21 அக்., 2013

கேப்டன் பிலிப்ஸ் (Captain Philips)...


நாம் அடிக்கடி செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் படிக்கும், பார்க்கும் சோமாலிய கடற்கொள்ளைகள் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் “கேப்டன் பிலிப்ஸ்". Forrest gump, Cast Away , The Terminal, Catch me if you can, Cloud Atlas போன்ற ஏராளமான அற்புதமான படங்களில் நடித்த Tom Hanks இப்படத்தில் கேட்டன் ரிச்சர்ட் பிலிப்ஸ் ஆக வருகிறார். அவருக்குக் கிட்டதட்ட ஈடுகொடுக்கும் விதமாக மூஸ் எனும் கதாபாத்திரத்தில் ஆப்பிரிக்கரான பர்கத் அப்டி. மற்றக் கடற் கொள்ளையயர்களாக நடிக்கும் மூவரும் படத்தைப் பரபரப்பாகக் கொண்டு செல்ல உதவியிருக்கிறார்கள்.

இப்படமானது ‘Captain’s Duty: ‘Somali Pirates, Navy Seals and Dangerous Days at Sea’ என்ற நாவலைத் தழுவி எடுக்கபட்டுள்ளது. படத்தின் உண்மையான கதாநாயகன் அமெரிக்காதான். தங்கள் நாட்டு பிரஜை ஒருவருக்காக நேவியை இறக்கும் அமெரிக்கா எப்படிப் பணயக்கைதியான டாமை, தனது துல்லியமான திட்டமிடலால் காப்பாற்றுகிறது என்பதைப் பரபரப்பான திரைக்கதையின் மூலம் 'Bourne' பட வரிசைகளை இயக்கிய“பால் கிரீன்கிராஸ்” நமக்குக் காட்டியிருக்கிறார்.

Maersk கப்பலில் சரக்கை ஏற்றிக்கொண்டு சோமாலிய கடற்பகுதியை கடக்கும்போது கடற்கொள்ளையர்கள் தாக்கக்கூடும் எனும் எச்சரிக்கை மெயிலால் கப்பலை அதற்கான எதிர்கொள்ளலுக்குத் தயார் படுத்துகிறார் கேட்டன் டாம். ஒரு பெரிய கப்பலாகக் கொள்ளையடிக்க வேண்டும் எனும் திட்டத்தோடு புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட கொள்ளையர்களுடன் Maersk கப்பலை பின் தொடர்கிறார் கொள்ளையர் தலைவனாக வரும் மூஸ். கப்பலில் கேப்டனை சிறைபிடித்தவுடன் இனி நான்தான் இக்கப்பலில் கேப்டன் என அவர் சொல்லும்போதே கைதட்டலை அள்ளுகிறார். டாம் தன்னிடம் உள்ள 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களைத் தருவதாகச் சொல்கிறார். ஆனால் இன்னும் அதிகமாகப் பணம் வேண்டும் எனும் மூஸ் கப்பல் ஊழியர்களால் சிறைபிடிக்கப்பட்டுக் கப்பலை விட்டு சொற்ப பணத்துடன் லைஃப் படகில் தப்பிக்கும்போது டாமையும் பிணையாகப் பிடித்துச் செல்கிறார்கள். அமெரிக்க நேவி எப்படி டாமை பத்திரமாக மீட்டது என்பதே மீதிக்கதை.
ஒரு சிறிய லைஃப் படகில் டாமுக்கும், மூஸுக்கும் நடக்கும் உரையாடல்களும், சம்பவங்களும் பிரமாதமாகப் படமாக்கப்பட்டுள்ளன. கிளைமாக்ஸ் காட்சியில் டாம் மீட்கப்பட்டவுடன் கப்பலில் அவருக்கு முதலுதவி செய்வார்கள். அப்போது வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் டாம் எனும் நடிப்பு அசுரனுக்காகவே வைக்கப்பட்டிருக்கிறது. அக்காட்சியில் அவர் அசத்தியிருப்பார்.

டாம் ஹான்க்ஸ் மற்றும் சோமாலிய கடற்பகுதி கொள்ளையர்களாக நடித்திருப்பவர்களுக்கு விருதுகள் நிச்சயம். அனைவரும் குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம்.

17 அக்., 2013

குழந்தைகளுக்கான PLAY SCHOOL துவங்க முதலீட்டாளர்கள் தேவை...

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னையில் (Greater Chennai) குறிப்பாக சென்னையின் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதியான தாம்பரம், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, OMR சாலையில் இருக்கும் IT நிறுவனங்கள் சார்ந்த பகுதிகளில் குழந்தைகளுக்கான பள்ளிகள் (PLAY SCHOOLS) மிகக் குறைவாகவே உள்ளன.

இந்தப் பகுதிகளில் நிறைய குழந்தைகள் பள்ளிகளை துவங்க சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. எதிர்காலத்தில் இதன் தொடர்ச்சியாக LKG, UKG முதல் +2 வரை விரிவுபடுத்தும் நோக்கமாக, நண்பர் திரு.உதயகுமார்ஸ்ரீ அவர்கள் “அகஸ்தியா குழந்தைகள் பள்ளி ஒன்றை துவக்குவதற்கான முதலீட்டார்களை, பங்குதாரர் அடிப்படையில் வேண்டுகிறார். விருப்பமும், ஆர்வமும் இருப்பவர்கள் திட்டம் மற்றும் முதலீட்டு விவரங்களுக்கு அவரை தொடர்பு கொள்ளவும்.

திரு. உதயகுமார் ஸ்ரீ -  +91 – 90427 32377
மின்னஞ்சல் : udayakumar.sree@gmail.com

3 அக்., 2013

இந்தோனேசியாவிலிருந்து...


நேற்று காலை மலேசியாவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பினாங்கில் இருந்து ஒரு பழைய நண்பர் அழைத்திருந்தார்!.
“வணக்கம் செந்தில்!, இந்தியாவிற்கு கிரானைட் இம்போர்ட் பன்ன ஆள் இருந்தா!, இந்தோனேசியாவில்  ஒரு இடத்தில் ஏராளமாக கிரானைட் இருக்கு, நல்ல அதாவது genuine buyer இருந்தா சொல்லுங்க” என்றார்.
நான் “ வணக்கம் சார், இங்கயே தாராளமா கிடைக்குது, இருந்தாலும் யாருக்காவது தேவை இருக்குமான்னு விசாரிச்சு சொல்றேன்.”
அவர் “செந்தில் அந்த இடத்தில கிரானைட் மட்டும் இல்ல, அதுக்கும் கீழே காப்பர், மற்றும் மினரல்ஸ் குவிஞ்சு கெடக்கு, அதனாலதான் உங்க கிட்ட genuine buyer இருந்தா மட்டும்! சொல்லுங்கன்னு சொல்றேன்” என்றார்.
நான் “ஏன் ஃப்ராடுன்னா ஒத்துக்க மாட்டீங்களா?”
அவர் “ செந்தில் என்ன சொல்றீங்க!?”
நான் “ யோவ் பின்ன என்னய்யா நீங்க ஃப்ராடு பன்றவன்கூட வியாபாரம் செய்ய நான் நல்லவனை அறிமுகப்படுத்தனுமா? இதெல்லாம் நம்பி எனக்கு போன் பன்றீங்க பாருங்க!, அதான் பாவமா இருக்கு!” என்றதும். அப்புறம் பேசுவதாக சொல்லி தொடர்பை துண்டித்தார்.

கேபிள் சொல்வார் நூறுகோடி வியாபாரம் எல்லாம் நம்மை மாதிரி ஆட்கள் கிட்ட வந்தாலே அதெல்லாம் ஃப்ராடுதான்னு!!
.....................................................................................................................................................................
நானும், கேபிளும் மேற்கு மாம்பலம் எண்: 128, ஏரிக்கரை தெருவில் இருக்கு டாஸ்மாக் கடை எண்: 641 - ல் ரெண்டு பியர் வாங்கினோம். ஒரு பியரின் விலை ரூ.100 தான். ஆனால், விற்பனையாளர் ரூ.110 X2 = 220 எடுத்துக்கொண்டார். கேபிள் ஏன் MRP யை விடவும் அதிகம் விற்கிறீர்கள் என சண்டை போட்டதும் ரூ.10 மட்டும் மீதம் தந்தார். இன்னொரு பத்து ரூபாய் தர முடியாது என்றும் சொன்னார். கேபிள் விடாப்பிடியாக பணம் கேட்டதும். விற்பனையாளர் “அதிகாரிகள் சொல்லித்தான் வாங்குறோம், உன்னால முடிஞ்சத பன்னிக்கோ!” என தெனாவெட்டாக பேசினார். அப்போது நடந்தவற்றை வீடியோ எடுத்து வைத்திருக்கிறோம். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் எங்களுக்கு ஆதரவாக சிலரும், கடை மூடப்போற நேரத்தில பிரச்சனை பன்னாதீங்க தலை என விற்பனையாளருக்கு ஆதரவாக சிலரும் பேசியதுதான். நம்மிடம் பத்து ரூபாய் கூட வாங்குபவனிடம் சண்டைபோடக்கூட திராணியில்லாதவனாக தமிழன் மாறிவிட்டான்!!.
.............................................................................................................................................................
சமீபமாக வரும் திரைப்படங்களில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தவிர்த்து எல்லாப்படங்களிலுமே நாயகனை டாஸ்மாக்கில் குடித்து திரிபவனாகவும், பொறுக்கியாகவும் காட்டுகிறார்கள். ஆனால் நாயகிகள் அவனைத்தான் காதலிக்கிறார்கள்!. உண்மையில் பொண்ணுங்க என்ன இப்படித்தான் லூசா இருக்கிறார்களா என்ன?. சமீபத்திய “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா?” என்றோரு படம், இதில் விஜய் சேதுபதியும், அஸ்வினும் குடிப்பதையே முழுநேர விருப்பமாக காட்டுகிறார்கள். படத்தின் இறுதியில் குடிப்பதற்கு எதிரான தத்துவம் வைத்து குடிக்கு எதிரான படமென காட்டுகிறார்கள். முடியல!!!..
................................................................................................................................................................
அவசர அவசரமாக ஒரு அவசர சட்டத்தை கொண்டுவந்து ராகுல் எதிர்க்கிறார் என ஒரு நாடகம் ஆடி அதனை வாபஸ் பெற்றுவிட்டனர். குற்றவாளிகளுக்கு இந்த அரசு வக்காலத்து வாங்க காரனமே, கடந்த பத்து வருஷமா இவங்க அடிச்சதை ஆட்சி மாறினா, மோடி உள்ள புடிச்சு போட்டு அரசியல் எதிர்காலத்துக்கே ஆப்பு வச்சிடுவாறோ என்கிற பயம்தான்!.

ஆனால் நிறைய அரசியல்வாதிகளுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறாங்க. இப்படி ஒரு உயிருக்கு ஆபத்தான நிலையில் இவங்க அரசியல் செஞ்சு யாரை காப்பாத்த போறாங்க?. பெரிய பதவிகளில் இருப்பவர்கள் என்றால் கூட அதில் ஒரு நியாயம் இருக்கிறது. சாதாரன ஆட்களுக்கும் இப்படி ஒரு பாதுகாப்பை அரசாங்கம் ஏன் செய்கிறது?. அதுவும் மக்களுடைய வரிப்பணத்தில்!. உச்ச நீதிமன்றம் இதற்கும் ஒரு முடிவு கட்டினால் நன்றாக இருக்கும்!.
....................................................................................................................................................................


'' 'என் மகன் உயிரோடு இருந்திருந்தால், விடுதலைப்புலி பிரபாகரனை அவனுக்கு ரோல்மாடலாகக் காட்டியிருப்பேன்’னு சொல்லியிருக்கீங்க. பிரபாகரன் மீதான விமர்சனங்களை தாண்டியும் அவரை அவ்வளவு பிடிக்குமா?''

''பிரபாகரன் மேல் எனக்கு எந்த விமர்சனமும் இல்லைனு சொல்லமாட்டேன். அதே நேரம், விமர்சனம் இல்லாமல் யாருமே இருக்க முடியாது. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்த காந்திமீதுகூட விமர்சனங்களை அடுக்கின ஆளுங்கதான் நாம். ஆனா, விமர்சனங்களையும் தாண்டி கருத்து வேறுபாடுகளையும் கடந்து, யார் மக்களுக்கு உண்மையா இருந்திருக்காங்களோ, அவங்கதான் தலைவர்கள்.

தன் போராட்டத்துக்கும் தன்னை நம்பிய மக்களுக்கும், உண்மையாவும் நேர்மையாவும் பிரபாகரன் நடந்துக்கிட்டார்னு நான் நம்புறேன். போரில் தன் மகனைப் பலி கொடுத்ததில் தொடங்கி நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும். பிரபாகரனின் ஆளுமை, கம்பீரம், மக்கள் மீது அக்கறை, லட்சியத்துக்கு உயிரையும் தரும் அர்ப்பணிப்பு... இது எல்லாமே எனக்குப் பிடிச்ச விஷயங்கள். ஒரு தலைவனா பிரபாகரனை 'ரோல்மாடலா’ சுட்டிக்காட்டுறதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை!''

விகடன் மேடை - பிரகாஷ்ராஜ் பதில்கள்
பிரபாகரன்...தலைவராக சிறந்த ரோல்மாடல் !

-