30 நவ., 2011

அன்பின் இலையுதிர்க்காலம்...

உன் துரோகங்களை மன்னிக்க முடியாதபடி 
உன் அன்பையும் நிராகரிக்க முடியாதபடி 
கடந்து போகின்றது காலம் 
உன் துரோகங்கள் நினைவுக்கு வரும்போதெல்லாம் 
உன் அன்பு உன்னை மன்னிக்கும்படியும்
உன் அன்பு நினைவுக்கு வரும்போதெல்லாம் 
உன் துரோகங்கள் உன்னை நிராகரிக்கும்படியும் 
அந்தந்த தருணங்களில் 
உன்னை நேசித்தும் 
நிராகரித்தும் 
கடந்து போகின்றது காலம் 
நம் இருவரில் 
நீதான் முதலில் அன்பையும் 
நீதான் முதலில் துரோகத்தையும் வழங்கினாய் 
முதலில் அன்பாய் இருந்த நான் 
துரோகங்களின் பின்னர் உன்னை விலக்கி வைத்தாலும் 
நம் நண்பர்களிடம் 
என்னைபற்றி நீ பெருமையாக சொல்லும்போது 
பெருமிதமாகவும் 
தப்பாக குற்றம் சுமத்தியதை அறிந்து 
அவநம்பிக்கைக்ளுடனும்
கடந்து போகிறது காலம் 
உன் வெற்றியின் எக்காளச் சிரிப்பில் 
எரிந்து போனது ஒரு காதல் 
இப்போதும் 
என்னைக் கடந்து செல்லும் 
உன் மனைவியின் வறண்ட புன்னகையில் 
கடந்து போகிறது 
நம் அன்பும் 
உன் துரோகங்களும் 
எங்கள் காதலும்...

28 நவ., 2011

இயலாமை..


வறுமையின் நிழல் படியாத ஒருவன் சினிமா ஆசையில் சென்னை வந்தால் எத்தனை நாள் தாக்குப்பிடிப்பான் எனத் தெரியாது. எனது நெருங்கிய நண்பர் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் சினிமா ஆசையில் சென்னை வந்து, இந்த நரக வாழ்வின் சுமை தாங்காது மீண்டும் கிராமத்துக்கே வந்துவிட்டார். இன்னொரு நண்பன் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதலாவதாகவும், அதன்பின் காந்தி கிராமத்தில் படித்து கோல்டு மெடல் வாங்கியவனுமான அவன் ஒரு நாள் இதேபோல சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து இன்றுவரைக்கும் திருமணம் ஆகாமல் போராடிக் கொண்டிருக்கிறான். இளங்கோ என பெற்றோர் வைத்த பெயரை எண்ஜோதிடப்படி வர்கோத்தமன் என மாற்றிக்கொண்டான். அதென்னடா வர்கோத்தமன் என்றால் இரட்டை வெற்றிகளைப் பெறுபவன் எனச்சொன்னான். மேலும் தன் ஜாதகப்படி சினிமாவிலும், அரசியலிலும் வெற்றிபெரும் வாய்ப்பு இருப்பதாக சொல்வான். அவனைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு வருத்தமாக இருக்கும்.

இவன் மட்டுமன்றி சமீபத்தில் விகடனில் ராஜு முருகனின் "வட்டியும் முதலும்" கட்டுரையில் சொன்னதுபோல சினிமாவுக்காக அல்லது சினிமாவால் வாழ்வினைத் தொலைத்தவர்கள் ஏராளம். எனது நெருங்கிய நண்பர் சிங்கப்பூர் துரைராஜ் கடந்த இருபது வருடமாக கிடைக்கும் சின்ன சின்ன வேடங்களுக்காக கைக்காசை செலவழித்துதான் வந்து போகிறார். சமீபத்தில் வெளிவந்து யாருக்கும் தெரியாது ஓடிப்போன "கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை" படத்தில்தான் அதிக நேரம் தலைக்காட்டியிருப்பார். 

ஆனால் சினிமா என்று மட்டுமல்லாது தொழில் முடங்கி பாதிக்கப்பட்ட எத்தனயோபேர் தினமும் காணாமல் போய்க்கொண்டுதான் இருக்கின்றனர். வங்கிகளில் அல்லது தனி நபர்களிடம் கடன் வாங்கி அதனை திருப்பி அடைக்க முடியாமல் குடும்பத்துடன் தலைமறைவாகின்றனர். எங்கோ கிராமத்தில் பிறந்து கனவுகளுடன் வெளிநாடு செல்லும் ஒருவன் அங்கு சிரமப்பட்டு சம்பாதித்து அனுப்பிய பணம் இங்கு குடும்பத்தினரால் செலவு செய்யப்பட்டு அவன் திரும்ப வந்து பார்க்கும்போது மறுபடியும் கடன் வாங்கப்பட்டு அல்லது பாதி கட்டிய வீடு முடிப்பதற்காய், சகோதரிகளின் திருமணத்திற்காய் மீண்டும் வெளிநாடு செல்ல நேர்கிறான். இப்படி எல்லா இடங்களிலும் கடனால், லட்சியத்தால், துரோகங்களால் தன் வாழ்வை தொலைத்தவர்களை பார்க்கும்போது எளிமையாய் அட்வைஸ் செய்து அனுப்பி விடுகிறோம். தன் இருப்பை தொலைத்த அவர்களால் மறுபடி வாழ்வை தொடங்குவதற்கான எல்லா வழிகளும் அடைக்கப்பட்டால் அவன் தற்கொலை முடிவை எட்ட நேர்கிறது.

ஒரு நாள் சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு விரைவு டீலக்ஸ் பேரூந்தில் ஊருக்கு போய்க்கொண்டிருந்தேன். பகல் நேரப்பயணம் என்பதால் நடத்துனர் தாம்பரம் வரை டிக்கெட் வழங்கவில்லை. தாம்பரம் தாண்டியதும் டிக்கெட் வழங்கிக்கொண்டிருந்தபோது ஒருவர் நடத்துனரிடம் சண்டைபோட ஆரம்பித்தார். அது டீலக்ஸ் சொகுசு பேரூந்து என்பதால் கட்டணம் அதிகம். ஆனால் தான் சாதாரண பேரூந்து என நினைத்து ஏறிவிட்டேன். அதனால் தானும் அவருடன் வந்த அவருடைய மகளும் இறங்கிக்கொள்வதாக சொன்னதும் நடத்துனர் தாம்பரம் வரைக்குமான டிக்கெட் வாங்கித்தான் ஆகவேண்டும் எனச்சொல்லி டிக்கெட்டை கிழித்துவிட்டார். ஆனால் அந்த  நபரோ தன்னிடம் கும்பகோணம் வரை சாதாரண பேரூந்தில் செல்லத்தான் பணம் வைத்திருந்தேன். இந்த டிக்கெட் வாங்கிவிட்டால் வேறு பேரூந்திலும் போக முடியாது என சண்டை பிடிக்கவே, பேரூந்தில் இருந்த நான் உட்பட சில நபர்கள் அவர்கள் இருவருக்கான கூடுதல் கட்டணத்தை கும்பகோணம் வரைக்கும் செலுத்துவதாக சொல்லியும் பிடிவாதமாக மறுத்துவிட்டு தாம்பரம் வரைக்குமான டிக்கெட்டை வாங்கிக்கொண்டு இறங்கிவிட்டார். அதனைப் பார்த்த எனக்கு ஏழையாக இருந்தாலும் அந்த நபரின் தன் சுயகவுரவத்தின்மேல் வைத்திருந்த மரியாதையை நினைத்து பெருமையாக இருந்தது.

நான் தினமும் அலுவலகத்துக்கு பயணம் செய்யும் பாதையில் சமீபமாக திருமங்கலம் சிக்னல் அருகே ஒரு பையன் நின்றுகொண்டு புழல் போக பைக் ஒட்டுபவர்களிடம் உதவி கேட்ப்பான். நான் அவ்வழியே போவதால் அவனை ஏற்றிக்கொள்வேன். புழல் அருகே ஒரு அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் அவன் வீட்டார் செங்குன்றத்தில் இருந்து முகப்பேருக்கு வீடு மாறிவிட்டதால் தன்னுடைய இலவச பஸ் பாசை பயன்படுத்த முடியவில்லை என்றும். சமீபத்தில் உயர்த்தப்பட்ட பேரூந்து கட்டணத்தால் தனக்கு வீட்டில் அதிகமாக தேவைப்படும் காசை கொடுக்க இயலவில்லை என்பதால் இப்படி தினம்தினம் பைக் ஒட்டுபவர்களிடம் உதவி கேட்டுப் போவதாக சொன்னான். இந்த வருடப் படிப்பு முடிந்தவுடன் அடுத்தவருடம் முகப்பேர் பள்ளியில் சேர்ந்துவிடுவேன் என்றான். உனக்காக நான் பெரியவர்களுக்கான பஸ் பாஸ் வாங்கித்தரவா? என்றேன். இல்லைன்னே வீட்டுல திட்டுவாங்க என்றான். 

நம் அரசாங்கத்தை நிர்வகிக்கும் முதல்வர், அமைச்சர் பெருமக்கள். உயர் அதிகாரிகள் ஒருவாரம் பேரூந்தில் பயணம் செய்தால் தெரியும் அடித்தட்டு மக்களின் வாழ்வின் அவலங்களை. ஆனால் கோமான்கள் எப்போதும் பாதுகாப்பு வளையத்துக்குள் வருவதாலும். மத்திய அமைச்சர் சசிதரூர் ஒருமுறை மலிவு விமானப் பயணங்களையே மாட்டு தொழுவம் என கிண்டலடித்து பேசியதும், நாம் ஒருகாலும் மக்களை புரிந்துகொண்டு அதிகாரம் செய்யும் ஆட்சியாளர்களைப் பெறப்போவதில்லை என்பதையே காட்டுகிறது.

வாழ்க இந்திய ஜனநாயகம்!!!

27 நவ., 2011

நாங்கள் தமிழர்கள்...


வந்தாரை வாழவைப்போம் 
"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்போம் 
வீரம் 
அன்பு 
மானம் 
இரக்கம்
எங்களின் மாண்பு..

எங்களிடம் எல்லாம் இருந்தது 
உலகின் உன்னத இனங்களுக்கு நிகராக 
வியாபாரம் 
கல்வி 
கலை
இலக்கியம் 
மருத்துவம் 
ஏராளம் இருந்தது 
மிச்சமும் இருக்கிறது..

வேலு நாச்சியாரும் 
பூலித்தேவனும் '
இராசராச 
இராசேந்திரனும் 
இப்போது பிரபாகரனும் 
எங்கள் வீரத்தின் வித்துக்கள்..

மண்டியிடாத மானம் 
புறமுதுகிடாத வீரமும் கொண்டவர்கள் 
முதுகில் குத்தும் 
சகோதர துரோகத்தை 
வழி வழியாக பார்த்தவர்கள்..

அன்பு எங்களது மொழி 
அறிவு எங்களது மருத்துவம் 
ஆற்றல் எங்களது கலை 
மொழி கடந்த அன்பும் 
இனம் கடந்த கலையும்
நாடு கடந்த அறிவியலையும் மதிப்பவர்கள் நாங்கள்..

இனத்தை இனத்தானே 
காட்டிக்கொடுத்தும் 
இனப்பெண்களை
நடுச்சாலையில் கற்பழித்தவனுக்கு 
ஆதரவுக் குரல் கொடுத்தவனும் 
இனப்பேடிகளாக மாறிப்போனான் தமிழன் இன்று..

ஆனாலும்
இந்தக் களைகள் ஒரு நாள் அழியும் 
மாவீரர்களை பெற்றெடுத்த 
எம் தாய்களே 
நமக்கான நமது மண் 
கிடைத்தே தீரும் 
நாங்கள் தமிழர்கள் 
இலட்சியங்கள் எங்கள் ரத்தத்தால் 
எழுதப்பட்டவை 
அவை 
இம்மண்ணில் உதிர்ந்தபோதும் 
விதைகளாய்த்தான் விழும்.. 

நாங்கள் தமிழர்கள்...

26 நவ., 2011

தலைவன்...

இருக்கிறான் தலைவன்
பிரபாகரன்
நீ நம்படா நம்பு!

ஈழத் தமிழினம் வாழப்
போர்க்களம் கிளம்படா கிளம்பு!

தன் மானத் தமிழரின்
தலைமையில் போர் தொடக்கு!

சிங்கள வெறியன்
திமிர் அடக்கு!

ஈழம் தமிழர்கள் தாய்மண்
இல்லையாம் மகிந்தா குதிக்கிறான்!

இறந்து விழுந்த நம் தமிழர்
பிணங்களை காலால் மிதிக்கிறான்!

காலம் அழைக்குது!

ஈழம் அழைக்குது!

கடலைத் தாண்டுவோம்!

களத்திலே ஈழ நிலத்திலே
நாமும் நெருப்பைத் தூண்டுவோம்!

சிறுத்தை படை ஈழப் புலிகள் படை
இரண்டும் ஒன்றுதான் கிளம்பு!

சினந்து புயல் நெஞ்சில் சுமந்து
கிளம்படா!சிதறட்டும் கொழும்பு!

வெறுத்து வாடா உன் உயிரை
நெஞ்சிலே புயலைத் தூக்குவோம்!

வெறியர் சிங்களர் கொடியர்
சூழ்ச்சிகள் சிதறத் தாக்குவோம்!

உலகில் என்றைக்கும் புலிகள்
ஓய்ந்ததாய் வரலாறில்லையே!

உறுமி எழும்கடல்
அலைகள் ஓயுமா?

இல்லை!
இல்லையே!
கலகம் இல்லாமல்
உலகம் திருந்தாது!

களப்போர் ஆடுவோம்!
கயவர் சிங்களர் படையை
வென்று நாம் வாகை சூடுவோம்!

- காசி ஆனந்தன்

25 நவ., 2011

புகைப்படத்தில் சிரிப்பவள்...


அடர்த்தியாய் பூமியை நனைக்கும் 
மழை மேகமென இருப்பாள் அவள்,
அவ்வளவு கருப்பு 
அவ்வளவு அழகு 
அழகு கருப்பு என்பார்கள் 
அவளை என் ஊரார்கள்..

நான் சிவந்த மாநிறம் 
அதனால் சற்று கூடுதலான பெருமைகளை உடையவன் 
ஆனாலும் 
அவளை எனக்குப் பிடிக்கும் 
"வெறுமனே பிடிக்கும் என்று சொல்வதைவிட 
காதலிக்கிறேன் என்று சொல்லேன்" என்பான் செல்வம்
"அவளைப் போயாடா? " என்றாலும் 
அவள்தான் எனக்கென முடிவு செய்தவன் நான்..

ஒன்றிரண்டு வாத்தியார்கள் கூட 
அவளை காதலிக்க முயற்சிப்பதாக குமார் சொன்னான்.
அதில் எனக்கு பெருமிதமே 
ஏனெனில் அவளும் என்னை காதலித்தாள்!
கடிதங்கள் 
முத்தங்களாய் மாறும் அளவு
முன்னேறியது எங்கள் காதல்..

பள்ளி வளாகம் தாண்டி 
ஊருக்குள்ளும் எங்கள் காதல் நெருப்பு பற்றிக்கொள்ள 
குலப்பகையை காரணம் காட்டி 
அவசரமாய் 
அவளது குடிகாரத் தாய்மாமனுக்கு கட்டிவைத்தனர்..

இப்போதும் 
எப்போதாவது 
நினைவுகளில் என்னை மீட்டெடுக்கும்போது
எங்கள் பள்ளி புகைப்படத்தில் இருக்கும் 
அவள்தான் ஆறுதலாய் உடனிருப்பாள்
அந்தக் கருப்பு வெள்ளை புகைப்படத்தில் 
எனக்குப் பக்கத்தில் 
அவள் மனதைப்போலவே 
வெள்ளையாய் சிரிப்பாள்
தன் திருமணத்துப் பிறகு 
எப்போதும் சிரிக்க மறந்து போன அவள்.. 

குப்பைத் தொட்டியருகே...


நீங்கள் பார்ப்பதற்கு முன்பிருந்தே 
அது 
அங்கேதான் இருந்தது 
நீங்கள் நகர்ந்தபின்னரும் 
அது 
அவ்விடத்தில்தான் இருக்ககூடும் 
எனினும் 
கூடுதலாக 
உங்கள் மனதின் சொல்ல முடியாத 
துயரங்களை 
எழுப்பியிருப்பதால் 
உங்களின் 
சில நாட்களை 
அல்லது 
இரவின் கனவுகளை 
அது ஆக்கிரமிக்கக்கூடும்..

நீங்கள் பார்த்த 
இன்னும் ஏராளமானோர் பார்த்த 
அது 
பல வருடங்களுக்கு முன்பு 
ஒரு அழகியாகக் கூட இருந்திருக்கலாம்
பலராலோ 
அல்லது 
ஒருவராலோ 
மறைக்கவேண்டியதை 
மறைக்க முயலும் 
குறைந்தபட்ச மிச்சமிருக்கும் 
நாகரீகத்தை 
தக்கவைத்திருக்கும் உள்ளுணர்வுடன் 
இருக்கும் அவளை 
தினமும் ஒரு தேநீர் 
தரும் 
தேநீர்க் கடைக்காரர் உள்ளிட்ட 
அனைவரும் 
அது என்றுதான் அழைக்கின்றனர்..

காலம் 
அவள் நினைவுகளை அழித்த மாதிரியே 
அவள் பெயரையும் அழித்துவிட்டது
ஏன்? எப்போதும்!
குப்பைதொட்டிகளை அடுத்து 
தூங்குகிறாள் என  
அவள் அறியாத அவளை 
யாராலும் அறியமுடியவில்லை..

24 நவ., 2011

பன்கர் ராய் - இன்னொரு மகாத்மா...

நாம் தினம்தினம் இந்த வீணாய்ப்போன அரசியல் தலைவர்களின் வாய்சவடால்களை கேட்டு கேட்டு மரத்துப்போன மூளைகளுடன் வாழ பழகிவிட்டோம். ஆனால் தான் பிறந்த இந்த தேசத்திற்கு சரியான வழிகாட்டவேண்டும் என நினைத்த ஒரு மனிதர் அதனை செயலிலும் காட்டியிருக்கிறார். சாதிப்பதற்கு எதுவும் தடையில்லை என சாதித்து காட்டியிருக்கும் இந்த மாமனிதரை போல நூறு பேர் இருந்தால் விவேகானந்தர் கண்ட கனவு நிச்சயம் நிறைவேறும்...

தொடர்புடைய சுட்டிகள்:

http://en.wikipedia.org/wiki/Bunker_Roy
http://www.barefootcollege.org/
http://itc.conversationsnetwork.org/shows/detail783.html


in tamilnadu:
Organisation: League for Education and Development (LEAD), established in 1995
State: Tamil Nadu
Contact Person: N. Radha
Postal Address: 8/40, Ist Street, Sri Ramapuram, (Rayar Thoppu), Srirangam, Trichirapalli- 620006





வீடியோவின் ஆங்கில உரை :
the complete script

So in 1965, I went to what was called the worst Bihar famine in India, and I saw starvation, death,people dying of hunger, for the first time. It changed my life. I came back home, told my mother, "I'd like to live and work in a village." Mother went into a coma. (Laughter) "What is this? The whole world is laid out for you, the best jobs are laid out for you,and you want to go and work in a village? I mean, is there something wrong with you?" I said, "No, I've got the best eduction. It made me think. And I wanted to give something back in my own way.""What do you want to do in a village? No job, no money, no security, no prospect." I said, "I want to live and dig wells for five years." "Dig wells for five years? You went to the most expensive school and college in India, and you want to dig wells for five years?" She didn't speak to me for a very long time,because she thought I'd let my family down.
But then, I was exposed to the most extraordinary knowledge and skills that very poor people have,which are never brought into the mainstream --which is never identified, respected, applied on a large scale. And I thought I'd start a Barefoot College -- college only for the poor. What the poor thought was important would be reflected in the college. I went to this village for the first time.Elders came to me and said, "Are you running from the police?" I said, "No." (Laughter) "You failed in your exam?" I said, "No." "You didn't get a government job?" I said, "No." "What are you doing here? Why are you here? The education system in India makes you look at Paris and New Delhi and Zurich; what are you doing in this village? Is there something wrong with you you're not telling us?" I said, "No, I want to actually start a college only for the poor. What the poor thought was important would be reflected in the college."
So the college works following the lifestyle and workstyle of Mahatma Gandhi. You eat on the floor, you sleep on the floor, you work on the floor. There are no contracts, no written contracts. You can stay with me for 20 years, go tomorrow. And no one can get more than $100 a month. You come for the money, you don't come to Barefoot College. You come for the work and the challenge, you'll come to the Barefoot College. That is where we want you to try and create the ideas. Whatever idea you have, come and try it. It doesn't matter if you fail. Battered, bruised, you start again. It's the only college where the teacher is the learner and the learner is the teacher. And it's the only college where we don't give a certificate. You are certified by the community you serve. You don't need a paper to hang on the wall to show that you are an engineer.
Every five years we have an election. Between six to 14 year-old children participate in a democratic process, and they elect a prime minister. The prime minister is 12 years old. She looks after 20 goats in the morning, but she's prime minister in the evening. She has a cabinet, a minister of education, a minister for energy, a minister for health. And they actually monitor and supervise150 schools for 7,000 children. She got the World's Children's Prize five years ago, and she went to Sweden. First time ever going out of her village.Never seen Sweden. Wasn't dazzled at all by what was happening. And the Queen of Sweden, who's there, turned to me and said, "Can you ask this child where she got her confidence from? She's only 12 years old, and she's not dazzled by anything." And the girl, who's on her left, turned to me and looked at the queen straight in the eye and said, "Please tell her I'm the prime minister."

...