24 ஜூலை, 2010

ஓம் கூகுளாய நமக...

கூகுளை பற்றி நண்பர் Drunken Programmer ஒரு கவிதை கேட்டிருந்தார்.. முயற்சி பண்ணிருக்கேன்..


தேடல்களும்
தேடல்களைப் பற்றிய தேடல்களுமாய்
உன்னில் மூழ்கியது உலகம்.

எந்த வரமும் அருளும் கடவுள்..

காணிக்கை வசூலிக்காத கடவுள்..

உண்மையோ, பொய்யோ 
உள்ளதை உள்ளபடி 
தருவோர் அல்லது பெறுவோர் 
விரும்பும்படி அருளும் கடவுள்..

சீனாவின் குறுங் கண்களுக்கு 
இப்பேரழகி தெரியவில்லை ஏனோ..

கவிதைஎன்பதே
தேடல் தானே..
கூகுளை கவிதையென்பேன்..

"கூகளடி நான் உனக்கு காந்தமடி நீ எனக்கு"
"துயசுடர் வானொளியெ! தேடலமுதே! என் கண்ணம்மா"
என பாடியிருப்பார் பாரதி இன்றிருந்தால்..

கட்டுடைக்கும் 
காட்டாறு வெள்ளமென 
கட்டுபாடுகள் இன்றி 
தகவல் தரும் கூகுள் 

தேடித் தீர்க்க முடியாத காமம்
பாரில் அடங்காத போதை 
உலகப் பேரழகி கூகுள்..

எம் பிழைப்பே நீதான் 
உனையன்றி யார் எமை காப்பார்..

ஓம் கூகுளாய நமக...

39 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

1st

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Nice

எல் கே சொன்னது…

arumai senthil

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

சூப்பர் கவிதை.. :-))

கூகிள் வாழ்க...!!

Unknown சொன்னது…

தேடித்தேடித்தேடி........ வாழ்க்கை தொலைகிறது.

ஜோதிஜி சொன்னது…

தேடித் தீர்க்க முடியாத காமம்
பாரில் அடங்காத போதை

Jey சொன்னது…

hahaha, சூப்பர்:)

Karthick Chidambaram சொன்னது…

Nice :-)

ரோஸ்விக் சொன்னது…

nice senthil.
கூகிள்ல எல்லாம் தேடலாம்... நீங்க படம்போட்டிருக்கிற பொண்ணு வாயில கூகிளையே தேடலாம் போல... :-))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

சூப்பருங்கோ....

செல்வா சொன்னது…

எப்புடியெல்லாம் கவிதை எழுதுறாங்க ..!!

ஸ்ரீ.... சொன்னது…

நரபலி யாசிக்காக் கடவுள்
நாம் தினமும் நாடும் கூகிள்! கவிதை இனிமை.

ஸ்ரீ....

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

super

நாடோடி சொன்னது…

க‌விதை ந‌ல்லா இருக்கு செந்தில் அண்ணா.... இணைய‌த்தில் பிரிக்க‌ முடியாத‌ ஒன்றாக‌ வ‌ல‌ம் வ‌ருவ‌து கூகுள் தான்..

ரமேஷ் வீரா சொன்னது…

கவிதைஎன்பதே
தேடல் தானே..
கூகுளை கவிதையென்பேன்.........





அருமையான வரிகள் ..........................கவிதையும் அருமை .......

சசிகுமார் சொன்னது…

//எம் பிழைப்பே நீதான்
உனையன்றி யார் எமை காப்பார்.//

ஹா ஹா ஹா

சௌந்தர் சொன்னது…

கூகிள் பற்றி ஓரு கவிதையா கலக்கல் அண்ணா

Chitra சொன்னது…

"கூகளடி நான் உனக்கு காந்தமடி நீ எனக்கு"
"துயசுடர் வானொளியெ! தேடலமுதே! என் கண்ணம்மா"
என பாடியிருப்பார் பாரதி இன்றிருந்தால்..



...... அட, அட.... உங்களுக்குள் தூங்கி கொண்டு இருந்த "பாரதியை" தட்டி எழுப்பிட்டாங்களே!

Prathap Kumar S. சொன்னது…

Good one....Mr. Senthil..

Prathap Kumar S. சொன்னது…

கூகுளன்றி அமையாது இணையஉலகம்...

வினோ சொன்னது…

கூகுளுக்கு ஒரு பூஜைய...KPR அண்ணே super...

அருண் பிரசாத் சொன்னது…

கலக்கிட்டீங்க. கூகுள் ஆண்டவர் துணை இருப்பாராக

ஜீவன்பென்னி சொன்னது…

நல்லாயிருக்கு கவிதை. கூகுளாண்டவர் வாழ்க வாழ்க.

ஹேமா சொன்னது…

//"கூகளடி நான் உனக்கு காந்தமடி நீ எனக்கு"
"துயசுடர் வானொளியெ! தேடலமுதே! என் கண்ணம்மா"
என பாடியிருப்பார் பாரதி இன்றிருந்தால்..//

அட அட செந்தில்....!
கூகிளுக்கும் கவிதை !

vasu balaji சொன்னது…

aamaam. கூகிளாய நமஹ:))

ஸ்வர்ணரேக்கா சொன்னது…

//எந்த வரமும் அருளும் கடவுள்..
காணிக்கை வசூலிக்காத கடவுள்..//

நல்லதொரு கடவுள் வாழ்த்து..

pichaikaaran சொன்னது…

பாரதியை நினைவு கூர்ந்தது அருமை.

அன்புடன் நான் சொன்னது…

கவிதை மிக நல்லத் தேடல்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//உங்களுக்குள் தூங்கி கொண்டு இருந்த "பாரதியை" தட்டி எழுப்பிட்டாங்களே! //

என்னது பாரதி தூங்கிட்டாரா?

Unknown சொன்னது…

நகைச்சுவையுடன் கூடிய அருமையான கவிதை

Bibiliobibuli சொன்னது…

"Headphones connected to the iPhone, iPhone connected to the Internet, connected to the Google, connected to the government."

கூகிள் பற்றி M.I.A வின் பாடல் வரிகள் தான் ஏனோ ஞாபகம் வருகிறது.

vijayakumar சொன்னது…

hi senthil ...its nice ya...i sent your kavithai to all my contacts with your blog link...
கூகளடி நான் உனக்கு காந்தமடி நீ எனக்கு" oooooooooooooooo podu....

cheena (சீனா) சொன்னது…

அன்பின் செந்தில்
கூகுளண்டவரை நம்பியோர் கை விடப்படார் - அவரைப் பற்றிய கவிதை அருமை

நல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனா

கண்ணகி சொன்னது…

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க கவிதை..

அன்பரசன் சொன்னது…

googleக்கு ஒரு கவிதையா?
நைஸ்..

பொன் மாலை பொழுது சொன்னது…

நகைசுவையுடன் கவிதை ரசிக்கும்படி இருந்தது.
கூகுள் காதலரே வாழ்க உங்கள் காதல்.

virutcham சொன்னது…

இது நல்லா இருக்கே

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சூப்பருங்கோ....

செ.சரவணக்குமார் சொன்னது…

வீட்டுச் சாவி காணாமப்போச்சுன்னாக்கூட கூகுள்ல தேடுற காலமாயிருச்சி நண்பா.

கூகுளைப் பற்றிய கவிதை மிக நன்று.