாழ்க்கை பற்றிய பயம் திடீரென வந்ததாக சொன்னார். பெண் குழந்தை வளர்ந்து பெரியவள் ஆகபோகிறாள் தற்போது வாழும் பற்றாகுறை வாழ்க்கை அவளை பாதித்துவிடக்கூடாதே என கவலை வந்துவிட்டது.

தனக்கு கிடைக்கும் சொற்ப பணத்தில் தன் மனைவி பொறுமையாக குடித்தனம் செய்தாலும், இத்தனை நாள் எத்தனை பொறுப்பற்று இருந்திருக்கிறோம் என்பதே மனதுக்கு பெரும் உறுத்தலாக இருந்தது. தன் திருமணமே மிகப்பெரிய போராட்டத்தில் ஜெயித்த நம்பிக்கை மனதில் இருந்தாலும். இப்படி எதிர்காலம் பற்றிய பயம் இதுவரை வந்ததில்லை. இத்தனை நாளும் செல்வி அடிக்கடி சொல்வதுதான் என்றாலும், தன் குழந்தை பற்றி யோசித்தவுடன் வந்த பயம் மனதை அரித்தது.

நண்பர்கள் சேர்ந்து சிங்கபூருக்கு சென்று வேலை செய்யலாம் என முடிவு செய்து ராஜனும், குமாரும் சிங்கப்பூர் சென்று வேலையில் அமர்ந்துவிட்ட பிறகும் தனக்கான விசா தொடர்ந்து கிடைக்காமல் போகவே, சரி ஒரு நல்ல சோசியகாரானாக சென்று பார்த்தால் தேவலை என நினைத்து, அவனை சென்று பார்த்தால் அவனோ உன்னால் வெளிநாடு போகவே முடியாது என்று கூறிவிட்டான். கோபத்தில் கோவிலுக்கு சென்று சாமியிடம் நான் சிங்கபூருக்கு சென்றே ஆகவேண்டும் அதற்க்கு நீதான் பொறுப்பு என சொல்லிவிட்டு வீட்டிற்கு வர, வீட்டில் செல்வி அப்பாவிடம் இருந்து போன் வந்தது, மீண்டும் விசா அப்ளை செய்யலாம் என சென்னை வரசொன்னார் என்றது. சென்னை வந்து குடும்பத்தோடு விசா அப்ளை செய்ய உடனே கிடைத்துவிட்டது.

நான் இடையில் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் மீண்டும் சிங்கபூர் சென்றேன். அன்றைய காலை விமானத்தில் நானும் மாலை விமானத்தில் கணேசன் அண்ணன் குடும்பத்துடனும் ஒரே நாளில் வந்திறங்கினோம். அப்போது தெரியாது எங்களுக்குள் ஒரு புதிய உறவு துவங்கபோகிறது என்று. ஒரு இரண்டு நாள் கழித்து கணேசன் அண்ணன், செல்வி அண்ணி, குழந்தை சுஜனி மூவரும் எங்கள் பாசிர் ரிஸ் இல்லத்திற்கு வந்திருந்தனர், சம்பிராயதமான உரையாடலுக்கு பிறகு சிறிது நானும் கணேசன் அண்ணனும் தனித்து பேச வாய்ப்பு கிடைத்தது. தன்னை எல்லோரும் ஏன் குடும்பத்துடன் வந்தாய், தனியாக வந்தாலே வேலை கிடைப்பது சிரமம் இதில் குடும்பத்தோடு வந்தால் எப்படி சமாளிப்பை என பயமுறுத்துவதாக சொன்னார். நானோ இல்லை அண்ணா நிச்சயம் வேலை கிடைக்கும்,கவலைபடாதீர்கள் என ஆறுதல் கூறினேன். அவரோ நான் இங்கு கோவிலுக்கு சென்று ஒரு வாரத்துக்குள் எனக்கு வேலை கிடைக்கணும் என வேண்டிகொண்டதாக சொன்னார். கடவுள் நம்பிக்கை அற்ற எனக்கு அது அபத்தமாக இருந்தாலும். சொன்னபடி அவருக்கு வேலை நிச்சயம் ஆனது. அதன்பிறகு அவர்கள் குடும்பத்துடன் எங்களுடன் தங்கினர்.

அவர்களின் குழந்தை சுஜனி மிகவும் அருமையான குழந்தை, கணேசன் அண்ணன் குடும்பத்தினருடன் மனஸ்தாபம் வந்து பிரிந்த அவரின் நண்பர் குமாரின் மனைவி தங்கை மீனா அடிக்கடி சொல்லும் அது மிகவும் ராசியான குழந்தை என்று, உண்மைதான் கணேசன் அண்ணனுக்கு அது பிறந்தபின்தான் வாழ்வில் ஏற்றம் கிடைத்தது. சுஜனி எனக்கும் குழந்தைதான் இன்று அதற்க்கு பனிரெண்டு வயதாகிறது. ஆனாலும் எனக்கு இப்போதும் ஒன்றரை வயதில் இருந்த அதே குழந்தை தன்மையுடன்தான் இப்போதும் இருக்கும் மிகவும் புத்திசாலியான பெண்.

அதன்பிறகு அண்ணிதான் எங்களுக்காக சமைத்தது. செல்வாக்கான குடும்பத்தில் பிறந்து, வசதியாக வளர்ந்த பெண், ஆனால் சிரமம் பார்க்காமல் எங்களுக்காக சமைக்கும், சமைக்க தெரியாமல் சிரமப்படும், நாங்கள் சாப்பிடும்போது நன்றாக இருக்கா, வேறு ஏதாவது மாற்றம் செய்யனுமா எனகேட்கும். வீட்டு சாப்பாடே கிடைக்காமல் நாக்கு செத்துப்போன எங்களுக்கு எப்படி இருந்தால் என்ன. அதுவே அமிர்தமாக இருக்கும்.

பாசிர் ரிஸ் வீட்டில் நண்பர்களுக்குள் பிரச்சினை வந்து எல்லோரும் தனித்தனியே போய்விடுவது என முடிவு செய்தோம். அதில் கணேசன், மற்றும் குமார் இருவருக்கும்தான் பிரச்சினை வந்து இன்றுவரை அவர்கள் பேசிக்கொள்வதில்லை ஆனால் இருவரின் குடும்பத்தோடும் எனக்கு இருக்கும் நட்பு அப்படியேதான் இருக்கிறது. அப்படி இருவரும் பிரியும்போது கணேசன் அண்ணா ஜூரோங் வெஸ்ட் சென்றுவிட்டார், சாமான்களை எல்லாம் நானும் சம்பத்தும்தான் சென்று இறக்கிவிட்டு வந்தோம்.

அதன்பிறகு சிலமாதங்களில் நான் ஊருக்கு வந்துவிட்டேன். அதற்கு அடுத்த மாதங்களில் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைத்தது. அவர்கள் ஒரு சொந்தவீடு வாங்கினார்கள் அப்போது நான் சிங்கபூரில் இருந்தேன், எனவே அப்போதும் நான்தான் சாமான்களை இடம்மாற்றி கொடுத்தேன். முதன் முதலில் நானும் நண்பர் ராஜசேகரும் சேர்ந்து வர்ணம் அடித்தோம். இப்போதும் அந்த வீட்டில்தான் வசித்துவருகிறார்கள்.

இதுவரை அண்ணனை பற்றியே எழுதியிருக்கிறேன், அண்ணியை பற்றியும் இருவரின் தூய்மையான காதலை பற்றியும் அடுத்தவாரம் எழுதுகிறேன்.
இந்த கதை தமிழ்குறிஞ்சி இணைய இதழில் தொடராக வெளிவருகிறது ......

27 ஜூலை, 2009

ராமசாமி அத்தியாயம் - 24


தேவதை கதைகள் "அலமேலு" பாகம் -2


அதன்பிறகு இரண்டு வாரம் கழித்துதான் நான் தனஞ்செய் வீட்டுக்கு போனேன். அங்கு அந்த பெண் அலமேலுவை அன்றுதான் பார்த்தேன். அந்த பெண்ணின் பெயர் அலர்மேல் மங்கை சுருக்கமாக அலமேலு ஆகிவிட்டது. முகத்தில் எப்போதும் ஒரு அமைதி குடிகொண்டிருந்தது. உங்களுக்கு இந்த வீடு வசதியாக இருக்கிறதா என கேட்டேன். ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணே என்றது. எனக்கும் அது புரிந்தது ஏனென்றால் அந்த வீட்டை அவ்வளவு சுத்தமாக வைத்திருந்தது. எனக்கு நிறைய ஆடைகள் எடுத்து தந்தார் என எடுத்து வந்து காட்டியது. அவ்வளவும் நல்ல விலை உயர்ந்த ஆடைகள். வேறு குறைகள் இருக்கிறதா என்றேன். அவர் தினமும் தண்ணி அடிக்கிறார் தயவு செய்து அதை குறைக்க சொல்லுங்கள், மற்றபடி என்னிடம் மிக குறைவாகத்தான் பேசுவார். எனக்கு இங்கு இருப்பதில் பிரச்சினை எதுவும் இல்லண்ணே என சமைக்க போய்விட்டது. அன்று இரவு அங்குதான் சாப்பிட்டேன், அருமையாக சமைத்திருந்தது.


ஆஸ்திரேலியாவில் இருந்து பேசிய கருணாமூர்த்தியும் அங்கு இந்திய பணிபென்னை அழைத்துகொள்வதில் சிக்கல் இருப்பதாகவும், அதனால் தான் தனன்ஜெயிடமும், அலமேலுவிடமும் பேசியாதாகவும், அந்த பெண் அங்கேயே இருக்கட்டும் என சொல்லிவிட்டார்.


ஒரு மூன்று மாதங்கள் ஆகியிருக்கும் தனஞ்செய் என்னை அழைத்தார், நானும் வேலைப்பளு காரணமாக அதன்பிறகு அவரை சந்திக்கவில்லை. சரி வீட்டுக்கு வருகிறேன் என்றேன். ஆனால் அவரோ கோவிலுக்கு வாருங்கள் முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்றார். அங்கு போனவுடன் தனக்கு அலமேலுவை மிகவும் பிடித்திருக்கு எனவும் அவளை தான் தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் சொன்னார். இதில் அலமேலுவுக்கு விருப்பமா என்றேன். இல்லை நண்பா அதை நீங்கள்தான் கேட்டு சொல்லவேண்டும் என்றார். இன்னைக்கே முடிவு பண்ணிடலாம் வாங்க வீட்டுக்கே போவோம் என வீட்டுக்கு வந்தோம். வரும் வழியில் எதனால் இந்த முடிவை எடுத்தீங்க என்று கேட்டேன். இடையில் அலமேலுவுக்கு மிகவும் உடல்நிலை சரியில்லை, கடுமையான காய்ச்சல் இருந்தது, நான்தான் மருத்துவமனைக்கு கூட்டிசென்றேன். வீட்டிற்கு வந்தும் அவளால் வேலை ஏதும் செய்ய முடியவில்லை, நான்தான் அவளுக்கு கஞ்சி வைத்து கொடுத்தேன், அந்த நாட்களில் நான் வீட்டை வழக்கம்போல் குப்பையாக்கி விட்டேன். அப்போதுதான் தெரிந்தது, எனவே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன் மேலும் அந்த நாட்களில்தான் அவளின் கதையை கேட்டேன் அது என்னை மிகவும் பாதித்தது. நான் ஏன் அந்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ளக்கூடாது என முடிவு செய்தேன். என்னால் அவளிடம் நேரிடையாக கேட்கமுடியவில்லை. அதனால்தான் உங்களை கேட்க சொல்கிறேன் என்று அலமேலுவின் கதையை சுருக்கமாக சொன்னார்.


அலமேலுவும் தாயை இழந்த பெண், சொந்த சித்தியே அப்பாவுக்கு இரண்டாம் தாரமாக வாழ்கைபட்டாள். ஆரம்பத்தில் மிகவும் பாசமாக இருந்த சித்தி தனக்கு இரண்டு குழந்தைகள் வந்ததும், பாசம் குறைந்து போனது அலமேலு நன்றாக படிக்கும் பெண். ஆனால் வெட்டு வேலை மற்றும் காணி வேலைகளை அலமேலுதான் செய்யவேண்டும். பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும் பெண்ணுக்கு படிப்பெதுக்கு என நிறுத்திவிட்டனர், மேலும் அப்போது தன தூரத்து உறவினர் பேச்சை கேட்டு தன்னை பணிபென்னாக சிங்கப்பூருக்கு அனுப்பி விட்டனர். காசு அனுப்பினால் போதும் நன்றாக இருக்கிறாயா என கேட்டதில்லை. வந்து இரண்டு வருடம் ஆகிறது இதுவரை ஊருக்கு வரச்சொல்லி சொன்னதில்லை. மேலும் தான் சந்தோசமாக இருந்தது இந்த உடம்பு சரியில்லாத நேரத்தில்தான், இத்தனை வருட காலத்தில் தன்னை பாசமாக பார்த்து கொண்டது நீங்கள்தான் என அழுதாள். எனக்கு என்னமோ போலாகிவிட்டது அப்போதே அவளை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என முடிவு செய்துவிட்டேன் என்றார்.


வீட்டிற்கு வந்து அலமேலுவிடம் கேட்டதும் உடனே தனஞ்செய் காலில் விழுந்து அழுதது. எனக்கு அதன் சந்தோசம் புரிந்தது, தனன்ஜெயிடம் அதுக்கு சம்மதம்தான். எனக்கு அவசரமாக ஒரு வேலை இருக்கு நான் மறுபடி வந்து பார்த்துக்கொள்கிறேன் என கிளம்பினேன். ஒரு காதல் பூக்கும்போது நமக்கென்ன வேலை? உடனே அலமேலு அண்ணே என ஏன் காலிலும் விழ முயற்சி செய்ய, நான் பதறி தடுத்தேன், உங்களால்தான் எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தது என என் கையை பிடித்துக்கொண்டு அழுதது. இல்லம்மா உங்க நல்ல மனசுக்கும், தனன்ஜெய்யின் நல்ல மனசுக்கும் அமைந்த வாழ்க்கை. நான் அடுத்தவாரம் வாரேன் என பிடிவாதமாக சாப்பிட்டு போக சொல்லி வற்புறுத்தியபோதும் கிளம்பிவிட்டேன். இப்போது அவர்களுக்கு தேவை தனிமைதான்............


அதன்பிறகு இரண்டே வாரங்களில் தனஞ்செய் ஊருக்கு கிளம்பிவிட்டார். அங்கு சென்று தந்தையிடம் பேசியதில் அவர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனால் பிடிவாதமாக இருந்து அவர் சம்மதம் கேட்கவே. தான் திருமணத்தில் கலந்து கொள்ளமாட்டேன் எப்படியாவது போய்க்கோ என பத்து லட்ச ரூபாயை கையில் தந்து அனுப்பி இருக்கிறார். அதனை கொண்டு பொய் அலமேலு வீட்டில் கொடுத்து பெண் கேட்டிருக்கிறார். பணம் கிடைத்தவுடன் அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை உடனே சம்மதித்து விட்டார்கள். அப்புறம் நான்தான் அலமேலுவை ஊருக்கு அனுப்பி வைத்தேன். கோவிலில் வைத்து தாலிகட்டி இரண்டே வாரங்களில் கூட்டி வந்துவிட்டார்.


வந்து மறுமாதத்திலேயே அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைத்து அவர்கள் அதற்கடுத்த ஆறு மாதத்தில் அமேரிக்கா சென்று விட்டனர். எப்போதாவது மெயில் அனுப்புவார்கள். அதன்பிறகு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக மெயில் வந்தது, அதன்பிறகு கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக தொடர்பு இல்லை.


இந்த கதையில் அவர்களின் உண்மையான பெயர்களே பயன்படுத்தி இருக்கிறேன். படிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்குமானால் தொடர்பு கொள்வார்கள் என நம்புகிறேன்..

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் தொடராக வருகிறது .......

ராமசாமி அத்தியாயம் - 23


தேவதை கதைகள் "அலமேலு"


இந்த அத்தியாயம் எனக்கு தெரிந்த பெண்களின் கதைகளை சொல்ல போகிறேன்....


அன்று இரவு எனக்கொரு அழைப்பு வந்தது, தொலைபேசியில் தனக்கு அவசரமாக ஒரு உதவி வேண்டும் என்றார் கருணாமூர்த்தி, இவர் சிங்கப்பூர்காரர் தான் குடும்பத்தோடு ஆஸ்திரேலியாவுக்கு மாற்றலாகி போவதாகவும், அவசரத்திற்கு தன் வீட்டு பணிபென்னை கூட்டி செல்ல முடியவில்லை என்றும் அதனால் ஒரு மாதத்திற்கு எங்காவது தங்க வைக்க முடியுமா? என்றார். நாளை இரவுக்குள் ஏற்பாடு செய்கிறேன் என சொன்னேன், ஆனால் மறுநாள்வரை யாரும் தனக்கு பணிப்பெண் வேண்டாம், அதிலும் ஏதாவது பிரச்சினை வரும் என பயந்தனர்.


எனக்கு உடனே தனஞ்செய் நினைவுக்கு வந்தார், அவர் திருநெல்வேலியை சேர்ந்தவர், சிறுவயதில் தாயை இழந்தவர் சின்ன வயதில் இருந்தே விடுதியில் தங்கி படித்தவர், பின்னாளில் தந்தை மறுமணம் செய்துகொண்டது பிடிக்காமல், கல்லூரி படிப்பு முடிந்தவுடன், தன் நண்பன் மூலமாக சிங்கபூர் வந்து விட்டார், தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார், எனக்கு ஒரு நண்பர் மூலமாக அறிமுகமான அவர் மிகவும் நல்லவர், அவரிடம் எனக்கு பிடிக்காத ஒன்று வீட்டை குப்பை கூடமாக ஆக்கி வைத்திருப்பார். என்றாவது சனிக்கிழமை இரவுகளில் அவர் வீட்டுக்கு செல்வேன், அங்கு சென்று விடிய விடிய பீர் குடிப்போம். ஒருமுறை என்னிடம் சமைக்க தெரிந்த பையன் இருந்தால் சொல்லுங்கள் என்னுடன் தங்கிகொள்ளட்டும், வாடகை எதுவும் தரவேண்டாம், சமைத்துவைத்த்தால் போதும், வீட்டை கொஞ்சம் சுத்தபடுத்தினால் போதும், கொஞ்சம் சிரமபடுகிற வேலை அனுமதியில் வந்திருக்கும் பையனை அனுப்பி வையுங்கள் என்றார். அவர் சொல்லி மூன்று மாதங்கள் இருக்கும், இருந்தாலும் கேட்டு பார்க்கலாமே என அன்று இரவு தொலைபேசியில் பிடித்தேன்.


அவரோ நான் பையன்தான் கேட்டேன் பெண் என்றால் வேண்டாம் என்றார். நான் பிடிவாதமாக அது வயதான பெண்மணி, ஒரு மாதத்திற்கு மட்டும் இருந்தால் போதும் , இல்லை தற்சமயத்துக்கு மட்டும் உங்கள் வீட்டில் இருக்கட்டும், வேறொரு வீடு கிடைத்தால் நான் அங்கு அனுப்பிவிடுகிறேன், கொஞ்சம் உதவி பண்ணுங்க என்றேன். அரைமனதாக சரி என்றார்.
மறுநாள் கருனாமூர்த்தியிடம் நண்பர் தனஞ்செய் உங்கள் வீட்டிற்கு வந்து அழைத்து போவார் என்றேன். அவரும் நாளை மாலை வரசொல்லுங்கள், நாங்கள் நாளை இரவுதான் கிளம்புகிறோம், அவரும் வந்தால் அப்போதே அழைத்து போகட்டும் என்றார்.


மறுநாள் இரவு மீண்டும் கருணாமூர்த்தி பேசினார், என்ன தம்பி இப்படி பண்ணிட்டிங்க என்றார் கோபமாக, என்னன்னே ஆச்சு அவர் வரலியா? என்றேன். இல்ல தம்பி அவர் வந்துட்டார், ரொம்ப சின்ன பையனா இருக்கார், அதுவும் அவர் மட்டும்தான் தனியாக இருக்காராம்! அவர நம்பி எப்படி அனுப்ப முடியும் என்றார். நானோ அண்ணே, இப்போதைக்கு இரண்டு நாளைக்கு இருக்கட்டும், அதன்பிறகு வேறு வீடு பார்த்து அனுப்பி வைக்கிறேன், மேலும் தனஞ்செய் மிகவும் நல்லபைய்யன் அவரை நம்பி அனுப்புங்கள் என்றேன்
அதற்குள் தம்பி அவர் உங்ககிட்டே பேசனுமாம் என்று தொலைபேசியை அவரிடம் கொடுத்தார். தனன்ஜெய்யும் என்னங்க நீங்க வயசானவங்கன்னு சொன்னீங்க, ஆனா சின்ன பொண்ணா இருக்கு, என்னால கூட்டிட்டு போக முடியாதுங்க என்றார். எனக்கோ குரங்கு அசைத்த ஆப்பின் கதைதான் நினைவுக்கு வந்தது, என்னடா உதவி செய்யபோய் கெட்டபேர் ஆகிவிட்டதே எப்படியாவது இத்தனை சரி செய்ய வேண்டுமே என தனன்ஜெய்யிடம், மன்னிச்சுகங்க நண்பா அவங்க பேரு "அலமேலு"ன்னு சொன்னதும் வயசானவங்களா இருக்கும்ன்னு நம்பிட்டேன், தயவு செஞ்சு நாளை மாலை வரை உங்கள் வீட்டில் இருக்கட்டும் அதன்பிறகு நிச்சயம் மாற்று ஏற்பாடு செய்கிறேன் என உறுதி அளித்தேன்.


அதன்பிறகு விமான நிலையம் சென்று அங்கிருந்து கருணாமூர்த்தி தம்பி உங்கள நம்பித்தான் போறேன். அது சின்னபொன்னு ரொம்ப பாவம் ஒரு பிரச்சினையும் வராம பாத்துக்கணும் என்றார். தனன்ஜெயோ வீட்டிற்கு சென்றவுடன் நண்பா உங்களுக்காதான் அழைச்சிகிட்டு வந்தேன், நாளை மாலை வந்து கூட்டி போய்விடுங்கள், இல்லன்ன அவங்கள வெளில அனுப்பிவிடுவேன், அப்புறம் வருத்தபடாதீங்க என டொக்கென தொலைபேசியை வைத்தார்.


எனக்கோ வடிவேலு மாதிரி ஆகிட்டோமே, உனக்கு வேணுண்டா... இனிமே யாரவது உதவின்னு கேட்டா பண்ணுவியா என என்னையே திட்டிகொண்டேன், அன்று இரவு எனக்கு தூக்கமற்று கழிந்தது. மறுநாள் வேலைக்கு போகவில்லை, அந்த பெண்ணிற்கு ஏதாவது வழி பன்னவேண்டுமே.. முகமறியாத அந்த பெண்ணிற்க்காக நான் அன்று அவ்வளவு அலைந்தேன்.


மாலைவரை ஒருவரும் வேண்டாம் என சொல்லிவிட்டனர், எப்படியாவது தனன்ஜெய்யிடம் சொல்லி இன்னொரு நாள் கேட்க்கவேண்டும் என முடிவு செய்தேன். அன்று இரவு எட்டுமணி வாக்கில் தனன்ஜெயிடம் இருந்து அழைப்பு வந்தது, என்ன சொல்வாரோ என கலவரமாகவே வணக்கங்க எப்படி இருக்கீங்க என்றேன், அவரோ உங்களால் மட்டும்தான் இப்படியெல்லாம் பேச முடியுது, ஏன் வரலை என்றார்? மன்னிச்சுகங்க இன்னைக்கு வேலை அதிகம் எனவே நாளை மாலை நிச்சயம் வந்துவிடுகிறேன் என்றேன். அவரோ பரவயில்லைங்க அவங்க இங்கேயே ஒரு மாதம் இருக்கட்டும், அத சொல்லத்தான் கூப்பிட்டேன் என்றார், எனக்கோ அப்பாடா என்றிருந்து ஆவலை அடக்கமுடியாமல் என்ன ஆச்சுங்க எதனால அப்படி ஒரு முடிவு எடுத்தீங்க என்றேன்.


அவரோ நான் வீட்டுக்கு வந்து பார்த்தா, வீடு மாறி வந்திட்டோம்ன்னு நெனெச்சேன், ஒரு நாளைக்குள்ள ஏன் வீட்டை தலைகீழ மாத்திட்டாங்க, வீடே இப்பதான் பார்க்கிற மாதிரி இருக்கு, சமைச்சு வேற வச்சுருக்காங்க.. சரி இங்கேயே இருக்கட்டும்ன்னு முடிவு செய்தேன், எதற்கும் அவங்களிடம் இங்க இருப்பதில் சங்கடம் இருக்கன்னு கேட்டு சொல்லுங்க என தொலைபேசியை அந்த பெண்ணிடம் கொடுத்தார். அந்த பெண்ணும் நீங்க சொன்னா இருக்கிறேன் என்றது, நானும் பிரச்சினை தீர்ந்ததே என்ற சந்தோசத்தில் நீ அங்கேயே இரும்மா, நான் வரும் சனிக்கிழமை பார்க்கிறேன் என சொன்னேன்.


அன்று எனக்கு தெரிந்தவில்லை நான் அவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக இருந்திருக்கிறேன் என்று. அதனை அடுத்தவாரம் சொல்கிறேன்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி
இணைய இதழில் தொடராக வருகிறது ........

15 ஜூலை, 2009

ராமசாமி அத்தியாயம் - 22

நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் நிர்பந்தகளோடு வாழ வேண்டியிருக்கிறது. நம்முடைய லட்சியங்களை சில சமயங்களில் முகவரி படத்தில் வரும் அஜித் மாதிரி ஒதுக்கி வைத்துவிட்டு வாழ வேண்டி வந்துவிடுகிறது. எல்லா சமயங்களிலும் நம் லட்சியத்தை தூக்கி பிடிக்க முடிவதில்லை. இருபத்தியொரு வயதில் நாம் காணும் கனவுகள் மெல்ல மெல்ல காலம் கடந்தபின் வெறும் கனவாகவே ஆகிவிடுகிறது.

எனக்கு மிகவும் பிடித்தமான அண்ணன் பாலா அவர்களின் வாழ்க்கை இப்படித்தான் திசை மாறிபோனது. சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என சென்னை வந்த அவர் அதன் பல்வேறு சிக்கல்களை கண்டபின் இது நமக்கு தற்சமயம் ஒத்துவராது என மீண்டும் ஊருக்கு வந்துவிட்டார், சிலருக்கு அதிர்ஷ்டம் பிறக்கும்போதே வாய்க்கும் அப்படி ஒரு சிலரில் அண்ணனும் ஒருவர், எனக்கு தெரிந்தவரை மிகவும் பாசமான அம்மா, அப்பா அவருக்கு கிடைத்தனர், தம்பி சாமிதுரை சற்று பிடிவாதமானவர் ஆனால் அவரும் மிகுந்த பாசக்காரர், இப்படி ஒரு அற்புதமான குடும்பத்தில் பிறந்துவிட்டு தன் லட்சியத்தை குடும்பத்திற்காக அவர் விட்டு கொடுத்ததால் எனக்கு இப்போதும் அவர் மேல் அளவு கடந்த மரியாதை உண்டு.

இடையில் சிங்கபூர் வந்தார், அங்கு தன் நண்பரின் சிபாரிசில் வந்ததால் தன் நண்பரின் பெயர் கெட்டுபோய்விடக்கூடாது என்பதற்காகவே பிடிக்காமலே அங்கு வேலை பார்த்தார். உலக அறிவு அதிகம் அறிந்தவர் ஒரு சின்ன கிராமத்திற்குள் சென்று முடங்கிவிட்டரே என்ற வருத்தம் இப்போதும் எனக்கு உண்டு, மேலும் அவரை சென்னையிலேயே என்னுடன் தங்கிவிடசொன்னேன் ஆனால் ஊருக்கு சென்றுவிட்டார், அவர் என்னுடன் இருந்திருந்தால் எனக்கு இத்தனை இழப்புகள் ஏற்பட்டிருக்காது என்ற வருத்தம் எனக்கு உண்டு.

அவர் அடிக்கடி சொல்வார் தன்னை யாராலும் ஜெயிக்கமுடியாது என்று, ஏன் அண்ணா என்று கேட்டால் தான் எப்போதும் தோற்றுபோக தயாராயிருக்கிறேன் என்பார். ஆனால் அவரை நிறைய நபர்கள் எதிரியாக நினைப்பது உண்டு, ஆனால் அவர் யாரையும் எதிரியாக நினைத்து கூட பார்க்க மாட்டார், அவருக்கு கோபம் வந்து நான் பார்த்தது இல்லை.

அவருடைய தம்பி குமார் என்னுடன் சென்னையில் இருக்கிறார், தன் நேர்மைக்காகவே நிறைய விசயங்களை இழந்தவர். தன் குடும்பத்தின் பெயர்கெட்டுவிடக்கூடாதே என இப்போதும் தன் நேர்மையை காப்பாற்றுபவர், ஆனால் இவர் மீதும் எனக்கு வருத்தம் உண்டு சமூகத்தின் கட்டமைப்பை நன்றாக உணர்ந்தபின்னும் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்.

அண்ணன் பாலாவுக்காக மற்றும் நண்பன் வர்கோத்தமனுக்காக நிச்சயம் நான் படம் தயாரிக்கலாம் என்றிருக்கிறேன், அனேகமாக அடுத்த வருட நடுவில் அதற்க்கான அறிவிப்பு வரலாம், எனக்கும் படம் இயக்குவதில் ஆர்வம் உண்டு என்றாலும் முதலில் நண்பர்களுக்கு வாய்ப்பு கொடுத்தபின் அடுத்து நான் இயக்குவேன், அது நிச்சயம் நல்ல தரமான கலை படைப்பாக இருக்கும்.

அதில் நண்பர் சிங்கப்பூர் துரைராசுக்கும் நல்ல வேடம் கொடுக்கவேண்டும், அவரும் கிட்டத்தட்ட பதினைந்து வருடமாக திரையுலகில் ஒரு நல்ல கேரக்டருக்காக முயற்சி செய்கிறார், ஆனால் இப்போதுதான் "நான் அவனில்லை" இரண்டாம் பாகத்தில் ஒரு சிறிய ரோல் கிடைத்திருக்கிறது, ஏற்கனவே "தோட்டா" வில் நல்ல ரோல் செய்திருந்தார் ஆனால் அது நிறைய பேருக்கு தெரியவில்லை

எனவே நானும் நண்பர் சிங்கப்பூர் ராஜேந்திரன் இருவரும் சேர்ந்து படம் தயாரிக்கலாம் என்றிருக்கிறோம். நல்ல தரமான படங்களை நிச்சயம் தருவோம்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

ராமசாமி அத்தியாயம் -21

கடந்த மூன்று வாரங்களாக சிங்கபூரில் இருந்தேன். சிங்கபூர் எனக்கு சொந்த ஊர் மாதிரி அங்கு சென்றால் எனக்கு எந்த செலவும் இல்லை. பயண செலவுகளை தவிர்த்து அனைத்தும் நண்பர்கள் பார்த்துகொள்வார்கள். அங்கு கணேசன் அண்ணன் வீட்டில்தான் தங்குவேன். என்னை பொறுத்தவரை அது என் சொந்த அண்ணன் வீடு, அங்கு எப்போது சென்றாலும் நான் அங்குதான் தங்குவேன். கணேசன் அண்ணனின் பெண் சுஜனி எனக்கு வளர்ப்பு குழந்தை மாதிரி ஒன்றரை வயதில் இருந்து அதனை நான் பார்த்திருக்கிறேன். இப்போது மிகசிறந்த அறிவும், அன்பும் கொண்ட சுஜனி இப்போதும் எனக்கு நான்கு வயது குழந்தை மாதிரிதான். அண்ணனும் அண்ணியும் என் மேல் கொண்ட அன்பு அளவிட முடியாத ஒன்று. நான் சிரமப்பட்ட காலங்களில் இவர்களின் அன்பு மறக்கமுடியாதது. இந்தமுறை தினேஷ், மற்றும் தென்றல் இருவரின் அறிமுகம் அண்ணன் வீட்டில் கிடைத்தது, தம்பிகள் இருவருக்கும் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.

இந்தமுறை கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளியில் சிங்கப்பூர் சென்றேன். அங்கு தற்போது என் பழைய நிறைய நண்பர்கள் ஊருக்கு வந்துவிட்டதால் சற்று போரடிக்க செய்தது, நண்பரும் நடிகருமான சிங்கப்பூர் துரைராஜ் "நான் அவனில்லை" இரண்டாம் பாகத்தில் நடிக்க ஊருக்கு வந்துவிட்டார், அதனால் அவரும் இல்லாததால் சற்று சீக்கிரமே ஊருக்கு வந்துவிட்டேன்.

சிங்கப்பூர் வழக்கமான ஊராக இல்லை, இந்தமுறை வெயில் போட்டு தாக்கியது, வியாபாரம் எங்கும் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. மலேசியாவுடன் ஒப்பிட்டால் சிங்கப்பூர் இந்த பொருளாதார பின்னைடைவால் சற்று பாதிக்கபட்டுதான் உள்ளது, அதனால் சிங்கபூரில் ஒரு உணவகம் துவக்கும் முடிவில்தான் சென்றோம், ஆனால் மலேசியாவில் துவக்கலாம் என முடிவு செய்தோம்.

மலேசியா சற்று மாறியிருக்கிறது அதன் சற்று வெகுளித்தனம் கலந்த முரட்டு மக்கள் பணத்தின் தேவையும், வெளிநாட்டு மக்களின் அருமையும் உணர்ந்து நிறைய மாறியிருக்கின்றனர். அவர்கள் முன்பெல்லாம் ஏதாவது கேட்டால் அலட்சியமாக பதில் சொல்வார்கள், ஆனால் இப்போது சிங்கபூரர்கள் மாதிரி பணிவாக பேசுகிறார்கள்.

நான் ஒவ்வொரு முறை தோற்கும்போதும் சிங்கபூர்தான் ஏதாவது ஒரு வழியில் என் அடுத்த பாதையை காட்டும், அவ்வகையில் இந்தமுறை சிங்கபூரின் "Harbridge Edu College" ன் இந்திய முகவராக ஒப்பந்தம் போட்டோம், ஒரு வகையில் அதன் இந்திய பிரநிதி நான்தான், எனவே இனி சிங்கபூரில் படிக்கவேண்டும் எனில் என்னை அனுகலாம்.

சிங்கப்பூரில் என் அனுபவங்கள் மிகவும் அற்புதமானவை அதனை இப்போது என்னால் மிக விபரமாக எழுத முடியவில்லை, இந்த தொடரை புத்தகமாக வெளியிட என் நண்பரும் அண்ணனும் ஆன காந்தி அண்ணன் அனுமதி கேட்டுள்ளார், இந்த தொடர் முடிந்தவுடன் தமிழ்குறிஞ்சி அனுமதியுடன் நிறைய பகுதிகளை மீண்டும் திருத்தி வெளியிடலாம் என்றிருக்கிறேன், ஏனென்றால் இந்த தொகுப்பில் நான் சொன்னவை இருபது சதவீதம் மட்டுமே மீதம் என்பது சதவீதம் நாகரீகம் கருதி, மற்றவர் மனது புண்படக்கூடாது என்பதற்காக எழுதவில்லை. அவற்றில் முடிந்தவரை பலவற்றை சேர்க்க முயற்சி செய்கிறேன்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

6 ஜூலை, 2009

SSR பங்கஜம் - நாடோடிகள்

சமீபத்தில் வடபழனியில் உள்ள SSR பங்கஜம் தியட்டரில் "நாடோடிகள்" படம் பார்க்க நான், நண்பர் சிங்கப்பூர் துரைராஜ் மற்றும் நண்பன் வர்கோத்தமன் மூவரும் சென்றோம். படத்தை பற்றி சொல்வதற்கு முன் தியட்டரை பற்றி நிச்சயம் சொல்லவேண்டும்.

இந்த தியட்டர் லட்சிய நடிகர் S.S. ராஜேந்திரனுக்கு சொந்தமானது. உள்ளே போகும் வழியில் முன்பக்கம் கடை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். தியட்டருக்கு உள்ளே நுழைந்தபின் மூவரும் பாத்ரூம் சென்றோம், அங்கு எங்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது, கழிவரையா அது. இலவச கழிப்பிடங்கள் போல சுத்தம் செய்யபடாமல் கிடந்தது, மேலும் பாத்ரூமில் தண்ணியே வரவில்லை. டிக்கெட் கட்டணம் ஐம்பது ரூபாய் வாங்கிவிட்டு, பாத்ரூமே இப்படி என்றால்?.

தியட்டர் உள்ளே மிக நெருக்கமாக இருக்கைகள் அமைக்கப்பட்டு இரண்டு ஓரங்கள் வழியாக மட்டும் உள்ளே சென்று அமரவேண்டும், நடுவில் வழி ஒருஏண்டா நடுவில் சீட் கேட்டு வாங்கினோம் என நொந்துகொண்டோம். ஒருவழியாக படம் ஆரம்பித்தது. ஆரம்பித்ததில் இருந்து இடைவேளை வரை படம் விறுவிறுப்பாக போனதால் A/C அணைக்கப்பட்டது தெரியவில்லை.

இடைவேளைக்கு பின் படம் சுமார்தான் இயக்குனர் சமுத்திரகனி பல முடிவுகளை தந்திருக்கிறார். காதலை சேர்த்து வைத்தவர்களின் இழப்புகள் மிகுந்த சோகம், சேர்த்து வைக்கப்பட்ட காதலர்கள் பிரிந்துவிட்டனர் என்பதோடு படத்தை முடித்திருக்கலாம். மேலும் இறுதியில் மீண்டும் தொலைபேசியில் காதலை சேர்த்து வைப்பதாக சொல்லும் ஓரு நபருடன் பாதிக்கப்பட்டவர்களும் சேர்கிறார்கள் என்பது அபத்தம்.

எப்படா படம் முடியும் என்றிருந்தது, இருந்தாலும் திரைக்கதை முற்பாதியில் கச்சிதம், மேலும் சுந்தர் சி பாபுவின் இசை இரைச்சல் ரகம், ஒளிப்பதிவு மிக அருமை. அனைவருமே நன்றாக நடித்திருக்கின்றனர். ஒரு நல்ல படத்தை தர முயற்சி செய்த சமுத்திரகனிக்கு வாழ்த்துகள்.

படம் முடிந்தபின் தியட்டரைவிட்டு வெளியே வரமுடியவில்லை, காரணம் தியேட்டரின் முன் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். ச்சர் க்கு, கலைஞர் உடன் ஆனா நெருக்கத்தை வைத்து, அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர் என நினைக்கிறேன். இப்படி இருந்தால் என்றாவது தீ விபத்து ஏற்பட்டால் யாருமே தப்பிக்க முடியாது.

எனவே "அலட்சிய நடிகர் SSR இன் SSR பங்கஜம் தியட்டரில் படம் பார்ப்பதை தவிர்த்துவிடுங்கள்.

ராமசாமி அத்தியாயம் - 20

நான் கம்பெனியை விட்டு பிரிந்தபின் என்னை சமாதானபடுத்தும் முயற்ச்சிகள் நடந்தன அப்போதும் கண்மணி என்னிடம் ரமேஷ் சொன்னதையே நம்பி சரிவர பேசவில்லை. அதன் அப்பாவித்தனத்தை எண்ணி இன்னும் நான் வருந்துகிறேன். ஏனென்றால் எனக்கும் ஒரு குற்ற உணர்ச்சி உண்டு, ரமேஷை கண்மணியிடம் நல்லவன் என அறிமுகப்படுத்திய குற்ற உணர்ச்சிதான் அது. என்றாவது ஒருநாள் உண்மை அறிந்து என்னிடம் பேசும் என இப்போதும் நம்புகிறேன்.

கம்பெனியை விட்டு பிரிந்தபின் இன்றுவரை எனக்கான பங்குத்தொகை வந்து சேரவில்லை, அதே சமயம் கம்பெனிக்காக நான் வாங்கிகொடுத்த கடன் தொகையை மட்டும் கேட்டேன். அதன் முதல் தவணையாக ஒரு இலட்ச்சம் செட்டில் செய்ய வந்த ரமேஷ் நடந்ததை எல்லாம் மறந்துவிடுங்கள் இப்போதும் நாம் ஒன்றாக இருக்கலாம் என்றார். நான் மறுத்துவிட்டு கம்பெனிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என எழுதிகொடுத்தேன். பணத்தை கொடுத்துவிட்டு மேற்கொண்டு என்ன செய்யபோகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் சிங்கபூர் சென்று ஐஸ்க்யுப் மெசின் வாங்கபோகிறேன் என்று சொன்னேன்.

அதனை வாங்கி சிங்கபூரில் நம் ஆபீஸில் வைத்துவிடுங்கள், நான் கொண்டுவந்து தருகிறேன் என்றார். நான் எதற்கு உங்களுக்கு வீண் சிரமம் என்றேன், இல்லை தம்பி நீங்கள் எனக்கு எனக்கு அதற்காக பணம் எதுவும் கொடுக்கவேண்டாம், உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் கழித்து கொள்ளலாம் என்றார், நானும் அவர் வலை விரிப்பதை அறியாமல் சரி அண்ணா சிங்கபூர் சென்றவுடன் உங்களுக்கு போன் செய்கிறேன் என்றேன்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் நான் வாங்கிய கடன் ரூபாய் நான்கரை இலட்சத்துடன் சிங்கபூர் வந்து மெசின் வாங்கிவிட்டு போன் செய்தேன். இந்த வேலையில் நண்பர் ஜமீல் எனக்காக தன் கால் வலியுடன் அலைந்து திரிந்ததை மறக்க முடியாது.

ரமேஷ் என்னிடம் நீங்கள் ஊருக்கு வந்துவிடுங்கள் நான் ஏற்றி அனுப்பசொல்கிறேன் என்றார், நானும் ஊருக்கு வந்துவிட்டேன் , வந்தபின் சிங்கபூரில் ஆகும் செலவு மற்றும் கப்பல் செலவை மட்டும் கொடுக்க முடியுமா என்று கேட்டார், நானும் சரியென்று மாப்பிள்ளை சார்லசிடம் சொல்லி கொடுக்க சொன்னேன், கண்டைனரும் நண்பர்களை விட்டு ஏற்றி அனுப்ப சொன்னேன்.

ஒரு வாரம் கழித்து கண்டைனர் சென்னை வந்து விட்டது டாக்ஸ் கட்ட வேண்டும் என முப்பதாயிரம் பணம் கேட்டார், பணம் குறைவாக உள்ளது என்று சொல்லி பதினைந்தாயிரம் மட்டும் கொடுத்தேன், அவ்வளவுதான் அதன்பிறகு இன்றைக்கு , நாளைக்கு, அடுத்தவாரம் என நாட்களை கடத்த ஆரம்பித்தார், இன்றுடன் ஒரு வருடம் நான்கு மாதங்கள் ஆகிறது இன்னும் பொருளை கொடுக்கவில்லை, நான் வங்கியில் வாங்கிய பணத்திற்கு மாதம் பதினேட்டயிரத்து ஐந்நூறு ரூபாய் பணம் கட்டிவருகிறேன்.

ரமேஷும் தன் போன் நம்பரை அடிக்கடி மாற்றிக்கொண்டு சென்னையில்தான் எங்கோ இருக்கிறான். இதில் எனக்கு மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால் எனக்கு வேண்டிய சிலரே அவனுக்கு உதவுவதுதான்.

நான் எத்தனையோ பிரச்சினைகளை கடந்து வந்துவிட்டேன், அதைப்போல இதனையும் கடப்பேன், இப்போதும் என்னுடைய நல்ல நண்பர்களால் நான் நன்றாகவே இருக்கிறேன், ஆனால் ரமேஷ் தலைமறைவாக இருக்கிறான். இன்னும் எத்தனை நாளுக்கு அவனால் அதனை செய்ய முடியும், நான் மட்டும் அல்ல, ஒரு அப்பாவி மனிதன் ஒருவரிடம் வட்டி தருகிறேன் என்று சொல்லி மூன்று இலட்சம், சிங்கபூரில் ரவி என்பவருக்கு பத்தாயிரம் சிங்கபூர் வெள்ளி என அவன் ஏமாற்றியவர்களின் பட்டியல் நீளுகிறது, இது இப்போதைய நிலைதான் இதற்க்கு முன் உள்ள விசயங்கள் நிறைய,.

எனக்கு உண்மையிலேயே உள்ள வருத்தம் என்னவென்றால் , ஒரு அப்பாவி பெண் கண்மணியை அவன் ஏமாற்றாமல் இருக்க வேண்டும் என்பதுதான்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

ராமசாமி அத்தியாயம் - 19

நான் ரமேஷ் பற்றி சொல்லுமுன் என் தோழி கண்மணியை பற்றி உங்களிடம் சொல்லவேண்டும். எனக்கு கிடைத்த அற்புதமான நட்புகளுள் என் வாழ்நாள் மறக்கமுடியாத நட்புகளில் கண்மணியும் ஒருவர். மிகுந்த அறிவாளி, கவிஞர், இரக்க மனப்பான்மை மிக்கவர், நான் சிங்கபூரில் இருந்தபோது தமிழ்முரசில் கவிதைகள் எழுதுவேன். அப்போது கண்மணியும் கவிதைகள் எழுதுவார், ஆனால் நாங்கள் இருவரும் சந்தித்தது கிடையது. அப்போது அண்ணன் பாலா ஒரு பட்டிமன்றத்தில் கலந்துகொள்ள செல்ல அங்கு கண்மணி என்னைப்பற்றி விசாரிக்க, பாலா அண்ணன் என்னிடம் வந்து உங்களை ஒருவர் மிகவும் விசாரித்தார் என்று சொன்னார். அப்புறம் தொலைபேசியில் பேசிகொண்டதில் ஒரு நல்ல தோழியை பெற்ற திருப்தி எனக்கு. அப்போது நான் முன் அத்தியாயங்களில் வந்த நண்பன் ராஜாவுடன் இருந்தேன், அவனை ஏனோ கண்மணிக்கு பிடிக்கவில்லை, அதனால் ஒரே ஒருமுறை மட்டும் அண்ணன் பாலாவுடன் அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்கிறேன்.

அதன்பிறகு நான் ஊருக்கு வந்து ராஜாவுடன் பிரிவு ஏற்பட்டு, திருமணம் முடிந்து, வீட்டை விட்டு வெளியே வந்து மீண்டும் சிங்கப்பூர் வந்தபோது, கண்மணியுடன் மீண்டும் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நானும் அப்போது மற்றவர்களுடன் ஏற்பட்ட மிகுந்த மனகசப்பால் யாரிடமும் பேசாமல் இருந்தேன். கண்மணியுடன் மட்டும் ஏன் வருத்தங்களை பகிர்ந்துகொள்வேன், அப்போது எனக்கு எல்லா நாட்களும் வேலை அதுவும் பனிரெண்டு மணிநேர வேலை அதனால் போனில் மட்டும் பேசுவோம். ஒரு வருடம் கடந்தபின் என் கடன்களை அடைத்தபின் நான் மீண்டும் ஊருக்கு கிளம்பு தயாரானேன். அப்போது மரியாதை நிமித்தமாக கண்மணி வீட்டிற்கு சென்றேன். அங்கு ஊருக்கு சென்று என்ன செய்யப்போகிறீர்கள் என என்னைகேட்க்க, நான் சிறிய அளவில் ஒரு உணவகம் அல்லது பரிசு பொருட்கள் கடை ஒன்று வைக்கபோகிறேன் என சொன்னேன், அதற்க்கு அதுவும் பங்குதாரர் ஆக வருகிறேன் என்றது, ஆனால் ராஜாவுடன் ஏற்பட்ட மனவருத்தம் மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே நான் மறுத்தேன், ஆனால் பிடிவாதமாக தானும் பங்குதாரர் ஆவேன் என்றது, அப்போது அதன் பிரச்சினைகளை நான் அறிவேன் என்பதால் நான் மிகுந்த தயக்கத்துக்கு பின் சம்மதித்தேன். அப்போதும் நமக்குள் ஏதாவது பிரச்சினை வந்தால் நான் அப்படியே போய்விடுவேன் என்றேன். அதற்க்கு அது தனக்கென்று ஒரு நியாயம் இருக்கிறது, உங்களுக்கு சேர வேண்டிய பங்கை நான் கொடுத்துவிடுவேன் என்றது.

சொன்னபடி ஊர் வந்து ட்ரவல்ஸ் ஆரம்பித்தேன். நன்றாக போய்க்கொண்டிருந்தது, அந்த நேரத்தில் வந்து சேர்ந்தவன்தான் ரமேஷ், இவன் வந்தவுடன் இவன் குணத்தை அறியாமல் இவனை என் சொந்த அண்ணனாக நினைத்து பழகினேன். இவன்தான் உனக்கு ட்ரவல்ஸ் பிசினஸ் வேண்டாம். எக்ஸ்போர்ட் செய்யலாம் என் சொல்லி ஆரம்பித்தான். நானும் இதைப்பற்றி முன்பு ஒரு அத்தியாயத்தில் சுருக்கமாக சொல்லியிருக்கிறேன். அதன்பின் இவனை சிங்கப்பூர் அழைத்து வந்து தோழி கண்மணியிடம் அறிமுகப்படுத்திவைத்தேன். அதன்பின் நாங்கள் மலேசியா சென்று தேங்காய் வாங்கி மொரிசியஸ் அனுப்பினோம்.

கண்மணி வீட்டில் சுத்த சைவம், ரமேஷும் சைவமாக மாறினான், மேலும் அடிப்படையில் கண்மணி மிகுந்த இரக்க குணம் கொண்டது. ரமேஷ் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தான், செவ்வாயன்று சாப்பிடமாட்டான், இவன் மேல் மிகுந்த இறக்கம் கொண்டு அவனை தன் சொந்த சகோதரனாக மதித்தது, அதை பயன்படுத்திக்கொண்டு தன்னை இத்தனை வருடம் காப்பாத்திய நெடுவாக்கோட்டை மாரிமுத்து அண்ணன் குடும்பத்திற்கு பத்து பைசா கூட செய்யாத ரமேஷ், கண்மணிக்கு, அதன் மாமியாருக்கு என்னவெல்லாம் வேண்டும் எனக்கேட்டு அதனை ஊரில் அவனே சென்று வாங்கி அவர்களுக்கு அனுப்பி வைப்பான், இடையில் நான் சிங்கபூரில் இருந்தபோது அவர்களுக்கு காய்கறி முதற்கொண்டு ஊரில் இருந்து வாங்கி அனுப்பிவைத்திருக்கிறான், எனக்கு தெரிந்தால் நான் திட்டுவேன் என்று அவர்களிடம் சொல்லி எனக்கு தெரியாமல் வாங்கி செல்லும்படி அவர்களிடம் சொல்லியிருக்கிறான், அவர்களும் அப்படியே செய்ய மெல்ல அவர்களை தன் வசம் மாற்றி விட்டான்.

அப்போது நான் கண்மணியை மிகுந்த கிண்டல் செய்வேன், பொதுவாகவே அதன் கணவரைத்தான் நான் தொழில் செய்ய கொண்டு வரவேண்டும் என விரும்பினேன், அதனால் கண்மணி எது சொன்னாலும் என்னை நன்றாக புரிந்துகொண்டவர் என்ற கோணத்தில் நான் கிண்டல் செய்வேன், சிங்கபூரில் அலுவலகம் திறந்தபோது அங்கு கணபதி பூஜை செய்யவேண்டும் என சொன்னது, ஆனால் நான் மறுத்துவிட்டேன். எனக்கு தெரியாமலே ஊரில் இருந்து ரமேஷ் சொல்லி பூஜைக்கு நாள் குறித்து சாமி படங்களை அனுப்பிவைக்க அதற்க்கு நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தேன், அதனால் கண்மணிக்கும் எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு இடைவெளி விழுந்தது, இந்த இடைவெளியை பயன்படுத்தி ரமேஷ் என்னைப்பற்றி போட்டுகொடுக்க, கண்மணி நீங்கள் நண்பர்களுடன் பீர் குடிப்பீங்கலாமே என என்னை ஒருநாள் கேட்டது, அதற்கு நான் ஆமாம் அது என் சொந்த விஷயம் என்றேன்.
அது மிக பெரிய பிரச்சினை ஆகி எங்களுக்குள் அஆன இடைவெளி இன்னும் பெரிதானது. அதன்பின் நடந்தவை அடுத்த அத்தியாயத்தில்,
ஆனால் நமக்குள் எந்த பிரச்சினை என்றாலும், உனக்கு உண்டான பங்கு உன்னிடம் வந்து சேரும் என்ற தோழி கண்மணி, அந்த பங்கு பற்றி இன்றுவரை பேசவில்லை.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது

11 ஜூன், 2009

ராமசாமி அத்தியாயம் - 18

இதில் மிகப்பெரிய வேதனை என்னவென்றால், நண்பன் ராஜா இந்த சமயத்தில் நடந்துகொண்ட விதம்தான், என் திருமணத்திற்காக நண்பர்கள் அனுப்பிய பணம், வீராவின் மருத்துவ செலவிற்கே போதாமல் எல்லோரிடமும் கடன் வாங்கிக்கொண்டிருந்தேன். அப்போது சென்னையில் இருந்த சம்பத்திடம் கம்பெனி அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என கேட்டேன். அவன் பதினெட்டாயிரம் மட்டுமே இருக்கிறது என்றான். அதனை உடனே எடுக்கசொன்னேன், அவன் பதினெட்டாயிரத்தில் டெலிபோன் பில் மூவாயிரம் கட்டிவிட்டு மீதம் எடுத்துவந்தான், அப்போது தஞ்சாவூரில் ராஜாவும், என் அத்தான் துரையும் இருந்தனர், தஞ்சை வந்த அவனிடம் பணத்தை ராஜாவிடம் கொடுத்து அத்தானிடம் கொடுக்க சொன்னேன்.

கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் ம்ருத்துவ செலவுக்கே ஆனது. மேற்கொண்டு மற்ற செலவுகள் என பார்க்கிற அனைவரிடத்தும் கடன் வாங்கினேன். ஆனால் கடைசிவரை ராஜா பணத்துக்கு என்ன பண்றே, இவ்வளவு பணம் செலவு ஆகுதேன்னு ஒரு வார்த்தை கேட்கல.

பிப்ரவரி எட்டாம் தேதி வீரா இறந்து போனான். மருத்துவமனையில் போஸ்ட்மார்டம் செய்து எடுத்து போங்கள், அப்போதுதான் அவனுக்கு காப்பீடு கிடைக்கும் என்றனர். அதற்க்கு வக்கீலாக கலைவாணனை ராஜாவே ஏற்பாடு செய்தான். அவர் நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன் என போய்விட்டார். ஆனால் அதன்பிறகு நடந்தவை மிகவும் கசப்பானவை, என் நண்பர்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் மிக கட்ச்சிதமாக முடிக்கும் எனக்கு, என் பிரச்சினைகளை முடிக்க ஆளில்லை. எல்லோரும் எங்களுக்கு உதவுவதாக சொல்லிக்கொண்டு போஸ்ட் மார்ட்டத்தை செய்வதற்கு ஏற்பாடு செய்யாமல் காலம் கடந்தது, வெள்ளிகிழமை இறந்த அவனுக்கு ஞாயிற்றுகிழமைதான் போஸ்ட் மார்டம் நடந்தது.

எல்லாம் முடிந்துபோனது அத்தான் மொத்த செலவுக்கான கணக்கு கொடுத்தார், அதை வாங்கி பார்த்தபோது என்னைப்பற்றி சரியாக அறியாதவர்கள் கூட பணம் கொடுத்ததை அறிந்து மனதிற்குள் அழுதேன். அப்போது அத்தானிடம் ராஜாவிடம் கொடுத்து பதினைந்தாயிரம் கொடுக்கசொன்னேனே அதை எழுதவில்லையா என்றேன். அவரோ இல்லையே அவர் என்னிடம் எந்த பணமும் கொடுக்கவில்லை மேலும் அவருக்கே செலவுக்கே என்னிடம்தான் பணம் வாங்கிக்கொண்டார் என்றார். அதைக்கேட்டதும் என் கண்களில் கண்ணீர் கொட்டியது, என்ன ஒரு நட்பு, நான் துன்பத்தில் கிடந்தது உழல அவன் அதைப்பற்றி எதுவுமே கவலைப்படாமல் இருந்திருக்கிறான், இனியும் இப்படிப்பட்ட நட்பு தேவையில்லை என முடிவு செய்தேன். அப்போது வீட்டிற்கு வந்த தங்கை சுதாவிடம் அவனுக்கும் எனக்கும் எல்லாம் முடிந்துவிட்டது என சொல்லசொன்னேன்.

தங்கை சுதா என்னிடம் என்ன காரணம் என துருவித்துருவி கேட்டபோதும், காரணத்தை பின்னால் சொல்கிறேன்.இப்போது அவனிடம் சென்று இதை மட்டும் சொல் என அனுப்பிவைத்தேன். சுதா அவனிடம் சொன்னதற்கு அழுதிருக்கிறான், என்னை தப்பா புரிஞ்சுகிட்டான் என சொல்லியிருக்கிறான். சுதா நீ போய் அண்ணனிடம் பேசு, அண்ணன் கோபத்தில்கூட சொல்லியிருக்கலாம் நீ வந்து பேசினால் சரியாகும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் அவனோ இண்ணைக்குவரை என்னிடம் வந்து பேசவில்லை.

நானும் இன்றுவரை என் வீட்டில் அவனைப்பற்றி எதுவுமே சொன்னதில்லை. அவன் தந்தை என் வீட்டிற்கு அடிக்கடி வருவார், அப்பாவை அவர்தான் வெளியில் கூட்டிசெல்வார், வீராவின் காப்பீடு மீதான வாழ்க்கை அவர்தான் விசாரித்துவருகிறார், ஆனால் அவன் இறந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது இன்றுவரை வழக்கு முடியவில்லை, அப்படி ஒரு வக்கீலிடம்தான் வழக்கு இருக்கிறது.

வீரா இறந்து ஆறு மாதம் ஆனது. நான் வீட்டிலேயே இருந்தேன் எங்கும் போவதில்லை. இடைப்பட்ட காலங்களில் அவன் என் வீட்டிற்கு வருவான் எல்லோரிடமும் பேசுவான், நாங்கள் இருவர் மட்டும் பேசிகொள்வதில்லை. அப்போது அவனுக்கு திருமணம் நிச்சயம் ஆனது ஜூலை மாதம் பதினைந்தாம் தேதி அவன் திருமணம் முடிவு செய்யப்பட்டு பத்திரிகையில் என் பெயரும் மணமகன் வீட்டாராக போட்டிருந்தது, இதற்கிடையில் அவன் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னதாக ஒரு நாள் சின்ன அத்தான் திடிரென வீட்டிற்கு வந்து என் திருமணத்தை உடனே நடத்த வேண்டும், அதுவும் ஒரு கோவிலில் வைத்தாவது நடத்தவேண்டும் என்றார். நான் ஒரு வருடம் போகட்டும் என்றேன். ஆனால் எல்லோரும் சொல்லிவைத்தமாதிரி பிடிவாதமாக இருந்தனர். நானும் அன்றைய சூழலில் மறுக்கவில்லை. அந்த திருமணம் முடிவு செய்யப்பட்டு எப்படி நடந்தது என்பதை ஏற்கனவே எழுதி விட்டேன்.

அவன் திருமணத்திற்கு மூன்று நாள் முன்னதாக வெறும் ஆயிரத்து இருநூறு ரூபாய் செலவில் என் திருமணம் நடந்தது. ஆனால் அவன் திருமணம் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் செலவில் வெகு விமரிசையாக நடந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். நான் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அதன் பிறகு இன்றுவரை அவன் வீட்டு வாசலை மிதிக்கவில்லை. மேற்க்கொண்டு நாங்கள் இருவரும் சேர்ந்து இருந்தபோது வாங்கிய கடனை அவனுக்கு தெரியாது என சொன்னதால் அதையும் நான்தான் அடைத்தேன்.

இதில் எனக்கு உண்மையான இழப்பு என்னவென்றால் ராஜாவின் தத்தா, பாட்டி இருவரின் இழப்புதான், அவர்கள் என்னை மிகவும் நேசித்தனர். மேலும் ராஜாவின் அம்மா என்னையும் தன் சொந்த பிள்ளையாகத்தான் பார்த்தார், ராஜாவின் சகோதரிகள் இருவரும் என்னை தன் சொந்த சகோதரனாகத்தான் பார்த்தனர். அதிலும் மூத்த அக்கா மின்னல்கொடியும், அதன் கணவரும் என்மேல் எல்லை கடந்த அன்பை வைத்திருந்தனர், பெரிய அக்காவின் கணவர் சுந்தர் என்னைத்தான் சொந்த மச்சினன்போல் நடத்தினார்.

ராஜாவை பிரியவேண்டும் என முடிவு செய்தபோது இவர்களைத்தான் நான் நினைத்து அழுதேன். என் மேல் மிகுந்த பாசம் வைத்தவர்கள், அவர்கள் கையால் சாப்பிட்டு இருக்கிறேன், அதிலும் பெரிய அக்கா உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கும், நான் வீட்டிற்கு போனால், அப்போதுகூட தன் கையால் சமைத்து கொடுக்கும், நான் எவ்வளவு மறுத்தாலும் ரெண்டே ரெண்டு தோசை மட்டும் சாப்பிட்டு போடா என கெஞ்சும். என்ன செய்வது அவர்களிடம் நான் தொடர்ந்து பாசம் வைத்தால் அது ராஜாவைத்தான் பாதிக்கும், ஏற்கனவே அவர்கள் அனைவரும் ராஜாவின் மீது வருத்தமாக இருந்தனர், எங்கள் பிரச்சினையால் உண்மை தெரிந்து அவனை அவர்கள் மேலும் வெறுத்துவிடகூடாது என்பதற்காகவே நான் என் மனதை திடபடுத்திக்கொண்டு அவர்களிடமும் பேசாமல் தவிர்த்தேன். ஆனாலும் இன்றுவரை என் மனதில் அவர்களுக்கென்று தனியே இடம் உண்டு.

அப்புறம் என் வீட்டில் எனக்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நான் சிங்கப்பூர் சென்றுவிட்டேன். இடையில் காந்தி அண்ணனுக்கு கொடுக்கவேண்டிய பணத்திற்க்காக ஒருமுறை சிங்கபூரில் பஞ்சாயத்து வைத்தார். அப்போது அவரிடம் நானே தந்து விடுகிறேன் என சொன்னேன். ஆனால் அவரோ அது நீ கொடுக்க வேண்டிய பணமல்ல, ராஜா வீட்டிற்காக ராஜா கொடுக்க சொன்னது, அப்போது நீயும் கூட இருந்தாய், அதனால்தான் உன்னையும் கூப்பிடுகிறேன். இல்லையென்றால் நானே அவனிடம் வாங்கிக்கொள்வேன், ஒருமுறை நீ வந்து உட்கார் நடந்ததை பேசுவோம் அவன் மறுத்தால் நீ சொல்லலாம் என்றார். அப்போது அவன் வந்திருந்தான் சம்பிராயமாக விசாரித்துக்கொண்டோம். அப்புறம் அவன் பணத்திற்கு ஒத்துகொண்டான். ஆனால் கடைசியில் காந்தி அண்ணனுக்கு அவன் பணத்தை கொடுக்கவில்லை. காந்தி அண்ணன் எனிடம் அவருக்கு ஒரு டிக்கெட் கடனாக போடசொன்னார். ஆனால் இன்றுவரை அந்த டிக்கெட் பணத்தை அவர் கொடுக்கவில்லை, தன் நண்பர் ஒருவரிடம் செந்திலால்தான் ராஜா எனக்கு அறிமுகம் அதனால்தான் ராஜா கொடுக்கவேண்டிய பணத்துக்காக டிக்கெட் பணத்தை கொடுக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகு ராஜாவை நான் சந்திக்கவில்லை. இடையில் அவன் தம்பி இளையராஜாவுக்கு, என் நெருங்கிய நண்பரும், அண்ணனுமான கணேஷின் பெண்ணை கேட்பதாகவும், கொடுக்கலாமா என என்னிடம் அபிப்ராயம் கேட்டார். நான் பூரண சம்மதம் சொல்லுங்கள், அவன் மிகவும் நல்ல பையன் என்றேன். திருமணத்துக்கு பத்திரிக்கை வந்தது, எல்லோரையும் மீண்டும் பார்க்க வேண்டும் என்பதற்காக நான் போகவில்லை.

ஒரு மாதத்திற்கு முன் என் மனைவி மிகவும் சோகமாக அமர்ந்திருந்தாள். என்னவென்று விசாரித்தேன், ராஜாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்து இறந்து விட்டதாக சொன்னாள், கேட்ட எனக்கும் வருத்தமாக இருந்தது, என் மனைவியோ உடனே போன் செய்து விசாரியுங்கள் என்றாள். நான் மறுத்துவிட்டேன் ஏனென்றால் ஒருமுறை பிரச்சினை வந்தபிறகு இனி பேசுவது நன்றாக இருக்காது. அப்படி மீண்டும் ஒருவரிடம் பேசியதால்தான் நான் இப்போது இவ்வளவு சிரமப்படுகிறேன் என்றேன். அவளும் அதற்குமேல் உங்க இஷ்ட்டம் என சொல்லிவிட்டாள்.

எங்கள் நட்பு அபூர்வமான ஒன்று அதை தன் தந்தை, மற்றும் மனைவி பேச்சை கேட்டு ராஜா இழந்து விட்டான். நாகரீகம் கருதி நான் நிறைய விசயங்களை சொல்லாமல் விட்டுவிட்டேன். ஏனென்றால் அவனை இன்றும் என் கூடபிறந்த சகோதரனாகத்தான் நினைக்கிறேன்.

அதன்பிறகு சிங்கபூர் சென்று என் பிரச்சினைகளை முடித்துக்கொண்டு தோழி கண்மணியுடன் சேர்ந்து வியாபாரம் செய்யலாம் என் ஊருக்கு வந்தேன். அப்போது வந்து சேர்ந்தவன்தான் ரமேஷ். இவன் ஒரு சைக்கோ என தெரியாமலே இவனைக்கூட சேர்த்துக்கொண்டு அதனால் இன்றுவரை நான் படும்பாடுகளை அடுத்த அத்தியாயங்களில் பாப்போம்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

4 ஜூன், 2009

"ராமசாமி அத்தியாயம் 17"

கடந்தவாரம் முழுவதும் தலைவர் பிரபாகரன் பற்றிய சர்ச்சையால் மனம் ஒரு நிலையில் இல்லை அதனால், என்னால் அடுத்த அத்தியாயத்தை எழுத முடியவில்லை, மறுபடியும் உங்களிடமும், தமிழ்குறிஞ்சி ஆசிரியரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் நான் இரண்டு தலைவர்களைத்தான் என் ரோல் மாடலாக வைத்திருக்கிறேன்,. ஒருவர் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, இன்னொருவர் தலைவர் பிரபாகரன். அதனால் தமிழர்களின் ஒப்பற்ற தனிப்பெரும் தலைவன் பற்றி வந்த செய்திகளால் நான் மனம் உடைந்து போனேன். பின்பு நம்பிக்கையான நண்பர்களால் தலைவர் உயிருடன்தான் இருக்கிறார் என்ற செய்தி கிடைத்தபின்தான் மனம் அமைதியானது. ஆனாலும் தமிழர்கள் நாம் ஒற்றுமையாக இல்லாமல் போனதால்தான் இப்படி ஒரு பின்னடைவு. ஆனாலும் நம்பிக்கை வைப்போம் இதுவும் ஒருநாள் மாறும்.

அன்று போலீஸ் நான் அப்படி கோபமாக பேசியபோது சற்று பயந்தார்கள், அந்த சமயத்தில் ஐ.ஜி ஆபீஸில் இருந்து ஒரு போன் வந்தது, உடனே இன்ஸ்பெக்டர், எதிர்முனையில் உள்ளவரிடம் சாரி சார், யாருன்னு தெரியாம பேசிட்டேன், தம்பிங்களும் தங்கள யாருன்னு சொல்லல, நான் பாத்துக்கிறேன் என்று போனை வைத்தார், அதன்பின் என்னிடம் என்னதம்பி நீங்க வந்தவுடன் உங்களை பத்தி சொல்லியிருக்க வேண்டாமா? நீங்க யாருன்னு தெரிஞ்சா உங்ககிட்டே அப்படி பேசியிருப்பேனா? பரவாயில்லை டீ சாப்பிடுங்க என்றார். நானும் சாரி சார் உங்க பதவிக்கு மரியாதை கொடுக்காம பேசிட்டேன், நீங்க தகாத வார்த்தைகளை பேசினதும் கோபபட்டுடேன் என்றேன்.

அதன்பின் கடகடவென வேலை நடந்தது, எங்கள் இருவரையும் இன்ஸ்பெக்டரே ஜீப்பில் அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு, இனி நான் பாத்துகிறேன் என்றார், நான் வேண்டாம் சார், உங்க உதவி தேவையின்னா, நான் கட்டாயம் கேட்பேன் என்று அனுப்பிவைத்தேன், அதற்குள் ருசி கம்பனியில் இருந்து அதன் எம்.டி போன் செய்து நாளைக்கு நானே நேரில் வந்து பேசுகிறேன், அதுவரை எனக்கு உங்கள் தரப்பில் இருந்து பிரஷர் கொடுக்கிறார்கள், அவர்களிடம் நீங்கள் எல்லாம் சுமுகமாக முடிந்துவிட்டது என்று சொல்லிவிடுங்கள் என்றார். நானும் சரி சார் நாளைக்கு காலை பத்துமணிக்குள் வந்துவிடுங்கள், நாம் பேசி முடிச்சுக்குவோம் என்றேன்.
அப்போது ஐ.ஜி ஆபீஸில் என் நண்பன் வேலை பார்த்தான், அவன் மூலமாகதான் நான் எல்லா உதவிகளையும் பெற்றேன், மேலும் அப்போது ஜெயலலிதா ஆட்சி,சசிகலா சம்பத்தப்பட்ட சிலருடன் எனக்கு பழக்கம் இருந்தது அதனால் அவர்கள் மூலமாகவும் நான் பேச சொன்னேன்.

இந்த பரபரப்பு முடிந்தவுடன் ராஜா என்னோடு தனியாக பேசினான், அப்போது நம் இருவரின் திருமணம் ஒன்றாகத்தான் நடக்கவேண்டும், காயத்ரி என்ன சொன்னாலும் நான் கேட்கபோறது இல்லை. நாளை இந்த பிரச்சினை முடிந்தவுடன் அவளிடம் சொல்லிவிடுகிறேன் என்றான், நான் திடிரென ஏன் இந்த மனமாற்றம் என்றேன். இல்லடா ஏதோ என் மனசுக்கு தோனுச்சு அதனால்தான் அப்படி முடிவு பண்ணேன் என்றான். நான் வருத்தமாக உன்னை பார்த்தா நிஜமாவே எனக்கு பாவமா இருக்கு, நீ இத ஒரு நாள் முன்னமே சொல்லிருந்தாகூட சந்தோஷபட்டிருப்பேன், ஆனா இனி என்னால உன்ன மாதிரி மாற முடியாது, என்னை பொறுத்தவரை உன்மேல் உனக்கு நம்பிக்கை போய்விட்டது, ஒரு உண்மையான நட்பை நீ இழந்துவிட்டாய் என்றேன், அதற்கு அவன் அழுதான், என்னை என்ன செய்ய சொல்லுறே, என் அப்பாவுக்கு பாக்குறதா, காயத்ரிக்கு பாக்குறதா, இல்ல உனக்கு பாக்குறதா என குழம்பிட்டேன். இப்ப நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்றான். நான் ஒரு இரண்டு நாள் டைம் கொடு, அதுவரைக்கும் காயத்ரிகிட்டே எதுவும் பேசாதே என முடித்துக்கொண்டேன்.

மறுநாள் ருசி கம்பனி எம்.டி நேரில்வந்து பேசினார், எங்கள் தரப்பின் நியாயத்தை புரிந்துகொண்டு எங்களையே தொடர்ந்து நடத்த சொன்னார். ஆனால் நானோ வேண்டாம் சார், ஒருமுறை சங்கடம் வந்துவிட்டது இனி அடிக்கடி பிரச்சினை வரும், மீதம் உள்ள சரக்கை எடுத்துக்கொண்டு பணத்தை செட்டில் செய்யுங்கள் என்றேன். அவரும் அவரின் ஆட்களிடம் சொல்லி சரக்கை கணக்கு பார்த்து எடுத்துக்கொள்கிறேன், பணத்தை செக்காக அனுப்பிவைக்கிறேன் என சென்றுவிட்டார், சொன்னபடி மூன்று நாளில் செட்டில் செய்துவிட்டார்,.

ராஜா என்னடா மூன்று நாளாச்சு எதுவும் பேசமாட்டேன்றே என்றான், நான் நாளை நாம் இருவரும் ஊருக்கு போகலாம்,போகும்போது பேசுகிறேன் என்றேன். ஊருக்கு கிளம்பியபோது இடையில் ஒரு பாரில் வைத்து, நாம் கொஞ்ச காலத்துக்கு பிரிஞ்சு இருப்போம், திருமணமும் தனித்தனியாக நடக்கட்டும், இருவரின் திருமணத்திற்கு பிறகு அடுத்த பிசினஸ் சேர்ந்து செய்வதைபற்றி முடிவு செய்யலாம் என்றேன். அவன் என் இப்படி முடிவு பண்றே என்றான், நான் சாரிடா, நமக்குள்ள ஒரு இடைவெளி விழுந்துட்டு, அதை சரிபண்ண கொஞ்ச நாளாகட்டும் என்றேன். இதுதான் உன்னோட இறுதி முடிவா இருந்தா இது நமக்குள்ளேயே இருக்கட்டும் என்றான். நானும் அதைத்தான் சொல்லனும்ன்னு நினைச்சேன் என்றேன். அதன்பிறகு ஊர் வந்து வழக்கம்போல் அவன் வீட்டில் தங்கி, அவனை மட்டும் பரவாக்கோட்டைக்கு அனுப்பி அப்பாவிடம் என் திருமணத்தை முடிவு செய்துவிடுங்கள் என சொன்னேன்.
அவனும் ஊருக்கு சென்று அப்பாவிடம் பேசி பிப்ரவரி ௨௪ ௨௦௦௨ அன்று என் திருமண தேதியை வைத்துவிட்டு சென்னை வந்தவுடன் ரூபாய் ஒரு இலட்சம் திருமண செலவுக்காக கொடுத்து அனுப்புகிறேன் என சொல்லிவிட்டு வந்தான். மறுநாளே அவன் மட்டும் சென்னை கிளம்பிவிட்டான்.

அந்த சமயத்தில் எல்லா வரவு செலவும் அவனிடம்தான் இருந்தது. அப்போதுதான் சிங்கபூரில் இருந்து வந்திருந்தேன், அதனால் அவனிடம் நான் கணக்கும் கேட்க்கவில்லை. ஏற்கனவே எங்கள் இருவரின் திருமண செலவிற்காக ரூபாய் இரண்டு இலட்சம் தனியாக வைத்திருக்க சொன்னேன். அதிலிருந்து பணம் கொடுப்பான் என நினைத்து நானும் பேசாமல் இருந்துவிட்டேன், ஆனால் பிப்ரவரி மூன்றாம் தேதிவரை அவன் ஒரு ரூபாய் கூட அனுப்பவில்லை. அதற்குள் அப்பா என்னை பணத்திற்காக நச்சரிக்க ஆரம்பித்தார்.

அவனிடம் போன் செய்து பணம் என்னடா ஆச்சு என்றேன். அவனோ நீ சென்னை கிளம்பி வா, இங்கு பத்திரிக்கை அடித்துக்கொண்டு இருவரும் சேர்ந்து ஊருக்கு போகலாம் என்றான். டேய் பத்திரிக்கை இங்கேயே அடித்துக்கொள்ளலாம், பணம் என்னடா ஆச்சு என்றேன் கோபமாக. அவனோ என்கிட்டே ஏது காசு யாருகிட்டயாவது வாங்கித்தான் கொடுக்கணும், சிலபேருகிட்டே கேட்டிருக்கேன், கொடுத்தா தாரேன் என்றான் அலட்சியமாக, எனக்குள் ஏதோ ஒன்று இடிந்தது. இவனை எவ்வளவு நம்பினோம், கடைசியில் இப்படி அலட்சியமாக பேசுகிறானே. பரவாயில்லை, அவனுக்கு தெரிந்தது அவ்வளவுதான், இனி நாமே ஆகவேண்டியதை பாப்போம் என அப்பாவிடம் போய் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்றேன். அவர் ஒரு எண்பதினாயிரம் இருந்தா போதும் என்றார்.

உடனே சிங்கபூரில் இருக்கும் நண்பர்களுக்கும், துபாயில் இருக்கும் மணிகண்டனுக்கும் பேசினேன். அவர்கள் இரண்டு நாட்களுக்குள் பணத்தை அனுப்பிவைக்கிறேன் என்றனர். பிப்ரவரி மூன்றாம் தேதி அன்று காலை எனக்கு ஒரு நண்பர் அனுப்பிய இருபத்தி ஐந்தாயிரம் வந்தது. அன்று மாலை என் சகோதரி மகன் வீரா விபத்தில் சிக்கினான். மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் அவனை தஞ்சாவூர் வினோதகன் மருத்தவமனையில் சேர்த்தோம், ஆனால் அவன் பிப்ரவரி எட்டாம் தேதி எங்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டு இறந்துபோனான். என் வாழ்வில் நான் மிகவும் நேசித்த இரண்டாம் நபர் அவன். ஏற்கனவே அஞ்சலியின் மரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நான், இவனை பிரிந்ததும் ஆருதலற்று தவித்தேன். சகோதரனின் மரணத்திற்கு வந்த காமாட்சி என் நிலயை பார்த்து வீட்டிலேயே தங்கிவிட்டாள். பிப்ரவரி இருபத்தி நாலாம் தேதி நடக்க இருந்த எங்கள் திருமணம் நின்று போனது.

இதற்கும் ராஜாவுடன் என் நட்பு முறிந்து போனதற்கும் என்ன சம்பந்தம்? அதனை அடுத்தவாரம் எழுதுகிறேன்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

29 மே, 2009

"ராமசாமி அத்தியாயம் -16"

தொடர்ந்து பதினாறு வாரங்கள் என் கதையை படித்த உங்களுக்கு நன்றி. இடையில் எனக்கு ஏற்ப்பட்ட வேலைப்பளு காரணமாக சரியான நேரத்துக்கு தமிழ்குறிஞ்சிக்கு கதையை வழங்க முடியவில்லை. இருந்தாலும் பொறுத்துக்கொண்டு பதிவேற்றிய தமிழ்குறிஞ்சி ஆசிரியருக்கு நன்றி.

என்னுடன் படித்த நண்பன் ராஜா பற்றி சொல்லியிருக்கிறேன், இது இன்னொரு ராஜா பற்றி இவன் என்னோடு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை படித்தவன், அதற்க்கு அப்புறம் சிங்கபூரில்தான் சந்தித்தோம், ஒரு இக்கட்டான தருணத்தில் அவன் ஊர் வர வேண்டிய நேரத்தில் எங்களுடைய சந்திப்பு நிகழ்ந்தது, அப்போது ஒரு முக்கியமான பொருளை என்னிடம் கொடுத்து சென்றான். அதன்பிறகு மீண்டும் சிங்கப்பூர் வந்தபோது அந்த பொருளை அவனிடம் ஒப்படைக்க முடியவில்லை.ஏனென்றால் என்னுடன் தங்கியிருந்த என் நண்பன் கணேசனும், என் அண்ணனும் சேர்ந்து அதனை திருடிச்சென்று விற்றுவிட்டனர்.

எனவே அதற்கான பணத்தை அவனிடம் கொடுத்தேன், அப்போது முதல் சற்று நெருக்கமானோம். ஒரு மூன்று மாதம் கழித்து ஒருநாள் இருவரும் பியர் குடித்துகொண்டிருந்தோம், அப்போது அவன் உன்னை நான் மூன்றுமாதமாக டெஸ்ட் செய்தேன், அதில் நீ மிகவும் நம்பிக்கைக்கு உரியவன் என்று ஆனபின்தான் உன்னோடு நெருக்கமாக பழகுகிறேன் என்றான், நான் சத்தமாக சிரித்தேன், அவன் கோபமாக எதுக்கு சிரிக்கிறே என்றான், நான் கடைசிவரை உண்மையாக இருந்துவிடுவேன் ஆனால் உன்னால் இருக்கமுடியுமா என நினைத்தேன் சிரித்தேன் என்றேன், அவனோ ஏன் முடியாது நான் எப்பவும் உண்மையாக இருப்பேன் என்றான்.

அதன்பிறகு எங்களுக்குள் எந்த செலவுக்கும் கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. பார்க்கிற அனைவரும் பொறாமைப்படுகிற அளவு எங்கள் நட்பு வளர்ந்தது. கிட்டத்தட்ட எங்கள் இருவரின் திருமணமும் ஒன்றாக நடத்தவேண்டும் என்ற அளவுக்கு நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் விதி வலியது அது எங்களின் வாழ்கையில் ஒரு பெண் வடிவில் புகுந்தது. நன்றாக வளர்ந்து சென்னையில் ஒரு தொழில் செய்ய ஆரம்பித்தோம், நான் சிங்கையிலும் அவன் சென்னையிலும் இருந்தோம், அப்போது அவனுக்கு ஒரு காதல் வந்தது.

எத்தனையோ பிரச்சனைகள் எங்களுக்கு வந்தபோதெல்லாம் அதனை ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுக்காமல் சமாளித்தோம். ஆனால் அவனுக்கு வந்த காதலால் ஏற்பட்ட பிரச்சினையால் நாங்கள் பிரிந்துபோனோம், அந்த பெண்ணும் மிகவும் நல்லவள்தான், தனக்கு உள்ள பிரச்சினையை சரியாக கையாள தெரியாமல் தானும் குழம்பி, எங்களையும் குழப்பி, அது எங்கள் இருவருக்கும் நிரந்தர பிரிவாக அமைந்துவிட்டது, கிட்டத்தட்ட பத்து வருட கால நட்பு இந்த காலகட்டங்களில் எங்களை அறிந்தவர்கள் நாங்கள் பிரிந்திவிடுவோம் என நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள், அப்படி ஒரு நட்பு அது. என் வாழ்க்கையில் நான் நேசித்தவர்களில் ராஜாவும் ஒருவன்.

நான் ஊருக்கு சென்றால் அவன் வீட்டில்தான் தங்குவேன், அங்குதான் சாப்பிட்டு தூங்குவேன், என் வீட்டிற்கும், அவன் வீட்டிற்கும் இரண்டு கிலோமீட்டர் இடைவெளிதான் இருந்தும் நான் அவன் வீட்டில்தான் தங்குவேன், அவனுடைய தாத்தாவும், பாட்டியும் என் மேல் வைத்திருந்த பாசம் அளவிடமுடியாத ஒன்று.

பிரச்சினை எங்கள் இருவரின் திருமணத்தை ஒன்றாக வைப்பதில் ஆரம்பித்தது. படிப்பை முடித்துவிட்டு காமாட்சி(என் மனைவி) ஒரு வருடமாக திருமணத்திற்காக காத்திருந்தாள், ஆனால் காயத்ரியோ(ராஜாவின் மனைவி) உன் திருமணத்தை தனியாக நடத்திகொள் என்கிறாள், ராஜாவோ இருபக்கமும் பேச முடியாமல் மென்று விழுங்குகிறான், ஒரு சமயம் நட்புக்கும், இன்னொரு சமயம் காதலுக்கும் சார்பாக இருந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானான். அப்போது அவனைப்பார்க்க பாவமாக இருக்கும். ஆனாலும் நான் விட்டுகொடுக்கவில்லை.

இடையில் ஒருநாள் பிரச்சினை பெரிதாகி அவளை அவன் திட்டி அனுப்பிவிட்டான், அதற்குமேல் நானும் பிடிவாதம் பிடிக்கவில்லை, நான் தனியாக திருமணம் செய்துகொள்கிறேன் என சொல்லிவிட்டேன், அதற்கான ஏற்பாடுகளை அவனே செய்ய ஆரம்பித்தான். உடனே என் அக்கா வீட்டுக்காரர் முறைபடி வந்து பெண் கேட்க வேண்டும் என முரண்டுபிடிக்க அதற்காக ஊரில் இருந்து எல்லாரும் வந்து பேசிவிட்டு செல்ல, அக்கா வீட்டுக்காரர் தனக்கு பணம் தேவைபடுவதால் மூன்று மாதம் தள்ளி வைக்க சொன்னார், நான் எல்லா செலவையும் நானே பாத்துக்கிறேன் என்று சொல்லி விரைவான தேதியை பார்க்க சொன்னேன்.

எல்லாம் சுமுகமாக போய்க்கொண்டிருந்தது, அப்போது ருசி ஊறுகாயின் டீலராக கிண்டி முதல் தாம்பரம் வரை செயல்பட்டுக்கொண்டிருந்தோம், தொழிலில் போதிய அனுபவம் இல்லாத காரணத்தால் கம்பனி புதிதாக அறிமுகப்படுத்திய சில பொருள்களை அதிகமாக எடுத்து அனைத்து கடைகளுக்கும் வைத்துவிட்டோம், அது சரியாக போகவில்லை அதனால் கம்பெனிக்கும் எங்களுக்கும் சிறு பிரச்சினை வந்தது. எங்களை கேட்காமல் பாதி ஏரியாவை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டனர், அதனால் கம்பெனி மேல் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் செய்யபோனோம், போகும்போது அந்த கம்பெனி விற்பனையாளர் ரவியையும் அழைத்துசென்றோம், அங்கு போனதும் இன்ஸ்பெக்டர் இல்லை, கூட வந்த தினத்தந்தி நிருபர் இமாம் கசாலி தனக்கு சிறிது வேலை இருப்பதால் நீங்கள் இருந்து பார்த்துவிட்டு வாருங்கள் என சென்றுவிட்டார். எங்களுக்கும் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரவே நாங்களும் வந்துவிட்டோம். ஆனால் ரெப் ரவி அவன் முதலாளிக்கு போன் செய்து நிலவரம் சொல்லியிருக்கிறான், அப்போது ருசி ஊறுகாய் சவேரா ஓட்டல் நிர்வாகத்திடம் இருந்தது, அதனால் அவர்கள் ஐ,ஜி ஆபிஸ் மூலமாக போன் செய்து இன்ஸ்பெக்டரிடம் எங்கள் மேல் வழக்கு பதிவு செய்யும்படி வற்புறுத்தியிருக்கின்றனர்.

இன்ஸ்பெக்டர் கசாலிக்கு போன் செய்து எங்களை அழைத்து வராவிட்டால் அவரையும் சேர்த்து அரெஸ்ட் செய்வேன் என மிரட்ட, கசாலி எங்களுக்கு போன் செய்து என்ன செய்யலாம் எனக்கேட்டார். நான் நீங்கள் எங்களுடன் வாருங்கள் முதலில் எங்களுக்கும், உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என சொல்லிவிடுகிறேன் போதமா என்றேன். கசாலி அது மட்டும் செய்தால் போதும் என்றார்.

நாங்கள் மூவரும் ஸ்டேஷன் போனதும் இன்ஸ்பெக்டர் வானத்துக்கும், பூமிக்கும் குதித்தார். என்னையும் ராஜாவையும் ஆட்கடத்தல் வழக்கில் உள்ளே வைத்துவிடுவேன் என மிரட்டினார், எங்களை பேசவிடவே இல்லை. அவரே ருசி முதலாளி மாதிரி உங்களால் ஒண்ணுமே புடுங்க முடியாது என ஏகத்துக்கும் சத்தம்போட ஆரம்பித்தார், கொஞ்ச நேரத்தில் தகாத வார்த்தைகளை பேச ஆரம்பிக்கவும் நான் கடுப்பாகி "டேய் நிறுத்துடா'' என்றேன். போலீஸ் ஸ்டேஷன் அப்படியே நிசப்தமானது. இன்ஸ்பெக்டர் உட்பட அத்தனைபேரும் ஒரு கணம் பேச்சற்று போயினர். ராஜா என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தான்.

பக்கத்து அறையில் இருந்த கிரைம் இன்ஸ்பெக்டர் டேய் இது போலீஸ் ஸ்டேஷன் தெரியுமா, உள்ள வச்சு பிச்சுடுவேன் என்றார். நானோ தைரியம் இருந்த கை வை பார்க்கலாம் என அவரிடமும் சத்தம் போட்டேன். என கோபத்தை என்னால் கட்டுபடுத்தவே முடியவில்லை. எல்லோரையும் ஒரு பிடி பிடித்தேன். முதன் முறையாக ராஜா என்னைப்பார்த்து பயந்தான். பொதுவாக நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என அவனுக்கு தெரியும், ஆனால் போலீசையே அப்படி பேசுவேன் என நினைக்கவில்லை.ஆனால் இந்த சம்பவத்தால்தான் எங்கள் பிரிவு தொடங்கியது.

கடைசியில் போலீஸ் ஸ்டேஷனில் என்ன நடந்தது? ராஜாவும் நானும் எப்படி பிரிந்தோம் அது அடுத்தவாரம்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

"ராமசாமி அத்தியாயம் 15"

எங்கள் ஊரில் வருடாவருடம் காமன் பண்டிகை நடக்கும், பெரும்பாலும் அது வசூல் சம்பத்தப்பட்ட பண்டிகை, காமன் தகனம் முடிந்த மறுநாள் புலிவேடமிட்டு வசூல் செய்வார்கள் இதைப்பற்றி நண்பன் ராஜா தன்னுடைய ப்ளாக்கில் விரிவாக எழுதியுள்ளான்.

விஷயம் காமன் பண்டிகை பற்றியது அல்ல, அதனால் ஏற்ப்பட்ட விளைவுகள் பற்றியது, காமன் பண்டிகை கடைசி நாளில் இரு சிறுவர்களுக்கு ரதி, மன்முதன் வேடமிட்டு எறிந்த கட்சி, எரியாத கட்சி என இரண்டு பிரிவாக பாட்டு பாடுவார்கள், முடிவில் காமனை தகனம் செய்வார்கள், தகனம் முடிந்தவுடன் புலிவேடம் போட ஆரம்பிப்பார்கள், அப்போது நாங்கள் இரவில் வேடிக்கை பார்க்க போவோம், புளியங்கொட்டைகளை ஊறவைத்து, அவித்து தின்பதற்கு எடுத்துபோவோம், எனக்கு ஐந்து வயதாக இருக்குபோது இப்படி ஒருநாள் இரவு பார்த்துவிட்டு வந்ததும் எனக்கும் அப்படி புலிவேடம் போட வேண்டும் என ஆசையாக இருந்தது.

அறுவடை முடிந்து அப்போதுதான் ஒருவாரம் முன்புதான் வைக்கோல்போர் போட்டிருந்தார்கள்.குப்பையில் கிடந்த சாம்பலை தண்ணீர்விட்டு உடம்பெல்லாம் பூசிக்கொண்டேன். வைக்கோல்போரில் இருந்து சிறிதளவு வைக்கோலை புடுங்கி அதன் அருகிலேயே போட்டு கொளுத்தினேன், கையில் ஒரு தட்டை எடுத்து தாளம் தட்டிக்கொண்டு வைக்கோல்போரை சுற்றி ஆட ஆரம்பித்தேன் தீ மளமளவென பரவி மொத்த வைக்கோல்போரும் ஏறிய ஆரம்பித்தது. நான் பயந்து ஓடி ஒளிந்துகொண்டேன்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் சத்தம் போட்டு அனைவரும் வந்து தீயை அனைப்பதற்க்குள் வைக்கோல்போர் முழுவதும் எரிந்துவிட்டது, அப்போதுதான் பக்கத்து வீட்டு பரமசிவம் மாமா செந்தில்தான் அந்த இடத்தில் இருந்தான், அவன்தான் ஏதாவது செய்திருப்பான் என்று சொன்னதும் என்னை தேடி கண்டுபிடித்து இழுத்துவந்தனர், என்னை எல்லோர்முன்னும் கொண்டுவந்ததும் எல்லோரும் என் வேசத்தை பார்த்து சிரிக்க எனக்கு அவமானம் ஆகிவிட்டது, அதன்பிறகு இன்றுவரை அதைபோன்று ஒரு வைக்கோல்போர் எங்கள் வீட்டில் நாங்கள் போட்டது இல்லை, படிப்படியாக நிலங்களை விற்றுவிட்டோம்.

சின்ன வயது குறும்புகள் எப்போதும் நினைவகலாதவை. நான் வீட்டிற்கு கடைசி பிள்ளை என்பதால் செல்லம் அதிகம், அதனால் யாரும் என்னை கண்டுகொள்வதில்லை, எப்போது பார்த்தாலும் ஏதாவது செய்துகொண்டிருப்பேன் அந்த வயதில் எனக்கு அடிபடாத நாளே கிடையாது, பத்தாம் வகுப்புக்கு பிறகு பெரிய செட்டுகளுடன் நட்பு ஏற்பட்டு, இரவுகளில் வயல்காடுகளுக்கு சென்று சமைத்து சாப்பிடுவோம், அதிலும் குரவர்களிடம் பணம் கொடுத்தால் அவர்கள் நரி, காட்டுப்பூனை போன்ற விலங்குகளை பிடித்து கொடுப்பார்கள் அதனை சுட்டு சாப்பிடுவோம், யார் வீட்டு வெள்ளாமையாக இருந்தாலும் எங்களுக்கு தேவை என்றால் ஆட்டைய போட்ருவோம், மறுநாள் நாங்கதான் என தெரிந்தாலும் யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள், ஏனெனில் சாப்பிடும் அளவுக்கு மட்டுமே எடுத்து வருவோம்,

இப்போது உள்ள பிள்ளைகள் தொலைக்கட்சிகளில் தங்களை தொலைக்கிறார்கள், சின்ன வயதில் உடல் விளையாட்டுகளில் ஈடுபடாமல், மூளை விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடுவதால் சீக்கிரத்தில் சுயநலம் வந்துவிடுகிறது, கிரிக்கெட்டை தவிர வேறு எந்த விளையாட்டும் தெரியாமல் ஒரு தலைமுறையே வளர்வது கவலை அளிக்கிறது, நம்முடைய சேனல்களும் அவர்களின் மூளையை தொடர்ந்து மழுங்கடிக்கும் வேலையைத்தான் செய்கிறது.

எந்த சேனலை திறந்தாலும் அரைகுறை ஆடைகளுடன் சினிமா பாட்டிற்கு அபிநயம் பிடிக்கும் போட்டிகளை வைத்து தங்கள் குழந்தைகளை பெற்றோரே கொண்டு வந்து அவர்கள் பிள்ளைகள் தோற்கும்போது அழுது புரள்கிறார்கள், போட்டியைவிட பெற்றோர்கள் அடிக்கும் கூத்து வேதனையை அளிக்கிறது, மெல்ல மெல்ல மேலை நாடுகளைபோல் மாறிவருகிறோம்.

எதிர்கால சந்ததிகள் கிராமங்களில் கூட இப்படி மாறிவருவது கவலை அளிக்க கூடிய விஷயம், சின்ன வயதில் சொந்தமாக சிந்திக்கக்கூடிய ஆற்றலை கிராமங்களில் நிறைய பார்க்கலாம், அதனால்தான் கிராமங்களில் பிறந்தவர்கள் சாதனை பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார்கள், ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் கிராமங்களில் நகர குழந்தைகளைவிட அதிக நேரம் டிவி பார்க்கிறார்கள்.

நாம்மால் முடிந்த ஒரு சிறிய மாற்றத்தை எங்கள் சொந்த கிராமத்தில் ஏற்படுத்த வேண்டும் என நானும் நண்பர்களும் சில திட்டங்கள் வைத்துள்ளோம், அது நன்றாக போகும் பட்சத்தில் மற்ற கிராமங்களுக்கும் அதனை கொண்டு செல்லவிருக்கிறோம்,
இந்தியாவின் எதிகால தூண்கள், கடந்தகால சிற்பிகள் இரண்டும் கவனிப்பாரற்று இருக்கின்றனர், இளைய சமுதாயத்தை உயர்த்தும் அதே வேலையில் முதியோர்களையும் நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோம், இந்த தேசத்தை கட்டியெழுப்பிய சிற்பிகளை முதியோர் இல்லங்களில் சென்று சேர்க்கிறோம், மனதளவில் குழந்தைகள் ஆகி விடுகிற முதியோர்களை அற்பமாக பார்க்கிறோம்,

எல்ல இடங்களிலும் முதியோர்களுக்கு என சலுகைகள் தரப்படுவது இல்லை, நமக்கும் நாளை வயசாகும், நம் தகப்பனுக்கு நாம் செய்ததைதான் நாளை நம் மகன் நமக்கும் செய்வான் என்பதை மறந்து விடுகிறோம்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

11 மே, 2009

"ராமசாமி அத்தியாயம் -14"

என்னுடைய வாழ்கையில் இப்படி ஒரு காதல் வந்து அதன்பிறகு நான் திருமணம் செய்வேன் என கனவிலும் நினைக்கவில்லை, சிங்கபூரில் இருந்து வந்து அக்கா மகளை திருமணம் முடித்த கதை ஏற்கனவே சொல்லிவிட்டேன், ஆனால் நடந்த அத்தனை விசயங்களையும் அவளிடம் மறைக்காமல் சொன்னபிறகுதான், அவளின் பூரண சம்மதத்தை பெற்றுக்கொண்டு திருமணம் செய்தேன்,

என் வாழ்கையில் கிடைத்த பொக்கிஷம் என் மனைவி காமாட்சி, நான் எத்தனையோ மேடுபள்ளங்களை சந்த்தித்து இருக்கிறேன், சில சமயம் செலவுக்கு பத்து ரூபாய் பணம் கூட இருக்காது, எப்போதும் ஒரே மாதிரி இருப்பாள், எதைபற்றியும் நீ கவலைபடுவதே இல்லையா என்றால்/ நான் ஏன் கவலைபடனும் அதான் எல்லாத்தையும் நீங்க பாத்துக்குவீங்களே என சாதாரணமாக சொல்லிவிடுவாள், இரண்டு குழந்தைகள், நான் இம்மூவரும்தான் அவள் உலகம், இன்றுவரை அவளை நான் எங்கும் கூட்டிபோனது கிடையாது, அவ்வளவு ஏன் இன்றுவரை திருமணம் முடித்து ஏழு ஆண்டுகள் ஆகிறது, நாங்கள் உணவகம் சென்று சாப்பிட்டது இல்லை.

எங்கள் திருமணம் முடிந்து சிலமாதங்களுக்குள் அம்மாவுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு வந்து அம்மா என்னை வீட்டை விட்டு வெளியே போகச்சொன்னது, அப்போது கையில் என்னிடம் சுத்தமாக காசு இல்லை. என்ன செய்வது என புரியாமல் நின்றபோது மதுக்கூர் கண்ணன் அண்ணன் தன் வீட்டில்தான் தங்கவேண்டும் என பிடிவாதமாக சொல்லி, அண்ணி, குழந்தைகளிடத்தும் சொல்லி எனக்கு பேச சொன்னார், அதுவரை சந்தித்திராத என் மனைவியை, மகாலட்சமி அண்ணி தன் மகளாய் ஏற்றுக்கொண்டார். வாழ்வின் அடுத்த அடி எப்படி எடுத்து வைப்பது என தவித்த நாங்கள் இன்று சமூகத்தில் அந்தஸ்துடன் வாழ காரணம், அன்று கண்ணன் அண்ணன் குடும்பத்தினர் எங்கள் மீது காட்டிய கருணை, எனக்கும், மனைவிக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது, ஆனால் நாங்கள் இருவரும் சாமியாய் நினைப்பது அண்ணனையும், அண்ணியையும்தான்.

கண்ணன் அண்ணனை பொறுத்தவரை அவரும் என்னைபோலதான், யாருக்காவது உதவிக்கொண்டே இருப்பார், ஒரு பெரிய பொருளாதார வசதி இல்லாமால் கடன் வாங்கியாவது மற்றவர்களுக்கு உதவும் அவர்களின் குணம்தான் நான் இப்போதும் பின்பற்றுவது. அதிலும் அண்ணி உடல்நிலை சரியில்லாத போதும் வீட்டிற்கு வந்தவர்களை நிறைவாக கவனித்து அனுப்புவார். எங்களை பொறுத்தவரை அதுதான் எங்களின் தாய்வீடு.

ஏதோ ஒருவகையில் இயற்கை எப்போதும் என்னை காப்பாற்றிக்கொண்டுதான் இருக்கிறது. இன்றுவரை யாராவது என்னை எமாற்றிவிட்டுதான் போகிறார்கள், அதிலும் ரமேஷ் என்பவன் என்னை திட்டம்போட்டு ஏமாற்றியவன். என்னை மட்டுமல்லாது பலரையும் ஏமாற்றியிருக்கிறான், பார்க்க அப்பாவிபோல் தோற்றமளிக்கும் அவனை நம்பி ஏமாந்தவர்கள் பலபேர், ஆனால் அவனும் உருப்படவில்லை. அந்த பித்தலாட்டக்காரன் அடிக்கடி செல்போன் நம்பரை மாற்றிவிடுவான். ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் இன்னும் அவனை சிலபேர் நம்புகிறார்கள் என்பதுதான். தன் தகப்பன் யாரென்றே தெரியாமல் வளர்ந்ததால் இன்றுவரை திருமணம் செய்துகொள்ளாமல், ஒரு மனநோயாளியாக திரிகிறான், ஆனால் அவனை பார்க்கும்போது அப்படி தெரியாது, அவ்வளவு நியாயம் பேசுவான். என்னிடமே ஒருமுறை தனக்கு நல்லவிசயம் ஒருமடங்கு தெரிந்தால், கெட்டவிசயம் மூன்றுமடங்கு தெரியும், தான் நினைத்தால் ஒருவனை வாழவிடாமல் செய்துவிடமுடியும் என சொன்னவன், ஆனால் எப்போதும் யாருக்காவது பயந்து ஒளியும் கோழையாகத்தான் அவனை நான் பார்த்திருக்கிறேன்.

இப்படி தொடர்ந்து நான் யாரிடமாவது ஏமாந்தாலும் நான் உதவி செய்வதை நிறுத்தவில்லை. இந்த சென்னை மாநகரில் நான் வேலைக்காக வந்தபோது திக்கு தெரியாமல் அலைந்தேன், அதனால் யார் என்னைத்தேடி வந்தாலும் என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்.

சின்ன வயதில் இருந்தே தனிமை விரும்பி, ஆனால் என்னைசுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். ஊரில் இருக்கும்போது நேரம் கிடைக்கும்போது தனியாக காட்டாறு ஒன்று ஊர்க்கடைசியில் ஓடுகிறது அங்கே சென்று பொழுது சாயும்வரை இருப்பேன்.சென்னைவந்தபிறகு மெரினாவுக்கு சென்று பனிரெண்டு மணிவரை அமர்ந்திருப்பேன், இப்போதோ எனக்கென்று நேரம் இருப்பதே இல்லை. எப்போதும் யாராவது என்னுடன் இருப்பதால் என் தனிமையை அனுபவிக்க முடியவில்லை.

எதிர்காலத்தில் ஒரு ஐம்பது ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்யலாம் என்றிருக்கிறேன் அப்போது எனக்கான தனிமை கிடைக்கலாம். தொடர்ந்து போரடித்துவிட்டேன் அடுத்தவாரம் முதல் மீண்டும் என் சிறுவயது அனுபவங்களை எழுதபோகிறேன்.

சின்னவயதில் எங்க ஊரில் காமன் பண்டிகை நடக்கும் அதனைப்பற்றி அடுத்தவாரம் எழுதுகிறேன்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

4 மே, 2009

''ராமசாமி அத்தியாயம் - 13"

காதலும் நட்பும்தான் ஒருவனின் வாழ்வில் முக்கிய பங்கு ஆற்றுகிறது, சில பேருக்கு காதல் வாய்க்காவிட்டாலும், நட்பு இல்லாமல் யாரும் இருக்கமுடியாது, என் வாழ்வில் காதல் ஏற்படுத்திய தாக்கம்போல், நட்பும் பெரிய தாக்கத்தை இன்றுவரை ஏற்படுத்திவருகிறது.

பிறந்த ஊரில் ஒன்றாக வளர்ந்து, ஒன்றாக படித்து தொடர்ந்து நண்பர்களாக இருப்பவர்கள் அநேகம் இருப்பார்கள், எனக்கு அந்த வகையில் சத்தி அத்தானும், ராஜா மாப்பிள்ளையும் இப்போதும் நட்பாக உள்ளார்கள். இதில் சத்தி அத்தான் எங்களைவிட மூத்தவர், ராஜா என் செட்டு, சத்தி அத்தானுக்கு பத்தொன்பதாவது வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். அதனால் அவரை அப்போதுமுதல் முறைவைத்து கூப்பிட ஆரம்பித்துவிட்டேன். இன்றுவரை என்னுடைய எல்லாவிசயங்களையும் அவரிடம் பகிர்ந்துகொள்வேன். வாரம் ஒருமுறை தொலைபேசியில் பேசிக்கொள்வோம். அவர் என் வாழ்க்கையில் முக்கியமான நபர். நல்ல மனிதர் கையில் காசு இருந்தால் நன்றாக செலவு செய்வார், சின்ன வயதில் தாயை இழந்ததால் செல்லமாக வளர்க்கப்பட்டவர். இன்றுவரை எந்த கவலையும் இல்லாத மனிதர் என்று எல்லோரும் சொல்வார்கள், ஆனால் தனிப்பட்ட முறையில் எல்லோர் மீதும் பரிவும் அக்கறையும் உள்ள மனிதர்.

நண்பன் ராஜா எனக்கு எதிர்வீடு, மேலும் மாமா பையன் ஒன்றாகவே விளையாடுவோம், ஏன் வீட்டில் எனக்கு நிறைய கட்டுப்பாடுகள் உண்டு, ஆனால் அவனுக்கு நிறைய சுதந்தரம் உண்டு. சின்ன வயதில் இருந்தே எங்களுக்குள் ஒரு மறைமுகமான போட்டி இருக்கும், படிப்பில் சராசரி மாணவன் நான், ஆனால் அவனோ நல்ல மார்க் எடுப்பான், அவர்கள் வீட்டில் எப்போதும் வேலை இருந்துகொண்டே இருக்கும், காலையில் வயலுக்கு போய்விட்டுத்தான் பள்ளிக்கே வருவான், ஆனால் எனக்கு எந்த வேலையும் இருக்காது, எப்போதும் விளையாட்டுதான். இரண்டுபேருமே வீட்டிற்கு கடைசி பிள்ளைகள், அதனால் இரண்டுபேருக்கும் இருவர் வீட்டிலும் ஒரு தனித்துவம் இருக்கும்.

ஒன்பதாவதுவரை அவனும் நானும் வேறுவேறு வகுப்புகள், பத்தாம் வகுப்பில் ஒன்றாக படிக்க ஆரம்பித்தோம், ஆனால் எங்களுக்குள் நட்பு வட்டாரம் மாறியது, பனிரெண்டாம் வகுப்புவரை அப்படிதான், அதிலும் பனிரெண்டாம் வகுப்பில் அவன் டீச்சருக்கு செல்லபிள்ளை, அதனால் நாங்கள் சற்று விலகியே இருந்தோம், பனிரெண்டில் நான் பெயிலானதால், அவன் மேற்கொண்டு படிக்க சென்றுவிட்டான், அதற்க்கு அவன் பட்ட சிரமம் சொல்லிமாளாது, அப்போதும் ஏன் வீட்டில் வந்து எனக்காக சண்டைபோட்டான், எப்படியாவது படிக்க வைங்க என அப்பாவிடம் உரிமையாக பேசினான், ஆனால் நமக்கு ஏறல.

அப்புறம் என்னுடன் சிங்கபூருக்கு வந்தான், அங்குதான் நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட எதிரியானோம். பிறகு அவன் அமெரிக்கா சென்றுவிட்டான். ஆனால் இடைப்பட்ட காலத்தில் சில முக்கியமான முடிவுகளை எனக்கு தெரிந்தே எடுத்திருக்கிறான்.

கடந்த ஒருவருடமாக சென்னையில்தான் இருக்கிறான், ஆளே மாறிபோய் முழுக்க சமூக சிந்தனையுடன் இருக்கும் அவனை நினைக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். இப்போதுபோல் ஆரம்பம் முதலே இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருப்பான். சரியான திட்டமிடலும், கடின உழைப்பும் கொண்டவன்.

சென்னையில் சொந்தமாக பிசினஸ் ஸ்கூல் நடத்துகிறான், கூடியவிரைவில் நாங்கள் இணைந்து சில விசயங்களை செய்யலாம் என்றிருக்கிறோம். முடிந்தால் இவனோட ப்ளாக்குக்கு சென்று ஒருமுறை வாசியுங்கள்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

21 ஏப்., 2009

"ராமசாமி அத்தியாயம் -12"

அன்று இரவோடு என் கதை முடிந்திருந்தால், இந்த கதையை நீங்கள் படிக்க நேர்ந்திருக்காது.. என் செய்ய உங்கள் தலைஎழுத்தை யாரால் மாற்ற முடியும். காதல் பற்றிய கதைகளை, காவியங்களை, கட்டுரைகளை, கவிதைகளை படிக்க.. படிக்க அலுப்பதில்லை, பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் காதல் அந்தரங்கமாக நம்முள் எப்படியோ கலந்துவிடுகிறது, அதனால் யார் இதனைப்பற்றி போரடித்தாலும் கேட்க தோன்றுகிறது.. காதல் எப்போதும் ஒருவருக்கு மாதிரி மற்றவருக்கு வாய்ப்பதில்லை, காதலித்த காலத்தில் ஈருடல் ஓருயிராக இருந்தவர்கள் கல்யாணம் முடிந்தபின் விவாகரத்தான கதைகள் உண்டு, அதேபோல் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டவர்கள் வாழ்கிற காலம் முழுதும் காதலித்த கதைகளும் உண்டு, வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் காதல் சுவாரஸ்யமானதுதான்.

அன்று அத்தான் வந்து என்னை எழுப்பி, /என்ன மாப்புளே இந்த நேரத்துலே/ என்றார்.. அவரை பார்த்ததும் நான் அழுதேன், / என்னடா முட்டாளா நீ/ எல்லாரும் ஒருநாள் சாகத்தான் போறோம் சிலபேர் முன்னாடி, சிலபேர் பின்னாடி அவ்வளவுதான், நீ நடந்ததையே நினைச்சுகிட்டிருந்தா! நல்லதில்ல மாப்ள.. ராஜசேகர் சொன்னான் இப்படியே போனா நீ செத்துடுவேன்னு.. கேட்கவே சங்கடமா இருக்கு.. உன் குடும்பத்துல எவ்வளவு பிரச்சினைகள் இருக்கு,முதல்ல உங்க அக்கா பிள்ளைகள பாரு அவங்க ரெண்டு பேரும் உன்னைநம்பிதானே இருக்காங்க, கண்ணனோ குடிகாரன் ஆயிட்டான், அப்புறம் யாரு உங்க குடும்பத்த காப்பாத்தறது.. ஒரு ஆறுமாசந்தான் இருக்கும் அந்த பெண்ணோட பழகி, அவளுக்கு உன்னோட வாழ கொடுத்து வக்கல... அதுக்கு இப்படி தாடி வச்சிக்கிட்டு,.. தண்ணி அடிச்சிட்டு திரியறது நல்லால்ல மாப்ள... சரி நீ செத்துட்டதாவே வச்சுக்க உன் குடும்பத்துக்கு ஏதாவது செஞ்சுட்டு அப்புறம் என்னவேனாலும் செய் மாப்ள.. என நான் மௌனமாக அழுதுகொண்டிருக்க அவர் சொல்லிகொண்டேபோனார்... நான் எதுவும் பேசவில்லை.. கடைசியாக மாப்ளே நாளைக்கு வந்து என்கிட்டே பணம் வாங்கிக்க கொஞ்ச நாளைக்கு மெட்ராசுக்கு போய் இருந்துட்டு வா.. அப்புறம் என்ன செய்றது என முடிவு செய்யலாம் என் டாக்ஸி பிடித்து அனுப்பி வைத்தார்.

வீட்டிற்க்கு வந்து மதுவையும், விசத்தையும் திறந்து வைத்தேன்... அத்தானும், அஞ்சலியும் மாறி மாறி என்னை வதைத்தனர்.. பொழுது விடிய ஆரம்பித்தது, அப்போது எங்கள் வீட்டில்தான் பால் சென்டர் இருந்தது. எல்லோரும் மாட்டை ஓட்டிவந்து பால் கறப்பார்கள், அவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.. குடும்பத்துக்காக கொஞ்சநாள் வாழ்வது என முடிவெடுத்தேன், விசத்தை குப்பையில் கொட்டிவிட்டு, மதுவை குடித்துவிட்டு மாட்டுகொட்டகையிலேயே தூங்கிவிட்டேன். மறுநாள் மதியம்தான் எழுந்தேன், அம்மாவிடம் மெட்ராஸ் போகிறேன் என சொல்லிவிட்டு குளிக்கசென்றேன். அப்பா ஏன் இப்ப மெட்ராஸ் போறே என்றார்.. போய் ஏதாவது வேலைப்பார்ப்பேன் என்றதும், மாலை கிளம்பும்போது நூறு ரூபாய் கொடுத்தார்.. மன்னார்குடி வந்து அத்தானை பார்த்தேன், அவர் எனக்கு ஐந்நூறு ரூபாய் கொடுத்தார். மறுநாள் காலை மெட்ராஸ் வந்தேன், அதிகாலை அக்கா வீட்டு கதவை தட்டியபோது திறந்தவள் காமாட்சி.. அன்றைக்கு தெரியவில்லை அவள்தான் என் மனைவியாக போகிறவள் என்று.. அம்மா மாமா வந்திருக்காங்க என அக்காவை எழுப்பிவிட்டாள்.. அக்கா என்னடா சொல்லாம வந்திருக்க.. என கேட்டுவிட்டு பரவாயில்லை தூங்கு, சாயந்தரம் பேசிக்கலாம் என்று சமைக்க போய்விட்டது, ..

மெட்ராஸ் வந்துவிட்டேனே தவிர என்னால் எங்கும் வேலை தேட முடியவில்லை, இடையில் அக்கா வீட்டுக்காரர் எனக்காக பார்த்து கொடுத்த வேலையால் வந்த பிரச்சினை பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன், ஆறு மாதங்கள் இப்படியே போனது ஒரு கம்பெனியில் வேலைக்கு போவது இரண்டு நாளிலேயே பிடிக்காமல் வந்துவிடுவது இப்படியே போய்க்கொண்டிருந்தது அக்கா இரண்டு நாளைக்கு ஒருமுறை பத்து ரூபாய் தரும் அதற்க்கு புத்தகங்கள் வாங்கிவிடுவேன், மற்றபடி எங்கு போனாலும் நடைராஜாதான். வாரவாரம் செவ்வாய் அன்று தி.நகரில் வேலை செய்த நண்பன் செல்வகுமாரை பார்க்க வருவேன், அவன் ஜி.ஆர்.டியில் வேலை செய்தான், அந்த நேரத்தில் அவன்தான் எனக்கு ஆறுதலாக இருந்தான்..

அண்ணன் பாண்டியன் எனக்கு தமிழ்நாடு தாதா மருந்து கம்பெனியில் வேலை வாங்கி தந்தார், நல்ல வேலை ஆனால் ஒரு வாரம்தான் போயிருப்பேன்.. வீட்டில் இருந்து ஊருக்கு வரும்படி கடிதம் வந்தது.. ஊருக்குபோனால் இருந்த கடைசி நிலத்தையும் விற்றுவிட்டு அண்ணனுக்கு, கடனுக்கு போக அப்பா என் பங்காக எட்டாயிரம் ரூபாய் கொடுத்தார். அப்போது சிங்கப்பூர் போக பதினெட்டாயிரம் வேண்டும், சிகாமணி சித்தப்பா இருக்கிறத கொடு மிச்சத்த சிங்கப்பூர் வந்து சம்பாதிச்சு கொடு என்றார், மலர் வீட்டு அத்தான் ஐயாயிரம் கொடுத்தார். 1992 ஆம் வருடம் மார்ச் 2ஆம் தேதி சிங்கப்பூர் வந்தேன்.

எத்தனையோ அனுபவங்களை இன்றுவரை சந்த்தித்து இருக்கிறேன், ஆனால் இன்றைக்கு ஒரு நல்ல திறமையாளனாக நான் இருப்பதற்கு காரணம் சிங்கப்பூர்தான்.

அங்கு சென்றும் நான் உண்டு ஏன் வேலையுண்டு என இருந்தவரை நன்றாகத்தான் இருந்தேன், ஆனால் பிரச்சினை என் நண்பன் கணேசன் வடிவில் வந்தது, அவனால் எத்தனை பிரச்சினைகள், பொதுவாக நான் யாருக்காவது இரக்கப்பட்டால் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள், இன்று வரையில் யாருக்காவது உதவி செய்துகொண்டுதானிருக்கிறேன், காரணம் ஒருமுறை இப்படி ரவுடித்தனமாக இருக்கிறாயே.. அதை விடுத்து உன்னால் முடிந்த உதவியை எல்லோருக்கும் செய்துபார் அதில் கிடைக்கும் மனநிறைவு எதிலும் கிடைக்காது என அஞ்சலி சொன்னாள், இன்றுவரை அதை பின்பற்றுகிறேன் ஆனால் என்னிடம் உதவி பெற்றுக்கொண்ட அத்தனைபேரும் என்னை குறை சொல்லிவிட்டுதான் பிரிகின்றனர்.

தற்போது யோகா மற்றும் தியானம் பயின்று வருகிறேன், அது என்னை மறுபரிசீலனை செய்யவைத்தது, இப்போதுதான் தெரிகிறது என்னுடய வெளிப்படையான பேச்சு எல்லோரையும் காயபடுத்துகிறது என்பதை, மனதில் பட்டதை சட்டென்று சொல்லிவிடும் குணம் எனக்கு.. அது யாருக்கும் பிடிக்கவில்லை என இப்போதுதான் தெரிகிறது. என்ன செய்ய என்னை மாற்றிக்கொள்ள முயற்சிசெய்கிறேன்..

என் வெளிப்படையான பேச்சுதான் அன்று அவளுக்கு பிடித்தது.. அதே பேச்சுதான் இன்று எல்லோருக்கம் பிடிக்கவில்லை...

14 ஏப்., 2009

"ராமசாமி அத்தியாயம் - 11 "

எனக்கு அடுத்த ஒரு வாரத்தை தள்ளுவது பெரும் சிரமமாக இருந்தது, இப்போது போல் அப்போதெல்லாம் போன் கூட பேசமுடியாது. அவள் அழுதது என் கண்முன் வந்துகொண்டேயிருந்தது, அவளின் நெருக்கத்திற்கு பிறகு நான் தண்ணி அடிப்பதை முற்றாக விட்டுவிட்டதால் நண்பர்களுடன் பழகுவதை தவிர்க்க நூல் நிலையம் போக ஆரம்பித்தேன். மேலும் நண்பர்கள் வற்புறுத்தினால் மஞ்சள் காமாலையை காரணம் சொல்லி தப்பித்துவிடுவேன், அதனால் அவர்களும் என்னை மாலை வேளைகளில் கூப்பிடுவதை தவிர்த்தனர். எனவே எப்போதும் புத்தகங்களுடன் வாழ ஆரம்பித்தேன்.

ஒரு வாரம் கழித்து எனக்கு அவளிடமிருந்து கடிதம் வந்தது, எனக்கு சந்தோசத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை, அந்த கடிதத்தை ஆயிரம் முறையாவது படித்திருப்பேன், அதில் நவம்பர் இருபதாம் தேதி மன்னார்குடி வருவேன் எனவும் மறுநாள் மாலை வழக்கம்போல் கோவிலில் சந்திப்போம் எனவும், வந்து எனக்கு ஒரு சந்தோசமான செய்தி சொல்லப்போவதாகவும் எழுதியிருந்தாள். முடிவில் வித் தவுசண்ட் வார்ம் ஆப் கிஸ்ஸஸ் என எழுதி கையெழுத்து போட்டிருந்தாள். அந்த சந்தோசத்தை எனக்கு எப்படி சொல்லுவது என்று தெரியாமல் தனி உற்சாகத்துடன் நடமாட ஆரம்பித்தேன். பத்தொன்பதாம் தேதி அன்று காலை என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை. கடுமையான ஜுரம் அடித்தது உடனே மன்னார்குடி அழைத்து வந்தார்கள். அங்கு எனக்கு டைபாய்டு என அட்மிட் செய்தார்கள். தொடர்ந்து நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன், எனக்கு இருபத்திஒன்றாம் தேதி அவளை பார்க்கமுடியவில்லையே என்பதுதான் வருத்தமாக இருந்தது. அதனால் நண்பன் ராஜசேகரை விட்டு விசாரிக்க சொன்னேன், அவனும் விசாரித்துவிட்டு அவள் மன்னார்குடி வந்தமாதிரி தெரியவில்லை என்றான்.

ஆனால் என்னை பார்க்க அஞ்சலியின் தோழி சுமதி வந்தாள், வந்து என்னைபார்த்ததும் கதறி அழ ஆரம்பித்தாள், நான் இருந்தது தனி அறை என்பதாலும், காலை பத்துமணிக்கு மேல் என்பதாலும் யாரும் இல்லை, எனக்கு ஒன்றுமே புரியவில்லை, என்ன ஆச்சும்மா, ஏன் அழுவுறே என சமாதானபடுத்தினேன், அவள் அழுகையை நிறுத்தவில்லை, அழட்டும் என மௌனமாக இருந்தேன், மெல்ல அவளை ஆசுவாசபடுத்திக்கொண்டு அண்ணே அஞ்சலி நம்மை எல்லாம் ஏமாத்திட்டு போய்ட்டான்னே.. என தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்,.எனக்குள் எதுவோ உடைந்தது, ..........................................

சுமதி போனபிறகு அப்படியே பைத்தியம் பிடித்தவனாய் அமர்ந்திருந்தேன்.. என்னைப்பார்க்க வந்த நண்பனிடம் அஞ்சலி வீட்டின் முகவரி சொல்லி எப்படியாவது என்ன நடந்தது என விசாரிக்க சொன்னேன்,

பெங்களூரில் பத்தொன்பதாம் தேதி ஊருக்கு கிளம்புவதற்குமுன் கடைசி நேரத்தில் தனக்கு டிரஸ் வாங்க வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டு கிருஷ்ணகுமாரின் அம்மா, மற்றும் அஞ்சலியின் மூத்த சகோதரி, கிருஷ்ணகுமார் என்ற குட்டிபையனுடன் கிளம்பியிருக்கிறார்கள், மெயின் ரோட்டில் சாலையை கடக்கையில் சாலையின் நடுவில் நின்று மறுபுறம் கடக்கையில் அந்த குட்டிபையனை யார் அழைத்துவருகிறார் என தெரியாமல் கடந்துவிட அந்த குட்டிபையனோ போகிற வருகிற கார்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே அங்கேயே சாலைநடுவில் நிற்க, மறுபுறம் கடந்த அஞ்சலி அதனை கவனித்துவிட்டு அவசரமாக சாலையின் குறுக்கே ஓடி அவனை காப்பாற்ற முயன்ற பொது வேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்திரிக்கிறது, அவள் சாகும்போது கடைசியாக சொன்ன பெயர் குமார்....... இதனை நண்பன் வந்து சொன்னபோது நான் அழவேயில்லை, என் உயிரில் கலந்த அவள் இறந்துவிட்டாள், என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தபின், நான் எங்கும் செல்லவில்லை, எந்த நேரமும் வீட்டிலேயே அடைபட்டிருந்தேன், நான் யாருடனும் பேசுவதில்லை, சரியாக சாப்பிடுவதில்லை என நண்பனிடம் அம்மா வருத்தப்பட்டது, அவன் பிடிவாதமாக என்னை வெளியில் அழைத்துசென்றான், அன்று இரவு நிறைய குடித்தேன்.. அத்தனை நாள் இரவுகளில் அன்று இரவுதான் போதையில் தூங்கினேன், அதன்பிறகு குடி என்னுடன் ஒட்டிகொண்டது, குடிக்காமல் என்னால் தூங்க முடியாது, வீட்டிற்கு தெரியக்கூடாது என்பதற்காக மாட்டு கொட்டகையில் தூங்க ஆரம்பித்தேன்...

இப்படி ஒருநாள் நண்பன் செழியனுடன் குடித்தபோது, ஓவராக குடித்துவிட்டு அஞ்சலியை பற்றி புலம்ப அவனோ நீ \"ஏழு சுவரங்களுக்குள்\" என்ற பாட்டு கேட்டிருக்கிறாயா என்றான், அதில் \'எனக்காக நீ அழுதாள் இயற்கையில் நடக்கும்\',\' நீ எனக்காக உணவு உன்ன எப்படி முடியும்\' என்றொரு வரி உண்டு தெரியுமா? என்றான் அதுக்கு இப்ப என்னடா என்றபோது, நீ அஞ்சலியை நெஜமாகவே காதலிச்சியா? என்றான், ஆமாண்டா... அத எதுக்கு கேக்குறே என்றேன். இல்லடா நீ நிஜமா காதலிச்சிருந்தா அப்பவே செத்திருப்பே, ஆனா நீ இப்ப எங்களுக்காக நடிக்கிறே.. உண்மையான காதலா இருந்தா அவளுக்காக நீ செத்திருக்கணும் என்றான்.. என் போதை வடிந்துவிட்டது, வீட்டிற்கு வந்து நெடு நேரம் யோசித்து ஒரு முடிவெடுத்தேன்...

தற்கொலை செய்து கொள்ளவேண்டும், அதுவும் இன்றைக்கு இரவே என முடிவெடுத்தேன்..

மாலையில் மன்னார்குடி சென்று ஒரு பாட்டில் விஷமும், இன்னொரு பாட்டில் பிராந்தியும் வாங்கிகொண்டேன், கடைசியாக ஆத்மநாதன் அத்தானை பார்த்துவிட்டு சென்றுவிடலாம் என அவரைப்பார்க்க சென்டருக்கு போனேன்.. அவர் வீட்டிற்கு சாப்பிட போனதாக சொன்னார்கள், அவருக்காக காத்திருந்தேன்,, என் நினைவுகள் முழுதும் அஞ்சலி மட்டுமே இருந்தாள், இன்னும் சில மணி நேரத்தில் அவளுடன் கலந்துவிடப்போகிறேன், அந்த நினைப்பே என்னை ஒரு ஏகாந்தத்திற்கு இட்டுசென்றது... வகுப்பின் பெஞ்சில் படுத்து கண்மூடினேன் என் கண்களுக்குள் அஞ்சலி சிரித்தாள்... அப்படியே தூங்கிவிட்டேன்........

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் திங்களன்றே வருகிறது ..

"ஐ.நாவின் இரட்டைவேடம்"

சமிபத்திய வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு மேற்க்கத்திய நாடுகளுடன் ஜப்பானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரியாவை பொறுத்தவரை அது தன் சொந்த பாதுகாப்பு கருதியே சோதனை செய்வதாக சொல்கிறது. இதுவரை அது தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதே தவிர அதன்மேல் போர் தொடுக்கவில்லை, ஆனால் அமெரிக்கவோ அத்தனை நாடுகளுக்கும் தான் பெரியண்ணனாக நடக்க முயற்சிக்கிறது, அமெரிக்காவுக்கு ஈரானின் எண்ணெய் வயல்களின்மேல் ஒரு கண், அதன்மேல் போர் தொடுக்க காரணம் தேடிக்கொண்டிருக்கிறது, அத்தனை ஆயுதங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள அமெரிக்கா வடகொரியாவை மிரட்டுகிறது.

இதில் ஐ.நாவோ வடகொரியாவின்மேல் பொருளாதார தடை செய்வதாக எச்சரிக்கிறது. என்ன ஒரு அக்கறை பாருங்கள்.. ஒரு நாடு வெறும் ஆயுத சோதனை செய்தாலே அதன்மீது பொருளாதார தடை விதிப்பதாக சொல்லும் ஐ.நா, முப்பத்துமூன்று வருடங்களாக இன அழிப்பு செய்து கொண்டிருக்கும் சிங்கள அரசாங்கத்திற்கு எதிராக ஏன் குரல் கொடுக்க முடியவில்லை?..

அதுவும் கடந்த ஒரு வருடமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவிக்கிறது, மூன்று இலச்சம் மக்கள் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில் அவர்களுக்கு போதிய உணவு வசதி, மருந்து வசதிகள் அளிக்க தடை செய்து பட்டினியால் சாகிறார்கள். செஞ்சிலுவை சங்கத்தினரை கூட அனுமதிக்காமல், ஊடகங்களையும் அனுமதிக்காமல் வெளிஉலகத்துக்கு தெரியாமல் மொத்த இனத்தையும் நாளுக்கு குறைந்து முன்னூறு பேர் வீதம் கொன்று குவிக்கிறது.

உலகம் பூராவும் இருக்கிற தமிழ் மக்கள் எழுச்சிமிகு போராட்டங்களை தொடர்ந்து நடத்திகொண்டிருக்கிரன்றனர், ஆனால் இவை எதுவும் ஐ.நாவின் காதில் விழவில்லை.சிங்கள அரசான்கதிரர்கு வெறும் அறிக்கைகளை மட்டும் அனுப்பி கொண்டிருக்கிறது, அந்த காகித அறிக்கைகள் அனேகமாக "ங்கோத்தா பய ராசபக்சே" வின் டாய்லெட் பேப்பராக மாறியிருக்கும்.

இதில் நவநீதம்பிள்ளை இந்தியாவிற்கு இலங்கை பிரச்சினை பற்றி சிவசங்கர மேனனுடன் பேசுகிறார். பேசிவிட்டு இருதரப்பும் போர்நிறுத்தம் செய்யவேண்டும் என இன்னொரு டாய்லெட் பேப்பர் அனுப்புகிறார். ஐ.நாவே நீங்கள் யாருக்காக இருக்கிறீர்கள், உங்களுக்கே நீங்கள் செய்வது அபத்தமாக தெரியவில்லையா?..

வடகொரியாவின் மேல் இத்தனை நிர்பந்தங்களை அறிவிக்கும் நீங்கள் ஏன் சிங்கள அரசாங்கத்தை நிர்பந்திக்கவில்லை? ... இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இணைந்து சிங்கள அரசாங்கத்துடன் படுகொலை செய்துகொண்டிருக்கிறது. அதனை வெளிபடையாக அறிந்தும் மனிதாபிமான அடிப்படையிலாவது சம்பத்தப்பட்ட நாடுகளை கண்டிக்ககூடாதா?.

ஒரு இனத்தை முற்றிலும் அழித்துவிட சிங்கள அரசாங்கம் அதன் அடுத்த அஸ்திரமாக கெமிக்கல் குண்டுகளை பயன்படுத்த துவங்கியிருக்கிறது. குண்டு விழுகின்ற இடத்தில் எந்த உயிரினமும் வாழ முடியாது என்று சொல்கிறார்கள், அதனை ஆதாரத்துடன் புலிகள் வெளியிட்ட பிறகும் ஐ.நா சிங்கள அரசின்மேல் பொருளாதார தடை விதிப்பதாக சொல்லவில்லை.

மேலும் ஐ.நாவின் எந்த கோரிக்கையையும் சிங்கள அரசாங்கம் இதுவரை ஏற்கவில்லை, ஆனாலும் சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் சிங்கள அரசிற்கு தொடர்ந்து ஆயுத, மற்றும் பண உதவிகளை அளிக்கிறது, இந்தியா ஒருபடி மேலேபோய் ஆள் உதவியும் அளிக்கிறது, தன் இன விடுதலைக்காக போராடும் அமைப்பை எல்லா நாடுகளும் தடை செய்துவிட்டதால், அந்த போராட்டம் தீவிரவாத செயலாக பார்க்கப்படுகிறது, எல்லா போராட்டங்களையும் தீவிரவாத போராட்டமாக பார்க்கமுடியாது.

இப்போது ஈழதமிழர்கள் உலகத்தின் கரங்கள் தங்கள் கண்ணீரை துடைககாதா? ஏன் ஏங்குகிறார்கள்.அவர்கள் மொத்தமாக மடிவதற்குள் என்னசெய்யப்போகிறோம்? .......

12 ஏப்., 2009

"ஈழமும், தமிழ் எழுத்தாளர்களும்"

பற்றி எரிந்துகொண்டிருக்கிறது ஈழம், ஆனால் இங்குள்ள தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம் அதில் குளிர்காய்கிறார்கள். இணையத்தில் நாம் எழுதாவிட்டால் இதைப்பற்றி யாரும் மூச்சுவிட மாட்டார்கள். தமிழ் வார இதழ்களில் விகடன்,குமுதம் மற்றும் நக்கீரனை தவிர வேறு யாரும் எழதவில்லை நாளிதழ்களில் தந்தி, மாலைமலர் தவிர வேறு எதுவும் எழுதவில்லை.

இதில் ஹிந்து, தினமலர், துக்ளக் போன்றவை இன அழிப்புக்கு துணைபோகின்றன, தினகரனோ புலிகள் செத்தால் எழுதுகிறது, தமிழன் செத்தால் எழுதுவதில்லை. ஊடகங்களில் சன் நெட்வொர்க்கும் , கலைஞர் நெட்வொர்க்கும் பெயருக்கு தகவல்கள் வெளியிடுகிறார்கள், மக்கள் தொலைகாட்சி மட்டும் தொடர்ந்து செய்திகளிலும், தொடராகவும் ஒளிபரப்புகிறார்கள்.

ஆனால் தமிழை வாழவைப்பேன் என்ற வைரமுத்துவோ எந்திரனுக்கு பாட்டெழுத போய்விட்டதால் ஒன்றிரெண்டு முறை பேசியதோடு சரி கலைஞரின் ஓட்டுக்கு வசனம் எழுத போய்விட்டார். மற்றபடி வாலி, அப்துல் ரகுமான் போன்ற துதிபாடிகள் பொற்கிழி( கலைஞர் பத்து ரூபாய்தான் தருவார்) வாங்கிக்கொண்டு கவியரங்கத்தில் புகழ் பாடுகின்றனர். ஏதோ தாமரை மட்டும் முழு அளவில் போராடுகிறார், அப்புறம் இளம் கவிஞர்கள் முத்துகுமார், கபிலன், பா.விஜய் போன்றவர்கள் கைதுக்கு பயந்து வாய்மூடி மௌனமாகிவிட்டார்கள்.

அப்புறம் தமிழில் எத்தனை எழுத்தாளர்கள்...., யாரும் இதுவரை வாய்திறக்கவில்லை, தனிப்பட்ட முறையில் புலிகளை பற்றியும் பிரபாகரனை பற்றியும் எழுதி காசு பார்கிறார்களே தவிர, இந்த உக்கிர கொடுமை பற்றி இவர்கள் யாரும் எழுதாதது பெரும் வருத்தத்தை அளிக்கிறது, இந்த அளவுக்கா சொரணை கெட்டு போயிருப்பார்கள் சாருவோ ஒருபடி மேலேபோய் நான் எழுதினால் என் வீட்டில் குண்டு போடுவார்கள் என்கிறார், யாரைப்பற்றி எழுதுவீர்கள்?, உங்கள் வீட்டில் குண்டு போடுமளவிற்கு அதில் என்ன எழுதபோகிறீர்கள்?..

கலைஞர் ஒருமுறை நெடுமாறன் அய்யாவை காகிதப்புலி என்றார், உண்மையில் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள்தான் காகிதப்புலிகள், உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா.. ஈழ ஆதரவு என்பது புலிகளின் ஆதரவாக ஏன் பார்க்கிறீர்கள், இன்றுவரை சிங்கள ராணுவத்தை தவிர அப்பாவி சிங்கள மக்களை அவர்கள் தாக்குவதில்லை, ஆனால் சிங்கள ராணுவமோ தமிழன் ஒவ்வொருவனையும் புலிகளாக நினைத்து சுட்டுகொல்லுகிறதே, அதிலும் குழந்தைகள் என்னய்யா பாவம் செய்தார்கள், தமிழனுக்கு பிறந்தது பாவமா? அந்த அப்பாவி பிஞ்சுகளின் மரண காணொளிகள் இணையம் முழுவதும் கொட்டிகிடக்குதே அதனை நீங்கள் காணுவதில்லையா?...

உலகில் வேறு எந்த இனமக்களும் சந்திக்காத பேரவலம் முப்பத்திமூன்று ஆண்டுகளாக தமிழினம் சந்திக்கிறதே, அதற்க்கு நாம் மௌனமாக இருக்கிறோமே உங்களுக்கு உறுத்தவில்லையா, தினசரி அதனை படித்துவிட்டு உங்களால் எப்படி ரஜினிக்கும், விஜய்க்கும் பாட்டெழுத முடிகிறது?, எப்படி உங்களால் கட்டுரைகள், கதைகள் எழுத முடிகிறது?.

இந்நேரம் பாரதியும், பெரியாரும் இருந்திருந்தால் சும்மா இருந்திருப்பார்களா? பணம் என்னும் மாயப்பேய் உங்களை இப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது, நாளையே ஈழம் மலர்ந்தால் நீங்கள் அங்கும் போய் பேசுவீர்கள்.. கல் தோன்றி மண்தோன்றா.. என அடுக்குமொழியில் பொழிவீர்கள் அவர்களும் தமிழன்தானே எல்லாவற்றையும் வாய்பிளந்து கேட்பான், ஏனென்றால் இன்றைக்கு தமிழ் சினிமா இத்தனை பிரபலம் ஆனதற்கு புலம் பெயர்ந்த அவர்கள்தானே காரணம்.

ஆனால் அப்போது நீங்கள் அமரபோவது தமிழர்களின் கல்லறைகளின்மேல் என்பதை மறந்துவிடுவீர்கள், நேற்று கேப்டன் சர்வமத பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார், சாவு வீட்டில் ஒட்டு வாங்க நினைக்காதீர்கள் கேப்டன்... இப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாளில் அஞ்சலி கூட்டம் நடத்த வேண்டியதுதான்...

ஈழமக்களை சிங்களனிடமிருந்து காப்பாற்றுகிறாயோ இல்லையோ...
கடவுளே..... தயவுசெய்து தமிழக அரசியல்வாதிகளிடம் இருந்து காப்பாற்று.....

9 ஏப்., 2009

"காங்கிரஸ், திமுக, சிறுத்தைகளின் அசிங்க அரசியல்"

ஈழத்தின் சமீபத்திய நிகழ்வுகள் ஆழ்ந்த கவலை அளித்துக்கொண்டிருக்கின்றன.. தொடர்ந்த படுகொலை செய்திகளால் நாம் ஒருமாதிரி மரத்துபோய் இருந்தாலும், தற்போது அங்கிருந்து வரும் செய்திகள் இலங்கையில் தமிழினத்தை இந்திய அரசே அழிக்கிறார்கள் என ஆதாரபூர்வமாக பிரான்ஸ் செய்தியாளர்கள் வெளியிடும்போது இந்திய அரசின் குறிப்பாக சோனியாவின் தனிப்பட்ட வெருப்பின்பால் நிகழும் இந்த படுகொலைகள், நம்மை இந்தியாவின் இறையாண்மை பற்றி மறுபரிசீலனை செய்ய வைக்கிறது.

இங்கு தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அடிக்கும் கூத்துகள் நாளுக்குநாள் அதிகமாகிறது. இவர்கள் ஈழபிரச்சினை பற்றி ஒன்றுமே பேசாமல் கூட இருக்கலாம், ஆனால் போரை நிறுத்தசொல்லி போராடுவதாக இவர்கள் சொல்லுவது, சில சமயம் இவர்கள் கீழ்ப்பாக்கத்தில் இருந்து தப்பி வந்தவர்களோ என யோசிக்கவைக்கிறது.

ஐயா கலைஞர் அவர்களே நீங்க அங்கம் வகிக்கும் மத்திய அரசுதானே படைகளை அனுப்பி உள்ளது, பின் யாருக்காக போராடுகிறீர்கள், மேலும் எல்லோருக்கும் தந்தி அடிக்கிறீர்கள், ஏனையா மொபைல் ரீச் ஆகலியா? . நாங்கல்லாம் சொரணை கெட்டுபோய் ரொம்ப நாளாச்சு, இன்னமும் எங்களுக்கு இன உணர்வு இருக்குன்னு நம்புறீங்களா? .. பேசாம எலக்சன் வேலைய பாருங்க.. ரெண்டு ஓட்டாவது விழும்..

அண்ணன் திருமாவுக்கு.., எங்கண்ணே போச்சு உங்க வீரமெல்லாம், சும்மா போராட்டம் பண்ணிட்டு இருக்காதிங்க, அதுக்கு பதிலா சோனியா, தங்கபாலு கூட மேடையில ஒண்ணா நின்னு பேசும்போது அம்மா கட்சிகாரங்களுக்கு போட்டியா அன்னையை எப்படியெல்லாம் புகழலாம்ன்னு ரெடி பண்ணி வச்சிங்கன்னா உபயோகமா இருக்கும், அத விட்டுட்டு பிரபாகரனுக்கு ஆபத்துன்னு அறிக்கை விடுறீங்க, அவருக்கு என்ன ஆனா உங்களுக்கு என்னங்க, போய் அன்னையின் கரத்தையும், அண்ணனின் கரத்தையும் பலப்படுத்துங்க,,

தங்கபாலுவுக்கு.., என்ன ஆச்சு சார் திடீர்ன்னு நீங்களும் போராட்டத்தில் கலந்துக்குவோம்ன்னு சொல்லிட்டிங்க.. ஒட்டு வாங்கனுன்னா எதையாவது செய்றேன்னு அறிவிங்க... அதவிட்டுட்டு சின்னபுள்ளைதனம்மா இப்பிடியெல்லாம் அறிவிக்கலாமா? அங்க யாரு செத்தா உங்களுக்கு என்னங்க... அங்க உள்ள சிங்களவனுக்கு ஆயுதமும், ஆளும் கொடுக்கிறதும் உங்க அரசாங்கம்தானங்க அவங்கள நிறுத்த சொல்லவேண்டியாதுதானே.....

அய்யாக்களே வர்ற எலக்சன்ல உங்கள மட்டும் நாங்க செயிக்க வச்சுட்டோம்ன்னா நீங்க தாராளமா அங்க போய் குண்ட போடலாம், ஏன் தமிழ்நாட்டுலேயே ஈழம் பத்தி பேசுனா தேசிய பாதுகாப்பு சட்டத்துல போடலாம்... ஆனா இலங்கை அரசை நிர்பந்திக்க முடியாதுன்னு ஒரு தடவ அன்பழகன் சொன்னார், இப்ப அவரும்தானே போராட்டத்துக்கு வருவாரு?...

அப்புறம் மக்களே மறக்காம உங்க ஓட்ட இவர்களுக்கு குத்திடாம பாத்துகங்க...
அநேகமா நாளைக்கு என்னை தேடி ஆட்டோக்கள் வந்தா... இத நான் எழுதவே இல்லை என மறுப்பு அறிக்கை கொடுக்க வேண்டி வரும் அதனால இப்பவே சொல்லிர்றேன்...

இந்த கட்டுரையில் வரும் பெயர்கள் மற்றும் விபரங்கள் என் சொந்த கற்பனையே.. யாரையும் நிகழ்காலம், நடந்தகாலம் அல்லது எதிர்காலத்தில் குறிக்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்...

அப்பாடா கேஸ் போட்டா சமாளிச்சுக்கலாம்....