30 அக்., 2010

முடியலப்பா...

வாழ்ந்து வாழ்ந்து 
அலுத்து சலித்த வாழ்வில் 
தினமும் சந்திக்கிறேன்..

போலி புகழ் 
போலி வணக்கம் 
போலி ஆன்மிகம் 
போலியே உண்மையாய் ..

வாரிசு அரசியல் 
வாரிசு சினிமா 
வாழவைக்கும் அடிமைகள்..

கோசம் போடு 
போஸ்ட்டர் ஒட்டு
கவுன்சிலரான பின் 
திரும்ப சுருட்டு..

வரவேற்பறை சனியனுடன் 
குடும்பம் நடத்தும் மனைவியர் 
சீரியல் சிங்காரிக்கு 
வாங்கும் வக்காலத்து..

பதிவுலக சீமான்கள் 
இலக்கிய சிற்பிகள் 
அவன் என்னை திட்டுறான் 
நீ அவனை திட்டுடா..

என்னடா உலகம் இது 
டாஸ்மாக் பக்கம் ஒதுங்கினால் 
அண்ணே கட்டிங்கா என 
வாசலில் நிற்கிறான்..

நீ வாங்கித்தரும் குவாட்டருக்கு
நீ பொலம்புறத ரசிக்கனுமா 
தண்ணியே அடிக்கலே
போங்கடா வெண்ணைகளா!

28 அக்., 2010

காதல் - பயோடேட்டா...

பெயர்                                  : காதல்
இயற்பெயர்                       : காமம்
தலைவர்                            : ரதி, மன்மதன்
துணை தலைவர்கள்      : ஷாஜகான்- மும்தாஜ், ரோமியோ- ஜூலியட், 

                                                 அம்பிகாபதி- அமராவதி 
மேலும்
துணைத் தலைவர்கள் 
 :பதின்ம வயதினர் அனைவரும்  

வயது                                  : காதலுக்கு ஏது வயது 

தொழில்                             :அன்பு காட்டுவது (சமயங்களில் வெறித்தனமாக)
பலம்                                   :
இன்றுவரைக்கும் நிலைத்து நிற்பது
பலவீனம்                           : கள்ளக் காதல்
நீண்ட கால சாதனைகள்        :சாகா வரம் பெற்ற இலக்கியங்கள், சினிமாக்கள்
சமீபத்திய சாதனைகள்          :காதலை அங்கீகரிக்க ஆரம்பித்திருப்பது 
நீண்ட கால எரிச்சல்                :பணம், மதம், ஜாதி
சமீபத்திய எரிச்சல்                  : ஒன்றுக்கும் மேற்ப்பட்ட காதல்கள் 

                                                              ஒருவருக்கு இருப்பது
மக்கள்                                          : காதலிப்பவர்கள் மட்டும்

சொத்து மதிப்பு                         : ஒரு ரோஜா போதும் 

நண்பர்கள்                                 : தூது செல்பவர்கள், கைக்காசை 
                                                          போட்டு கல்யாணம் நடத்தி வைப்பவர்கள்   
எதிரிகள்                                     :உறவினர்கள், பெற்றோர்கள் 
ஆசை                                          : அழகான துணை
நிராசை                                       : சமயங்களில் கண்ணாடி 
பாராட்டுக்குரியது                   : கட்டுடைத்தது 
பயம்                                            : திருமண காலத்தில் வருவது
கோபம்                                        : ஊடுதல் காமத்துக்கின்பம்
காணாமல் போனவை             : பொது இடங்களில் நாகரீகம்
புதியவை                                    : S.M.S
கருத்து                                         : அழகான பெண்களை ஆணும், பணக்கார 
                                                         ஆண்களை   பெண்ணும் விரும்புவது ஏன்?
டிஸ்கி                                          :(மற்றவர்கள்) காதலின் சோகத்தை 
                                                           அதிகம் ரசிப்பது ஏன்?

26 அக்., 2010

ஆங்கில மோகம் ( English Mania) ...

இன்றைக்கு உலகம் முழுதும் ஏதோ ஒரு வடிவில் ஆங்கிலம் நுழைந்து விட்டது. தமிழில் ஆங்கில கலப்பின்றி யாருமே பேசுவது இல்லை.. ஆங்கில வார்த்தைகளையே தமிழில் எழுதினால்தான் புரியவைக்கமுடியும் என்கிற நிலைமைக்கு தமிழும் வந்துவிட்டது. இன்றைக்கு இருக்கிற ஊடகங்கள் இதனை செவ்வனே செய்து வருகின்றன. நான்தான் தமிழ்.. தமிழ்தான் நான் என திரும்ப திரும்ப சொல்லிவரும் கலைஞரும் அவரின் சொந்த ஊடகத்தில் தமிழ் படும் பாட்டை பார்ப்பதில்லை போல. 

நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்வரைக்கும் எனக்கு ஆங்கிலம் ஆமனக்குதான், அதனை தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இன்றைக்கு வீட்டா என்று அழைக்கப்படும் விவேகானந்தா கல்வி நிறுவனத்துக்கு ஒரு அஞ்சலட்டை அனுப்பினேன். அவர்கள் கேட்ட கட்டணம் அப்போதைய சூழலில் மிக அதிகம் என்பதால் நான் பணம் கட்டவில்லை. ஆனால் அவர்களோ கொஞ்சம் கொஞ்சமாக விலையை குறைத்து கடைசியில் புத்தகங்களுக்கு மட்டும் பணத்தை கட்டுங்கள் போதும் என சொல்லவே, அதற்கான பணத்தை நான் என் தந்தையிடம் கேட்டு வைக்க. ஆனால் அதற்க்கான காரணத்தை எனக்கு தெரியாமல் அவர் என் வகுப்பு ஆசிரியரிடம் ( என் சித்தப்பா) சொல்ல, அன்றைக்கு பார்த்து நான் வகுப்புக்கு செல்லவில்லை. அவரோ மற்ற மாணவர்களிடம் இங்கு பள்ளியில் ஏதாவது கட்டணம் கேட்டார்களா எனக்கேட்டு, நண்பர்கள் அப்படி ஏதும் இல்லை என்றதும் அன்றைய வகுப்பு அந்த பணத்தை வாங்க நான் ஏன் பொய் சொல்கிறேன் என்ற காரணத்தை ஆராய்வதுடன் முடிவடைந்திருக்கிறது. அதன்பிறகு என் சித்தப்பா ( வகுப்பு ஆசிரியர்) இறக்கும் வரைக்கும் என்னுடன் பேசவில்லை. காரணம் மறுநாள் தனியறையில் வைத்து அவரை நான் பேசிய பேச்சுதான். அதனை வேறு யாரிடமும் பகிர முடியாத விசயம் அது.

ஒரு வழியாக புத்தகம் வந்து சேர்ந்தது, ஆனால் முதல்வாரம் மிக ஆர்வமாக படித்த நான் அதற்கடுத்த நாட்களில் அதனை பிரித்து பார்ப்பது கூட கிடையாது. நண்பர்கள் ஆர்வப்பட்டு வாங்கிச் சென்றனர், அவர்களும் படிக்கவில்லை. இப்படியாக பின்தங்கிவிட்டது என் ஆங்கில ஆர்வம். நான் (1992) முதலில் சிங்கப்பூர் போனபோது ஒரு நாள் அங்கு ரயிலில் நண்பனை சந்திக்க செல்வதற்காக காத்திருந்தேன். அப்போது பத்து வயது மதிக்கத்தக்க ஒரு பைய்யன் மின் படிகளில் அவசரமாக மேலேறி வந்தான். அவன் செல்லவேண்டிய ரயில் கிளம்பி விட்டது. அதனை கீழேயிருந்து மேலேறி வரும் தன் குடும்பத்தாரிடம் இப்படித்தான் சொன்னான். "Train go back ready" அதனைக் கேட்ட எனக்கு சட்டென ஒரு சந்தேகம் வந்தது. சிங்கப்பூரில் பள்ளிகளில் ஆங்கிலம்தான் முதல் மொழி. அப்படி படிக்கும் ஒரு பைய்யன் தப்பாக ஆங்கிலம் பேசுகிறானே. ஒரு வேலை இதுதான் சரியான ஆங்கிலமோ என குழப்பம் வந்தது. பொதுவாகவே தமிழர்களான நமக்கு ஆங்கிலம் பேசுவது பெருமைக்குரிய விசயம் அதிலும் யாராவது ஆங்கிலத்தை தப்பாக பேசினால் அவ்வளவுதான், கேலி செய்தே கொன்றுவிடும் ஆட்கள் நாம். காலம் காலமாக வெள்ளைகாரனுக்கு அடிமைப்பட்டு ஆங்கில மோகத்தில் அம்மொழியை மிக உயர்வாக பார்க்கும் ஆட்கள் இன்றுவரைக்கும் இங்கு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் இருந்து போன எனக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது என்றாலும் அதனை சிங்கப்பூரை சேர்ந்த ஒருவன் தப்பாக பேசுகிறான் என்பது ஆச்சர்யம் அளித்ததில் வியப்பில்லை. 

அதன்பிறகுதான் தெரிந்தது பழைய சிங்கப்பூர் ஆட்களுக்கு சரியாக ஆங்கிலம் தெரியாது. ஆனால் அவர்கள் அதனைப்பற்றி கவலைபடுவதில்லை. தாங்கள் விரும்பிய மாதிரி அவர்கள் அம்மொழியை கையாள்கிறார்கள் என்பது. அவர்களைப் பொறுத்தவரை ஆங்கிலம் என்பது ஒரு தொடர்பு மொழி அவ்வளவுதான். அதனை இலக்கண சுத்தமாக பேசவேண்டும் எனற அவசியமில்லை. இப்படித்தான் நானும் மெல்ல மெல்ல ஆங்கிலம் கற்றுக்கொண்டேன். இன்றைய சிங்கப்பூர் இளைய தலைமுறையினர் மிக நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனாலும் அவர்களிடம் சில ஆங்கில வார்த்தைகள் இன்னும் பழைய முறையில்தான் பேச்சுவாக்கில் பயன்படுத்தபடுகிறது. அவற்றை முடிந்தவரைக்கும் நண்பர் வசந்த் தொகுத்திருக்கிறார். அதனை கீழே தந்துள்ளேன். 
can la
ok la
no good aa
very good aa
very nice...aa
quite nice aa
lousy ya
no matter what...
this side aa
other side aa
over there
never mind
thank you ya
in these case la
no money to eat
dont be so angry ma
you no understand me
next time aa
no wonder
i tell you sir









this one aa
you want this one aa?
dont want this one aa?
better la
take away aa
having here aa?
this is what?
little bit  
pretty one la!
finished already ya?
trying to funny ! is it?
go further down
all the way down
one more
paid already aa
you blur aa
seriously
stop talking nonsense
trust me
so unlucky







Hi sir
The other day
cheaper la
come or not
can or cannot
dont worry ya
may be
you are
silly
about what
can not be
no choice la
like what aa
like that aa
i think so la
also can la
can also la
can can
i am serious
eat already
throw away already







crazy ya
this is my view la
seriously
ok ok already
dont be silly
go away
i think so la 
no more la
together
go back already ya?
other way around aa?
precisely la
very rude aa? 
singapore only
no need aa
correct or not
so simple ma
i call police
no pork at all
where are you la
i guess so
hungry la i











இதில் laa என்பவை மலாய் மொழியில் சாதரணமாக அடிக்கடி பயன்படுத்தபடும் லா என்கிற வார்த்தை. aa என்பது ஆ வின் ஆச்சர்ய வடிவம். already இந்த வார்த்தை உச்சரிக்கும்போது ready என்றுதான் காதில் விழும்.  வேறு வார்த்தைகள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

இதைபோலவே மொரிசியசில் நான் ஒருவரை சந்தித்தேன். அவர் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் ஆனால் தமிழ் சுத்தமாக தெரியாது. அவர் என் ஆங்கிலத்தை கேட்டுவிட்டு நான் அதனை தப்பாக பேசுகிறேன் என்றார். ஆனால் நானோ உங்களுக்கு உங்கள் தாய்மொழியே தெரியவில்லை, ஆனால் இன்னொரு மொழியை தப்பாக பேசுவதுபற்றி கவலைப்படுவது வருத்தமளிக்கவில்லையா என்றபோது தலையைக்குனிந்து கொண்டார். பொதுவாகவே உலகின் அதிக மக்கள் பேசக்கூடிய மொழியைகொண்ட நாடு சீனா. அதன் தேசிய மொழியான மேண்டரின் தான் அவர்களுக்கு தெரியும். மேலும் கிட்டத்தட்ட 52 மொழிகள் கொண்ட நாடு அது. ஆனால் அங்கு மிக பெரும்பாலோருக்கு அதன் தேசிய மொழியான மேண்டரின் தெரியும். சீனா மட்டுமல்ல உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆங்கிலம் தெரியாது. ஆனால் இன்றைய சீனா எப்படி இருக்கிறது என்று பாருங்கள். ஆங்கிலம் படிக்க அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை இணைப்பாக கொடுத்துள்ளேன். அதில் இருக்கும் ஆங்கில SUBTITLE Option தெரிவு செய்து பாருங்கள்.  

25 அக்., 2010

தி.மு.க வின் தேர்தல் வியூகம்...

சமீபத்தில் மு.க.ஸ்டாலின் திருவண்ணமலைக்கு சென்றிருந்தார். அங்கு பல்வேறு நலத்திட்டம் மட்டும் தி.மு.க வின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. சீனா போய்விட்டு வந்தபின் ஸ்டாலின் கலந்து கொண்ட முதல் கூட்டம் இது. இங்கு மாணவர்களுக்கான கட்டுரை, கவிதை, பேச்சு போட்டி மாநில அளவில் நடைபெற்றது. இது தி.மு.க வின் பழைய சிஸ்டம் என்றாலும். வாரிசுகளை இப்போதே தயார்படுத்துவது மற்ற கட்சிகளுக்கும் ஒரு முன்னுதாரணமான விசயம் ( இப்படி சொல்றதுக்கு என்னை திட்டக்கூடாது). 

திருவண்ணாமலை கூட்டம் முடிந்தபின் எ.வ.வேலுவின் கல்லூரியில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வரும் தேர்தலில் தேர்தலை எப்படி சந்திப்பது என அலசப்பட்டது. அப்போது எ.வ.வேலு தயாரித்து வைத்திருந்த மாதிரி திட்டம் எல்லோரிடமும் காட்டப்பட்டது. ஸ்டாலினால் அங்கீகரிக்கப்பட்ட அந்த திட்டம்தான் நாடு முழுதும் பயன்படுத்தப்படும் என பத்திரிகை நிருபர்களிடம் ஸ்டாலின் அறிக்கையாக தந்திருக்கிறார். இது ஏற்கனவே திருவண்ணாமலை எம்.பி யாக இருக்கும் வேணுகோபால் ஜெயிக்க வைத்த அதுவும் முன்னணி ஓட்டுகளில் ஜெயிக்க வைத்த திட்டம். அப்போது பா.ம.க வுக்கு குருவை ஜெயிக்க வைப்பது கவுரவ பிரச்சினையாக இருந்தது. இதற்காக ராமதாஸ் மற்றும் அன்புமணி தனிக்கவனம் எடுத்து பிரச்சாரம் செய்தனர். பணமும் அதிக அளவில் பா.ம.க செலவு செய்த தொகுதியும் இதுதான். வன்னியர் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதி என்பதால் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கி மிக பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வேணுகோபால் ஜெயித்தார்.

அப்படி என்னதான் அந்த திட்டத்தில் இருக்கிறது என மேனேஜ்மென்ட் ஆளான எனக்கு அதனை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலோங்கி விசாரித்தால் என்னை மிகவும் ஆச்சர்யப்படவைத்த திட்டமாக அது  இருந்தது. அந்த திட்டத்தின் ஒரு மாதிரியை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

தி.மு.க வின் ஒவ்வொரு தொண்டனையும் தனித்தனியாக பிரித்து அவர்களில் செல்வாக்கு மிக்கவர்களை தெரு வாரியாக தேர்வு செய்கிறார்கள். ஒவ்வொரு தெருவிலும் தேர்வு செய்யப்பட்ட  தொண்டரை அழைத்து ஒரு படிவம் வழங்கப்படும்,  அந்த படிவத்தில் அந்த தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஓட்டுரிமை உள்ளவர்களின் கணக்கை குறிக்க வேண்டும், அதில் எந்தந்த கட்சிகாரர்கள் இருக்கிறார்கள் என தனியாக குறிப்பிடவேண்டும். அது எதிர்கட்சியோ, கூட்டணிக் கட்சியோ விவரங்கள் தனித்தனியாக குறிப்பெடுக்க வேண்டும்.அவ்வாறு எடுக்கப்பட்ட குறிப்பினை அவர்களுக்கு மேலுள்ள நிர்வாகியிடம் கொடுக்க வேண்டும். அப்போதே தெரிந்துவிடும் தி.மு.க வுக்கு அந்த தெருவில் எத்தனை ஓட்டுகள் இருக்கிறது என. ஆனால் விசயம் அத்தோடு முடியவில்லை. மீண்டும் குறிப்பெடுத்தவரை அழைத்து தாங்கள் கட்சிகாரர்கள், கூட்டணி கட்சிகாரர்கள் மற்றும் எதிர்கட்சிகாரர்கள் என பட்டியலில் உள்ளவர்களில் மாற்றி ஓட்டு போடுவார்கள் என சந்தேகப்படுகிறவர்கள் மற்றும் உறுதியாக தாங்கள் சார்ந்த கட்சிகளுக்கு ஓட்டு போடுகிறவர்கள் என பிரித்து அவர்களுக்கு செய்யவேண்டியதை செய்து அதனை தி.மு.க வின் ஓட்டாக மாற்றும் வேலை நடக்கும். இவ்வாறு பணிக்கப்பட்ட தொண்டருக்கு தேர்தல் முடியும் வரைக்கும் இதுதான் வேலையாக இருக்கும். அவர் கட்சி கூட்டங்களுக்கோ, பிரசாரங்களுக்கோ வர வேண்டியதில்லை. அவரின் வேலையே ஒரு நாளைக்கு ஐந்து வீடுகளுக்கு சென்று தி.மு.க. வின் சாதனைகளை நட்பாக சொல்லி மனதை மாற்ற  வேண்டும் என்பதே பிரதான வேலை. இதில் முக்கியமான கட்டளையே தேர்தல் வரைக்கும் அவர் தண்ணியடிக்க கூடாது. எதிர்கட்சிகாரர்கள் திட்டினாலோ, கிண்டல் செய்தாலோ பதிலுக்கு எதுவுமே செய்யக்கூடாது.

இந்த திட்டம்தான் வரும் தேர்தலில் தமிழகம் முழுக்க பயன்படுத்தப்பட இருக்கிறது. இது நான் அறிந்த விசயத்தில் ஒரு பகுதி மட்டும்தான். தாங்கள் நிறைய சாதனைகளை செய்திருந்தாலும். கூட்டணிக்கட்சிகள் பலமாக இருப்பதாலும் மட்டும் ஜெயித்து விடுவோம் என்று நம்பி விடாமல். தி.மு.க வகுக்கும் இந்த வியூகம் அவர்கள் கண்டிப்பாக அடுத்த முறையும் ஆட்சியை பிடிப்பார்கள் என்பதற்கு சாட்சி என்று நினைக்கிறேன். 

இதனைப்பற்றிய உங்கள் அனைவரின் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன..

23 அக்., 2010

காத்திருப்பு...

பரவியிருக்கும் வெயிலின் உச்சம் 
வியர்வையாய் பெருக்கெடுக்க,
வளைந்து தொங்கும் கேபிளில் 
இதுவரை ஆறு பறவைகள் உட்கார 
முயற்சிக்க,
யாரோ தவறவிட்ட பணத்தை 
சுற்றும் முற்றும் பார்த்து நான் 
கவனிப்பதை பார்த்துவிட்டு ஒருவன்  
யோசித்தபடி எடுக்க, 
மணிக்கட்டு பார்த்து பூத்து போன கண்களில் 
உக்கிரமான காற்று புழுதியை வீசிச் சென்ற 
தருணத்தில்
தூரத்தில் வருகிறாய் நீ...

உன் தாமதத்துக்கான  
காரணத்தை யோசித்தவாறே...

21 அக்., 2010

ஒரு பறவையின் அலகில் துடிக்கும் காதல்...

மீன் கொத்தி பறவையென 
என் கண்களை கொத்திக்கொண்டு 
போகிற உன் நேர்ப்பார்வையில் 
கிடந்தது துடிக்கிறது மனசு ..

ஒரு சிகெரெட்டை முழுவதுமாக 
அனுபவித்து பழகுவது போல் 
இந்த காதலை சொல்ல முடிவதில்லை ...

ஆயிரம் வழிகள் பரிசீலிக்கப்பட்டு பின் 
நிராகரிக்கப்பட்டு
நண்பர்களின் வழிமுறைகள் 
ஏற்கப்பட்டு 
சொல்ல வேண்டிய தருணத்தில்
சொல்ல முடியாமல் போய்விடுகிறது..

எப்படியோ ஏற்றுக்கொண்ட காதல் 
காற்றில் இருவர் வீட்டிலும் பரவி 
பற்றிக்கொண்ட பெரு நெருப்பு இருவரையும்   
விலக வைக்க ..

நிகோடின் படிந்த நெஞ்சம் கைவிட 
மறுக்கும் சிகிரெட்டின் நேசம்போல் 
மனசின் எல்லா திக்குகளிலும் நீ..

ஒரு பயணியைப்போல் 
என் நிறுத்தம் வந்ததும் இறங்கிப்போக முடியவில்லை..

வழிதவறிப்போகிறாய்
என்கிற எச்சரிக்கைகளையும் தாண்டி 
ஒரு முடிவை நோக்கி பயணிக்கிறது என் காதல் 
மீன்கொத்திகளுக்காக படைக்கப்பட்ட 
மீனென..

19 அக்., 2010

பதிவர் ராஜன் திருமணத்தில் ஒரு பதிவர் சந்திப்பு...

நம்ம பதிவர்கள்  ராஜன் - ரேவதி ஆகியோரின் திருமணம் வியாழன் காலை நடைபெறுகிறது. முதல்நாள் மாலை நடைபெறும் திருமண வரவேற்பின்போது பதிவர் சந்திப்பையும் நடத்துவோம் என வால்பையன் சொல்லியிருந்தார். ஆகவே நண்பர்களே என்ன வேலை இருந்தாலும் அதனை தள்ளி வைத்துவிட்டு அனைவரும் ஆஜராகும்படி கேட்டுக்கொள்கிறேன்..

மதியத்தில் இருந்தே மண்டபத்தில் நாங்கள் இருப்போம் என்பதால் உங்கள் அனைவரின் வரவை எதிர்பார்க்கிறோம்.. மிக நீண்ட பதிவர் சந்திப்பாக இது இருக்கும் என்பதால்,
அனைவரின் வருகை கட்டாயம் ஆக்கப்படுகிறது..

தொடர்புடைய பதிவு ..


18 அக்., 2010

மனைவி - பயோடேட்டா...

பெயர்                                  : மனைவி
இயற்பெயர்                       :எப்போதும் இல்லத்து "அரசி"
தலைவர்                            : குடும்பத் தலைவருக்கு 
துணை தலைவர்             : தங்கள் மற்றும் மாமியார் வீடுகளுக்கு

மேலும்
துணைத் தலைவர்கள் 
:
பக்கத்து வீட்டு பஞ்சாயத்துகளுக்கு
வயது                                  : ஏவாளின் வயது
தொழில்                             :  சேவை செய்வது என சொல்லிக்கொண்டு அதிகாரம் 

                                                 செய்வது  
பலம்                                   : தாய்மை, கட்டில் 
                   
பலவீனம்                           : சில வீடுகளில் அடிமையாகவும் வாழ்வது
நீண்ட கால சாதனைகள்        :மக்கள் தொகை பெருக உதவியது
சமீபத்திய சாதனைகள்          : எல்லா இடங்களில் முன்னேறி வருவது
நீண்ட கால எரிச்சல்                : மாமியார்கள்
சமீபத்திய எரிச்சல்                  : தாங்களும் வேலைக்கு போகவேண்டிய 

                                                          நிர்ப்பந்தம்   
மக்கள்                                          : கணவரும், பிள்ளைகளும்

சொத்து மதிப்பு                         : பட்டுப் புடவைகள், நகைகள் Etc,


நண்பர்கள்                                 : இது கொஞ்சம் சிரமமான கேள்வி 
எதிரிகள்                                     :எப்போதும் பக்கத்து மற்றும் மாமியார் வீட்டினர்
ஆசை                                          : கொஞ்சமா? நஞ்சமா?
நிராசை                                       : அடுப்படியை விட்டு வெளியில் வர முடியாதது
பாராட்டுக்குரியது                     :பிள்ளைகளை சமாளிப்பது
பயம்                                            : இருக்கிற மாதிரி நடிப்பது
கோபம்                                        : அடிக்கடி வந்து போவது
காணாமல் போனவை             : கூட்டு குடித்தனம்
புதியவை                                    : விவாகரத்து அதிகமாகிறது
கருத்து                                         : இருங்க என் மனைவியை கேட்டு சொல்றேன்.
டிஸ்கி                                          : தனக்கு ஒரு இல்லாள் வேண்டுபவன் அதன்பிறகு
                                                        
இல்லான் (அதிகாரம், சுதந்திரம், நண்பர்கள் மற்றும்  
                                                          
மணிபர்ஸ்) ஆகிப்போகிறான்.

17 அக்., 2010

பதின்மக் காதல்...

புரிந்தும் புரியாமலும் நமக்கிருந்த 
நேசத்தின் பரிசாக  
என் வீட்டின் மாடி வளைவில்
நீ 
எனக்களித்த முதல் முத்தமும் ..

சிகிரெட்டு புடிச்சா கொன்னுருவேன்னு மிரட்டிட்டு 
சில்லறைகளை தந்து 
சிரித்தபடி நகர்ந்த தருணங்களும் ..

ஆற்றில் குளிக்க வரும் நீ 
உன் வீட்டு துணிகளோடு சேர்த்து 
ரகசியமாய் என் துணிகளையும் 
ரசித்து துவைத்த அழகுமென..
 
நாம் பகிர்ந்து கொள்ள எத்தனையோ 
மிச்சமிருக்க 
நிலவு பூமியை புறக்கணித்த முன்னிரவு நாளொன்றில் 
பெண் அழைப்புக்கு காத்திருந்த நீ 
விசும்புகிற போது அறிந்தேன்
ஒரு காதல் மரணித்துக்கொண்டிருப்பதை..


15 அக்., 2010

அரசியலுக்கு வருகிறார் ரஜினி...

இப்ப வருவார்.. அப்ப வருவார் .. வரவே மாட்டார் என பலகாலமாக ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய வதந்திகள் வந்துகொண்டே இருக்கும். குறிப்பாக தன் படங்கள் ரிலீசாகும் சமயங்களில் இது சற்று பலமாக இருக்கும். ஆனால் சமீபத்தில் எந்திரன் வெளியானபோது இத்தகைய செய்திகள் ஒன்று கூட வெளிவரவில்லை. மேலும் தன் இரண்டாம் மகள் திருமனத்திற்கு ரசிகர்களுக்கு தனியாக விருந்து வைப்பேன் என்று சொன்னவர் இன்றுவரை செய்யவும் இல்லை. ஆனால் ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என நண்பர் சில விசயங்களை சொன்னார். நம்புவதற்கு கடினமான விசயமாக இருந்தாலும் அவர் சொன்ன சில விளக்கங்களை கேட்டபின் நம்பித்தான் ஆகவேண்டியிருக்கிறது.

ரஜினி..
ரஜினி பெங்களூரில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடியபோது இத்தனை உயரமாக வளர்வார் என அவரே நம்பவில்லை. சினிமாவில் தனக்கென ஒரு இடம் கிடைத்தால் போதும் என நினைத்தவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியவர்கள் தமிழ் ரசிகர்கள். சாதாரணமாக நடிப்பை தரும் நமக்கு இத்தனை சிறப்பு கிடைத்தது கடவுள் அருளால்தான் என தீவிரமாக நம்புகிறவர் ரஜினி. அதே போல் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற ஆவலும் அவருக்கு நிரம்ப உண்டு. ஆனால் மக்களே தன்னை அரசியலுக்கு அழைக்க வேண்டும் என விரும்புகிறார். அதாவது தான் சம்பாதித்த பணத்தை செலவழிக்காமல் மக்களின் பணத்தை அவர்களுக்கு நியாயமான வழியில் செலவழிக்க விரும்புகிறார். எந்திரன் படம் கலாநிதி சகோதரர்களோடு ஒரு பெரிய நெருக்கத்தை ஏற்படுத்த அவரின் அரசியல் பிரவேசமும் தயாராகி விட்டது. அதைப்பற்றி பார்க்கும் முன் இப்போதைய அரசியல் நிலவரத்தை பார்ப்போம்..

தி.மு.க 
தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிற வேலையில் கூட்டணியை தக்கவைத்துக்கொள்ளும் நெருக்கடிக்கு கட்சி தள்ளப்பட்டு விட்டது. காரணம் காங்கிரஸ் தலைவர்கள் சிலரின் போக்கு, அவர்கள் அ.தி.மு.க கூட்டணியை விரும்புகின்றனர். சோனியா, ஜெ யுடனான கூட்டணியை விரும்ப மாட்டார் என்றாலும் அரசியலில் எதுவும் நடக்கலாம். இப்போதைக்கு தி.மு.க வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது ஆனால் கூட்டணி மாறினால் ஆட்சியும் மாறும். கலைஞரின் இன்னொரு முக்கிய தலைவலி குடும்பத்தினரை திருப்திபடுத்துவது. ஸ்டாலினுக்கு அதிகாரத்தை முழுவதுமாக அளிப்பதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது. ஒருவேளை அடுத்த ஆட்சியும் தி.மு.க வே வெற்றிபெற்று கலைஞர் முதல்வர் பதவியை தொடர்ந்து வகித்தால் இப்போதைய நிலையே நீடிக்கும் ஆனால் ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி கொடுத்தால் கட்சியின் தலைமை பொறுப்பை அழகிரிக்கு கொடுக்க வேண்டும், இது ஸ்டாலினுக்கு சிக்கல். இப்படி இருக்க கலைஞர் ஒருவேளை இறக்க நேரிட்டால் அப்போது ஒரு பெரிய அரசியல் குழப்பம் நிச்சயம் ஏற்படும் அப்போது இரு சகோதரர்களையும் சமாதனம் செய்யும் அளவுக்கு கட்சியில் யாரும் இல்லாததால் நிச்சயம் இரு கோஷ்டியாக மாறுவார்கள். அப்போதும் ஸ்டாலின் கட்டுபாட்டில் கட்சி வந்தால் மாறன் சகோதரர்கள் அமைதி காப்பார்கள். அவர்களும் ஸ்டாலினுக்கு பக்க பலமாக இருப்பார்கள். ஒரு வேலை கட்சி அழகிரியிடம் சென்றால் அப்போதுதான் நான் மேலே சொன்ன ரஜினியின் அரசியல் பிரவேசம் நிகழும், அதுவும் மாறன் சகோதரர்கள் பின்னணியோடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு ரஜினி வருவார். 

அ.தி.மு.க 
இந்த முறை தி.மு.க பொறுப்பேற்றபோது ஜெ க்கு எதிராக எந்த பழிவாங்கல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக இன்றைக்கு வரைக்கும் டாஸ்மாக்கிற்கு மிடாஸ் தொடர்ந்து சரக்குகளை அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கு காரணம் தயாநிதி. இவர்தான் இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான இறுக்கத்தை குறைக்க உதவி செய்தவர். தொழில் என்று வந்தால் மாறன் சகோதரர்கள் அதற்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அரசியலில் தி.மு.க வில் இருந்தாலும் தங்கள் சேனலில் எல்லா கட்சிகாரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். மாறன் சகோதரர்களைப் பொறுத்தவை அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தாலும் பெரிதாக பாதிப்புகள் வராது. ஜெயை பொறுத்தவரை தனக்கான எல்லா விசயங்களும் இந்த ஆட்சியில் கிடைத்தாலும் இதை தக்கவைக்க ஒரு வெற்றி தேவைப்படுகிறது. அதற்காக எப்பாடு பட்டாவது காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க கூட்டணியை ஏற்படுத்திவிட்டால் ஏற்கனவே ம.தி.மு.க, கம்யுனிஸ்டுகள் பலத்தோடு பெரும்பான்மை கிடைத்து கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்பது அவருக்கு தெரியும். அதற்கான சில தியாகங்களுக்கும் அவர் தயாராகி விட்டதாகவே தெரிகிறது. 

தே.மு.தி.க 
தமிழகத்தில் கணிசமான ஓட்டு வங்கியை தன்னிடம் வைத்திருக்கும் விஜயகாந்த் இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவில்லை என்றால் தேர்தல் கமிசனில் தகுதியை இழந்துவிடும். மேலும் இவருக்காக கைக்காசை போட்டு உழைத்த தொண்டர்கள் வேறு கட்சிக்கு மாறிவிடுவார்கள். இரண்டு திராவிட கட்சிகளையும் விடுத்து காங்கிரஸ், பா.ம.க , மற்ற உதிரிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ளத்தான் இவருக்கு ஆசை. ஒரு வேளை இந்த கூட்டணி ஜெயித்தால் விஜயகாந்துக்கு முதல்வர் பதவி காங்கிரசுக்கு ( யாருக்கு கொடுப்பார்கள்) துணை முதல்வர் பதவி என்றொரு பேச்சு அடிப்பட்டது. ஆனால் மத்தியில் காங்கிரசுக்கு தேவையான பலம் திராவிட கட்சிகள்தான் தரமுடியும் என்பதால் இந்த கூட்டணி நிறைவேற வாய்ப்பில்லை. எனவே அ.தி.மு.க கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிடும் நிலைமைக்கு விஜயகாந்த் தள்ளப்பட்டு இருக்கிறார். காங்கிரஸ் இக்கூட்டணியில் சேரும் பட்சத்தில் இவருக்கான சீட்டுகள் குறைந்து பெட்டிகள் அதிகரிக்கலாம். 

காங்கிரஸ் 
அடுத்த பிரதமர் கிட்டத்தட்ட ராகுல்தான் என உறுதியாகிவிட்ட நிலையில் ராகுல் காந்தியின் யோசனைகள்தான் காங்கிரசில் முக்கியத்துவம் வகிக்கிறது. ஒரு காலத்தில் தமிழகத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருந்த காங்கிரஸ் கட்சி, திராவிட கட்சிகளின் வருகைக்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து இப்போது காணாமல் போய்விட்ட நிலையில் அதற்கு புத்துயிர் ஊட்டி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் திட்டம் ராகுலிடம் இருக்கிறது. இப்போதிருக்கும் கோஷ்டி பூசலே பழைய தலைவர்களால்தான் என்பதால்  புதிய ரத்தம் பாய்ச்ச இளையவர்களை பதவிக்கு கொண்டு வந்து திராவிட கட்சிகளுக்கு இணையாக மாற்ற ஆலோசனைகள் அவருக்கு பறந்து கொண்டிருக்கின்றன. சோனியாவிடமும், ராகுலிடமும் கலைஞரை விடவும் மாறன் சகோதர்களுக்கு நெருக்கம் அதிகம். இந்த நெருக்கம்தான் மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட போது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஆட்சியை கலைப்போம் என தயாநிதியை உள்துறை செயலாளரிடம் கோபப்பட வைத்து. சோனியா தி.மு.க வுடன்தான் கூட்டணியை விரும்புகிறார் என்றாலும். 2016 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் என்ற ராகுலின் கனவையும் அவர் மதிக்கவே செய்கிறார். இதற்க்கு முன்னோட்டமாக பீகார் அரசியல் களத்தை பயன்படுத்த போகிறது காங்கிரஸ். பீகாரில் மூன்றாம் இடத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலை தனித்தே சந்திக்கவிருக்கிறது, அங்கு தனக்கு கிடக்கும் செல்வாக்கினை கணக்கில் வைத்து தமிழகத்திலும் தன்னை நிலை நிறுத்தும் எண்ணத்தில் அது இருக்கிறது.

மாறன் சகோதரர்கள்
கலைஞரின் மூளை என்று சொல்லப்பட்டவர் முரசொலி மாறன். இவருக்கு பிறந்த பிள்ளைகள் எப்படி இருப்பார்கள், இன்று தொழில் உலகில் மிகப்பெரிய இடத்தை தொட்டிருக்கும் மாறன் சகோதரர்கள் முதலில் நேசிப்பது தொழிலைத்தான் அதற்கடுத்துதான் குடும்பம், அரசியல் இந்தியாவில் மிகப்பெரிய அரசியல் தலைவர்களையும், தொழிலதிபர்களையும் நினைத்த நேரத்தில் சந்திக்கும் வல்லமை இவர்களுக்கு உண்டு. இவர்கள் நினைத்தால் மொத்த தமிழக எம்.எல்.ஏ க்களையும் தன் கட்டுபாட்டில் கொண்டு வர முடியும், ஆனாலும் தாம் ஒரு தி.மு.க காரனாகவே இருப்பதை விரும்புகிறவர்கள். இவர்களுக்கு கட்சியில் இருக்கும் ஒரே தலைவலி அழகிரி மட்டுமே. எதிர்காலத்தில் கட்சி அழகிரியின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டால் தமக்கென்று ஒரு செல்வாக்கினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்போது இவர்கள் ரஜினி என்கிற ஆயுதத்தை கையிலெடுப்பார்கள் அப்போது காங்கிரஸ் கட்சியும் இவர்கள் பின்னால் நிற்க 2016 தேர்தலில் இவர்கள்தான் முக்கியத்துவம் வகிப்பார்கள். ரஜினியும் இப்படிப்பட்ட ஒரு அரசியல் பிரவேசத்தைதான் விரும்புவதால் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை பொறுப்பு மாறன் சகோதரர்கள் பின்னணி என இவர் முதல்வராக பொறுப்பு ஏற்பது என்பது மிக சரியாக சொன்னால் வரும் தேர்தகளில் தி.மு.க ஜெயித்து அதன்பின் கலைஞர் எடுக்கும் முடிவோ அல்லது அவர் மறைவுக்குப்பின் தி.மு.க வின் நிலைமை பொறுத்தோ அமையும். 

இன்றைய தமிழக அரசியலில் செல்வாக்கு மிக்கவர்கள் மாறன் சகோதரர்கள் மட்டுமே..



14 அக்., 2010

கையெழுத்து...

கையெழுத்துக்களால் தலை எழுத்தை
மாற்ற முடியுமென,
தொலைக்காட்சியில் வியாபாரம் செய்பவன் 
தெரிந்து வைத்திருக்கிறான் 
கையெழுத்தினால் வரும் தொல்லைகளை..

இதயத்தை துடிக்கவைக்கும்
ஜாமீனுக்கு இடும்போது 
மீளாக் கடனுக்கு தாம் வட்டிகட்ட 
நேரிடலாம் என..

சொத்து விற்கும்போது 
நடுங்கும் கை 
வாங்கும்போது நளினமாக 
விளையாடும் பத்திரத்தில்..

பிராக்ரஸ் கார்டில் 
அப்பாவின் கையெழுத்தை தானே போட்டவன் ..
மகன் கேட்கும்போது
முதுகில் அறைகிறான்..

சகல இடங்களில் 
தேவையாகும் ஒரு கையெழுத்து 
தனித்தனி எழுத்தாகவோ 
கோணல் மானலாகவோ 
ஒற்றை எழுத்தில் சுழித்தோ 
படங்களைப்போல் அழகாகவோ..

எத்தனை முறை போட்டிருப்போம் 
ஓவ்வொரு முறையும் 
ஒவ்வொரு கதை இருக்கும்..

பிரபலங்களிடம் வாங்கியவை 
சில பரணிலும்,
சில வரவேற்ப்பறையிலும்,
சில குப்பையிலும்..

காதலை சொல்கிற கடிதம் 
காதலியைவிடவும் அழகானது..

பதிவு அலுவலகத்தில் 
எழுதப்பட்ட திருமண ஒப்பந்தங்களின் 
கையெழுத்து 
சமயங்களில் குடும்ப நல மன்றங்களில் 
முடிவடையும்..

சமயங்களில் நம் தலையெழுத்து
ஒரு கையெழுத்தால் தீர்மானிக்கப்படலாம்..  

அப்படித்தான்,
ஒரு கையெழுத்தை போட்டுவிட்டு 
ஒளிந்து வாழ்கிறேன் நான்..

13 அக்., 2010

சிங்கப்பூர் ரயிலில் ஒரு தமிழ்ப் பாடகன்..

சிங்கப்பூர் MRT யில் சிங்கப்பூர் இந்தியர் ஒருவர் மிக சந்தோசமாக பாடுகிறார். வெவ்வேறு தருணங்களில் இவர் பயணம் செய்யும்போது இவர் இசையோடு பாடியதை ரசிக சீமான்கள் பதிவு செய்துள்ளனர்..



 தொடர்புடைய சுட்டி ..

11 அக்., 2010

போங்கடா வெண்ணைகளா !

துரோகங்களை சந்திக்க நேர்கிற 
போதெல்லாம் 
தவறாது வந்து விடுகிறது 
ஆலோசனைகள் இலவசமாய்..

நான் அப்பவே சொன்னேன் 
இவன்தான் கேக்கலை என்றவன் 
கையூட்டு வாங்குபவன்..

உனக்கு யார் யார் கூட 
பழக்கம் வைத்துக்கொள்வது தெரியவில்லை 
என குறைபட்டுக் கொண்டவன்
பொய்க்கணக்கு எழுதுபவன்..

சுய புத்திதான் இல்லை 
சொல் புத்தி கூடவா இல்லை என்றவன் 
ஜாமீனில் வெளியே வந்தவன்..

உனக்கு நல்லா வேணும் என்றவன் 
மனைவியை அடிப்பவன்..

அவன போட்டுறலாம் மாப்ள என்றவன்
பங்காளியை வெட்டியவன்..

இனிமே கூட்டாளியே வச்சுக்காதே என்றான் 
வீட்டிற்கு 
ஒரு பிள்ளையாய் பிறந்தவன்..

போங்கடா வெண்ணைகளா!

10 அக்., 2010

Tamil Culture V/S Blogger Culture

Tamil Culture is Overrated.. TASMAK is Underrated.....

1. என்ன சுத்தி எவ்வளவு கூட்டம் தெரியுமா?   X    எனக்கு ஏகப்பட்ட பாலோயர்ஸ் 
                                                                                              தெரியுமா?

2. எனக்கு ரெண்டு, மூணு பிசினஸ் இருக்கு ..     X   எனக்கு ரெண்டு, மூணு பிளாக்
                                                                                              இருக்கு..
                                                                                                  
3. நான் பொய் சொன்னதே இல்லை ..           X       நான் அனானி பெயரில் பின்னூட்டம்
                                                                                       போடுவதில்லை..
                                                                                          
4. 51 வது வட்ட செயல் வீரர்கள் கூட்டம்..       X    சென்னை பதிவர் சந்திப்பு வரும் 
                                                                                          சனி மாலை ...
                                                                                                 
5.   .......................                                                      X      ஆறு ஓட்டுல தொங்குது.. ஒரு ஓட்டு
                                                                                           போடுங்களேன்.
                                                                                              
6. கண்ட நாய்ங்க கூட நான் பேசுறது இல்ல..   X         ...............................................

7.   .................................                                            X    அவன் பதிவு போட்ட உடனே எத்தன 
                                                                                           ஓட்டு பாரேன்..
                                                                                                
8. கொட்டாம்பட்டி செயலாளராக அண்ணன்,    X       ................................ 
    தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்கள்..

9. ...........................                                                  X              18+ பதிவு போடுறப்ப மட்டும் 
                                                                                                     ஹிட்ஸ்  கூடுது...
                                                                                                                                                                                   
10. அவன் வீட்டு தேவை ஒன்னு விடாம,         X        ................................
      மொய் செஞ்சிருக்கேன்..

11. தலைய காட்டிட்டு வர்றேன்..                      X             டெம்ப்ளேட் பின்னூட்டங்கள்..

இது முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்டது... இடையில் சிலவற்றை நான் நிரப்பவில்லை, அதனை உங்களின் கருத்துகளுக்காக விட்டு வைத்திருக்கிறேன்., மேலும் உங்கள் சொந்த கருத்துகளையும் வரவேற்கிறேன்..                                                                          
    

9 அக்., 2010

வியாபாரம் - ஊக வணிகம் ( Future Trading ) சாதக,பாதகங்கள் ஒரு எளிய பார்வை...

இன்றைக்கு எல்லா பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறிவிட்டது. ஒரு வகையில் இது மக்களை சிந்திக்க விடாமல் வைத்திருக்க உதவுகிறது.. முன்பெல்லாம் இந்தியாவில் எதற்கெடுத்தாலும் போராட்டங்கள் நடக்கும், பைசா பெறாத விசயங்களுக்கு உடனே ஒன்று கூடுவார்கள். ஆனால் இப்போது நாட்டில் பிரச்சினைகள் மலிந்து ஊழலும் மலிந்து பணக்காரன் மென்மேலும் பணக்காரன் ஆக ஏழை தங்கள் வயிற்றுபாட்டுக்கு குடும்பத்துடன் உழைக்க வேண்டியிருக்கிறது. தண்டகாரண்யா மக்களுக்கு தேவைகள் குறைவு என்பதால் இன்னும் தங்கள் வாழ்வாதாரங்களை காக்க துப்பாக்கிகள் தூக்குகின்றனர். தென் இந்தியாவில் தொலைக்காட்சி ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் வந்தபின் கிராமங்களும் நகரங்களைபோல் தீவு வீடுகளாக மாறிவிட்டன.

இதற்கெல்லாம் மூல காரணமாக இருப்பது விளையும் பொருட்களை வாங்கும் நேரடி சந்தை முறை ஒழிக்கப் பட்டதுதான் . இது இப்போது நடந்தது அல்ல பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் ஜப்பானியர்கள் தங்கள் விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் ஊக வணிக வியாபாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது பதினெட்டாம் நூற்றாண்டு அமெரிக்காவில் அறிமுகபடுத்தபட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகம் முழுக்க பரவ ஆரம்பித்தது. காட் ஒப்பந்தம் அறிமுகபடுத்தபட்ட பிறகு தாராளக்கொள்கையால் இன்றைக்கு கடைகோடி இந்தியன் வரைக்கும் இதன் தாக்கத்தை அனுபவிக்க வேண்டி வந்துவிட்டது.

அன்றைய காலகட்டத்தில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விளைச்சல் அதிகமான நேரங்களில் குறைவான விலைக்கு வாங்கும் வியாபாரிகள் அதனை சேமித்து வைத்து விளைச்சல் குறைவாக இருக்கும்போது அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கவே. இந்த லாபம் விவசாயிகளுக்கு போகவேண்டி ஊக வணிகத்தை அறிமுகபடுத்தினார். அதன்படி இன்றைய நிலவரத்தில் சொல்வதென்றால் ஒரு மூட்டை நெல் (50 kilo) Rs.600 இன்றைய விலை என்று வைத்துகொண்டால் அது ஆறு மாதங்களில் Rs. 1000 ஆக வாய்ப்பிருக்கும். இப்போது வியாபாரிகள் விவசாயிக்கு Rs.600 கொடுத்துவிட்டு ஆறு மாதங்கள் கழித்து மீதம் Rs.400 கொடுத்துவிட்டு எடுத்துக்கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு அந்த ஒப்பந்தத்தை மட்டும் விற்பார். இன்னொரு வியாபாரி அதனை Rs.420 க்கோ அல்லது கொஞ்சம் கூடுதலாகவோ கொடுத்து வாங்குவார். ஒப்பந்தம் இப்படியே கைமாறும். வெறும் பேப்பரில் மட்டுமே நடக்கும் வியாபாரம் ஒவ்வொருவராக கைமாறி கடைசில் பொருளின் டிமான்ட் பொறுத்து லாபத்தை தரும். இதற்குள் பொருள் தட்டுபாடு இல்லாமல் கிடைத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஆறுமாத காலத்தில் கடைசியாக வாங்கிய வியாபாரி அன்றைய சந்தை விலை ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால் சந்தை விலை மற்றும் முன் கொடுத்த RS.600 கழித்துக்கொண்டு மீத தொகையை விவசாயிக்கு கொடுத்து பொருளை யாரிடமாவது விற்றுகொள்ள சொல்வார். இப்படி நெல்லுக்காக ஆரம்பித்த வியாபாரம் நல்ல லாபத்தை தரகர்கள் பார்க்க ஆரம்பித்ததும் தங்கம், கரன்சி, உலோகங்கள்,    பெட்ரோலிய பொருட்கள் என விரிவாகி இப்போது பருப்பு, சர்க்கரை அளவுக்கு வந்து நிற்கிறது.

பங்கு வர்த்தகமும் ஊகத்தை அடிப்படியாக வைத்துதான் விலை மாறுகிறது. இது ஒரு அப்பட்டமான சூதாட்டம் என்றாலும் இதற்கான வரிவிதிப்பில்தான் இன்றைக்கு அரசாங்கம் செயல்படுவதாலும் இந்த சூதாட்டத்தால் பண முதலைகள், அரசியல்வாதிகள் மட்டும் பயன்பெருவதால் யாரும் இதற்க்கு இனி தடை விதிக்க வாய்ப்பில்லை.

ஒரு வாதத்துக்கு இன்றைக்கு பணக்காரர்கள் விகிதம் பெருகிவிட்டதற்க்கு இதுவும் காரணம் என வைத்துக்கொண்டால் போலி நாகரிக ஆசையில் மக்கள் தங்களை தொலைப்பதால் நடுத்தர வர்க்கத்தினர் இதில் அதிகம் நிம்மதி இழக்கின்றனர். அரசு ஊழியர்கள் இன்றைய தேதிக்கு லஞ்சம் வாங்காத ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருக்கின்றனர். அவர்கள் வாங்கும் லஞ்சம் தவறான வழிகளில் அவர்களின் வாரிசுகளை கொண்டுபோய் அதனை பார்க்கும் நடுத்தர குடிமக்களின் வாரிசுகளும் தவறான பாதையை விரும்ப ஆரம்பிக்கின்றனர். சாதரண கூலி வேலை பார்க்கும் மக்களை ஒரு ரூபாய் அரிசி மற்றும் நூறு நாள் வேலை திட்டத்தில் சோம்பேறியாகி தங்கள் வாரிசுகளையும் அதற்கு தயார் படுத்துகின்றனர்.

நாம் மேற்குலக நாட்டைபோல் வாழவேண்டும் என ஆசைபடுகிறோம். ஆனால் நமக்கென்று இருக்கும் இயற்கை வளம் உலகின் வேறெங்கும் இல்லாத ஒன்று. மாறுபட்ட சீதோஷ்ண நிலையைக்கொண்ட நமது தேசத்தில் இயற்கை விவசாயம் மூலம் உலகிற்கே தரமான உணவு வகைகளை கொடுக்க முடியும். முன்பு M.S. சுவாமிநாதன் விவசாய புரட்சி செய்கிறேன் என தரமற்ற இந்தியாவை உருவாக்கினார். இப்போது உலகின் பெரும்பாலான நாடுகளால் தடை விதிக்கப்பட்ட விதைகளை இந்திய நிலங்களில் பயிரிட்டு நாம் அனைவரையும் ஆண்மையற்றவர்களாக ஆக்க முயற்சிக்கிறது இந்திய அரசு.

ஆனால் கர்நாடகாவில் பாலேக்கரும், தமிழகத்தில் நம்மாழ்வாரும், இயற்கை விவசாயத்தை வளர்க்கின்றனர் . இந்த விசயத்தில் இயற்கை விவசாயத்தை மட்டும் எழுதும் பசுமை விகடனுக்கும் பாராட்டுக்கள். எதிர்காலத்தில் நல்ல உணவுக்கும், தண்ணீருக்கும் நாம் அதிக விலை கொடுக்க வேண்டிவரலாம். 

பொதுவாகவே பங்கு சந்தையில் பணத்தை இழப்பது புதிதாக அதில் வர்த்தகம் செய்பவர்கள்தான். சும்மா வீட்டில் இருந்துகொண்டே கோடிஸ்வரன் ஆகும் ஆசையில். இருக்கும் பணத்தையும் இழக்கின்றனர். சமீபத்தில் ஜோதிடம் மூலம் இதில் பணம் சம்பாதிக்க முடியும் என பயிற்சி வகுப்புகள் நடந்தன. இதை நடத்தியது ஒரு ஆன்மீகவாதி என்பதுதான் காமெடியின் உச்சம். ஒரு காலத்தில் உணவு விற்பவனை கேலி பேசினார்கள். காரணம் அப்போது சாப்பாடு போட தர்ம சத்திரங்கள் மிகுதியாக இருந்தாலும் பசிக்கிறது என்று சொன்னால் யார் வீடு என்றாலும் உணவு தருவார்கள். இன்று தண்ணீர் வாங்கி குடிக்கிறோம். ஒழுங்கான மின்சாரம் தர வக்கில்லாத அரசு இலவச தொலைகாட்சிகளை வழங்குகிறது. அதுவரை தங்கத்தை வாங்கி குவிக்கலாம். சென்னைக்கு 50 கிலோ மீட்டர் தள்ளி ஒரு மனையை நூறு மடங்கு அதிக விலைக்கு வாங்கி அதனை இன்னொரு நூறு மடங்கு விலை ஏறும்போது விற்கலாம் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கலாம்.

தொடர்புடைய சுட்டிகள் ...

ஊக வணிகத்தின் வேறு பாதிப்புகளை அல்லது நன்மைகளை உங்கள் கருத்துக்களாக வரவேற்கிறேன்...