25 ஜன., 2009

"ராமசாமி"..

ராமசாமி சில குறிப்புகள் ....

ராமசாமி ஒரு சாதாரண ஆசாமி , சில நேரங்களில் அவன் உங்களைகூட பிரதிபலிக்கக்கூடும் ,அவன் சந்தித்த ,அனுபவித்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளபோகிறான் ...

அவனால் எல்லாவற்றையும் சொல்லமுடியாது ,ஏனெனில் அதில் மற்றவர்களின் அந்தரங்கமும் சம்பந்தபடுவதால் கொஞ்சம் அடக்கி வாசிக்க நேரிடுகிறது ...

என்றாவது அவனை நேரில் சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் உங்களிடம் அதைப்பற்றி அவன் சொல்லக்கூடும் ..

தற்சமயம் சென்னைவாசியான அவன் பிறந்தது மன்னார்குடி அருகில் உள்ள பேரூர் (பெரிய ஊர் ) ஒன்றில் ..

தற்போது முப்பத்தேழு வயதாகும் அவனுக்கு நேர்ந்த சம்பவங்களின் தொகுப்பு இது ..

இதைபோன்ற அனுபவங்கள் உங்களுக்கும் இருந்தால் அதனை எனக்கு எழுதுங்கள்.. இந்த கதையின் ஊடாக அதனையும் பயன்படுத்த முடியும் ..

இவன் வாழ்கையில் அதிகம் பாதித்த மூன்று விசயங்கள் 1.ஜோசியம் 2.நட்பு 3.காதல் ..

இவன் கருவானபோதே ஜோசியக்காரன் , இவன் பிறந்தால் சகோதரனுக்கு ஆகாது அதனால் மாற்றுமனைக்கு மாறவேண்டும் என்று சொன்னதால் , இவன் அம்மாவின் அப்பா தற்காலிகமாக அவர் இடத்தில் வீடு கட்டி கொடுத்தார் , ஆனால் அதுவே 2003 வரை ராமசாமியின் சொந்தவீடு ..

2003 க்கு அப்புறம் என்ன ஆச்சு என்று கேட்கிறீர்கள்?

இனி ராமசாமியே உங்களோடு பேசப்போகிறான் ....

இடைஇடையே நானும் வருவேன்..

கருத்துகள் இல்லை: