22 மார்., 2012

கீர்த்தனாவும், கெடா வெட்டும்..

எல்லாத்தையும் வெவரமா  சொல்லணும் 
பெரிய அத்தைக்கு 
நடுமாமா தண்ணிபோட்டால் மட்டும் தகராறு செய்வார் 
பங்காளிக அத்தனை பேருக்கும் ஆளனுப்பி சேதி சொன்னாப்போதும் 
மாமா வகையறாக்களுக்கு நேர்ல போய்த்தான்  கூப்பிட்டாகனும் 
ரெண்டு நாளாவே டவுனுக்கு போயி சாமானெல்லாம் வாங்கி வந்த
பெரிய சித்தப்பா
அம்மா சாப்பிட சொல்லலன்னு கோச்சுகிட்டு போச்சு
சித்தி பாவம் எதைச் சொன்னாலும் கேட்டுக்கும்

இந்த தடவ குல தெய்வத்துக்கு நாலு ஆடு வெட்டியும்
கறி பத்தல 
தண்ணி அடிச்சுட்டு, ரகள செஞ்சு, சவால் விட்ட சொந்தம் 
அடிச்ச கூத்துல ஐயனாரே ஓடிருக்கணும் 
செல்வி அக்கா கல்யாணம் வரைக்கும் அதே கொறை தொடர
கறிக்கு செத்த பயலுவோன்னு அப்பா சொல்ல 
ராமாசாமி மாமா மொறைக்க 
கல்யாண வீடு கதிகலங்கி போச்சு..

கூடப் படிச்ச மாமா பொண்ணு கீர்த்தனா 
குடும்ப உத்தரவால் பேசவே இல்ல என்கிட்டே 
போடி போக்கத்தவளேன்னு நானும் பேசல 
அதாச்சு வருசம் ரெண்டு ..

நேத்தைக்கு
பெரியத்தை செத்துப் போச்சுன்னு ஊருக்குப்  போனா 
மாமென்காரனுக்கு  டீ ஊத்திக்  கொடுக்கிறாரு அப்பா
மாப்ள எம்பொண்ணு ஒனக்குதாண்டான்னு என்கிட்டே மாமா சொல்ல 
கடந்து போன மாமெம் பொண்ணு  கீர்த்தனா
வெக்கபட்டா பாருங்க 
இன்னொரு சண்டை வராம இருக்கனுன்னு 
குலதெய்வத்துக்கு
இந்த தடவ பத்து கெடா வெட்டுறேன்னு
வேண்டிகிட்டேன் ...

2 கருத்துகள்:

விச்சு சொன்னது…

மாமன் பொண்ணு கிடைச்சா சொத்துபத்தெல்லாம் வித்துகூட கிடா வெட்டலாம். சிறிய தொகுப்புனாலும் வெரி இன்ட்ரஸ்டிங்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

மீள் பதிவா தலைவரே....

நல்லது...