27 ஆக., 2010

பூனையின் கதை ....

அந்த நெடுங்கதையின்
அறுபதாவது பக்கத்தில்
ஒரு
திருப்பத்தை வைத்திருந்தேன்,
தேநீருக்காக  இறங்கிப்போன
என்
கதாநாயகனை காணவில்லை ...

கதையின் வில்லனை
நாயகனாக்கி
கதையை தொடங்கினேன்.,
வில்லனை பிடிக்காமல்
நாயகி ஓடிப்போனாள்..

தொடர முடியா கதையை
தூரத்தில் வைத்து
விட்டத்தை பார்த்தபோது
தன்
கடைசிக் குட்டியை
கவ்விச்சென்ற  பூனை
கதையின் மேல் சிறுநீர் கழித்தது...



46 கருத்துகள்:

முனியாண்டி பெ. சொன்னது…

i'm the first

முனியாண்டி பெ. சொன்னது…

எப்படி உங்களால் மட்டும் எதையும் கதைக்கு கவிதைக்கு கருப்பொருளாக்க முடிகிறது...நன்று.

என்னது நானு யாரா? சொன்னது…

நகைசுவை கலந்த கவிதை!!! ம்.. நடத்துங்க அண்ணே! நடத்துங்க! படம் அருமையா இருக்கு!

புது பதிவு போட்டிருக்கிறேன். வாறீகளா? எப்போ வாறீக?

பெயரில்லா சொன்னது…

முதல் முறை புரியவில்லை.
இரண்டு முறை திரும்பப் படித்தேன்..
ரசித்தேன்.
சாதாரணமாய் நடக்கும் சம்பவத்தை அழகான வரிகளில் அடைத்துள்ளீர்கள்..

Unknown சொன்னது…

நல்லாயிருக்கு..

அருண் பிரசாத் சொன்னது…

சரி கதையை எப்படி முடிச்சீங்க...

ஹி ஹி ஹி

சௌந்தர் சொன்னது…

பூனை கதையா கவிதையா

செல்வா சொன்னது…

ஐயோ சாமி ..
எப்படியெல்லாம் எழுதறாங்க..
நல்லா இருக்கு அண்ணா..!!
அப்புறம் அந்த பூனைய என்ன பண்ணுனீங்க.
ஒரு நல்ல வில்லனா போட்டிருக்கலாம்ல..
அந்த கதாநாயகி ஓடிப்போயிருக்க மாட்டா..

Prathap Kumar S. சொன்னது…

எப்படிங்க இது....டாப்பு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நல்லாயிருக்கு

Ahamed irshad சொன்னது…

Super..

Jey சொன்னது…

hahaha.:)

VELU.G சொன்னது…

first class செந்தில்

மிக ரசித்தேன்

vasu balaji சொன்னது…

:)) Nice one senthil

வினோ சொன்னது…

அண்ணே கலக்கல்...

Ramesh சொன்னது…

செம....முதல் முறை படிச்சிட்டு..என்னடா சொல்ல வர்ராறுன்னு நினைச்சேன்..மறுபடியும் படிச்சேன்...அசத்தியிருக்கிறீங்க....

Unknown சொன்னது…

கவிதைக்கு கதையா? கதைக்கு கவிதையா? மிக அருமை!!!

அம்பிகா சொன்னது…

ஆஹா...
அருமையா இருக்கு.

க.பாலாசி சொன்னது…

நல்லாயிருக்குங்க செந்தில்...

ச்சும்மா... சொன்னது…

good na

ஜோதிஜி சொன்னது…

செந்தில் தனிப்பட்ட முறையில் இந்த கவிதைக்கு சங்கர் விமர்சனத்தை எதிர்பார்க்கின்றேன்.

Athisha சொன்னது…

கவிஞர்ஜி!

எல் கே சொன்னது…

kavinar senthil vaalga vaalga

Mythees சொன்னது…

:)

'பரிவை' சே.குமார் சொன்னது…

நகைசுவை கலந்த கவிதை.

சரி கதையை எப்படி முடிச்சீங்க..!

ஹி... ஹி... ஹி..!

மறத்தமிழன் சொன்னது…

செந்தில்,

நல்லாயிருக்குங்க...

ஆதவா சொன்னது…

எனக்குப் பிடித்திருக்கிறது கதை அல்லது கவிதை//
நெடுங்கதை என்பது வாழ்வு.
வாழ்வு பல படிமங்களைக் கொண்டிருக்கிறது
நேர்கோட்டில் பயணிக்கும் புள்ளி, வழிமாறி தொலைந்து போனால் கோடுகள் அழிந்துவிடுவதில்லை. விட்ட இடத்தில் இன்னொரு புள்ளி..
முதல் புள்ளிக்கு வாரிசு.
வாரிசுகள் என்றுமே ஒன்றாய் இருப்பதில்லை.
படிமங்கள் மாறுகின்றன. எழுதிவைத்தவன் பிரஞ்ஞையற்றிருக்க,
வாழ்வு இழிவெனப்படுகிறது.

பூனையின் கதை... கதையில் அது ஒரு பிரதி.

தொடருங்கள் செந்தில்!!

சசிகுமார் சொன்னது…

அருமையான பகிர்வு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஜில்தண்ணி சொன்னது…

தல சான்சே இல்ல

எப்படி இப்டியெல்லாம் எழுதுறீங்க ??

ரசித்தேன்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

Super..

அன்புடன் நான் சொன்னது…

தோழரே கவிதை மிக அருமையான நடையில் இருக்கு.
அந்த படம் மிக கவர்கிறது.

பாராட்டுக்கள்.

காமராஜ் சொன்னது…

அமர்க்களமான கவிதை செந்தில்.

சின்னப்பயல் சொன்னது…

பூனையின் விமர்சனம்

vinthaimanithan சொன்னது…

கவிதை அழகா இருக்கு... இருந்தாலும் எதிர்கவுஜ போடாட்டி எனக்கு கை அரிக்குமே....ஸோ

என்கதைமேல் சிறுநீர்
கழித்த பூனையின்
வாயில் இருந்த
குட்டியை வெறிக்கையில்

வில்லனோடு சல்லாபிக்கும்
நாயகியின் ஸ்தனங்களில்
இருந்து வழிந்தது
கதாநாயகனின் கண்ணீர்

கதை தொடர்ந்தது
அறுபத்தியோராம் பக்கத்தில்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கே ஆர் பி அண்ணே,கவிதையும்,படமும் நச்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Nice

க ரா சொன்னது…

அருமைங்க :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

கவிதை செம ஜாலி-ஆ இருக்குங்க..
ரசித்துச் சிரித்தேன்.. :-))))

dheva சொன்னது…

கவிதை படிச்சேன்....பின்னூட்டங்களையும் படிச்சேன்... நேர்மையா....பின்னுட்டமிடனும்...அதுவும் என் புரிதலைச் சொல்லணும்.......ம்ம்ம்ம்ம்ம் செந்தில் சும்மா எழுதியிருக்கமாட்டார்னு ....மனசு சொன்னுச்சு....

எனக்கு என்னமோ....பூனை சிறு நீர் கழித்தது திருப்புமுனையாய் பட்டது.....கதையின் திருப்புமுனையை எதார்த்த திருப்பு முனை..வென்று விட்டதாக ஒரு கீறல் விழுந்தது மனதில்.....

ஜெயந்தி சொன்னது…

இது கவிதை.

நாடோடி சொன்னது…

பூனை க‌தையான‌ க‌விதை ந‌ல்லா இருக்கு.. :)

ஹேமா சொன்னது…

செந்தில்...கதை போச்சா...!

இது க(வி)தையல்ல வாழ்வு !

எம் அப்துல் காதர் சொன்னது…

இந்த கவிதைல்லாம் எப்படி எழுதுறதுன்னு சொல்லிக் கொடுங்க பாஸ்! அருமையா இருக்கு!!

Unknown சொன்னது…

மிக ரசித்தேன்....
நடத்துங்க அண்ணே! நடத்துங்க! படம் அருமையா இருக்கு!

பெயரில்லா சொன்னது…

அண்ணே இது மீள்ஸ் தான?
மறுபடி படிச்சாலும் அருமை அருமை தானே!

a சொன்னது…

டீ குடிக்க போன நாயகன் வரவே இல்லியா???