1 பிப்., 2012

களவு - 1 - தாய்லாந்து...


தருவதிலும் 
பெருவதிலும்
முத்தங்கள்
உயிரை 
உடல் மாற்றுகின்றன..


இன்று 31.12.2011 இரவு 11.00 மணி பட்டாயா ரிசாட் ஒன்றில்:

“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?”. - பாவனா
“ப்ச்!” - நரேன்
”ஏன்?”
”வேண்டாம், வேற ஏதாச்சும் பேசு”
”ரெண்டு நாளா காலையில போயிட்டு சாயங்காலாம்தான் வாரே!.. எங்க போறே?” 
”ம்..ஹூம்! வேறே கேளு”
“போடா!”
“ஓகே! கோபம் வேனாம், இன்னும் கொஞ்ச நேரத்தில புது வருஷம் பொறக்கப்போவுது, அதனால சந்தோஷமா ஏதாவது கேளேன்!!”
“நான் ஒனக்கு எத்தனாவது பொண்ணு!?”
”ப்ச்”
“சொல்லு, எத்தனாவது?”
“இதுக்கெல்லாம் போய் கணக்கு வச்சுக்குவாங்களா!?”

நரேன் அப்படித்தான் அவனுக்கு பெண்கள் என்பது தற்காலிகம்தான், சிங்கப்பூரில் கடந்த ஒன்றரை வருடங்களாக வேலை பார்க்கும் அவனுக்கு ஆறு மாதம் முன்புதான் பாவனா பழக்கமானாள், இவர்கள் இருவரையும் பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம். வார இறுதியில் பேங்காக்கோ, இந்தோனேசியாவோ போய்விடுவான், பெரும்பாலும் காசு கொடுத்துப் போவது அவனுக்குப் பிடிக்காது. சிங்கப்பூரில் அவன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெரும்பாலான பெண்கள் அவனிடம் மடிந்திருக்கிறார்கள். அவனைப்பொருத்தவரை யாரிடமும் சுலபமாக பேசிவிடுவான். நேரிடையாகவே அவனுடன் டேட்டிங் வரமுடியுமா? எனக்கேட்டுவிடுவான், எந்தப்பெண்ணாக இருந்தாலும் சீக்கிரமே அவனுக்கு போரடித்து விடுவார்கள். ஆனால் பாவனா அப்படியல்ல, அவள் வேறு கதை, அவள் மெல்ல மெல்ல அவனை தன்வசம் கொண்டுவிட்டாள் என்கிற பயம் அவனுக்கு இருந்தது. ஆனாலும் அவன் பாவனாவுடன் பழகியபிறகு வேறு பெண்களை நாடவில்லை.

“எனக்கு அப்புறம் யாரும் இல்லைன்னு எனக்குத்தெரியும்! அதனாலதான் கேட்டேன், நாம கல்யாணம் பண்ணிக்கலான்னு” - பாவனா.
”இல்ல, அதுக்கு சாத்தியம் இல்ல, இப்ப நமக்கு இப்படி Living together la என்ன பிரச்சினை?” - நரேன்.
“நீ எனக்குத்தெரியாமே என்னமோ பன்றே, அதான் ஒரு கட்டுப்பாடு இருந்தா நல்லதுன்னு நெனச்சேன்”
“கட்டுப்பாடு!..... கடசில நீயும் சராசரிப் பொண்ணுதான்னு நிரூபிக்கிறே”
“பட்டயா வந்து ரெண்டு நாளாவுது, காலையில போறே, சாயந்தரமாத்தான் வாறே, நானும் எத்தனை நேரம்தான் ரூமுல விட்டத்த பாத்துட்டு படுக்கிறது, நாளைக்கு என்னையும் கூட்டிட்டுப் போ!”
“சரி பணிரெண்டு மணியாகப்போவுது, வா ஒருமுறை இந்த வருடத்தின் கடைசி செக்ஸை கொண்டாடலாம்”

ஒரு நீண்ட உறவுக்குப்பின் இருவரும் களைத்துப்போய் மணியைப் பார்த்ததில் அது ஒரு மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. 

நரேன் ஸ்காட்ச் ஒரு லார்ஜ் ஊற்றிக்கொண்டு பாவனாவுக்கு ஒயினை ஒரு கிளாசில் நிரப்பியவாறே, கிளம்பி டிரஸ் போடு வெளில பீச் வரைக்கும் போகலாமென்றான். 

ஒரு குளியல் போட்டுட்டு வாரேன் என குளியலறைக்குள் நுழைந்தாள் பாவனா,
அவளின் வாளிப்பான உடலில் வழியும் வெந்நீர் திறந்திருந்த குளியலறையின் வெளியே இருந்த அவனையும் உற்சாகமாய் அழைக்க ஸ்காட்சை ஒரே கல்பில் அடித்துவிட்டு உள்ளே நுழைந்தான்.

இருவரும் உடைகளை உடுத்தும்போது அதிகாலை மணி 2.15.

பட்டயா பீச்சில் புத்தாண்டின் உற்சாகம் இன்னும் மிச்சமிருந்தது. எல்லா இடங்களிலும் ஜோடிகள், காதல்ர்கள், கேக்கள், லெஸ்பியன்கள், தற்காலிக காதலிகள். லர்கள் என வயது வித்தியாசம் இன்றி எல்லோரும் சந்தோசமாக இருந்தார்கள். 

நரேன் ஒரு Guinness stout பியரும் , பாவனா ஒரு carlsberg பியரும் வாங்கிக்கொண்டனர். 

பீச் ஓரமாக பியரை சிப்பிக்கொண்டே நடந்தனர்.

”நாம எப்ப சிங்கப்பூர் திரும்பறோம்” - பாவனா
“அநேகமா நாளை மறுநாள்” - நரேன்
“டிக்கெட் கன்ஃபார்ம் பண்ணிட்டியா?’
“இன்னும் இல்லை, நாளைக்கு மதியம் பண்ணிர்லாம்”
“இப்பவாவது சொல்லு, நாம உண்மையிலேயே நியூ இயர் கொண்டாடத்தான் வந்திருக்கோமா?”
“பாவனா மொதல்ல என்னை நம்பு, நான் எதையும் உங்கிட்ட மறைக்க விரும்பல, ஆனா நான் இன்னொரு வேலையாவும் இங்க வந்திருக்கேன், அதைப்பத்தி கண்டிப்பா உங்கிட்ட சொல்லுவேன்”
“நீ எங்கிட்ட மறைக்கிறதப் பாத்தா!, எதுவும் தப்பான விசயம் இல்லையே?”
“இல்லைப்பா எனக்கே அது தப்பா? ரைட்டான்னே தெரியாது, இப்ப எதுவும் கேட்காதே, நிச்சயம் ஒங்கிட்ட எதையும் மறைக்க மாட்டேன்”
” I Love You டா” என்றாள் கண்களில் நீர் வழிய..
அவளை அப்படியே இருக்க அனைத்து முத்தமிட்டான்.
பட்டயாவின் பீச் அந்த இரவிலும் பளீர் விளக்குகளால் பகலாக மின்னியது. மேலாடை இல்லாமல் சிலர் ஆடையே இல்லாமல் சிலரும் பீச்சில் நீராடினர்.
“தாய்லாந்தே நிர்வாண தேசம்தான்” - நரேன்
“எதனால சொல்றே” - பாவனா
“பாதி தேசம் புத்தரை பின்பற்றி நிர்வாணம் அரிய முற்படுது, மீதி தேசம் நிர்வாணத்தில் கடவுளை அடைய முயலுகிறது!”
“செக்ஸ் தவிர வேறு எதுக்காகவும் யாருமே தாய்லாந்து வர்றதில்லையா?”
“அப்படி சொல்ல முடியாது!, இங்கு சுத்திப்பாக்க நிறைய இடம் இருக்கு, பெரும்பாலான உணவு வகைகள், மேலும் மலிவு விலை ஆடைகள், கைவினைப்பொருட்கள் என கலந்துகட்டிய சுற்றுலாவாசிகள் வரும் நாடு இது. ஆனாலும் இங்கு வரும் பெரும்பாலான ஆண்கள் செக்ஸ்க்காக மட்டுமே வ்ருகிறார்கள் என்பதுதான் உண்மை”
விடவதற்கு இன்னும் சற்று நேரம் இருந்தது, ஆனால் தூக்கம் வருகிறது என்று நரேன், பாவனாவை அழைத்துக்கொண்டு விடுதிக்கு திரும்பினான்.
விடுதியில் அறையை திறக்கும் மேக்னட்டிக் கார்டை கதவின் முன் தேய்த்தபோது அதற்க்கு அவசியம் இல்லாமலே கதவு தானாக திறந்துகொண்டது.
அறை முழுவதும் கலைக்கப்பட்டு, வந்தவ(ன்) ர்கள் அவசரத்தில் அனைத்தையும் மூலைகொன்றாக வீசியிருந்தா(ன்)ர்கள்.
நரேன் அவசரமாக பேக்குகளை பரிசோதித்தான், பாஸ்ப்போர்ட்டுகள் பத்திரமாக இருந்தன.

தொடரும்...

4 கருத்துகள்:

The Chennai Pages சொன்னது…

http://faceofchennai.blogspot.in/2012/02/walk-in-call-center-executives.html

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அடுத்த ரவுண்டை தொடங்கிட்டீங்க தல..... செமயா போகுது...!

Philosophy Prabhakaran சொன்னது…

ம்ஹூம்... இது உருப்புடாதது...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விறுவிறுப்பாக செல்கிறது ! தொடருங்கள் ! நன்றி !