25 நவ., 2010

தாய்மையுடைத்து ...

புனிதர்களின் விளக்கங்கள் 
தீர்க்கமானவை
பழய மொந்தையில் புதிய கள்,
தலையாட்டு, 
பின் பற்று, 
பற்றுகள் இருந்தால் எழுதிவை .

அயோத்தியின் தீ 
சீதையை  சலவை செய்து 
ராமனை அழுக்காக்கியது.

கறைபட்ட கணவனால் கைவிட்ட 
காரிகை 
ஒற்றைத் துணியுடன்,
இழுத்து வாவென்றவன் 
கொடையாளி..

பதி, வதியின் காதல் கொன்ற 
மதி கெட்ட மன்னன்
காணாமல் போனான் 
கம்பனும்..

மெரினா சுடுமணலில் 
குடையின் கீழ்
காதல் பார்த்தால் 
மிரட்டிவை காவலா என்றான்
இந்நாள் மன்னன் ..

அடங்காவிட்டால் 
அமாவாசை, பவுர்ணமி 
அலையும் மனதின் கூச்சல் 
பைத்தியம் என்று பெயரிடு
விவாகரத்து சுலபமே..

மார்க்கம் சொன்ன 
மார்க்கம் 
கணவனின் மனைவிமார்கள்
முக்காடுகள் சுமந்தவாறே..

பாதிரிமார்கள் புனிதர்கள், 
இன்னொரு மீட்பன் வருவான்
கன்னியாஸ்த்ரீகளின் கருப்பையில் 
பிறப்பெடுக்க..

ஆதி சிவன் பாதி தந்தான்,
பெண்மை தாய்மை
கொண்டாடி கொன்று போடு...

23 கருத்துகள்:

எல் கே சொன்னது…

பாராட்ட வார்த்தைகள் இல்லை

க ரா சொன்னது…

அண்ணே !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

vazhakkam pola present sir

அன்பரசன் சொன்னது…

//ஆதி சிவன் பாதி தந்தான்,பெண்மை தாய்மைகொண்டாடி கொன்று போடு..//

சூப்பர்.

Unknown சொன்னது…

//அடங்காவிட்டால்
அமாவாசை, பவுர்ணமி
அலையும் மனதின் கூச்சல்
பைத்தியம் என்று பெயரிடு
விவாகரத்து சுலபமே..//

சௌந்தர் சொன்னது…

இந்த கவிதையை மீண்டும் பதிவு இடத்திற்கு நன்றி

vasu balaji சொன்னது…

செந்தில்.:)

கவி அழகன் சொன்னது…

அருமை வாழ்த்துகள்

மாணவன் சொன்னது…

//அயோத்தியின் தீ
சீதையை சலவை செய்து
ராமனை அழுக்காக்கியது.//

அருமை அருமை...

வரிகள் ஒவ்வொன்றும் நச்

குழந்தையின் படம் கலக்கல்...

Unknown சொன்னது…

//அடங்காவிட்டால்
அமாவாசை, பவுர்ணமி
அலையும் மனதின் கூச்சல்
பைத்தியம் என்று பெயரிடு
விவாகரத்து சுலபமே..//

உயிர் தொடும் உண்மை வரிகள்....

ஹரிஸ் Harish சொன்னது…

அருமை...

a சொன்னது…

நல்லாருக்கு செந்தில்...........

ஹேமா சொன்னது…

செந்தில்...எந்த விஷயத்தையும் முரண்பட்டே பார்க்கிறீர்கள்.சரியாகத்தான் இருக்கிறது !

'பரிவை' சே.குமார் சொன்னது…

எப்படிச் சொல்வது எல்லா வரிகளும் அருமை அண்ணா.

மோகன்ஜி சொன்னது…

செந்தில்!படித்து விட்டு சிலையாய் சமைந்து விட்டேன். அந்த பாரதி கிழவன் தன் ரௌத்திரக் கனலின் ஒரு கங்கு உன்னிடத்தில் கனன்று கொண்டிருக்குதடா என் தம்பி! உச்சிமுகர்ந்து வாழ்த்து சொல்ல துடிக்குது நெஞ்சம்.

காமராஜ் சொன்னது…

//அயோத்தியின் தீ
சீதையை சலவை செய்து
ராமனை அழுக்காக்கியது.//

இப்படி ரொம்ப இடத்தில்
தீப்பிடிக்கிறது. இதில் கொஞ்சம்
அனல் கூடுதலா அடிக்கிறது.

பெயரில்லா சொன்னது…

ரொம்ப அனல் கவிதையில்!

Udayakumar Sree சொன்னது…

//மெரினா சுடுமணலில்
குடையின் கீழ்
காதல் பார்த்தால்
மிரட்டிவை காவலா என்றான்
இந்நாள் மன்னன் ..//

நெசமாவா?

Udayakumar Sree சொன்னது…

என்று படித்தாலும் காரம் குறையாமல் இருக்கும் கவிதை! பேஷ்!

Unknown சொன்னது…

//ஆதி சிவன் பாதி தந்தான்,
பெண்மை தாய்மை
கொண்டாடி கொன்று போடு...//

:))

சசிகுமார் சொன்னது…

அருமையான வரிகள் அண்ணா.

ஜெயந்தி சொன்னது…

நல்லாயிருக்கு.

செல்வா சொன்னது…

//ஆதி சிவன் பாதி தந்தான்,
பெண்மை தாய்மை
கொண்டாடி கொன்று போடு.//

கலக்கல் அண்ணா ..!!