17 ஜன., 2012

பாழாய்ப் போகும் நிலங்கள் (ஒரு பின் நவீனத்துவ கவிதை?)


சென்னை மாநகரப் பேரூந்தின் 
அன்றாடப் பயணி ஒருவன்
சில்லரைகளுக்கான காத்திருப்பின் தவிப்பை உணர முடியாத 
நடுத்தர வாசியின் ஷேர் ஆட்டோ பயணத்தின் 
அடைசலில் சிக்கி இறங்கியபின் உடை கலைந்த 
வருத்தங்கள் பற்றி கவலைப்பட தேவையற்ற 
கார் வைத்திருப்பவன் தன் அலுவலக நேரம் முடிந்தபின் 
பாருக்குப் போகும்போது மனப்பாடம் செய்த பொய்யை 
சொல்ல வேண்டிய அவசியமற்ற 
பணக்கார முதலாளியின் 
விமானப் பயணத்தின் தாமதம் அறிந்தும் 
கவலை கொள்ளாது அருகிலிருந்தவளின் சில்மிஷத்தில்
இந்த நாள் கடந்துபோகும் இரவு வேளையில்
வெளிநாட்டு வாடிக்கையாளன் கொடுத்த 
மரபணு மாற்ற விதையை பயன்படுத்தும் 
ஒரு அப்பாவி ஏழை விவசாயியின் மகனாகிய நான் 
சென்னை நோக்கி வருகிறேன் புதிய வேலையொன்றைத் 
தேடி..

3 கருத்துகள்:

சிராஜ் சொன்னது…

ரைட்டு...

பெயரில்லா சொன்னது…

நேத்து வரைக்கும் நல்லாத்தான் இருந்தாரு.....

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

ஆஹா....