17 மார்., 2009

"வாக்காளர் அடையாள அட்டை"

வாக்காளர் அடையாள அட்டை பற்றி எல்லோருக்கும் தெரியும். விஷயம் என்னன்னா எல்லா விஷயத்துக்கும் ஆயிரத்தெட்டு கண்டிசன் போடுற தேர்தல் கமிசன், இந்த அடையாள அட்டை விசயத்தில் செய்யும் சொதப்பல் இந்தியாவே அறியும்,.

1990 என்று நினைக்கிறேன் அப்போதுதான் முதல்முதலில் புகைப்படம் எடுத்தார்கள், ஆனால் அப்போது எனக்கு மட்டும் அட்டை வரவில்லை, போய் தாலுக்கா ஆபிசுல கேளுன்னு பத்திவிட்டாங்க, அங்க போய் எவன கேக்குறது, போங்கடா எனக்கு வேற வேலை இல்லையா என பேசாம இருந்திட்டேன் ( அப்பல்லாம் எனக்கு இவ்வளவு விழிப்புணர்வுதான் இருந்துச்சு). அப்புறம் வந்த எலக்சன்ல ஒட்டர் லிஸ்டுல பேரு இருந்தா போதும்னு குத்த அனுமதிச்சாங்க, நானும் சந்தோசம் தாமரைக்கு ஒரு குத்து குத்தினேன்,.


அப்புறம் சிங்கப்பூர் போய்ட்டதால மத்த எலக்சன்ல குத்த முடியல, ஒரு வழியா 2004 ஆம் ஆண்டு ஊருக்கு வந்த பின்னாடி சென்னையில செட்டிலாயிட்டேன், என்னோட மனைவியோ ஒரு ரேசன் கார்டு வாங்கிடுங்க, இங்க சினிமா தியட்டர தவிர எங்க போனாலும் அத கேக்குறாங்க என்றாள், நானும் உடனே ரேசன் கார்டு வாங்கிட்டேன். அந்த அப்ளிகேசன்ல கேஸ் இருக்கா? ன்னு கேட்ட இடத்துல, இருக்கு, அடிசனல் கூட இருக்குன்னு எழுதி தொலைச்சுட்டேன், ரேசன் கார்டு வந்த பின்னாடி, நம்மகிட்டே ஒரு சிலிண்டர்தாங்க இருக்கு, இன்னொன்னு அம்மாவோடது இனிமே அடிசனல் அப்ளை பன்ன முடியாதே என்றாள். அப்புறம் தம்பி குமார் இன்னொன்னு கொடுத்தார்,.


இந்த நேரத்துல வாக்காளர் அடையாள அட்டைக்கு போட்டோ எடுத்தாங்க, நாங்களும் கால் கடுக்க நின்னு போட்டோக்கு போஸ் கொடுத்துட்டு வந்தோம், மறுநாள் போனா எங்களுது மட்டும் இல்லை. என்னையா இப்படி பண்றீங்கன்னு சத்தம் போட்டேன், சார் இன்னொரு வாட்டி எடுத்துருவோம்ன்னு சொல்லி மறுபடியும் எடுத்தாங்க, ஆனால் மறுநாள் அந்த எடத்துல யாரும் இல்லை, எங்கதான் போய் இருப்பாங்கன்னு விசாரிச்சா நீங்க போய் கலெக்டர் ஆபிசுல வாங்கிக்கொன்னு அனுப்பிட்டாங்க, அப்பவும் வரல, அந்த எலக்சன்ல பான் கார்ட கொடுத்து சூரியனுக்கு ஒரு ஓட்ட குத்தினேன்.


இப்ப தி.நகர்ல இருக்கேன் இன்னும் அடையாள அட்டை வாங்கல, வீடு வீடா வருவோனாங்க யாரும் வரல, சரி நாமாவது பக்கத்துல இருக்கிற அலுவலகத்துக்கு போவோம்னு போனா, அங்க பெரும்பாலும் ஆளே இருக்கிறது இல்ல, இந்த தடவ காங்கிரஸ் கூட்டணிய புறக்கணிப்பதால், ஒட்டு போட வேண்டான்னு முடிவு பண்ணிட்டேன்,.


கிட்டத்தட்ட இருவது வருடமா அடையாள அட்டை குடுக்குது தேர்தல் கமிசன், அந்த போட்டவ பாத்திங்கன்னா, செத்தவன எடுத்தமாதிரி எடுத்திருப்பாங்க, உங்க அட்டையில நீங்க குடுத்த விபரம் எல்லாம் சரியா இருக்காது, இந்த ஒரு விசயத்த கூட ஒழுங்கா செய்யாத தேர்தல் கமிசன், இத்தன கண்டிசன் போடுறதா பாத்தா சிரிப்பாணியா வருது, இந்த எலக்சன்ல ஈழ பிரச்சினை பத்தி நோட்டிசு அடிக்க கூடாதுன்னு கண்டிசன் போட்டிருக்கு, கருத்து சுதந்திரம் எல்லாருக்கும் உண்டு, அதனை கட்டுப்படுத்த கமிசனுக்கு யாரு அதிகாரம் கொடுத்தான்னு தெரியல, ஆனா இதை நான் வரவேற்கிறேன், என்ன இங்க திருமா, வைகோ தவிர எல்லாருக்கும் வருவது நீலிக்கண்ணீர் மட்டுமே. இல்லன்னா நாங்கதான் பிரனாப்ப அனுப்புனோம் சட்டசபையில தீர்மானம் போட்டோம், நிதி கொடுத்தோம், இப்ப பாத்திரம் கொடுக்கிறோம்ன்னு தி,மு,கவும்,. அம்மா உண்ணாவிரதம் இருந்தாங்க, உண்டியல் வச்சாங்கன்னு அதிமுகவும் மாறி மாறி போஸ்டர் அடிச்சு நம்மள கொன்னுருவாங்க.


எனக்கு தெரிஞ்சு நெறைய பேரு ஒட்டர் ஐடியே வச்சுகுறது கிடையாது, அய்யா தேர்தல் கமிசன் கணவான்களே முதல்ல இத சரிபண்ணுங்க அப்புறம் தேர்தல் நடத்தலாம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மல்டி பர்பஸ் கார்டுன்னு ஒன்னு கொண்டு வந்தார், சமிபத்திய இடைகால பட்ஜெட்டுலகூட அதுக்கு அறுநூறு கோடி ஒதுக்கினாங்க, அத கொடுத்தா போதும் அப்புறம் 90 சதவீதம் அக்கபோரே பண்ண முடியாது.


கொண்டு வருவீங்களா?

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

மாப்ளே, என்னோட வாக்காளர் அட்டையில, தேதி, மாதத்துக்குப் பதிலா 'XX/XX' ன்னு போட்டுருக்காங்க. என்னத்தைச் சொல்ல?

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

உனக்குமா?! கேக்கவே சிரிப்பாணியா இருக்கு,
நீயும் அரசியலுக்கு வர ஆசைபடுறே,
நீ வந்தாவது மாத்துறியான்னு பாக்கலாம்.