8 அக்., 2011

போதி தர்மரும்!, ஏழாம் அறிவும்!!, தமிழனின் பெருமையும்!!! ...

A.R.முருகதாஸின் ஏழாம் அறிவு திரைப்படம் போதி தர்மர் அவர்களின் வரலாற்றை வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதை அறிந்து போதி தர்மர் பற்றி கூகுளிடம் தேடியபோது ஏராளமான தகவல்கள் கிடைத்தன. எப்படி ஒரு தமிழனின் வரலாறு மூடி மறைக்கப்பட்டது என்பது ஆச்சர்யமே!. ஒரு வேளை அவர் புத்த மதத்தினை தழுவியதால் அவரின் பெருமைகள் இந்தியாவில் மறைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் சீனாவில் அவரைப்பற்றிய அத்தனை குறிப்புகளுமே அவர் தென்னிந்தியாவில் பிறந்த பல்லவ வம்சத்தை சார்ந்த அரசகுமாரன் என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

படத்தின் முதல் இருபது நிமிடங்கள் மட்டுமே போதி தர்மரைப் பற்றி காட்டியிருக்கிறோம். ஆனால் அவரைப்பற்றிய விவரங்களை இணையத்தில் தேடிப்பாருங்கள் என முருகதாஸ் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். கூகுளில் கிடைத்த அவரின் ஏராளமான விவரங்களைப் படித்தபோது ஒரு தமிழனின் வரலாறு மட்டுமல்ல தமிழனின் அரிய கலை வடிவங்களும் கானாமல் போயிருப்பது அறிந்து வருத்தமாக இருந்தது.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என இந்திய சினிமாவில் தனது எல்லாப் படங்களிலும் தனி முத்திரை பதித்துவரும் முருகதாஸ் இப்படி நாம் யாரும் அறிந்திராத ஆனால் ஒரு பகுதி உலகமே கொண்டாடும் ஒரு தமிழனின் பெருமையை நமக்குத்தர முன்வந்திருக்கிறார். அவருக்கும், நடிகர் சூர்யாவுக்கும் எனது வந்தனங்கள்..

போதி தர்மரை பற்றித் தெரிந்துகொள்ள :

20 கருத்துகள்:

கோகுல் சொன்னது…

நானும் உங்களைப்போல ட்.வி.யில் அவங்க கொடுத்த பேட்டிய பாத்துட்டு
வழக்கமா கொடுக்குற பில்ட் அப்புன்னு தான்னு நினைச்சு கூகுள்ல தேடுனேன்.
ஆனா கிடைச்ச தகவல்களை பாத்துட்டு அதிர்ச்சியும் ஆச்சர்யங்களும்!

ஏ.ஆர்.முருகதாசுக்கும்,சூர்யாவுக்கும் நிச்சயம் சபாஷ் போடலாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இவ்வளவு பெரிய வரலாற்று உண்மை மிகச்சாதாரணமாக மறைக்கப்பட்டிருக்கிறதே?

அமர பாரதி சொன்னது…

I think this will be another mahadheera.

Sivakumar சொன்னது…

அதான் அண்ணே சினிமா. இனிமேயாவது விமர்சனம் எழுத ஆரம்பிங்க. ட்யூசன் பீஸ் கம்மிதான். வாரீகளா?

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான பதிவு
இணைப்புகளைக் கொடுத்திருப்பது
தொடர்ந்து படிக்க வசதியாக இருக்கிறது
நன்றி வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

இப்படி வறலாற்று உண்மைய மறைச்சிட்டாங்களே

அருமையான பதிவு

சசிகுமார் சொன்னது…

தமிழனின் புகழ் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. இணையத்திலேயே எக்கணமும் இருக்கும் நமக்கே இதுவரை இவரை பற்றி தெரியவில்லை என்றால் பாருங்கள் தமிழனின் பெருமைகளை திட்டம் போட்டு அழித்து உள்ளனர்.

aotspr சொன்னது…

மிகவும் நல்ல பதிவு...
பல உண்மைகளை பற்றி தெரிந்துக் கொண்டேன்.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

thanks for sharing

அஞ்சா சிங்கம் சொன்னது…

படம் போதிதர்மரை பற்றியது என்றாலும் .கதை assasin greed என்ற வீடியோ கேம் இல் இருந்து எடுத்தது ..
யூ டியுப் இல் பாருங்கள் .............

http://www.youtube.com/watch?v=vcE8xJkK6t4

வேலாயுதம் கெட்டப்பு ........மற்றும் ஏழாம் அறிவு கதை இதுதான் .................

SURYAJEEVA சொன்னது…

அகழ்வாராய்ச்சி துறையில் இருக்கும் ஒருவர், அவர் கொள்கைகளுக்கு உலை வைப்பதால் பல வரலாற்று ஆவணங்களை அழிப்பதை ஒரு செய்தியும் ஓடி கொண்டிருக்கிறது... ஆதாரமில்லை

Thirumurugan MPK சொன்னது…

this is consipiracy from europeans they want to prove that they the seniors we asians are under them, yes tamilians history is destroyed are untold to next generation for some reasons

லெமூரியன்... சொன்னது…

நமக்குதான் அறிய செய்தி இது....
காஞ்சிபுரத்துகாரர்கள் சாதரணமாக இவரு எங்க ஊர் காரர்ல என்று சொல்லி செல்வார்கள்..!
:) :)
சில வருடங்களுக்கு முன்பு இவரைப் பற்றி படித்துவிட்டு ஒரு காஞ்சி நண்பனிடம் உரையாடியபொழுது இப்படி சொன்னான்.
:)

டிராகன் சொன்னது…

செந்தில் சார் ,,,செம்ம பதிவு

சத்ரியன் சொன்னது…

பதிவிற்கும், தரவுச்சுட்டி பகிர்விற்கும் நன்றிங்க.

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

//@பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இவ்வளவு பெரிய வரலாற்று உண்மை மிகச்சாதாரணமாக மறைக்கப்பட்டிருக்கிறதே?///

என்ன ஒரு ஆதங்கம் , சில சமயம் தங்கள் வரலாற்றையும் பின் வரும் காலத்தில் மறைக்க வாய்ப்புள்ளது அதனால் , இப்போதே ஏதாவது ஒரு படத்தில் நடித்து விடுங்கள் பன்னிகுட்டியாரே . . ஹி ஹி

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

லிங்க் குடுத்ததற்கு நன்றி நண்பரே , நானும் நம் தமிழனின் வரலாற்றை போய் படித்து பார்கிறேன் . .

? சொன்னது…

வரலாறு மறைக்கப்பட்டதாக சிலர் இங்கே வருத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த போதிதர்மர் சீன ஜென்மத குருமார்கள் உருவாக்கிய கற்பனை கதாபாத்திரம் எனவும் சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சீன பெளத்தர்கள் எந்த கதையை வேண்டுமாலும் போதிதர்மர் தலையில் கட்டிவிடுவார்களாம், நாம் பீர்பால் அல்லது தெனாலிராமனை வைத்து கதை செய்வது போல! அவர் குங்பூவின் தந்தை அல்லது அவர் ஒரு நாள் தூக்கம் வந்த போது காண்டாகி தனது கண்ணிமைகளை புடுங்கி போட்டபோது அதிலிருந்த டீ வந்தது, இப்படி. ஆனால் காஞ்சி நிஜமாலுமே மிகச்சிறந்த திகநாகா போன்ற பெளத்த அறிஞர் ஈன்றெடுத்த பெருமைகொண்டது.

இதோ சிரிக்க ஒரு போனஸ் லிங்க்..


Why did Bodhidharma go to the Internet?

புரட்டு சொன்னது…

திட்டமிட்டு தமிழின் பெருமையை மறைத்த தமிழின எதிரிகள்.. போகரை தேடுங்கள் இன்னும் ஆச்சரியங்கள் காத்துக் கிடக்கின்றன... மீண்டெழும் தமிழின வரலாறு...

இர.கருணாகரன் சொன்னது…

இங்குள்ள விமர்சனங்களிலேயே எவ்வளவு வித்யாசம் பாருங்கள் ,

நம்மைவிட சிறந்தவர்களாக நம்மவர்களை நாம் ஏற்பதில்லை ,

ஏதாவது ஒரு குறையை சொல்லி அல்லது ஒரு பொய்யை காரணம் காட்டி உண்மையை ஏற்றுக்கொள்ள முயல்பவர்களையும் மாற்றம் கொள்ள செய்யும் ஒரே இனம் மதிப்புக்குரிய நமது தமிழினம்தான் என்று மனம் வருந்தி பெருமைகொள்கிறேன்

மல்லாந்து படுத்து எச்சில் துப்புவது என்பார்கள்.

எதிலும் ஓர் நம்பிக்கையின்மை.


என்று மாறுமோ இன் நிலை


உங்கள்