23 மே, 2010

நினைவோ ஒரு பறவை ..


நள்ளிரவில் பின்தொடரும் பேய்க் கதைகளாய் 
நீ மறந்த என் கவிகளில் வழிகிறது காதல்..

சிறு தூறல் மண்வாசமென 
மனப் பிம்பங்களின் 
நேசமிகுதி உன்னைப் போலவே பார்க்கும்
உருவங்களில் தெரிகிறது.
தேவதை போலவும், பிசாசை போலவும் ..

மது ராத்திரிகள் விடியும் நேரத்தில் 
மறக்காமல் வந்து விடுகிறாய் 
நீயும், சில பிசாசுகளும்..

அறியப்படாத நபர்களின் மரணமாய் 
உன் திருமண நாள் எனக்கு,
கரி நாள்..

உன் கணவனுக்கும் இருக்கலாம் 
என்னைப்போல் ஒரு கதை,
பிசாசுகளின் கதை ...

நினைவின் ஓட்டைகள் வழியே 
வழியும் மதுவை குடிக்கும் 
சிறகை இரவல் கொடுத்த பறவை,
போதையின் உச்சத்தில் எழுதிகொண்டிருக்கும்,
பிசாசுகளின் கவிதை ...

22 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

எப்பா ! எப்டியோ புரியிற மாதிரி ஒரு paragraph form பண்ணிட்டேன் . ச்சே! தேவைல்ல்லாம ஒரு Tiger எ வேஸ்ட் பண்ணிட்டேன்

நினைவோ ஒரு பிசாசு
---------------------------------------------
நள்ளிரவில் சிறு தூறல் பின்தொடரும்
மது ராத்திரிகள் பிசாசை உன்னைப் போலவே பார்க்கும்
உன் திருமண நாள் எனக்கு பிசாசுகளின் கவிதை
உன் கணவனுக்கும் மதுவை இரவல் கொடுத்த நீ பிசாசு

பெயரில்லா சொன்னது…

sorry, just forgot the caption: NOT LOVED, DEAD

Unknown சொன்னது…

//நினைவோ ஒரு பிசாசு//

இது கூட நல்லாத்தான் இருக்கு வசந்த்

Unknown சொன்னது…

//NOT LOVED, DEAD//

அப்படியும் வச்சுக்கலாம்

பெயரில்லா சொன்னது…

We are waiting to read the bio-data for countries: Singapore, Malaysia, china, India !

Unknown சொன்னது…

//We are waiting to read the bio-data for countries: Singapore, Malaysia, china, India !//

அதுக்கென்ன அடுத்து சீனாவுக்குதான் ...

நேசமித்ரன் சொன்னது…

நல்லா வந்திருக்குங்க கவிதை !!!

ஹேமா சொன்னது…

//நினைவின் ஓட்டைகள் வழியே
வழியும் மதுவை குடிக்கும்
சிறகை இரவல் கொடுத்த பறவை,
போதையின் உச்சத்தில் எழுதிகொண்டிருக்கும்,
பிசாசுகளின் கவிதை ...//

இந்த வரிகளை மிகவும் ரசிச்சாலும் கவிதை முழுதுமே நல்லாயிருக்கு செந்தில்.

என்ன....பிசாசுன்னு சொலிட்டீங்க.
அதான் கவலை !

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

உன் கணவனுக்கும் இருக்கலாம்
என்னைப்போல் ஒரு கதை,
பிசாசுகளின் கதை ...]]


:)
ஆதரவா?...

நல்லாருக்கு கவிதை

Chitra சொன்னது…

அறியப்படாத நபர்களின் மரணமாய்
உன் திருமண நாள் எனக்கு,
கரி நாள்..

உன் கணவனுக்கும் இருக்கலாம்
என்னைப்போல் ஒரு கதை,
பிசாசுகளின் கதை ...


.... வித்தியாசமான சிந்தனையில் உருவான அருமையான கவிதை. :-)

Karthick Chidambaram சொன்னது…

Arumayana kavithai
//உன் கணவனுக்கும் இருக்கலாம்
என்னைப்போல் ஒரு கதை,
பிசாசுகளின் கதை ...//

Ethu saabamaa illa Kobamaa ?

தமிழ் உதயம் சொன்னது…

கவிதை நல்லாருக்கு.

Asiya Omar சொன்னது…

கவிதையை புரிய திரும்ப திரும்ப படித்தேன்,வித்தியாசமான கவிதை.

சௌந்தர் சொன்னது…

என்ன....பிசாசுன்னு சொல்லுரிங்க

Kousalya Raj சொன்னது…

வித்தியாசமான சிந்தனை, இது காதல் தோல்வி கவிதை மாதிரி இருக்கிறது!

VELU.G சொன்னது…

கவிதை அருமை

//
அறியப்படாத நபர்களின் மரணமாய்
உன் திருமண நாள் எனக்கு,
கரி நாள்..
//

மிகவும் நொந்துபோனவர்களின் எழுத்துபோல் உள்ளது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இனிய பயண வாழ்த்துக்கள்

ஜெய்லானி சொன்னது…

நல்ல கவிதை

Unknown சொன்னது…

நன்றி ...

நேசமித்திரன்

ஹேமா

புன்னகை தேசம்

சித்ரா

கார்த்திக்

தமிழ் உதயம்

ஐஸா ஓமர்

கவுசல்யா

சௌந்தர்

வேலு

ஜெய்லானி

ரமேஷ் ......

அனைவர்க்கும் மேலான வணக்கமும், நன்றியும் ....

விஜய் சொன்னது…

நல்லா இருக்கு நண்பா

வாழ்த்துக்கள்

விஜய்

செந்தில்குமார் சொன்னது…

உன் கணவனுக்கும் இருக்கலாம்
என்னைப்போல் ஒரு கதை,
பிசாசுகளின் கதை ...


நினைவின் ஓட்டைகள் வழியே
வழியும் மதுவை குடிக்கும்
சிறகை இரவல் கொடுத்த பறவை,
போதையின் உச்சத்தில் எழுதிகொண்டிருக்கும்,
பிசாசுகளின் கவிதை ...

இற‌ந்தகால‌த்தின் கால நினைவுகளின் ஏக்கங்கள்

இரைக்கப்பட்டிருக்கிரது இங்கே வரிகளாய்

அரங்கு நிரைந்த கைதட்டு உங்களுக்கு

கே.ஆர்.பி.செந்தில்

Unknown சொன்னது…

நன்றி....

விஜய்

செந்தில்குமார்