1 டிச., 2010

போர்க்குற்றவா‏ளியுமான மஹிந்தவை பிரிட்டனில் கைது செய்வதற்கு நீங்கள் செய்யவேண்டியவை...

Add caption
இந்தப்பதிவை எழுதிய நண்பர் பெங்களூரு அரவிந்தனுக்கு என் நன்றியும், வந்தனமும்..

இலங்கையில் பல்லாயிரக் கணக்கில் தமிழ்மக்களை படுகொலை செய்தும், போர்க்கைதிகளை சர்வதேச விதிகளுக்கு முரணாக சித்திரவதை செய்து படுகொலை செய்தும், தமிழின வரலாற்றுச் சான்றுகளை அழித்து தமிழர்கள் நிலத்தை அடையாளமின்றி அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதுமான சிங்கள பேரினவாத அரசாங்கத்தை தலைமையேற்று கொடுங்கோல் ஆட்சி நடாத்திவரும் இலங்கையின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச...
பிரித்தானியா வருகை தந்துள்ளதும், அவர் எதிர்வரும் 02-12-2010 அன்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற உள்ளதுமானது தடுக்கப்படவேண்டிய விடயமாகவும், அதே சமயம் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரித்தானிய சட்டங்களுக்கு அமைவாக அவரை கைது செய்யும் நடவடிக்கையையும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ந்துவரும் இனப்படுகொலைகள், பாலியல் பலாத்காரங்கள், என்பவற்றால் பலாயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தடுக்கக் கோரியும், இலங்கை அரசை தண்டிக்க கோரியும் உலகெங்கும் தமிழ்மக்கள் வீதிகளிலும், அரச செயலகங்களின் முன்பாகவும் பல ஆர்ப்பாட்டங்களை லட்சக்கணக்கில் திரண்டு நடாத்தியிருந்தாலும் அவை எல்லாவற்றிற்கும் பலன் கிடைக்கக் கூடியதாக இச்சந்தர்ப்பம் அமைவதாலும், கடந்த இரண்டுவாரங்களின் முன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் அவர்கள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் மகிந்த கைதுசெய்யப்படுவதை தம்மால் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்திருந்ததை நினைவில் கொண்டு உடனடியாக இந்த நடவடிக்கையில் உலகத் தமிழர்கள் இறங்க வேண்டும்.

எனவே உடனடியாக செய்யவேண்டிய வேலையாக கீழுள்ள லிங்கை அழுத்தி அதனூடாக உங்கள் முறைப்பாட்டை 300 சொற்களுக்கு அதிகமாக இல்லாமல் இலகுவாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்புங்கள்.

முறைப்பாட்டை அனுப்ப இங்கு அழுத்தவும்: http://www.fco.gov.uk/en/feedback

இவை எல்லாவற்றையும் மீறி 2 ஆம் திகதி அவர் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழ்கத்தில் உரை நடாத்தும் பட்சத்தில் அதை எங்கும் பல்லாயிரக்கணக்கில் பிரித்தானிய தமிழர்கள் கூடவேண்டியதும் அவசியமாகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.



மின்னஞ்சல் அனுப்ப முடிந்தவர்கள் கீழ்காணும் மின்னஞ்சலூடாகவும் உங்கள் கோரிக்கைகளையும், உங்களிற்கு மஹிந்த ஆட்சியால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் எழுதி அனுப்புங்கள். Proctors.office@admin.oxac.uk

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இணையத்தள முகவரி: http://www.fco.gov.uk/en/


ROCEDURE

1.Go to http://www.fco.gov.uk/en/feedback

2.Enter name ,email id, select subject as OTHER
3.Then write your letter

SAMPLE LETTER

Please arrest Mr.Mahinda Rajapakse.The Sri Lankan president and the sri lankan state did the genocide of Eelam Tamils.He with his state forces did aerial bombing and used artilleries on 10s of 1000s of Tamil civilians who were in the region called NO-...FIRE ZONE declared by the Sri lankan Sinhala dominant state.Sri Lankan army is exclusively Sinhalese.They did executions 1000sof Tamil civilians,raped 100s of Tamil woman.Sri Lankan state forces used phosphorous bombs on hospitals in Tamil areas.Sei Lanka's defense secretary Mr.Gotabaya Rajapaksa ,the president's brother said that anything beyonf the no fire zone was a legitimate target. Sri Lankan state has no tolerance for Press.The president's friend Lasantha Wikramathunga,the editor of English Newspaper was journalist from Sinhala ethnicity was killed by the government sponsored murders since he wrote an article criticizing the president and the state's war on Tamil people in the guise of eliminating the LTTE.Thissaiyanayam was a scribe in English print media and he was from Tamil ethnicity.He was imprisoned and sentenced to 20 years of imprisonment for criticizing the president and the state's war on Tamils.He won 2 international awards for his journalism.he was later released due to international pressure.

Sri Lankan state has no respect for democracy,equality,human rights,press freedom etc.Mr.Mahinda Rajapaksa who is the supreme authority on the state's armed forces is a racist,dictator ,tyrant , mass murder and war criminal
மேலும் தெரிந்துகொள்ள ...

43 கருத்துகள்:

அரவிந்தன் சொன்னது…

நன்றி செந்தில்..

ஒத்த கருத்துள்ள பதிவர்களை காணும்போது மனம் மகிழ்ச்சி கொள்கிறது

Unknown சொன்னது…

நீங்க சொல்றது நல்லாத்தான் இருக்கு...!

Unknown சொன்னது…

நன்றி! :-)

ஹேமா சொன்னது…

மிக்க நன்றி தகவலுக்கு செந்தில்.அரவிந்தனுக்கும் கூட.
முடிகிறவரை செய்கிறார்கள்...செய்வோம்!

ஆனால் பயணங்கள் செய்ய் இயலாதபடி பனிமழை பொழிந்துகொண்டிருக்கிறது பரவலாக ஐரோப்பிய நாடுகளில்.என்றாலும் அறிவித்தல் இல்லாமலே கீத்ரோ விமான நிலையத்தில் மக்கள் கூடித் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்கள்.நாளையும் ஒக்ஸ்பேட் முந்தலிலும் நிறைவாக எதிர்பார்க்கலாம் !

dheva சொன்னது…

நிச்சயம் செய்வோம் செந்தில்...

எனது தொடர்புகள் அத்தனை பேருக்கும் இதை அனுப்பி வைக்கிறேன்...!

பகிர்வுக்கு நன்றிகள்!

dheva சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
யாசவி சொன்னது…

செந்தில்,

கடைமை செய்தாயிற்று.

பிரச்சினையை உருவாக்கியவனிடமே பிராது கொடுப்பது ஒரு முரணாக இருக்கிறது

இரண்டாவது அவர்கள் அந்த வெப்சைட் பற்றிய கருத்தில் இதை பதிவு செய்தால் ஏற்றுக்கொள்வார்களா என தெரியவில்லை.

ராஜ நடராஜன் சொன்னது…

அர்விந்தனுக்கு இட்ட பின்னுட்டத்தின் தொடர்ச்சியாக பதிவுக்கும் ஹேமாவுக்கும் பதில் சொல்லிக்கொள்கிறேன்.

என்னைப்பொறுத்த வரையில் ராஜபக்சே ஹீத்ரோ விமான நிலையத்துக்குள் நுழைந்ததே லண்டன் புலம்பெயர் வாழ் மக்கள் சட்டரீதியாக இன்னும் பின்னடைவிலே தங்கி இருக்கிறார்கள் எனபேன்.ஒருவேளை வெளிச்சத்துக்கு வராமல் ராஜபக்சேவுக்கு விலங்கு என்ற கடிவாளம் போடும் நிகழ்வுகள் நடந்தாலும் மகிழ்வேன்.ஆனால் அதற்கான சாத்தியங்கள் இல்லையென்பதே யதார்த்தம்.

புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பை வரலாற்று ரீதியாக பதிவு செய்வதற்காக வேண்டியாவது லண்டன் புலம்பெயர் தமிழர்கள் தங்களை இணைத்துக்கொள்வது அவசியம்.

ஆனால் நேற்றைய சாலை,மரங்களின் பனிக்கட்டிகளைப் பார்க்கும் போது ராஜபக்சே சகுனம் பார்த்தே லண்டன் வந்திருக்க கூடும் என்று தோன்றுகிறது.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நல்ல பதிவு...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி!

ஜோதிஜி சொன்னது…

ராஜபக்சே ஹீத்ரோ விமான நிலையத்துக்குள் நுழைந்ததே லண்டன் புலம்பெயர் வாழ் மக்கள் சட்டரீதியாக இன்னும் பின்னடைவிலே தங்கி இருக்கிறார்கள் எனபேன்

இதைத்தான் அன்று முதல் இன்று வரை கூவிக்கொண்டேயிருக்கின்றேன்.

இந்திரா காந்தி படுகொலை விசாரனை கமிஷனை எதிர்த்தா சிங் மக்களால் வேட்பாளர் பட்டியேலே மாற்றப்பட்டது. ஒருவர் செருப்பு பரிசு வாங்கினார். இங்குள்ள தமிழர்கள் தான் என்றபோதிலும் அக்கரையில் உள்ளவர்களின் அக்கறை? எப்படி வெளிப்படுத்த வேண்டும்? எங்கே செல்லும் இந்த பாதை?

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்ல பதிவு..

Unknown சொன்னது…

நிச்சயம் நம்மாலானதைச் செய்வோம்.

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

நல்ல பதிவு - நன்றி

உமர் | Umar சொன்னது…

நானும் கடிதம் அனுப்பிவிட்டேன்.

லண்டன் வாழ் தமிழர்கள் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் விமான நிலையத்தில் திரண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். அதுபோல், எங்கெல்லாம் எதிர்ப்பை பதிவு செய்யும் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் செய்வோம். உலகிற்கு நம் நிலையை தெளிவாக எடுத்துரைப்போம்.

பதிவிட்ட அரவிந்தன், தஞ்சாவூரான் மற்றும் செந்தில் ஆகியோருக்கு நன்றிகள்.

மற்றவர்களும், தங்களுக்குத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் இதனைத் தெரியப்படுத்தி, ஒற்றுமையை பறைசாற்றுங்கள்.

vinthaimanithan சொன்னது…

ராஜ நடராஜனை ஆமோதிக்கிறேன்!

ராஜ நடராஜன் சொன்னது…

//செந்தில்,

கடைமை செய்தாயிற்று.

பிரச்சினையை உருவாக்கியவனிடமே பிராது கொடுப்பது ஒரு முரணாக இருக்கிறது

இரண்டாவது அவர்கள் அந்த வெப்சைட் பற்றிய கருத்தில் இதை பதிவு செய்தால் ஏற்றுக்கொள்வார்களா என தெரியவில்லை. //

யாசவி!எனக்குத் தெரிந்து அரவிந்தன்,செந்தில் கொடுத்த சுட்டி இணைப்புக்கள் உண்மையானவை என்று உறுதியளிப்பேன்.ஏற்றுக்கொள்ளும் சாத்தியங்கள் இருப்பதால்தான் பிரிட்டனில் இருக்கும் புலம்பெயர் தமிழ ஆர்வலர்கள், ஊடகங்கள் சுட்டியின் விலாசத்தைக் குறிப்பிட்டுருக்கின்றன.எனவே நம்பகத்தன்மை வாய்ந்தவை என கருதலாம்.

சசிகுமார் சொன்னது…

அண்ணா லிங்குகள் சரியாக வேலை செய்கின்றனவா என சோதிக்கவும். நான் அவைகளை காப்பி செய்து பேஸ்ட் செய்து தான் அந்த தளங்களுக்கு சென்றேன். என்னுடைய கருத்துக்களை அனுப்பி விட்டேன்.

செல்வா சொன்னது…

நிச்சயம் மின்னஞ்சல் அனுப்புகிறேன் அண்ணா .,
பதிவிட்டதற்கு நன்றி ..!!

Bibiliobibuli சொன்னது…

இந்த இணைப்புக்குரிய விவரங்கள் தமிழ்மணத்தில், குறிப்பாக "எல்லாளன்" தளத்தில் சில நாட்களுக்கு முன்பே இருந்தது. எப்படி தவறவிடப்பட்டது??

நிறைய சொல்ல நினைக்கிறேன். இது சமயமல்ல. பின்னொருநாளில் நிச்சயம் எழுதுவேன்.

ஜெயந்தி சொன்னது…

நம்மால் முடிந்த அளவுக்கு எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

Unknown சொன்னது…

நன்றி, மாப்ளே. அரவிந்தன் பதிவைப் பார்த்தவுடன், கடுமையான வேலைப்பளு இருந்தபோதிலும், ஒரு பதிவு போட்டு அவர் பதிவுக்கு ஒரு லிங்கும் கொடுத்து விட்டேன். குறிப்பிட்ட இணையதளத்தில் என் எதிர்ப்பையும் பதிவு செய்து விட்டேன்.

சிறு துளி பெரு வெள்ளம், இந்த வெள்ளம் அந்த அயோக்கியனை அடித்துச் செல்லட்டும்.

@கும்மி
குறிப்பிட்டமைக்கு நன்றி. விரைவில் அழைக்கிறேன்.

VELU.G சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

Unknown சொன்னது…

பதிவிட்டதற்க்கு நன்றி..முடிந்தவரை எனது தொடர்புகளுக்கு அனுப்புகிறேன்..

பெயரில்லா சொன்னது…

குட்..அவனுக்கு தண்டனை கிடைத்தே தீரும்.மெயில் அனுப்புகிறேன்

Jerry Eshananda சொன்னது…

நல்ல முயற்சி.

a சொன்னது…

அனுப்பிவிட்டேன் செந்தில்.

Unknown சொன்னது…

நிச்சயம் செய்கிறோம்..

தினேஷ்குமார் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி அண்ணே

என்னுடைய ஆதங்கத்தை அனுப்பிவிட்டேன் அண்ணே...........

அன்பு தமிழர்களே
இன்றாவது ஒன்று
கூடுங்களேன்
அரக்கனை வதம்
செய்வோம் வாங்க .............

pichaikaaran சொன்னது…

இயன்ற வழிமுறைகள் அனைத்திலும் எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டே இருக்க வேண்டும்

உமர் | Umar சொன்னது…

பிரிட்டனில் இருந்து இயங்கும் Act Now அமைப்பு நாளை மாலை ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் துண்டுப்பிரசுரங்கள் மூலம் ராஜபக்ஷே மீதான எதிர்ப்பைத் தெரிவிக்கின்றது. அனைத்து மாணவர்களையும், அலுவலர்களையும் நேரில் சந்தித்து போர்க்குற்றங்களை பற்றியும், ராஜபக்ஷேவின் பங்கு பற்றியும், தமிழர்களின் தற்போதைய நிலை பற்றியும் எடுத்துரைக்க உள்ளனர்.

www.act-now.info

தமிழ் உதயம் சொன்னது…

தகவலுக்கு நன்றி செந்தில்..

பெயரில்லா சொன்னது…

அனுப்பிட்டேன் அண்ணே..

PB Raj சொன்னது…

Yes already done

உமர் | Umar சொன்னது…

ராஜபக்சேவுக்கு முதல் ஆப்பு. ஆக்ஸ்போர்ட் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. மேலும் விபரங்களுக்கு.

பெயரில்லா சொன்னது…

பலன் இருக்கோ இல்லையோ தெரியாது. ஆனால் எங்கள் கடமை என்று அனுப்ப வேண்டிய போது அனுப்பவுதையும் நண்பர்களிடம் அனுப்பச்சொல்லி வேண்டுவதையும் நிறுத்தக்கூடாது. கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று இயங்குவோம். பலன் ஒரு நாளில்லை ஒரு நாள் கிடைக்கத்தானே வேண்டும். கிடைக்கும் என்று நம்புவோம்.

நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விட்டது என்பது எவ்வளவு பெரிய விசயம். பனி மழை பாராது எதிர்ப்பை தெரிவித்த லண்டன் வாழ் மக்களுக்கு சிரம் தாழ்த்துகிறேன். அதைவிட முடிந்த அளவு ஈமெயில் அனுப்பி தன் கடமையைச் செய்ய நல்லுள்ளங்களுக்கும் சிரம் தாழ்த்துகிறேன்.

உருக்கமுடன் அனாமிகா

Unknown சொன்னது…

நிகழ்ச்சியை ரத்து செய்தால் மட்டும் போதாது. கைது செய்து அவன் வாழ்க்கையையும் ரத்து செய்யவேண்டும்.

தொடர்ந்து முயற்சிப்போம்...ஒற்றுமையோடு..

Unknown சொன்னது…

நல்ல பதிவு..

உமர் | Umar சொன்னது…

//நிகழ்ச்சியை ரத்து செய்தால் மட்டும் போதாது. கைது செய்து அவன் வாழ்க்கையையும் ரத்து செய்யவேண்டும்.//

நம்முடைய போராட்டங்கள் அதனை நோக்கித்தான். இது முதல்கட்ட வெற்றி. இனி அவன் தமிழர்கள் செறிவாக வாழும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தயங்குவான்.

லண்டன் செல்வதற்கு முன் ராணிக்கு கடிதம் எழுதி தான் கைது செய்யப்படமாட்டோம் என்னும் உறுதியைப் பெற்றே சென்றிருக்கின்றான். ஆனாலும், விமான நிலையத்தின் பின் வாசல் வழியாகவே அவன் லண்டன் நகருக்குள் நுழைய முடிந்துள்ளது. அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்து அவன் வெளியேறும்போது தமிழர்களின் ஒற்றுமையை கண்ணுற்றே வெளியேறுவான்.

அவனது போர்க்குற்றங்கள் உலகநாடுகளின் பார்வையில் பட இது ஒரு சந்தர்ப்பம். விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களிலும், பக்சே சகோதரர்களின் பங்கு வெளிப்படையாகியுள்ளது. இவற்றை பயன்படுத்தி அவனுக்கு தண்டனை பெற்றுத்தருவதை துரிதப்படுத்தவேண்டும்.

இன்னொரு சுட்டி.

.

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

அன்பு செந்தில் மின்னஞ்சல் அனுப்பி விட்டேன் .மிக்க நன்றி .தொடர்ந்து குரல் கொடுப்போம் http:/www.grajmohan.blogspot.com

Ravichandran Somu சொன்னது…

சவுக்கு தளத்தில் முழு வீடியோவையும் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை.

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=194:naked-body-of-woman-in-channel-4-video-identified-as-journalist-isaippiriya&catid=10:2010-10-16-14-42-56&Itemid=14

கடிதம் அனுப்பிவிட்டேன்...

அருள் சொன்னது…

பதிவிட்டதற்க்கு நன்றி..

தொடர்ந்து முயற்சிப்போம்...ஒற்றுமையோடு..

கபிலன் சொன்னது…

எப்பொழுதும் மனதை உறுத்திக்கொண்டிருக்கும் விஷயம்...ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்ற விரக்தியோடு.......பதிவில் கூறியதை செய்திருக்கிறேன்.
நன்றி !