2 அக்., 2010

ஜெயமோகன் பிரபலமானது எப்படி?

1.தன்னை ஒரு இந்துத்வா என்று காட்டிக்கொண்டதால்.

2.கருணாநிதிக்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டதால்.

3.சிவாஜியையும். எம்.ஜி.ஆரையும் விமர்சித்ததால்.

4.சாரு இவரை எப்போதும் திட்டுவதால்.

உங்கள் அனைவரின் கருத்துகளும் வரவேற்க்கப்படுகின்றன...

43 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

என்ன செந்தில் வித்யாசமான கோணத்தில்?

Unknown சொன்னது…

//என்ன செந்தில் வித்யாசமான கோணத்தில்?//

அண்ணே எப்பவுமே சீரியஸா எழுதுரதாலே கொஞ்சம் நகைச்சுவைக்காக....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்னது ஜெயமோகன் பிரபலம் ஆயிட்டாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அடையாருல வடைக்கடை வெச்சிருக்க ஜெயமோகனைத்தானே சொல்றீங்க? அவரு வடையோட நிறம், மணம், சுவைய வெச்சித்தான் பிரபலம் ஆனாரு!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வடைக்கடை ஜெயமோகனும் இல்லீனா வேற யாரா இருக்கும்? ம்ம்ம்...நேத்து திருவான்மியூர் டாஸ்மாக் பார்ல ஆம்லெட் கொண்டு வந்து வெச்சவன் பேரும் ஜெயமோகன் தான்! அண்ணன் ஒருவேளை அவனைத்தான் சொல்றாரோ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இல்லே எண்ணூருல மீன்பாடி வண்டி ஓட்டிக்கிட்டி இருக்கானே ஜெயமோகன் அவனா இருக்குமோ?

ராஜவம்சம் சொன்னது…

ஜெயமோகன் பிரபலமானது எப்படி?
பிடிக்காதவறை எதிர்க்கிறோம் என்று இது போல் பதிவுப்போட்டே பிரபலமாக்கிவிட்டீர்கள்,

இந்த பதில் ஏற்கனவே எனக்கு நீங்கள் சொன்னது தான் வேரொறு பிரச்சனைக்கு.

சௌந்தர் சொன்னது…

இப்போ எல்லாம் பயோடேட்டா வருவது இல்லையே ஏன்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

naan eppadi pirabalaamaakirathu...

சிவமணியன்/Sivamaniyan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சிவமணியன்/Sivamaniyan சொன்னது…

1. 1988ல் தென் தமிழக காடுகளின் இயற்கை வளம் ரப்பர் என்ற பணப்பயிரால் சீரழந்ததை காட்டமாக அப்பட்டமாக காட்டிய அவரின் முதல நாவலான ரப்பர் எனற நாவலுக்காக...

2.தமிழின் முக்கியமான மிகை கனவுருப்படைப்பான சிறுவர்களும் படிக்க எளிய நடையில் எழுதப்பட்ட பனிமனிதன் என்ற நாவலுக்காக..

3.பிச்சைக்காரர்களின் ஏழாம் உலகிற்கிற்கு கூட்டி சென்று, அவர்களோடு உலாவ வைத்து, மனிதம், குரூரம், என்ற வார்த்தைகளை மீண்டும் வாசகர்களுக்கு ஆறிமுகப்படுத்தியதால்

4. அடர்ந்த காட்டின் பேரழகின் நுண்ணிய வர்ணனைகளோடு, எல்லா பலவீனங்களும் உடைய நம்மை போல சாதாரமாண கிரிதரனின் முதல் காதலை மெல்லிய கனவின் மொழியில் சொன்ன காடு என்ற நாவலுக்காக..

5. கண்,தேவதை, திசைகளின் நடுவே, முடிவின்மைக்கு அப்பால், தேவகி சித்தியின் டைரி, போன்ற சிறுகதைகளுக்காக..

6. பின் தொடரும் நிழலின் குரல், விஸ்ணுபுரம் போன்ற நாவல்கள் மூலம் உருவாக்கிய மாபெரும் விவாதங்களுக்காக.



7. எழுதும் கலை, நவீன தமிழிலக்கிய விமர்சனம், சமகாலத்திய தமிழ் நூல்கள், படைப்பாளிகள் பற்றி ஓயாமல் சளைக்காமல் எழுதி, பேசி உண்மையிலேயே உழைக்கும் காரணங்களுக்காக ..

vasu balaji சொன்னது…

அந்த எழுத்து இல்லைன்னா இது மட்டும் போதாதே செந்தில்:)

YUVARAJ S சொன்னது…

எங்கே அல்லக்கைகள்! தட்டுங்கள் ஜால்ராவை, கிழியட்டும் காதுகள்.

http://rkguru.blogspot.com/ சொன்னது…

தலைவரே, இவரை பற்றிய பதிவை நீங்கள் போட்டதால்....

சிவமணியன்/Sivamaniyan சொன்னது…

படிப்பதற்கு நேரமும், பொறுமையையும் இருந்தால்.. ஜெயமோகனின் இந்த பல்வேறுதரப்பட கட்டுரைகளை படிக்கவும்....


சுனாமி அனுபவக்குறிப்பு:-
http://www.jeyamohan.in/?p=52

ஜெ சைதன்யா ஒரு எளிய அறிமுகம்
http://www.jeyamohan.in/?p=395

வழி
http://www.jeyamohan.in/?p=1102

J.P Josephine Baba சொன்னது…

அவர் சொல்வதிலும் அர்த்தம் உண்டு தானே. தமிழர்கள் அடுத்தவர்களை வல்லவர், நல்லவர் என புகழ்ந்தே பிழப்பை ஓட்ட ஆரம்பித்து விட்டார்கள். மலையாள எழுத்தர்கள் அவர்கள் தலைவர்கள் நடிகர்கள் என யாரையாகட்டும் சும்மா புகழ மாட்டாங்க

காமராஜ் சொன்னது…

எனக்கு அவரது ரப்பர்,காடு இரண்டுமே பிடிக்கும்.எல்லா பிரபலங்களைப்போலவே அவரும் பொதுவுடமை பேசி
ஜனரஞ்சகமாகி பின் வெள்ளக்கோழி என்று நிஜமுகத்தைக்காட்டியவர்.

vinthaimanithan சொன்னது…

ஆனந்தவிகடனில் சங்கச்சித்திரங்கள் என்ற பெயரில் இவர் எழுதிய அழகான தொடர் என்னை ஈர்த்த ஒன்று... அதன் பாதிப்பில்தான் நானும் அவ்வப்போது கவிதைப்பார்வை என்று கிறுக்கி வருகிறேன். சுந்தரராமசாமியின் இலக்கிய வாரிசாக வலம்வரும் இவர் தான் குருவை மிஞ்சிய சிஷ்யனாகக் காட்டிக் கொள்ளும் காரியத்தை மிக நாசூக்காக செய்வார். ஆனாலும் சில சமயம் பல்லிளித்துவிடும்.... சுராவின் அஞ்சலிக் கட்டுரையாக இவர் எழுதிய 'நினைவின் நதியில்' இது அப்பட்டமாகவே தெரியும்.ஸம்ஸ்கிருதி சம்மான் விருதுக்காக இவர் நடத்திய கூத்துக்கள் நாடறிந்ததே!

முதன்முதலில் விஷ்ணுபுரம் படித்தபோது பிரமித்துப் போனேன்.... பிரமிப்பு என்பதைவிட முற்றிலும் மயங்கி இருந்தேன் என்றே சொல்லவேண்டும்... இரண்டாம் வாசிப்பு, மூன்றாம் வாசிப்பு என்று செல்லச் செல்ல விஷ்ணுபுரத்தின் இந்துத்துவ சாயம் வெளுக்கத் தொடங்கியது எனக்குப் புரிந்தது.

"நாச்சார்மட விவகாரங்களும்", "நொண்டிநாயும்" இவரது யோக்கியதையைத் தெளிவாகவே பறைசாற்றும். "பின்தொடரும் நிழலின் குரல்" அப்பட்டமாகவே குடிகாரன் வாந்தியெடுத்ததைப் போன்று ஸ்டாலினிய எதிர்ப்பாளர்களின் கட்டுக்கதைகளை வைத்து கம்யூனிஸ்ட்டுகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் single agenda உடன் எழுதப்பட்ட நாவல்.

ஜெயமோகனும் சாருவும்தான் தமிழின் இலக்கிய அடையாளங்கள் என்றால் அப்படிப் பட்ட 'மயிர்புடுங்கி' இலக்கியம் நாட்டுக்கும் சமூகத்துக்கும் அவசியமே இல்லை!

( நானும் கொஞ்சம் ஜாலியாக கும்மி அடிக்கலாம் என்றுதான் நுழைந்தேன். சிவமணியனின் பின்னூட்டம் பார்த்ததும் சீரியஸ் ஆகிவிட்டேன் ! ) :)

தமிழ் உதயம் சொன்னது…

1.தன்னை ஒரு இந்துத்வா என்று காட்டிக்கொண்டதால்.

2.கருணாநிதிக்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டதால்.

3.சிவாஜியையும். எம்.ஜி.ஆரையும் விமர்சித்ததால்.

4.சாரு இவரை எப்போதும் திட்டுவதால்.

5.நீங்க பதிவு போட்டதால்.

கவி அழகன் சொன்னது…

கலகிட்டிங்க பாஸ்

குறுக்காலபோவான் சொன்னது…

வரலாற்றில் காந்திக்கும் இடமுண்டு.கோட்சேவுக்கும் இடமுண்டு.ஜெயமோகன் எந்த வகை என்பது இருக்கட்டும்...நீங்கள்???

சகோதரன் ஜெகதீஸ்வரன் சொன்னது…

ஜெ வைப்பற்றி இவ்வளவு இருக்குதா. சிவமணிக்கு நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:))

Prasanna Rajan சொன்னது…

இலக்கியவாதிகள் என்றால் அவர்களின் பிரச்சனைகள் தான் பெரிதாக தெரிகிறது. இல்லையா? ஆனால் அவர்களின் படைப்பு பற்றிய விமர்சனம் ஒன்றை கூட சொல்லக் காணோம்.திராவிட இலக்கியம் ஒரு இலக்கியமே அல்ல என்றும், கருணாநிதிக்கு திராவிட இலக்கியத்தில் என்ன பங்கு என்றும் அவர் கேட்டார்.

சும்மாவா இலக்கியவாதிகள் சொல்கிறார்கள் - வலைப்பதிவாளர்கள் அறைகுறைகள் என்று.

BADRINATH சொன்னது…

நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்கா விட்டாலும் அவரிடம் stuff இருக்கிறது. அதை ஏற்க வேண்டும்.. சில கருத்துக்கள் ஏற்க முடியாது அவ்வளவுதான் அதற்காக stuff இல்லாமல் அவர் பிரபலமாகவில்லை என்பது என் கருத்து

மங்குனி அமைச்சர் சொன்னது…

ஆமா செந்தில் சார் , யாரு இந்த ஜெயமோகன் ???

Unknown சொன்னது…

ஹ்ம்ம்ம்... இங்கே இரும்பு அடிக்கிறாய்ங்கப்பா...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

ஜெய மோகன் சினிமா நடிகர் மைக் மோகனின் அண்ணனா ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

காமெடியா ஒரு பதிவு போட்டா வந்து ஜாலியா கும்மிட்டுப் போவாங்க்ளா, அதவிட்டுப்புட்டு இங்கே வந்து மேதாவித்தனத்தையும், இலக்கிய ரசனையவும்(புடலங்கா ரசனை!) காட்டியே தீருவோம்னு அடம்பிடிக்கிறானுங்க....! என்னத்தச் சொல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///இம்சைஅரசன் பாபு.. கூறியது...
ஜெய மோகன் சினிமா நடிகர் மைக் மோகனின் அண்ணனா ?///

இல்லே அவரு பாலமன் ஆப்பையாவோட தம்பி!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

எப்பஃடியோ 5 லைன்ல ஒரு பதிவு போட்டு நீங்க பிரபலம் ஆகிட்டீங்க,500 எழுதுனாலும் நாங்க ,,, ..ம்ஹூம்

உதயம் சொன்னது…

யாருங்க அந்த செயமோகன்? நான் கடவுள், அங்காடி தெருவுக்கு வசனம் எழுதியவர் தானே?

manovarsha சொன்னது…

அப்ப வடை சுடறவன், டாஸ்மாக்கில் ஆம்லட் போடுறன், மீன்பாடி ஓட்றவன் எல்லாம் கேவலமானவன். அப்பிடித்தானே பன்னிக்குட்டி. இதைத்தான் நிலவுடமைக் கொழுப்பு என்பது.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///mano கூறியது...
அப்ப வடை சுடறவன், டாஸ்மாக்கில் ஆம்லட் போடுறன், மீன்பாடி ஓட்றவன் எல்லாம் கேவலமானவன். அப்பிடித்தானே பன்னிக்குட்டி. இதைத்தான் நிலவுடமைக் கொழுப்பு என்பது.///


ண்ணா... பொழுது போகலீங்ளாங்ணா? எழுதுங்ணா நல்லா தம் கட்டி எழுதுங்ணா! காமெடி பண்ண வரலைன்னா விட்ருங்ணா (ங்கொக்கா மக்கா எதக் கொண்டுபோயி எங்கே கோர்க்குது பாரு, சும்மா இருக்குறவனுங்களுக்கும் இவிங்களே எடுத்து கொடுப்பாங்க போல?)

YUVARAJ S சொன்னது…

பிரதம அல்லக்கை பன்னிகுட்டி வாழ்க.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///Yuvaraj கூறியது...
பிரதம அல்லக்கை பன்னிகுட்டி வாழ்க.///


யாரோ நம்ம பயலுகதான் வேற பேருல வெளையாடுறானுங்கன்னு நினைக்கிறேன், KRP அண்ணன் ப்ளாக்கா இருக்குன்னு பாக்குறேன், படுவா எவனா இருந்தாலும் யாருன்னு சொல்லிடுங்க, தொலச்சிப் புடுவேன் தொலச்சி!

Unknown சொன்னது…

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

'பரிவை' சே.குமார் சொன்னது…

Nanbarkalin pathilkalai parkkum pothu jeyamohan pirapalamanavaragaththaan therikiraar.

செல்வா சொன்னது…

//4.சாரு இவரை எப்போதும் திட்டுவதால்.//
திட்டுரதால கூட பிரபலம் ஆக முடியுமா ..?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

saaru thittuvathu irukkattum, saaruvai ellorum thittuvathaal, ivar avarai thittuvathaal, avar pirabalam aanaarnu venaa vachchukkalaamaa?
naanji mano

அழகி சொன்னது…

சாரு திட்டுவதால் ​ஜெய​மோகன் பிரபலமானாரா? மிகவும் ந​​​கைச்சு​வையாக உள்ளது...

சாரு பிரபலமானது ஊரறிந்த ரகசியம்....

Hai சொன்னது…

அனந்த விகடனுக்கும் குமுததுக்கும் போட்டியாகா வாரம் ஒரு புத்தகம் எழுதுவதால் கூட இருக்கலாம்.

vasan சொன்னது…

He is a GOOD WRITER too Mr. Senthil.
Since he represents the Majority, he is been easily branded as `Conservative'. He is popular even before the last THREE issues had been surfaced.