28 ஜன., 2009

''தேசியம் வெங்காயம்"

என்னால் எந்த செய்தியும் படிக்க முடியவில்லை ..

ரத்தம் கொதிக்கிறது , இந்திய அரசாங்கத்தின் துணையோடு ஸ்ரீலங்கா அரசாங்கம் நடத்தும் படுகொலைகளை பற்றிய செய்திகள் கண்ணில் ரத்தம் வர வைக்கிறது,

விடுதலைப்புலிகள் என்ன செய்கிறார்கள் ?
எதற்க்காக இன்னும் பின் வாங்குகிறார்கள் ?
உண்மையில் அவர்களின் பலம் குறைந்துவிட்டதா?
இந்த கேள்விகள் ஒருபுறம் இருக்க,

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அடிக்கும் கூத்து... தாங்கமுடியலே ...
என் உறவுகள் படும் அவலம்கண்டு சாப்பிடவே முடியவில்லை...
இதற்க்கு முடிவுதான் என்ன... ?

அட தமிழ்நாட்டு அறிவிலிகளே .. விடுதலைப்புலிகளை பற்றி அவதூறு பேசும் மடையர்களே ... அவர்கள் எதற்காக ஆயுதம் ஏந்தவேண்டும் ... எத்தனையோ வாய்ப்பு கிடைத்திருக்கும்.... ஐரோப்பிய நாடுகளில் அவர்களால் சொகுசாக வாழ்க்கை நடத்தியிருக்க முடியும் ...

அதனைவிடுத்து எதற்காக உயிரைகொடுத்து போராட வேண்டும் ..
அந்த சகோதர, சகோதரிகளுக்கும் நம்மைபோல் வாழ ஆசை இருக்காதா என்ன?

திரு.ராஜிவ்காந்தி அவர்களின் படுகொலையில் இன்னும் அவிழ்க்கபடாத மர்மங்கள் இருப்பதாக செய்திகள் வரும்போது அதையெல்லாம் காங்கிரஸ்காரன் படிக்கிறது இல்லையா?

நானும் ஒரு காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்தவன்தான் ...
அதற்காக கண்ணைமூடிக்கொண்டு எதைவேண்டுமானாலும் பேசலாமா..
ஒரு இன உணர்வு வேண்டாம் .. நமக்கெல்லாம் சொரணை வேண்டாம்..

அட இலங்கையில் தமிழன் தனிநாடு கேட்கிறது தப்புன்னே வச்சுக்குவோம்..
அவங்களுக்குள்ளே அதை தீர்மானித்துக்கொள்ள விடவேண்டியத்தானே..
இந்திய அரசாங்கத்துக்கு தலையிட உரிமை இருக்குன்னு சொன்னா ...
ரெண்டு பக்கமும் நடுநிலையா பேசு..

பாகிஸ்தான் கிட்ட பேச வாக்கு இல்லாத .. காங்கிரஸ்காரன் இலங்கைக்கு மட்டும் ஏன் ஓடி.. ஓடிப்போய் உதவுரே ...

இலங்கை தமிழனின் பூர்வீக நாடு .. சிங்களன் வந்தேரியவன் ...

தமிழ்நாட்டு மக்களே .... தமிழனுக்காக அழவேண்டாம் ......
மனிதநேயம் கொண்டு பாருங்கள் ....

மக்களே இப்படியே விட்டோம்ன்னு வச்சுக்கோங்க... அப்புறம் நாமளும் சொந்த நாட்டுலேயே பிச்சைதான் எடுக்கணும்...
சுதந்திர போராட்ட காலம் தொட்டு இன்றுவரை இந்திய இறையாண்மைக்கு தமிழனால எதாவது பாதிப்பு வந்திருக்கா?

கர்நாடகா தண்ணி தரமுடியாதுன்னு சொல்றான் .. கேரளாகாரன் கடலுக்கு போகலாம், ஆனா தமிழ்நாட்டுக்கு தண்ணி தரமட்டோம்ன்னு சொல்றான்.
ஆனா நம்மால ஹோகனேக்கல் திட்டதகூட நிறைவேத்த முடியல..
இவ்வளவிற்கும் அது நம்ம எடத்துல இருக்கு...

தயவு செய்து வரும் தேர்தலில்
காங்கிரஸ் ,தி.மு.க. , ௮.தி.மு.க. ,தே.மு.தி.க, பா.ம.க போன்ற காட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்....

இவர்கள் நம்மையும் அடகு வைத்துவிடுவார்கள் ....

தமிழனை அழிக்க இந்தியாவே ஆயுதம் அனுப்பும்போது ...
தேசியமாவது ... வெங்காயமாவது.....

இனி என் ஆயுள் உள்ளவரை காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க மாட்டேன்..

தமிழ்குறிஞ்சி

கருத்துகள் இல்லை: